Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதிய ஆசன வசதிகள் இன்மையால் புதிய அமைச்சரவை கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

Featured Replies

போதிய ஆசன வசதிகள் இன்மையால் புதிய அமைச்சரவை கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

புதிதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 52 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையின் இன்று புதன்கிழமை இடம்பெற இருந்த முதலாவது கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

கடந்த வருடங்களில் அமைச்சரவையில் ஏறக்குறைய 33 அமைர்களே காணப்படுவர்.அதற்கேற்றவாறே அமைச்சரவை கூட்டம் இடம்பெறும் இடத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இம்முறை 52 அமைச்சுக்கள் பதவியேற்றுள்ளமையால் அவர்களுக்கான போதிய ஆசன வசதிகள் இன்மையால் இன்று நடைபெற இருந்த புதிய அமைச்சரவை கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

-Tamilwin-

கூட்டம் ராஜபக்ச வீட்டில் ஒழுங்கு செய்யப்படுள்ளது.

அமைச்சரவை கூட்டமா அல்லது பாராளமன்ற உறுப்பினர் கூட்டமா

அமைச்சரவையில் கதிரைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மகிந்தன் தனிக்கதிரைகளாக இல்லாமல் நீளமான வாங்கு அல்லது சோபாவை வாங்கிப் போடலாமே!

இதைவிடச் சிறந்த மாற்றீடு நிலத்தில் ஓலைப்பாயை விரித்து, பாயில் அமைச்சர்கள் அமர்ந்து ஆலோசனைகள் நடத்துவதுதான். சோமபானம் குடிப்பதற்கு இதைவிட வசதியாக வேறொன்றையும் தேடிப்பிடிக்க முடியாது. பிக்குகள் அமைச்சரவைக்கு அடிக்கடி வந்து பிரித் ஓதுவதற்கும் ஓலைப்பாய் ஐடியா மிகப் பொருத்தமானது. ஒரு சின்னக்கஸ்டம், பாயை விட்டு எழும்பும் போது நிமல் சிறீ பால டீ சில்வா போன்றவர்கள் சிறிது திண்டாட வேண்டிவரும். இதற்காக கால்விறைத்தவர்களையும், மற்றும் பாரமான உடம்பு உள்ளவர்கையும் பாயிலிருந்து மேலே தூக்கிவிடுவதற்கு ஒட்டுக்குழுக்களின் உதவியை மகிந்தன் நாடலாம்.

அமைச்சர்கள் அதிகமாகிவிட்டபடியால் இவர்களை மேய்ப்பதற்கு ஒரு அமைச்சு உருவாக்கப்பட வேண்டும். இதனால் சோமபான உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அதற்கும் தனியான அமைச்சு வேண்டும்.

அமைச்சர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் மாதாந்தம் 9- 1/2 கோடி ரூபா செலவு

[31 - January - 2007]

புதிய அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிக்கப்பட்டதையடுத்து அமைச்சர்களுக்கான சம்பளம், அலவன்ஸ் மற்றும் அவர்களது ஊழியர்களுக்காக அரசு மாதாந்தம் ஒன்பதரைக்கோடி ரூபாவுக்கும் மேல் செலவிடவுள்ளது.

தற்போதைய நிலையில் அமைச்சர் ஒருவரின் சம்பளம் 54, 285 ரூபா இவருக்கான அலவன்ஸ் (கொடுப்பனவு) 96,500 ரூபா, இதன் படி ஒரு அமைச்சருக்கான மாதாந்த வருமானம் 1,50,785 ரூபாவாகும்.

ஒரு அமைச்சருக்கு 15 ஊழியர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். இவர்களது சம்பளம் மற்றும் கொடுப்பனவாக ஏழு இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது.

இதைவிட ஒரு அமைச்சருக்கான பாதுகாப்புக்கு 7 பாதுகாப்பு உத்தியோகத்தர் அமர்த்தப்படுவர். இவர்களது சம்பளம் மற்றும் கொடுப்பனவாக 1,20,000 ரூபா வழங்கப்படவுள்ளது. இதற்கமைய ஒரு அமைச்சருக்கும் அவரது ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கென மாதாந்தம் 9,70,785 ரூபாவை அரசு ஒதுக்கவுள்ளது.

இந்தச் சம்பளமும் கொடுப்பனவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கும் அந்தஸ்தற்ற அமைச்சர்களுக்கும் ஒரேயளவென்பதால் 85 அமைச்சர்களுக்கும் 82,516,725 ரூபா மாதாந்தம் ஒதுக்கப்படவுள்ளது.

இதேநேரம், பிரதிஅமைச்சர் ஒருவரின் சம்பளமும் 54,285 ரூபாவாகும். இவருக்கான கொடுப்பனவும் 96,500 ரூபாவாகும். (அமைச்சர்களைப் போன்றே)

ஒரு பிரதி அமைச்சருக்கு 10 ஊழியர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். இவர்களது சம்பளம் மற்றும் கொடுப்பனவாக ஐந்து இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது.

இதைவிட பிரதி அமைச்சர் ஒருவருக்கான பாதுகாப்புக்கு ஆறு பாதுகாப்பு ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களது சம்பளம் மற்றும் கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய, ஒரு பிரதி அமைச்சருக்கும் அவரது ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கென மாதாந்தம் 7,50,785 ரூபாவை அரசு ஒதுக்கவுள்ளது.

இதன்படி 19 பிரதி அமைச்சர்களுக்கும் அரசு மாதாந்தம் 14,264,915 ரூபாவை ஒதுக்க வேண்டியுள்ளது.

இதன் மூலம் 85 அமைச்சர்களுக்கும் 19 பிரதி அமைச்சர்களுக்கும் மாதாந்தம் ஒன்பது கோடியே 67 இலட்சத்து 81,640 ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

இவற்றைவிட இவர்கள் ஒவ்வொரு வரும் இலவச தொலைபேசி அழைப்புகளையும் இலவச பக்ஸ் வசதிகளையும் பெறமுடியும். அமைச்சர்களின் செயலாளர்களுக்கும் இந்த இலவச வசதிகள் கிடைக்கும்.

மேலும் ஒவ்வொரு அமைச்சரும் 35 இலட்சம் ரூபா பெறுமதியான, சுங்கத்தீர்வையற்ற வாகன கொள்வனவையும் செய்ய முடியும்.

இதைவிட அரச செலவில் உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் அரச செலவிலான வெளிநாட்டு சுற்றுப்பயணங்களும் மேற்கொள்ள முடியும்.

நன்றி : தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.