Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ள நல்லாட்சி

Featured Replies

முஸ்­லிம்­க­ளுக்கு ஏமாற்றம் அளித்­துள்ள நல்­லாட்சி

puttan-21ab9b78a9863ba0e1d0960ab83c5c90358bc806.jpg

 

மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்­லிம்கள் இன­வாதி­க­ளினால் பல நெருக்­க­டி­களை எதிர் கொண்­டார்கள். பல இடங்­களில் தாக்­கப்­பட்­டார்கள். இதனை அன்­றைய அர­சாங்கம் பாரா­மு­க­மாக இருந்­தது. ஆளு் தரப்பு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை கண்­டித்து அறிக்­கை­களை விடுத்­தார்­க­ளே­யன்றி, அவற்றை தடுத்து நிறுத்­து­வ­தற்கு வலு­வற்­ற­வர்­க­ளா­கவே இருந்­தார்கள். இந்­நி­லையில் ஆட்சி மாற்­றம்தான் முஸ்­லிம்­களை பாது­காத்துக் கொள்­வ­தற்கு சிறந்த வழி என்ற முடி­வுக்கு முஸ்­லிம்கள் வந்­தார்கள். ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்­லிம்கள் சுய­மா­கவே மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷ­வுக்கு எதி­ராக வாக்­க­ளிப்­ப­தற்கு தீர்­மா­னித்­தார்கள்.

முஸ்­லிம்கள் நினைத்த மாதிரி ஆட்சி மாற்­றப்­பட்­டாலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வா­தி­களின் நட­வ­டிக்­கைகள் தொடர்ந்து கொண்­டுதான் இருக்­கின்­றன. மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவின் அர­சாங்­கத்தில் நடந்­ததை விடவும் மோச­மான விளை­வுகள் ஏற்­பட்­டு­வி­டுமோ என்று முஸ்­லிம்கள் அச்சம் கொள்ளும் வகையில் இன­வா­தி­களின் நட­வ­டிக்­கைகள் அமைந்­துள்­ளன.

கடந்த ஆட்­சியில் நடை­பெற்­றதைப் போன்று மீண்டும் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­ப­டு­வ­துடன், சிறு­பான்­மை­யினர் மாத்­திரம் வாழ்­கின்ற பௌத்­தர்கள் இல்­லாத இடங்­களில் புத்தர் சிலை வைக்­கப்­ப­டு­கின்­றன.

2015ஆம் ஆண்டு இன்­றைய அர­சாங்கம் ஆட்­சியை கைப்­பற்றிக் கொண்­டதன் பின்னர் பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் போக­ஹ­த­மன கிரா­மத்தில் இயங்கி வந்த சிறி­ய­தொரு குர்ஆன் மத்­ரஸா இடித்துத் தரை மட்­ட­மாக்­கப்­பட்­டது. கொழும்பு பொர­ளையில் அமைத்­துள்ள ஜாமியுல் அல்பார் ஜும்ஆ மஸ்ஜித் மீது இனந் தெரி­யா­த­வர்­க­ளினால் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. இப்­பா­மு­கவ, பக்­மீ­கொல்ல ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கு தராவீஹ் தொழு­கைக்குச் சென்ற மூன்று இளை­ஞர்­களை வாள் வெட்­டிற்கு ஆளா­னார்கள். அத்­தோடு, மூன்று இளை­ஞர்கள் கடு­மை­யாக தாக்­கப்­பட்­டார்கள். அக்­க­ரைப்­பற்று நகரில் அமைந்­துள்ள மணிக்­கூட்டுக் கோபு­ரத்தின் உச்­சியில் திடீ­ரென்று சிறிய அள­வி­லான பௌத்த தூபி ஸ்தாபிக்­கப்­பட்­டது. வெல்­லம்­பிட்டி - பொல்­வத்தை மஸ்­ஜிதுல் நூர் பள்­ளி­வா­சலில் இஷா தொழு­கையை நிறை­வேற்­றி­விட்டு வீடு திரும்­பிய முஸ்­லிம்கள் மீது 'சிங்க லே' என்று கோஷ­மிட்டு தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது.

இவ்­வாறு திட்­ட­மிட்ட வகையில் முஸ்­லிம்கள் மீது 2015இல் பல தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இத்­தாக்­கு­தல்கள் குறித்து பொலிஸில் முறைப்­பா­டு­களும் செய்­யப்­பட்­டுள்­ளன. ஆனால், யாரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை.

இது போலவே 2016ஆம் ஆண்­டிலும் இன­வா­திகள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றார்கள். அத்­தோடு, ஆட்­சி­யா­ளர்­களும் இதற்கு துணை­யாக இருந்து வரு­கின்­றார்கள். களுத்­து­றையில் ஒரு பாட­சா­லையில் நடை­பெற்ற வைப­வத்தில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மாடுகள் வெட்­டப்­ப­டு­வதை இல்­லாமல் செய்­வ­தற்­காக இறைச்­சியை வெளி­நாட்­டி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யு­மாறு தான் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விடம் கோரி­யுள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்தார். இது முஸ்­லிம்கள் உண­வுக்­காக மாடு அறுப்­ப­தனை தடை செய்ய வேண்­டு­மென்று சொல்லிக் கொண்­டி­ருப்­ப­வர்­களின் வாயில் சீனி போட்­ட­தனைப் போன்­ற­தா­கவே இருந்­தது.

இன்­றைய ஆட்­சியில் இன­வா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட எல்லா நட­வ­டிக்­கை­க­ளையும் விழுங்கி ஏற்­ப­மிடும் வகையில் ஐ.தே.கவின் தேசிய அமைப்­பா­ளரும், அமைச்­ச­ரு­மான தயா ­க­ம­கேவின் நட­வ­டிக்­கைகள் அமைந்­துள்­ளன. இறக்­காமம் பிர­தேச செய­ல­கத்தின் எல்­லைக்­கு­ரிய மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையில் புத்தர் சிலை வைக்­கப்­பட்­டுள்­ளமை தனக்குத் தெரி­யாது என்றும் அதனை எக்­கா­ரணம் கொண்டும் அகற்ற முடி­யாது. அவ்­வாறு அகற்ற முற்­பட்டால் தனது பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­வ­தா­கவும் வர­லாற்றில் தீக­வாபி விகா­ரைக்கு 12ஆயிரம் ஏக்கர் காணி இருந்­துள்­ளது எனவும் தெரி­வித்­துள்ள அவர் கல்­முனை முதல் பொத்­துவில் வரை தீக­வாபி விகா­ரைக்கே சொந்­த­மாகும் என 07.11.2016 அன்று அம்­பாறைகச்­சே­ரியில் நடை­பெற்ற மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் கூட்­டத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

நல்­லாட்சி என்ற பெயர் சூட்­டி­யுள்ள அர­சாங்­கத்தில் உள்ள அமைச்சர் ஒருவர் சிங்­க­ள­வர்கள் எவ­ரு­மில்­லாத இடத்தில் புத்தர் சிலை வைக்­கப்­பட்­டுள்­ள­மையை அகற்ற முடி­யா­தென்றும், கல்­முனை முதல் பொத்­துவில் வரை உள்ள பிர­தேசம் தீக­வாபி விகா­ரைக்­கு­ரி­யது என்றும் தெரி­வித்­துள்­ளமை அவரின் இன­வாத சிந்­த­னையின் வெளிப்­பா­டாகும்.

புத்தர் சிலையை அகற்­றினால் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்வேன் என்ற எச்­ச­ரிக்கை இன்­றைய அர­சாங்­கத்­தையும் எச்­ச­ரிக்கை செய்­வ­தா­கவே இருக்­கின்­றது. இவரின் இரா­ஜி­னாமா அர­சாங்­கத்­தையே கவி­ழத்­து­விடும் என்­பது போல் உள்­ளது. இவர் இவ்­வாறு ஆகரோச­மான கருத்­துக்­களை முன் வைத்துக் கொண்­டி­ருந்த போது அங்­கி­ருந்த முஸ்லிம் மக்கள் பிர­தி­நி­திகள் எதுவும் பேசாது இருந்­துள்­ளார்கள். தயா­க­ம­கேவின் கருத்­துக்­களின் மூல­மாக மாணிக்­க­ம­டுவில் வைக்­கப்­பட்­டுள்ள புத்தர் சிலை எதிர்காலத்தில் என்ன விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்­ப­தனை தெளி­வாக புரிந்து கொள்ளக் கூடி­ய­தாக உள்­ளது. ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பைசால் காசிம், ஹரிஸ் ஆகி­யோர்கள் சமு­க­ம­ளிக்­க­வில்லை. அம்­பாறை மாவட்­டத்தில் உள்ள கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்கள் அவ்­வே­ளையில் இருந்­துள்­ளார்கள். ஒருங்­கி­ணைப்பு குழுக் கூட்­டத்­திற்கு செல்­வது, சொல்­வ­தனை கேட்டுக் கொண்­டி­ருப்­ப­தற்­கல்ல. தயா­க­மகே வர­லாற்றை திரி­பு­ப­டுத்தி தமது ஆக்­கி­ர­மிப்பு எண்­ணத்தை வெளிப்­ப­டுத்­திய போது தகுந்த பதில் கொடுத்­தி­ருக்க வேண்டும். இல்­லை­யாயின் வெளி­ந­டப்பு செய்­தி­ருக்க வேண்டும். இவற்றைச் செய்­யாது கேட்டுக் கொண்­டி­ருந்­தமை அவர் சொல்­லி­யது உண்மை என ஏற்றுக் கொண்­ட­தாக இருக்கும்.

தமது இய­லா­மை­யையும், ஆளுமைக் குறை­பாட்­டையும் மறைப்­ப­தற்கு தயா­க­மகே போன்று தாங்­களும் வார்த்­தை­களை பிர­யோகிக்க விரும்­ப­வில்லை என்று தெரி­வித்­துள்­ளார்கள்.

இது மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கு அழ­கல்ல. மக்கள் பிர­தி­நிதி என்போர் மக்­களின் குர­லாக இருக்க வேண்டும். அதற்­காக சண்டை பிடிப்­ப­தல்ல. சிங்­கள மக்கள் இல்­லாத இடத்தில் புத்தர் சிலை எதற்­கென்று அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கேட்­டுள்ளார். ஏன் இவ்­வாறு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளினால் கேட்க முடி­யாது. பௌத்­தர்கள் முஸ்­லிம்­களின் இருப்­புக்கு அச்­சு­றுத்­தல்­களை ஏற்­ப­டுத்தும் போது அதனை தட்டிக் கேட்­ப­தனை இன­வா­த­மென்று முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எண்­ணு­கின்­றார்­களா என்று கேட்­கின்றோம். இன­வா­திகள் முஸ்­லிம்­களின் உரி­மை­களை பறிப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்கும் போது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், கட்­சி­களின் தலை­வர்­களும் வேதாந்தம் பேசிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவின் அர­சாங்­கத்­திலும் இவ்­வா­றுதான் வேதாந்தம் பேசி­னார்கள். முஸ்­லிம்­களை பொறுத்த வரை நல்­லாட்­சியில் காட்­டுத்­தர்­பார்தான் நடந்து கொண்­டி­ருக்­கின்­றது. இதற்கு பதவி மோகங் கொண்ட முஸ்லிம் பிர­தி­நி­திகள் துணை போய்க் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­க­ளுக்கு என்ன நடந்­தாலும் கைகட்டி வாய்­பொத்தி மௌனி­க­ளாக இருக்க வேண்டும். இதுதான் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் வழி முறை­யாகும். ஆட்சி மாறும் போது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், கட்­சி­களும் ஆட்­சியின் பக்கம் செல்­லு­கின்­றார்கள், அமைச்சர் பத­வி­களைப் பெற்றுக் கொள்­கின்­றார்கள்.

முஸ்லிம் சமூ­கத்தின் உரி­மைகள் பறி­போகும் போது பொறு­மை­யாக இருங்கள் என்று சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் கால­மாகி 16 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கி­யுள்­ளன.

முஸ்­லிம்­க­ளுக்கு...

(03ஆம் பக்கத் தொடர்ச்சி)

இந்த காலம் முழு­வதும் இத­னையே முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். கேட்­காத உரி­மைகள் தேவை­யற்ற உரி­மை­க­ளா­கவே கரு­தப்­படும்.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா தேர்தல் காலத்தில் மஹிந்­தவின் ஆட்சி ஒழிக்­கப்­பட்டு மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் ஆட்சி அமைக்­கப்­பட்டால் பௌத்த இன­வா­திகள் நாய்க் கூட்டில் அடைக்­கப்­ப­டு­வார்கள் என்றார். ஆனால், இன்று இன­வா­திகள் சுதந்­தி­ர­மாக தமது இன­வாத நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர் கடந்த வாரம் கொழும்பில் நடை­பெற்ற வைபவம் ஒன்றில் விடு­தலைப் புலி­க­ளாக இருந்­தாலும் சரி அல்­லது தெற்கின் இன­வாத அமைப்­புக்­க­ளாக இருந்­தாலும் சரி அனைத்தும் ஒன்­றுதான். இதில் யாருக்கும் தனி இடம் வழங்­கப்­பட முடி­யாது. நாட்டின் அமை­தியை குழப்­பவும் மக்கள் விரும்பும் ஐக்­கி­யத்தை சீர்­கு­லைப்­ப­தற்கு இவர்கள் எடுக்கும் முயற்­சி­களை தோற்­க­டிக்க வேண்டும். இவர்கள் சிங்­க­ள­வர்­க­ளாக இருந்­தாலும் சரி அல­லது தமி­ழர்­க­ளாக இருந்­தாலும் சரி அனை­வரும் ஒரே மாதிரி சிந்­தித்து நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த முயற்­சி­களை தடுக்க வேண்­டு­மென்றும் தெரி­வித்­துள்ளார்.

இதே வேளை, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளி­டையே ஒற்­று­மையை சீர்­கு­ழைப்­ப­தற்கு சில அமைப்­புக்கள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சோபித தேரரின் நினைவு தினக் கூட்­டத்தில் தெரி­வித்­துள்ளார். இவ்­வாறு அர­சாங்­கத்தின் தலை­வர்கள் தெரி­வித்துக் கொண்­டாலும் பௌத்த இன­வா­தி­க­ளுக்கு எதி­ரான இறுக்­க­மான நட­வ­டிக்­கைகள் எடுக்க்­கா­துள்­ளமை முஸ்­லிம்­க­ளி­டையே சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதே வேளை, ஐ.தே.கவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் செத்து சீர­ழிந்த நிலையில் இருக்கும் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் இன­வாத அர­சி­ய­லுக்கு ஒட்­சிசன் வழங்கும் ஒரு நிகழ்ச்­சி­யையே கிழக்கு மாகா­ணத்தில் அமைச்சர் தயாகமகே முன்னெடுத்துள்ளார். தோல்வியடைந்த இனவாத சக்திகளுக்கு உயிரூட்டும் நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்கு தயாகமகே ஒத்துழைப்பு வழங்கி வருகிறாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. நல்லாட்சிக்கும், சமூக நல்லுறவுக்கும் குந்தகம் விளைவிக்கும் தயாகமகேயின் இந்த இனவாத செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

தம்புள்ள பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கு புதிய காணி வழங்கப்பட்டுள்ளது. இக்காணியில் பள்ளிவாசல் அமைக்கப்படுவதனை எதிர்த்து எதிர்வரும் 19ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றினை நடத்துவதற்கு பௌத்த இனவாத அமைப்பு ஒன்று திட்டமிட்டுள்ளதாகவும், அதனை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் எடுக்க வேண்டுமென்று பள்ளிவாசல் நிர்வாகம் பொலிஸில் முறைபாடு செய்துள்ளது.

இவ்வாறு பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்பு, மதவழிபாடு போன்றவைகளுக்கு அரசாங்கத்தில் அதிகாரம் பெற்றிருப்பவர்களின் துணையுடன் அச்சுறுத்தல்களையும், அழிவுகளையும் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம் கட்சிகளும், தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமைப்படுவதற்கு பதிலாக முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டும், ஆளுக்கு ஆள் குழிபறித்துக் கொண்டும், தலைவர் பதவியை பாதுகாத்துக் கொள்வதற்கு கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் இனவாதிகளை விடவும் மோசமானவர்கள். இனவாதிகளை மன்னித்தாலும், சமூகத் துரோகிகளை மன்னிக்க முடியாது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-13#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.