Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கத்தில் இணைய ஹெல உறுமய ஆர்வம்.

Featured Replies

அரசாங்கத்தில் இணைய ஹெல உறுமய ஆர்வம்.

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவி பெறுவது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்துவரும் ஜாதிக ஹெல உறுமய, அது தொடர்பான இறுதித் தீர்மானத்தை இன்று செவ்வாய்க் கிழமை மேற்கொள்ளவுள்ள அதேவேளையில், ''ஐ.தே.க. அரசாங்கத்தில் இணையவும், அமைச்சர்களின் தொகை அதிகரிக்கவும் வழிவகுத்த பொறுப்பை ஜே.வி.பி.யினரே ஏற்றுக்கொள்ள வேண்டும்" எனவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றது.

இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளரும் மத்திய குழு உறுப்பினருமான நிசாந்த சிறீ வர்ணசிங்க தகவல் தருகையில் மேலும் கூறியதாவது:

''அரசாங்கத்தில் இணைந்துகொண்டு அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ எமக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். இது தொடர்பாக கட்சியின் உயர் மட்டக்குழு தீவிரமாக ஆலோசித்துவருகின்றது. மகிந்த சிந்தனையைப் பாதுகாத்து மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு இதன் மூலம் எமக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும். எனவே இவ்விடயம் தொடர்பாக இன்று இறுதித் தீர்மானத்தை எடுக்கவிருக்கின்றோம்.

அதேவேளையில், எதுவிதத்திலும் அரசாங்கத்துக்கான ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ள மாட்டோம். அதனைத் தொடர்வோம். அமைச்சரவை விசாலமாக உருவெடுத்திருப்பதற்கும் ஐ.தே.க.வினர் அரசுடன் இணைந்தமைக்குமான பொறுப்பை ஜே.வி.பி.யினரே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்குமாறு அரசுத் தலைவர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜே.வி.பி. அன்றே இணைந்திருந்தால் அமைச்சரவையின் எண்ணிக்கையையும் குறைத்திருக்கலாம். ஐ.தே.க.வினர் கூட்டாக இணைவதையும் தடுத்திருக்கலாம்.

ஆனால், ஜே.வி.பி. அந்த அழைப்பைத் தட்டிக்கழித்தது. மகிந்த சிந்தனையைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து வெளியேறியது. எனவேதான் இன்றைய நிலைமை உருவாகியது. இதற்கான முழுப் பொறுப்பையும் ஜே.வி.பி. ஏற்கவேண்டும்.

இந்தளவு விசாலமான அமைச்சரவையை ஹெல உறுமய ஏற்றுக்கொள்ளாது. அதே சமயம் மகிந்த சிந்தனையைப் பாதுகாக்கும் தனது பொறுப்பை விட்டுக்கொடுக்காது அவ்வாறு வெளியேறினால் மேலும் பல ஐ.தே.க. உறுப்பினர்கள் அரசில் இணைந்துகொள்ளலாம். அமைச்சரவை மேலும் பிரமாண்டமாகும். எனவே இவை அனைத்தையும் கருத்திற்கொண்டுதான் அரசாங்கத்துக்கான ஆதரவை வழங்குவதற்கு விரும்புகின்றோம்'' என்று நிசாந்த சிறீ வர்ணசிங்க மேலும் தெரிவித்தார்.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

ஹெல உறுமயவின் எம்.பிக்கு

சுற்றாடல் அமைச்சர் பதவி?

ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் வண. சோபித்த தேரருக்கு சுற்றாடல் அமைச்சர்பதவி வழங்கப்படவுள்ளது என்று அரச தரப்புசெய்திகள் தெரிவிக்கின்றன.

ஜாதிக ஹெல உறுமய கட்சிக்குள் அண்மைக்காலமாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ள நிலையில் ஓமல்பே சோபித்த தேரர் அரசின் பக்கம் இணைந்து அமைச்சுப் பதவி பெறவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, மஹிந்த சிந்தனையில் கூறப்பட்டபடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயல்படுவார் என தங்களுக்கு உத்தரவாதம் தந்தால் மட்டுமே அரசுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமைபீடம் தெரிவித்துள்ளது.

சுற்றாடல் அமைச்சுப் பதவியை ஏற்பதா, இல்லையா என்பது பற்றி இதுவரையில் எதுவித முடிவும் எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்

- சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.