Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள மக்களின் பாதுகாப்பே முக்கியம்-பசில்

Featured Replies

சிங்கள மக்களின் பாதுகாப்பே முக்கியம்-பசில்
 
 
சிங்கள மக்களின் பாதுகாப்பே முக்கியம்-பசில்
சிங்கள மக்களை அச்சத்தில் உறையச்செய்துவிட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது எனவே சிங்களவரின் பாதுகாப்பே முக்கியம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.1479379583_basil-took-membership-of-slpp.jpg
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் இழைத்த தவறுகளை தற்போது உணர்ந்துவிட்டதாக தெரிவிக்கும் பசில் ராஜபக்ச, தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் ஆட்சிபீடம் ஏறுவதற்கான சந்தர்ப்பத்தை மக்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு சேர்க்கும் வகையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பு இராஜகிரியவில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் நடைபெற்றது.
 
இதன்போது கட்சியின் உருவாக்கத்திற்கான நோக்கம், எதிர்கால நடவடிக்கை தொடர்பாக கட்சியின் தவிசாளரான முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸினால் விளக்கம் அளிக்கப்பட்டது.
 
இதனையடுத்து முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்பசில் ராஜபக்ச கருத்துக்களை வெளியிட்டார்.
 
“இன்று பாதுகாப்பு தொடர்பாக அனைவரிடையேயும் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. ஆந்த அச்சநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அன்று முஸ்லிம் மக்கள் வடக்கிற்குச் செல்லமுடியாத நிலையே ஏற்பட்டது. 48 மணித்தியாலங்களிற்குள் வெறும் இரண்டு பொலித்தீன் பைகளில் தங்களது பொருட்களை எடுத்துக்கொண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் அன்று வடக்கிலிருந்து வெளியேறினர். அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு மஹிந்த ராஜபக்சவே முதற்கட்ட நடவடிக்கைளை மேற்கொண்டார். எனினும் மீண்டும் அந்த அபாயநிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு அறிவிப்புகளினால் இன்று சிங்கள மக்கள் வடக்கில் வாழமுடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. அதேபோன்று தமிழ் முஸ்லிம் மக்களிடையேயும் அச்சநிலை உருவாகியுள்ளது. எனவே இந்த அச்ச நிலையை நீக்குவதே எமது கட்சியின் பிரதான இலக்காகும்.
 
பெரும்பான்மையினரான சிங்கள மக்களிடையே அச்சநிலையை ஏற்படுத்திவிட்டு தமிழ் மக்களின் அச்ச நிலையை நீக்கிவிடமுடியாது. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த நிலையே காணப்படுகிறது. எனவே முதலில் சிங்கள மக்களின் அச்சநிலையை நீக்கிவிட்டு தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை நடத்த தேவையான சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்காக எதையேனும் அர்ப்பணிப்பதற்கு எமது கட்சி தயாராக உள்ளது” -என்றார்.
basil-took-membership-of-slpp.jpg
“எமது ஆட்சியில் இழைக்கப்பட்ட தவறுகளினால்தான் எம்மை ஆட்சியிலிருந்து நீக்குவதற்கு மக்கள் தீர்மானித்தார்கள். மக்களின் ஆணைக்கு நாங்கள் தலைவணங்குகின்றோம். எனவே தவறுகளை சரிப்படுத்தி பயணத்தை ஆரம்பிக்கின்றோம். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் எமது தவறுகளை திருத்திக்கொண்டு பயணத்தை தொடர்வதற்கு தயார் என்பதை மஹிந்த ராஜபக்சவும் கூறியிருந்தார். நாங்களும் அதனையே கூறுகின்றோம். எனவே எமக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்”
 
2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் மூலம் நல்லாட்சி மக்களின் மீது அதிக வரிச் சுமையை சுமத்தி நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
 
இதன் அடிப்படையின் நாட்டினுடைய பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்களை ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணியை உருவாக்கியுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
 
எனினும் ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணியில் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எந்த ஒரு பதவியும் வழங்கப்பட மாட்டாது எனவும் பசில் குறிப்பிட்டார்.
 
கட்சி மற்றும் அரசியல் பதவிக்காக மட்டும் பல காட்சிகள் தற்போது இயங்கி வருகின்றன. அவ்வாறிருக்க தங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காக இந்த புதிய கட்சி செயற்படும் என அவர் உறுதிய ளித்துள்ளார்.
 
மேலும் சில கட்சிகள் பணத்திற்காக மக்கள் வாக்குகளை பெற்றவர்களை விடுத்து விருப்பு வாக்கு முறை யில் கட்சிகளின் தலைமைத்துவத்தை வழங்கி வருகின்றனர்.
 
கட்சியின் நிலவரங்கள் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் தொடர்பான அணைத்து தகவல்களையும் மக்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் அந்த தகவல் அறியும் உரிமையினை எமது கட்சி வழங்கும் எனவும் பசில் தெரிவித்தார்.
 
இவ்வாறு தேர்தல் முறையில் எந்த மாற்றமும் நாட்டில் சிறந்த தொரு அரசியல் முறையினை ஏற்படுத்தவும் இந்த புதிய கட்சியும் புதிய திட்டமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் தானும் இணைந்து கொண்டதாக இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச, பொது மக்களும் இதில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்ததோடு, கட்சி உறுப்புரிமைக்கான விண்ணப்பப் படிவத்தையும் ஊடகங்க ளின் முன்பாக காண்பித்தார்.

http://www.onlineuthayan.com/news/20303

  • கருத்துக்கள உறவுகள்

 

சிங்கள மக்களின் பாதுகாப்பே முக்கியம்-பசில்

 

நல்லாட்சி அரசாங்கம் சட்டம் ஒழுங்கு, சுதந்திரம் அனைத்தையும் நிலைநிறுத்தி நாட்டை சமாதானத்தை நோக்கி கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றது என  இன்று காலை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது இரா.சம்பந்தன்  குறிப்பிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

கழுதைகள் கெட்டா குட்டிச்சுவர்கள்.

இவர்கள் இனவாதம் என்னும் குட்டிச்சுவருடன் நிற்கப் பார்க்கிறார்கள்.

ஆனாலும் இவர்கள் பலம் பெறுவது தமிழர்களுக்கே நல்லது.

2 hours ago, விசுகு said:

 

சிங்கள மக்களின் பாதுகாப்பே முக்கியம்-பசில்

 

நல்லாட்சி அரசாங்கம் சட்டம் ஒழுங்கு, சுதந்திரம் அனைத்தையும் நிலைநிறுத்தி நாட்டை சமாதானத்தை நோக்கி கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றது என  இன்று காலை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது இரா.சம்பந்தன்  குறிப்பிட்டார்.

சத்தியமாக விளங்கவில்லை  பசில் கூறியதற்கும் சம்பந்தன் கூறியதற்கும் என்ன தொடர்பு என்று?  பசில் 'நல்லாட்ட்சி' என்று சொல்லப்படும் மைத்திரியின் அரசில் இல்லாமல் எதிரிக் கட்சியில் அல்லவா இருக்கின்றார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.