Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆவா குழுவுடன் தொடர்புடைய இராணுவ வீரர் ஒருவர் கைது - சபையில் அறிவித்தார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

Featured Replies


'ஆவா'வில் முன்னாள் இராணுவ வீரர்
 
 

article_1479192222-Aawa120.jpgவடக்கில் இயங்கிவரும் ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர், இராணுவத்தில் சேவையாற்றியவர் என்று, நாடாளுமன்றத்தில் இன்று, அறிவிக்கப்பட்டது.

- See more at: http://www.tamilmirror.lk/186086/-ஆவ-வ-ல-ம-ன-ன-ள-இர-ண-வ-வ-ரர-#sthash.4ruZHPV4.dpuf

 

 


'இராணுவத்தினால் 'ஆவா' இயக்கப்படவில்லை'
 
 

article_1479191552-Ruw.jpgவடக்கில் இயங்கிவரும் ஆவா குழு, இராணுவத்தினரால் இயக்கப்படும் குழுவல்ல என்றும் இராணுவத்தில் சேவையாற்றியவர்கள் அதில் உள்ளனரா என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். 

- See more at: http://www.tamilmirror.lk/186084/-இர-ண-வத-த-ன-ல-ஆவ-இயக-கப-படவ-ல-ல-#sthash.EnuF1Yzh.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

 இராணுவம் சம்பந்தப்பட்டால், அப்படி ஒரு தகவல் இல்லை, அல்லது அதுபற்றி தெரியாது, விசாரணை முன்னெடுக்கப்படும்.  என்று மழுப்புவியள். யார் எது செய்தாலும் புலிகள் தான் என்று  கட்டி அடிப்பியள். நீங்களும் உங்கட விசாரணையும், பாதுகாப்பும்.

  • தொடங்கியவர்

ஆவாவுடன் தொடர்புடைய இராணுவ வீரர் கைது : சபையில் அமைச்சர் தகவல்

 

 

 

D025551125.jpg(ஆர். ராம், எம். எம். மின்ஹாஜ்)

ஆவா குழுவுடன் தொடர்புடையோர் என்ற குற்றச்சாட்டில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன மேலும் இராணுவத்தினருக்கு தொடர்பேதும் உள்ளதா என்பது  குறித்து விசாரணை செய்து வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

அதேநேரம் இராணுவத்தினருக்கு  ஆவா குழுவை வழி நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் கீழ் இரண்டில் ஜே.வி.வி. தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அநுர  திஸாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

‘ஆவா’ குழு என்பது கப்பம், கொள்ளை போன்ற குற்றச் செயலுடன் தொடர்புடைய கும்பலாகும். வடக்கில் இளைஞர்களினால் முன்னெடுக்கப்படும் ஒரு கும்பலாகும். ஆவா குழுவினை வழி நடத்துவதற்கு இராணவத்திற்கு எந்தவொரு தேவையும் கிடையாது. ‘ஆவா குழுவுடன் தொடர்புடையவர்களில் இதுவரை கைது செய்யப்பட்ட  நபர்களில் ஒரு இராணுவ வீரரும் உள்ளார். அவர் தமிழர் ஒருவர் ஆவார். அவர் தற்போது சேவையில் இல்லை.  இருந்த போதிலும் ஆவா குழுவுடன் மேலும் இராணுவ வீரர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் விசாரணை செய்து வருகின்றோம்.

எனவே தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ‘ஆவா’ குழு என்பது இராணுவத்தினர் வழி நடத்தும் குழு அல்ல. ‘ஆவா’ குழுவில் இராணுவ வீரர் ஒருவர் மாத்திரமே சம்பந்தப்பட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/13510

ஆவா குழு­வுடன் தொடர்­பு­டையவர் என்ற குற்­றச்­சாட்டில் இரா­ணுவ வீரர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார் என குறிப்­பிட்ட பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்­தன மேலும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு  தொடர்­பேதும் உள்­ளதா என்­பது குறித்து விசா­ரணை செய்து வரு­கின்றோம் எனவும் தெரி­வித்தார்.

அதே­நேரம் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு ஆவா குழுவை வழி நடத்த வேண்­டிய அவ­சியம் இல்லை எனவும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23 இன் கீழ் இரண்டில் ஜே.வி.வி. தலை­வரும் எதிர்க்­கட்சி பிர­தம கொற­டா­வு­மான அநுர திஸா­நா­யக்க எம்.பி. எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே இரா­ஜாங்க அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்;

‘ஆவா’ குழு என்­பது கப்பம், கொள்ளை போன்ற குற்றச் செய­லுடன் தொடர்­பு­டைய கும்­ப­லாகும். வடக்கில் இளை­ஞர்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­படும் ஒரு கும்­ப­லாகும். ஆவா குழு­வினை வழி நடத்­து­வ­தற்கு இரா­ணு­வத்­திற்கு எந்­த­வொரு தேவையும் கிடை­யாது.

‘ஆவா குழு­வுடன் தொடர்­பு­டை­ய­வர்­களில் இது­வரை கைது செய்­யப்­பட்ட நபர்­களில் ஒரு இரா­ணுவ வீரரும் உள்ளார். அவர் தமிழர் ஒருவர் ஆவார். அவர் தற்­போது சேவையில் இல்லை. இருந்த போதிலும் ஆவா குழு­வுடன் மேலும் இரா­ணுவ வீரர்­க­ளுக்கு தொடர்பு உள்­ளதா என்­பது தொடர்பில் விசா­ரணை செய்து வரு­கின்றோம்.

எனவே தெளி­வாக புரிந்து கொள்ள வேண்டும். ‘ஆவா’ குழு என்­பது இராணுவத்தினர் வழி நடத்தும் குழு அல்ல. ‘ஆவா’ குழுவில் இராணுவ வீரர் ஒருவர் மாத்திரமே சம்பந்தப்பட்டுள்ளார் என்றார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-16#page-1

இரா­ணு­வத்­துக்கு தொடர்புள்ளதா? - தெளிவு­ப­டுத்­த­வேண்டும் என்­கி­றது ஜே.வி.பி.  

‘ஆவா’ குழு­வுக்கும் இரா­ணு­வத்­திற்கும் தொடர்பு இருப்­ப­தாக அமைச்ச­ரவைப் பேச்­சாளர் கூறி­யது ஏன்? என கேள்­வி ­யெ­ழுப்­பிய ஜே.வி.பி.யின் தலை­வரும் எதிர்க்­கட்சி பிர­தம கொற­டா­வு­மான அனுர குமார திஸாநா­யக்க எம்.பி. இந்தக் குழு தொடர்­பாக  பரஸ்­பரம் வித்­தி­யா­ச­மான கருத்­துக்கள் வெ ளியி­டப்­ப­டு­வது குறித்து அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன என்­பதை அறி­விக்க வேண்டும் எனவும் சபையில் கோரினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23 கீழ் இரண்டில் வினா தொடுத்த போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்;

யாழ்ப்­பா­ணத்தில் வியா­பித்­துள்ள ஆவா குழு தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தின் அவ­தா­னத்­திற்கு கொண்டு வரு­கின்றேன். யாழில் பல்­க­லைக்­க­ழக மாணவர் இருவர் சுட்டுக் கொல்­லப்­பட்ட சம்­பவம் தொடர்பில் தெளி­வு­ப­டுத்தும் போது யாழ்ப்­பா­ணத்தில் ஆவா குழு ஒன்று மோட்டார் சைக்­கிளில் நட­மா­டு­வ­தாக அமைச்சர் சாகல ரத்­நா­யக்க முதற் தட­வை­யாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இது தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி நடை­பெற்ற அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் இந்த ஆவா குழு­வுடன் இரா­ணுவ வீரர்­க­ளின தொடர்பு உள்­ள­தாக அமைச்­ச­ரவை பேச்­சாளர் தெவித்­தி­ருந்தார். அத்­துடன் வட­மா­காண ஆளுநர் ஆவா குழு­வுக்கும் இரா­ணு­வத்­திற்கும் எந்­த­வொரு தொடர்பும் கிடை­யாது என குறிப்­பிட்­டுள்ளார். எனினும் அமைச்­ச­ரவை பேச்­சாளர் பிறி­தொரு ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டிலும் இதனை மீண்டும் உறு­திப்­ப­டுத்­தினார். அமைச்­ச­ரவை பேச்­சாளர் ஒருவர் தனது சுய கருத்­தினை தெரி­விக்க முடி­யாது. மக்கள் இதனை அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்றே கருத்­திற்­கொள்வர்.

அதே­போன்று சரத் பொன்­சேகா இது தொடர்பில் கூறும்­போது இதற்கு இரா­ணுவம் தொடர்­பி­ருந்தால் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத­பா­யவே கார­ண­மென கூறி­யி­ருந்தார். எனவே அர­சாங்­கத்­திற்குள் இவ்­வாறு பரஸ்­பர கருத்து நில­வு­வது பார­தூ­ர­மா­னது. அதிலும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் தொடர்பு இருப்­ப­தாக கூறு­வது பெரும் பார­தூ­ர­மா­னது. இதனை அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் கூறு­வது அதிலும் பெரும் பார­தூ­ர­மா­ன­தாகும்.

எனவே ஆவா குழு தொடர்பில் இது­வரை கண்­டு­பி­டிக்­கப்­பட்ட தக­வல்கள் என்ன? ஆவா குழு­வுக்கும் இரா­ணு­வத்­திற்கும் தொடர்பு இருப்­ப­தாக அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் கூறி­யது ஏன்? அது எந்த கார­ணத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு வெளி­யி­டப்­பட்­டது. எனினும் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் நிராகரித்தது எந்த காரணத்தில் அடிப்படையில் என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறான பரஸ்பர கருத்துக்கள் இருக்கும் நிலையில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதனை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என கேள்வியெழுப்பினார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-16#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.