Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னணி தொழிலதிபருடன் தொடர்பு கொண்டு தனது அரசின் மூத்த அமைச்சர்கள் அரசுக்கு எதிராக அணிதிரள்வதை தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்த மகிந்த.

Featured Replies

முன்னணி தொழிலதிபருடன் தொடர்பு கொண்டு தனது அரசின் மூத்த அமைச்சர்கள் அரசுக்கு எதிராக அணிதிரள்வதை தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்த மகிந்த.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பை தொடர்ந்து சுதந்திரக் கட்சிக்குள் கடுமையான விரிசல்கள் தோன்ற ஆரம்பித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை நாட்டின் முன்னணி தொழிலதிபர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தனது அரசின் மூத்த அமைச்சர்கள் அரசுக்கு எதிராக அணிதிரள்வதை தடுக்குமாறு கேட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது:

கடந்த திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் தொழிலதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மகிந்த, அவருக்கும் தேசிய பாரம்பரிய அமைச்சர் அனுரா பண்டாரநாயக்காவிற்கும் இடையில் உள்ள நல்ல உறவுநிலையை பயன்படுத்தி அனுரா, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்திற்கு சென்று வருவதை தடுக்குமாறு கேட்டுள்ளார். மங்கள சமரவீர, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை அரசு உள்வாங்கியதை பகிரங்கமாக எதிர்த்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

மங்கள சமரவீர, தனக்கும் அரசுக்கும் எதிராக செயற்படுவதால் அவரது இல்லத்திற்கு அனுராவை செல்ல வேண்டாம் எனவும் மங்களவின் பொறிக்குள் விழுந்தது தொடர்பாக கவலை கொள்ள வேண்டாம் எனவும் எல்லாவற்றையும் தான் பார்த்துக் கொள்வதாக அனுராவிடம் கூறுமாறு மகிந்த தொழிலதிபரை கேட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் அமைச்சரவை பதவியேற்றதைத் தொடர்ந்து அரசின் பல மூத்த அமைச்சர்கள், மங்களவின் இல்லத்தில் ஒன்றுகூடியதை அறிந்த பின்னரே மகிந்த, தொழிலதிபரிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மங்களவின் இல்லத்தில் அனுரா பண்டாரநாயக்கா, ஆறுமுகம் தொண்டமான், ஏ.எல்.எம்.அதாவுல்லா, சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் உட்பட 15 அமைச்சர்கள் ஒன்று கூடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது தொடர்பில் அனுரா பண்டாரநாயக்காவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கையில்,

"நான் யார் இல்லத்திற்கும் எனது விருப்புடன் செல்வேன். மங்கள எனது அமைச்சரவை நண்பர். எனவே நான் அவரது இல்லத்திற்கு தொடர்ந்து செல்வேன்" என மகிந்தவிடம் கூறுமாறு அனுரா தொழிலதிபரிடம் கூறியுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் "நான் சிம்மராசி சிங்கம் அதிக நேரத்தை தூங்குவதிலேயே செலவழிக்கும், ஆனால் தூக்கம் கலைந்து எழுந்தால் பெரும் கர்ஜனையுடன் வேட்டைக்கு தயாராகி விடும்" எனவும் அனுரா, மங்களவின் இல்லத்தில் தெரிவித்துள்ளார். அரச தலைவரின் செய்தியை தொழிலதிபரிடம் இருந்து பெற்றதாக தெரிவித்த அனுரா அதன் விபரங்களையும் கூற மறுத்துவிட்டார் எனவும் தெரிவித்துள்ளன.

அதேசமயம் மகிந்தவின் வேண்டுகோளையும் புறக்கணித்து மீண்டும் பல அமைச்சர்கள் நேற்று இரவு மங்களவின் இல்லத்தில் சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரங்களை ஆராய்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

-Puthinam-

கடந்த திங்கட்கிழமை நாட்டின் முன்னணி தொழிலதிபர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தனது அரசின் மூத்த அமைச்சர்கள் அரசுக்கு எதிராக அணிதிரள்வதை தடுக்குமாறு கேட்டுள்ளார்.

கடைசியில் மகிந்தனின் கதை தமிழ் சினிமாப் படங்களில் வரும் அரசியல்வாதிகளின் கதை போலாகிவிட்டது!

மங்கள சமரவீர, தனக்கும் அரசுக்கும் எதிராக செயற்படுவதால் அவரது இல்லத்திற்கு அனுராவை செல்ல வேண்டாம் எனவும் மங்களவின் பொறிக்குள் விழுந்தது தொடர்பாக கவலை கொள்ள வேண்டாம் எனவும் எல்லாவற்றையும் தான் பார்த்துக் கொள்வதாக அனுராவிடம் கூறுமாறு மகிந்த தொழிலதிபரை கேட்டுள்ளார்.

ஆக மொத்தத்தில் தனது அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் ஒருவருடனேயே நேரடியாகத் தொலைபேசியில் உரையாட வக்கில்லை! தைரியமும் இல்லை! இந்த நிலைமையில் இந்தப்பெட்டையன் எங்க தமிழரின்ட பிரச்சிகளைத் தீர்த்து வைக்கப் போகின்றான்?

"நான் யார் இல்லத்திற்கும் எனது விருப்புடன் செல்வேன். மங்கள எனது அமைச்சரவை நண்பர். எனவே நான் அவரது இல்லத்திற்கு தொடர்ந்து செல்வேன்" என மகிந்தவிடம் கூறுமாறு அனுரா தொழிலதிபரிடம் கூறியுள்ளதாக கூறப்படுகின்றது.

சந்திரி அக்கா இப்பிடத்தான் கதைக்கோணும் என்று தன்ற செல்லத் தம்பி அனுராவுக்கு சொல்லிக் கொடுத்தவவாம்.

மேலும் "நான் சிம்மராசி சிங்கம் அதிக நேரத்தை தூங்குவதிலேயே செலவழிக்கும், ஆனால் தூக்கம் கலைந்து எழுந்தால் பெரும் கர்ஜனையுடன் வேட்டைக்கு தயாராகி விடும்" எனவும் அனுரா, மங்களவின் இல்லத்தில் தெரிவித்துள்ளார்.

பொதுசனங்களின் பொதுச்சொத்துக்களைச் சூரையாடி பீப்பாபோல் உடம்பு வளர்ப்பதற்குத்தானே சிங்கம் வேட்டைக்கு தயாராகும்?

அதேசமயம் மகிந்தவின் வேண்டுகோளையும் புறக்கணித்து மீண்டும் பல அமைச்சர்கள் நேற்று இரவு மங்களவின் இல்லத்தில் சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரங்களை ஆராய்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மங்கள வெளிநாட்டு அமைச்சராக இருந்தபடியால் மகிந்தனின் வீட்டில் கிடைக்காத சோமபானம், வெளிநாட்டுச் சரக்குகள், சாப்பாடுகள் மங்கள வீட்டில் பரிமாறப்பட்டிருக்கலாம். இதுவே அமைச்சர்கள் மகிந்தனின் ஆணையையும் மீறி மங்கள வீடு சென்றதன் இரகசியமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவின் கால்கள் இப்போது இரு தோணியில் இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.