Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கியூபா... கம்யூனிசம்... காஸ்ட்ரோவுக்குப் பிறகு!?

Featured Replies

கியூபா... கம்யூனிசம்... காஸ்ட்ரோவுக்குப் பிறகு!?

 

 

 

சிறுவர்களுக்கான மாய மந்திரக் கதைகளில் வரும் உயரமான ராட்சதர்களைப் பார்த்திருப்பீர்கள். அப்படித்தான் ஃபிடல் காஸ்ட்ரோவும். ஆறரை அடி உயரம், கையில் சுருட்டு, இடுப்பில் துப்பாக்கி, புரட்சிக்காரர்களுக்கே உரிய கரும்பச்சை உடை. எங்கிருந்தாலும் யாராலும் எளிதில் கண்டுபிடித்து விடக்கூடிய இந்த உருவத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வளவோ முறை முயன்றும் பிடிக்க முடியவில்லை. தனியொரு மனிதனை கொல்ல கண்ணிவெடிகள், வெடிகுண்டுகள் என 638 முறை இவர்மீது கொலைத் திட்டம் தீட்டினார்கள். அத்தனை முறையும் அவர்களிடமிருந்து தப்பித்த காஸ்ட்ரோவை தன் 90-வது வயதில் இயற்கை தழுவிக் கொண்டது. அதுவும் அவர் முன்பே அறிந்து விட்டிருந்த மரணம் என்றுதான் சொல்லவேண்டும். 

 

e1_18386_21290.jpg

 

கடந்த ஏப்ரலில் கடைசியாகத் தனது உரையை நிகழ்த்திய காஸ்ட்ரோ இப்படித்தான் கூறினார், "நான் என் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் எனது 90-வது பிறந்தநாள் வருகிறது. ஆனால் கியூபாவின் புரட்சி எனக்குப் பின்னும் இந்த பூமியில் பேசப்படும். புரட்சிதரும் செய்தி இதுதான், நான் மாண்போடும் பேரார்வத்தோடும் உழைக்கும்போது மனித இனத்தின் தேவைக்கான பொருள் நிச்சயம் நம் வசப்படும். இதற்கு இடைவெளி இல்லாத போராட்டம் தேவை' என்றார்.

 

ரஷ்ய கம்யூனிச புரட்சிக்குப் பிறகு உலகளாவிய அளவில் இருக்கும் கம்யூனிஸ்டுகள் உயரநோக்குவது அர்ஜென்டினா, கியூபா, வெனிசுலா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் புரட்சி போராட்டத்தைத்தான். ஆனால் இப்படிப் போராடிக் கட்டமைக்கப்படும் நாட்டின் ஆட்சி அதிகாரம் எப்படி இருந்தது? கியூபாவின் தந்தை எனக் கருதப்படும் மார்த்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற தமிழ் எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான அமரந்தா, அங்கு தான் பார்த்ததைப் பகிர்ந்து கொண்டார்.

 

மேலிடம் யாருக்கும் ஆணையிடாது!

 

"ஃபிடலுடன் போராட்டம் நடத்திய அனைவருமே அறிவார்ந்த ரீதியாக திறம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். குறிப்பாக ஃபிடலே கூட ஒரு வழக்கறிஞர்தான், போராட்ட காலத்தில்கூட ஆண், பெண் பாகுபாடு இல்லை. உடல் உழைப்பும் மூளை உழைப்பும் ஒரே அளவீட்டில்தான் பார்க்கப்பட்டது. ஆட்சி அதிகாரம் அமைக்கப்பட்ட போதும் அதுவே பின்பற்றப்பட்டது. மக்களின் கருத்துகளைத்தான் பிரதிநிதிகள் ஒரு பெரிய கமிட்டியிடம் எடுத்துச் செல்வார்கள். ஆண், பெண் இருவருமே இருக்கும் அந்தக் குழுவில் மக்களின் கோரிக்கை விவாதிக்கப்பட்டு, செயல்படுத்தப்படும். மற்றபடி அங்கு மேலிடம் எதுவுமே மக்களுக்கு ஆணையிட்டதில்லை"

 

"மார்த்தியின் பிறந்தநாள் விழாவிற்காக நினைவுத் தூண் ஒன்று நிறுவப்பட்டது. நாட்டிலேயே இன்றளவிலும் பெரிய கட்டிடம் அதுதான். அதைத் திறந்து வைக்க காஸ்ட்ரோ வந்தார். அவர் ஒரு காரிலும்,  அவருடன் வந்தவர்கள் மற்றொரு காரிலும் வந்தனர்.

ஒரே ஒரு பாதுகாவலர், அவ்வளவே. வந்தார், திறந்து வைத்தார், சென்றார். மற்றபடி பாதுகாப்பு வளையம் கருப்புப் பூனை, காவல் படை என எதுவும் அவரைச் சுற்றி இல்லை. குறிப்பாக அந்த நாட்டின் நிர்வாகத்தில் இருக்கும் எந்த தலைவரின் புகைப்படமும் எங்கும் இருக்காது. நாட்டின் ஆட்சி அதிகாரத்தையே தன்வசம் வைத்திருந்த காஸ்ட்ரோவின் படம் எங்குமே தென்படவில்லை. அதிசயமாக ஹவானா பல்கலைக்கழகத்தில் மட்டும் அவரது ஒரே ஒரு படம் இருந்தது" என்று கூறி அந்த புகைப்படத்தையும் பகிர்ந்து கொள்கிறார் அமரந்தா.

 

"தன் கல்விக் கொள்கைகளின் மூலம் நாட்டில் பல மருத்துவர்களையும் சட்ட வல்லுநர்களையும் உருவாக்கினார் காஸ்ட்ரோ. உலகில் மருத்துவத்தில் தலைசிறந்த நாடு கியூபா. ஆனால் கியூபாவின் மீது பல தடைகளை விதித்த அமெரிக்கா, அவர்களை ஒதுக்கியது. இருந்தும் ஆப்பிரிக்க நாடுகள் உட்பட பல நாடுகள் இயற்கைச் சீற்றங்களாலும், கொடுமையான நோயாலும் பாதிக்கப்பட்ட காலங்களில், முதலில் சென்று உதவிக்கரம் நீட்டியது கியூபாதான். ஆனால் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் கியூபாவுடன் நல்லெண்ண ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில் தத்தம் நாட்டின் உளவாளிகள் அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதன்பிறகு இரு நாடுகளும் நேச உறவுகளுடன்தான் இயங்கி வருகின்றன. தற்போது காஸ்ட்ரோவும் இல்லாத சூழலில், இந்த நேச உறவே கியூபாவிற்கு ஊறு விளைவிக்கலாம். ஆனால் புரட்சியாளர்களும் போராட்டக்காரர்களும் இருக்கும்வரை, அந்நாடு காஸ்ட்ரோ போலவே அமெரிக்காவிடமிருந்து தப்பிப் பிழைத்துக் கொள்ளும்" என்றார்.

 

காஸ்ட்ரோவின் இறுதி வார்த்தைகளும் அதுதான், "நாம் இடைவெளியின்றிப் போராடிக் கொண்டே இருக்க வேண்டும்"

http://www.vikatan.com/news/world/73605-how-is-cuba-and-its-communism-going-to-survive-after-fidel-castro.art

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நவீனன் said:

தனியொரு மனிதனை கொல்ல கண்ணிவெடிகள், வெடிகுண்டுகள் என 638 முறை இவர்மீது கொலைத் திட்டம் தீட்டினார்கள்.

பன்னாடை உலகமிது. :cool:

இப்ப .,....  ஒபாமா தொடக்கம் ஒட்டுக்குழுக்கள் வரைக்கும் பிடலுக்கு அஞ்சலி செய்து கண்ணீர் வடிக்கிது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பன்னாடை உலகமிது. :cool:

இப்ப .,....  ஒபாமா தொடக்கம் ஒட்டுக்குழுக்கள் வரைக்கும் பிடலுக்கு அஞ்சலி செய்து கண்ணீர் வடிக்கிது.

அமெரிக்க ஜனாதிபதி, ரொனால்ட் ட்ரம்ப்  அஞ்சலி  செலுத்தவில்லை.
மாறாக... அவர் ஒரு பயங்கரவாதி என்று சொல்லி விட்டார். 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

634 முறை கொலை முயற்சி... ஃபிடல் சந்தேகம் இல்லாமல் சந்திக்கும் மனிதர்!

கொலை முயற்சி

கடந்த நவம்பர் 25-ம் தேதி இரவில். கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தோன்றினார். ஏதோ முக்கியமான செய்திதான் என்று  மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  ‘கியூபா புரட்சியின் காமென்டர் இன் சீஃப் மறைந்து விட்டார். தொடர்ந்து வெற்றியை நோக்கி செல்லுங்கள் 'என்ற ஃபிடலின் புகழ்பெற்ற பொன்மொழியுடன் ரவுல் காஸ்ட்ரோ அறிவித்த போது, கியூபா மக்கள் மட்டுமல்ல, அர்ஜென்டினாவில் இருந்த மரடோனாவும் குலுங்கி அழத் தொடங்கி விட்டார். சர்ச்சைகளுக்குப் பெயர் போன ஒரு புகழ்பெற்ற கால்பந்து வீரர், ஒரு நாட்டின் தலைவர் ஒருவர் மறைவுக்கு கண்ணீர் வீடுகிறார் என்றால், அதன் பின்னணி பலமானது.

கடந்த 1959-ம் ஆம் ஆண்டு சேகுவராவுடன் சேர்ந்து கியூபா புரட்சியில் ஈடுபட்டு, படிஸ்டாவை ஆட்சியில் இருந்து அகற்றிய ஃபிடல் கியூபா மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல மரடோனாவின் வாழ்விலும் மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.. மரடோனா இன்று உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு  ஃபிடலும் ஒரு காரணம். 

கடந்த 1986-ம் ஆண்டு அர்ஜென்டினா 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணிக்கு மரடோனாதான்கேப்டன். இந்தத் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில்,  7 வீரர்களை கடந்து சென்று மரடோனாவால் அடிக்கப்பட்ட மாயகோல் உலக மக்களை கட்டிப் போட்டிருந்தது, ஃபிடலையும் அந்த கோல் மயக்கியிருந்தது. உலகக் கோப்பையை வென்ற கையோடு மரடோனாவைத் தங்கள் நட்டுக்கு வருமாறு ஃபிடல் அழைப்பு விடுத்தார். ஆனாலும் தொடர்ச்சியான ஆட்டங்களால் மரடோனாவால் உடனடியாக கியூபா செல்ல முடியவில்லை.  கடந்த 1987-ம் ஆண்டு மரடோனா முதன்முறையாக கியூபாவுக்கு சென்றார். கியூபா தலைவர் கால்பந்து கிங்கை கட்டியணைத்து வரவேற்று மகிழ்ந்தார். மரடோனா, பாப்புலரான அர்ஜென்டினா 10-ம் எண் ஜெர்சியில் தனது கையொப்பமிட்டு ஃபிடலுக்கு பரிசாக வழங்கினார். 

fidel%20_11143.jpg

அந்தக் காலக்கட்டத்தில் புகழ்பெற்று விளங்கிய ஒரு கால்பந்து வீரனை தனது விருந்தினராக வைத்து பராமரிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்ததாக கூறி ஃபிடல் மகிழ்ந்தார்.  அப்போது தொடங்கிய நட்பு ஃபிடல் மரணம் அடையும் வரைத் தொடர்ந்தது. மரடோனாவுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், கியூபாவுக்கு சென்று ஃபிடலை சந்திப்பது வழக்கம். ஃபிடலுக்கு பிடித்த கூடைப்பந்து , கால்பந்து, உலக அரசியல் குறித்து இருவரும் விவாதிப்பார்கள். 

ஃபிடலை பொறுத்த வரை, எந்த நேரமும் விழிப்பாகத்தான் இருப்பார். கவனம் சிதறினால் மரணம் என்பது ஃபிடலுக்குத் தெரியும். கியூபாவை, தனது மாகாணங்களில் ஒன்றாக இணைத்து விட வேண்டுமென்பது அமெரிக்காவின் நோக்கம். அதற்கு பெருந்தடையாக இருந்தது ஃபிடல். எனவே சிஐஏ, ஃபிடலை கொல்வதற்கு 50 ஆண்டுகளாக முயன்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 634 முறை கொலை முயற்சியில் ஈடுபட்டும்  தோல்வியைத் தழுவியது.

ஃபிடலின் காதலி மரிடா உள்ளிட்டவர்களை வைத்து கூட அவரை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது. அதனால், ஃபிடல் எந்த நேரமும் விழிப்புடன்தான் இருப்பார். எந்த அமெரிக்க அதிபரிடம் கேட்டாலும் ''ஃபிடலை நாங்கள் கொல்லவில்லை என்றால், என்ன கடவுள் அவரை ஒருநாள் எடுத்துக்  கொள்வார்' என்பார்கள். உலகிலேயே அதிக முறை கொலை முயற்சிக்குள்ளான நபர் ஃபிடலாகத்தான் இருக்கும். அப்படி உயிருக்கு விலை நிர்ணயிக்கப்பட்ட ஃபிடல் எந்த சந்தேகமும் இல்லாமல் ஒரு வெளிநாட்டு விளையாட்டு வீரர் ஒருவரை சந்திக்கிறார் என்றால் அது மரடோனோவாகத்தான் இருக்கும். இருவருக்கும் அந்தளவுக்கு நெருக்கம். 

goal_11000.jpg

இந்த நெருக்கம் அதிகரிக்க இன்னொரு காரணமும் இருந்தது. கடந்த 1983-ம் ஆண்டு மரடோனா இத்தாலியின் நேபோலி அணிக்காக விளையாடி வந்தார். அப்போதிருந்தே அவருக்கு 'கோகைன்' என்ற போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் இருந்தது. இதனால், கடந்த 2004-ம் ஆண்டு வாக்கில் மரடோனாவின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவரது உடல் எடை 127 கிலோவாக இருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில், பியூனஸ் அயர்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை பிழைக்க வைக்க கடுமையாகப் போராடினர். உலகம் முழுக்கவுள்ள அவரது ரசிகர்கள் மரடோனா உயிர்பிழைக்க பிரார்த்தனை நடத்தினர். தமிழகத்தில் உள்ள பல கிறிஸ்தவ ஆலயங்களில் கூட மரடோனா உயிர் பிழைக்க சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. இறுதியில் மரடோனா உயிர் பிழைத்துக் கொண்டார். ஆனால், உயிர் பிழைத்தாலும் போதை மருந்து பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக் கொண்டால்தான் உயிர் வாழ முடியும் என மருத்துவர்கள் உறுதிபடக் கூறினர். 

இதையடுத்து, கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மரடோனாவை உடனடியாக தனது நாட்டுக்கு அழைத்துக் கொண்டார். ஹவானாவில் உள்ள லாபெராடா கிளீனிக் போதைக்கு அடிமையானவர்களை மீட்பதில் புகழ்பெற்றது. அந்த மருத்துவமனையில் மரடோனாவை ஃபிடல் அனுமதித்து சிகிச்சை அளித்தார். பல மாதங்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மரடோனா, போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டார். அவரது உடல் எடை சாதாரண நிலைக்கு வந்தது. பின்னர் மீண்டும் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டு, கடந்த 2010-ம் ஆண்டு அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு பயிற்சியாளராகவும் பொறுப்பேற்றார். அந்த வகையில் மரடோனாவின் உயிரை மீட்டு, தந்தவர் ஃபிடல். உடல் நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகிய ஃபிடலை அடிக்கடி சென்று  மரடோனா சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

மரடோனாவும் ஃபிடலை தனது சிறிய தந்தை எனக் குறிப்பிடுவது வழக்கம். மரடோனாவின் உடலில் இரு உருவங்கள்தான் பச்சைக் குத்தப்பட்டிருக்கும். அதில் ஒன்று சே... மற்றொன்று ஃபிடலுடையது!

http://www.vikatan.com/news/sports/73635-about-the-friendship-between-fidel-castro-and-maradona.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.