Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 இலிருந்து வெகுதூரம் சென்று புதிய அரசியலமைப்பை உருவாக்குகிறோம்/// நியாயமான அரசியல் தீர்வு கிடைத்தால் உதாசீனப்படுத்தமாட்டோம் என்கிறார் சம்பந்தன்

Featured Replies

13 இலி­ருந்து வெகுதூரம் சென்று புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­கிறோம்

 

நியா­ய­மான அர­சியல் தீர்வு கிடைத்தால் உதா­சீ­னப்­ப­டுத்தமாட்டோம் என்­கிறார் சம்­பந்தன்
(க.கம­ல­நாதன்,ந.ஜெகதீஸ்)

அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்­தச்­சட்டம் தமிழ் மக்­க­ளுக்கு முழு­மை­யான அர­சியல் தீர்­வாக அமை­யாது. எனவே அதி­லி­ருந்து வெகு­தூரம் சென்று நாங்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­கி­ன்றோம். அதற்­க­மைய நியா­ய­மா­னதும் நீதி­யா­ன­து­மான தீர்வு கிடைத்தால் அதனை உதா­சீ­னப்­ப­டுத்த மாட்டோம் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சி தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். 

அதே­நேரம் நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது பூரண நம்­பக்கை வைக்க வேண்டும் என்றும் புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது பெரும்­பான்­மை­யி­னரின் ஆத­ர­வின்றி நிறை­வேற்­றப்­பட்டால் பய­னற்­றதாய் போய்­விடும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

மறைந்த முன்னாள் கொழும்பு மாந­கர சபை முதல்வர் க.கணே­ச­லிங்கம் அம­ரத்தும் எய்­திய 10 ஆம் ஆண்டு நிகழ்வு பம்­ப­லப்­பிட்டி சரஸ்­வதி மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்­துக்­கொண்டு சிறப்­புரை ஆற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

13 ஆவது திருத்தம் ஒரு முழு­மை­யான தீர்­வாக அமை­ய­வில்லை என்­பதன் அடிப்­ப­டையில் முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்த்­தன பதவி வில­கிய போது பிரே­ம­தாஸ காலத்தில் எதிர்க்­கட்சி உறுப்­பினர் மங்­கள முன­சிங்க தலை­மையில் பாரா­ளுன்ற தெரி­வுக்­குழு உரு­வாக்­கப்­பட்­டது. அந்த குழு இந்­திய அர­சியல் சாச­னத்தின் பிர­காரம் இலங்­கையில் அதி­கார பகிர்வு வேண்டும் என்­றது.

இணைக்­கப்­பட்­டி­ருந்த வடக்கு கிழக்கு இரண்டு மாகா­ணங்­க­ளாக இருந்­தாலும் அவற்றை இணைத்து ஒரு சபை அமைக்­கப்­பட வேண்டும் என்று கூறப்­பட்­டது. இதனை நான் கூறக்­கா­ரணம் 13 நிறை­வேற்­றப்­பட்ட பிறகும் கூட வந்த ஜனா­தி­ப­தி­க­ளான பிர­மே­தாச,சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க,பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்­வர்கள் 13 மூன்­றா­வது அர­சி­ய­ல­மைப்பு ஒரு முழு­மை­யான தீர்­வா­காது என்­பதால் அதனை திருத்­தி­ய­மைக்கும் முயற்­சி­களில் ஈடு­பட்­டனர்.

சந்­தி­ரி­காவின் காலத்­திலும் 1997 ஆம் ஆணடு 2000 ஆம் ஆண்­டு­களில் இந்தச் சட்­ட­மூ­லத்தில் திருத்தம் செய்ய மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை இருக்­க­வில்லை. அதன் கார­ண­மாக அந்த வாய்ப்பு தவ­றி­யது. அதன் பின்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக இருந்த போது அர­சாங்­கத்­திற்கும் புலி­க­ளுக்கும் இடையில் ஒஸ­லோவில் 2000 ஆம் ஆண்டு மார்­கழி மாதம் ஒரு பிரே­ரணை வெளி­யி­டப்­பட்­டது. உலக சுய­நிர்­ணய அடிப்­ப­டையில் ஒரு­மித்த ஒரு நட்­டிற்குள் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான ஒரு தீர்வை ஆராய இரு பகு­தி­களும் சம்­மதம் தெரி­வித்­தனர். அந்த பிர­க­டனம் மீண்டும் ஒரு முறை டோக்­கி­யோவில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

அதன் பின்­னரும் ஒன்று நடை­பெ­ற­வில்லை. பின்னர் மஹிந்த ஜனா­தி­ப­தி­யானார். 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சகல கட்­சி­க­ளையும் அழைத்து ஒரு நிபுணர் குழுவை நிய­மித்து புதிய அர­சியல் சாச­னத்தை உரு­வாக்க கேட்டார். அவர்­க­ளி­டத்தில் விசே­ட­மாக இந்­தி­யா­விற்கும் மற்­றைய நாட்­டிற்கும் சென்­று­வந்து அங்­குள்ள அர­சியல் சாச­னங்­களை படித்­து­வி­டடு அதி­க­பட்ச அதி­கார பகிர்­வுடன் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்று கூறினார்.

மக்­க­ளு­டைய பாது­காப்பு உறுதி செய்­யப்­பட வேண்டும் மக்கள் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். அந்த நிபுணர் குழு அறிக்­கையில் அவர் கூறிய படி­மு­றைகள் அனைத்தும் பின்­பற்­றப்­பட்­டி­ருந்­தன. அதன் பின்னர் பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ர­ணவின் கீழ் உரு­வாக்­க­பட்ட அர­சி­ய­ல­மைப்பும் முன்­னேற்­ற­க­ர­மாக அமைந்­தி­ருத்­தது. ஆனால் அவை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

அதன் பின்னர் ஐக்­கிய நாடுகள் சபை­யுடன் இந்­தியா ஐரோப்­பிய ஒன்­றியம், நோர்வே ஜப்பான் போன்ற நாடு­க­ளுக்கு முன்னாள் ஜனா­தி­பதி இந்த வாக்­கு­று­தியை வழங்­கி­யி­ருந்­தாலும் அவற்றை நிறை­வேற்­ற­வில்லை.பின்னர் எங்­க­ளுக்கும் மஹிந்த ஆட்­சிக்கும் இடையில் இம்­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் அடிப்­ப­டை­யிலும் ஒன்றும் செய்­யப்­ப­ட­வில்லை.

அத­னை­ய­டுத்து எங்­களை ஒரு தெரி­வுக்­கு­ழு­விற்கு அழைத்தார். அப்­போது உங்­க­ளுக்கும் எங்­க­ளுக்கு இடையில் எந்த தீர்­மா­னமும் இல்­லாத போது தெரிவுக் குழுவில் என்ன பயன் இருக்­கின்­றது என்று கேட்டு நாம் அந்த பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­கொள்­ள­வில்லை. அந்தச் சூழலில் தான் அவர் மீண்­டு­மட ஜனா­தி­ப­தி­யாக அர­சியல் சாச­னத்­தையும் தேர்தல் சாச­னத்­தையும் திருத்தி முன்­கூட்­டியே ஒரு ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­தினார். அதில் எதிர்­பா­ராத வித­மாக அவ­ரது கட்­சியின் மூத்த அங்­கத்­த­வ­ராக இருந்த தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது வேட்­பா­ள­ராக கள­மி­றங்கி அவரை வெற்­றிக்­கொண்டார்.

அவ­ருக்கு எல்லா மக்­களும் வாக்­க­ளித்­தனர். குறிப்­பாக தமிழ் பேசும் மக்கள் அவரை பெரு­வா­ரி­யாக ஆத­ரித்­தார்கள். அதன் பின்னர் பிர­த­ம­ராக தெரிவு செய்­யப்­பட்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் போட்­டி­யிட்டு கூடு­த­லான ஆச­னங்­களை பெற்றார். அதனால் இன்று நாட்டில் முதல் முறை­யாக பிர­தான இரு கட்­சி­களும் இணைந்து ஒரு ஆட்­சியை நடத்த தீர்­மா­னித்­தது.

அதனால் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையும் கிடைத்­துள்­ளது. அதனால் சந்­தி­ரி­காவால் நிறை­வேற்ற முடி­யாது போன அர­சியல் சாச­னத்தை இன்று எம்மால் நிறை­வேற்­றிக்­கொள்ள கூடிய வித்தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை உள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் உரை­களில் அவர் இந்த பிரச்­சி­ணைக்கு நிரந்­தர தீர்வு வேண்டும் என்ற உறு­தி­யுடன் செயற்­ப­டு­வதை அறிய முடி­கின்­றது.

ஒரு தலைவர் மீது நாம் நம்­பிக்கை கொள்ள வேண்­டி­யது எமது கட­மை­யாகும். நாங்கள் நம்­பிக்கை வைக்­காமல் எந்த நம்­பிக்­கையும் கரு­மங்­களும் நிறை­வே­றாது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த நாட்டின் நிலை­யான அபி­வி­ருத்­திக்கு சமூக ஒற்­று­மையே முதற்­கா­ரணம் என்­பதை புரிந்­து­கொண்­டுள்ளார். அதனால் முதலில் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு கண்டால் தான் நிலை­யான அபி­வி­ருத்தி உரு­வாகும் என்­பதை ஏற்­றுக்­கொண்­டுள்ளார். அதே­நேரம் என்றும் இல்­லா­த­வாறு எமது பிரச்­சினை சர­வ­தே­ச­ம­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

நான்கு தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அவ்­வாறே எதிர்­வரும் பங்­குணி மாதம் 2015 ஆம் ஆண்டில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றதா என்று ஆராய எதிர்­வரும் 2017 பங்­குனி மாதம் அடுத்த அமர்வு இடம்­பெ­ற­வுள்­ளது. அதற்கு இலங்கை அர­சாங்கம் பதி­ல­ளிக்க வேண்டும். சர்­வ­தேச கண்­கா­ணிப்பின் கீழ் இருக்­கின்றோம்.

இது சுய­தீன நாட்டின் மீது மற்­று­மொரு நாடு கைவைப்­ப­தென்று ஆகி­வி­டாது ஐக்­கிய நாடுகள் சபையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களில் பிர­காரம் இலங்கை அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளதா என்றே ஆரா­யப்­ப­டு­கின்­றது. இல்லை ஒப்­புக்­கொண்ட கட­மை­களும் நிறை­வேற்ற வைக்­கவே சர்­வ­தேச தலை­யீடு அவ­சி­யப்­ப­டு­கின்­றது.

ஆகவே ஒட்­டு­மொத்­த­மாக பார்­கின்ற போது எமக்­கான சந்­த­ரப்பம் உரு­வா­கி­யுள்­ளது மூண்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை பெற­வேண்டும் என்ற நிலை­பாட்டில் நாங்கள் உள்ளோம். மீண்டும் தமிழ் மக்கள் மீது இன்­னு­மொரு வன்­முறை கட்­ட­விழ்த்து விடப்­பட கூடாது என்ற நிலைப்­பாட்டில் நாங்கள் உள்ளோம். அவர்­க­ளுக்கு பரி­தாப நிலைமை ஏற்­ப­டக்­கூ­டாது நிரந்­தர தீர்வு வழங்­கப்­பட வேண்டும் என்­பதில் சர்­வ­தேசம் உறு­தி­யாக உள்­ளது.

நாட்டில் இன்று குழப்­பத்தை ஏற்­ப­டுத்த சிலர் முயற்­சித்­தா­லும இந்த நாட்டில் ஒரு நிலை­யான சமா­தானம் வர வேண்டும் என்ற கருத்தும் நில­வு­கின்­றது கற்ற பல பெளத்த குரு­மார்­களும் கூட இந்த நிலை­பாட்­டினை ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். அதனால் தமிழ் முஸ்லீம் மக்கள் ஒற்­று­மை­யாக வாழ வேண்­டிய காலம் இது பாரா­ளு­மன்­றமும் இன்று அர­சியல் சாசன சபை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது.

பிர­தமர் தலை­மையில் அர­சி­ய­ல­மைப்பு குழு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது அதற்­கான கரு­மங்கள் சக­ல­தும முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது இந்த மாதம் 10 ஆம் திகதி உப­குழு அறிக்கை சமர்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அதன் பின்னர் ஒரு பேச்­ச­வார்­தையும் இடம்­பெ­ற­வுள்­ளது. இந்த உப குழுக்­களின் அறிக்கை தொடர்­பிலும் பல்­வேறு விவா­த­ஙகள் இருந்­தாலும் நாம் ஒரு­மித்த பிள­வுப்­ப­டாத,பிரிக்­கப்­ப­டாத,பிரிக்க முடி­யாத ஒரு நாட்­டிற்குல் ஒரு இலங்­கைக்குள் நியா­ய­மான நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வை நாங்கள் விரும்­பு­கின்றோம்.

1976 ஆம் ஆண்டு தந்தை செல்வா பிரி­வினை தீர்­மானம் நிறை­வேற்ற நியா­ய­மான காரணம் இருந்­தது. 1970 ஆம் ஆண்டு தமி­ழ­ரசு கட்­சியின் தேர்தல் பிர­க­ட­னத்­திலும் பிரி­வினை வேண்டாம் என பகி­ரங்­க­ம­டாக கூறப்­பட்­டது பிரி­வி­னையை ஆத­ரித்­த­வர்கள் தோற்­க­டிக்­கப்­பட்­டனர். 13 ஆவது அர­சியல் சாசனம் அமு­லுக்கு வந்த பிறகு நாங்கள் ஒரு­மித்த நாட்­ங­டுக்கள் தீர்வு வேண்டும் என்றே கோரினோம் மக்­களும் அதற்­கான அங்­கீ­கா­ரத்­தினை எமக்கு தந்­துள்­ளனர் ஏற்­டப்­போகும் அந்த தீர்வு நியா­ய­மாக இறை­மையின் அடிப்­ப­டையில் முன்­வைக்­கப்­பட வேண்டும் மகாண சபை­க­ளிலும் உள்­ளூ­ராசி மன்­ற­க­ளிலும் அவ்­வாறே அமைய வேண்டும். அது இந்த நாட்டின் சகல மக்­க­ளுக்கும் வழங்­கப்­பட வழங்கப்பட வேண்டும்

இது நாட்டு மக்களுக்கு நீதியான தீர்வை வழங்குவதாக அமைந்திருக்க வேண்டும். அரசியவமைப்பிற்கான கருமங்கள் தொடர்பிர் தீர்மானங்கள் எடுக்கப்படும் மக்கள் மத்தியில் சென்று அவற்றை விளக்கிக்கூறி மக்கள் கருத்தை அறிவோம் எமன்னு நியாயமான தீர்வு கிடைக்கும் பட்சத்தில் அதனை நாங்கள் உதாசீனப்படுத்த மாட்டோம். வடக்கு கிழக்கு இணைப்பை பொறுத்தவரையில் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களையும் பேச தீர்மானிக்க வேண்டும்.

தமிழ் முஸ்லீம் மக்கள் இதற்காக முற்னபடாமல் தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் பலர் தற்போதைய செயற்பாடுளை குழப்ப முயற்சித்தாலும் மக்கள் மத்தியில் சென்று உண்மையை கூறி அரசியலமைப்பை மக்கள் ஆதரவை பெற வேண்டும் பெரும்பான்மை மக்களின் ஆதரவின்றி பெறுவது அர்தமற்ற தீர்வு அதனை ஜனாதிபதிக்கும் கூறியுள்ளோம். நாமும் தொடர்ந்தும் தீவிரவாத போக்கில் இருக்க முடியாது அதனால் எதனையும் அடைய முடியாது. கொள்கையில் மாத்திரம் தீவிரமான இருந்து வேண்டியதை கேட்டுப்பெற வேண்டும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-05#page-1

  • தொடங்கியவர்

13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் – சுவாமி: தீர்வு கிடைக்காது: சம்பந்தன்:-

sambanthar
13ஆவது திருத்தச் சட்டத்தை முறையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கலாம் என்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் கருத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முரண்பட்டுள்ளார்.

கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் கணேசலிங்கத்தின் நினைவுதினம், கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கலாமென அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார். இதனை மறுதலித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் சாசனத்தில் முதன்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 13ஆவது திருத்தச் சட்டம் வந்திருந்தாலும் கூட, தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு அது தீர்வாக அமையவில்லையெனக் குறிப்பிட்டார்.
அவ்வாறு தீர்வாக அமையவும் முடியாதென குறிப்பிட்ட சம்பந்தன், 13இலிருந்து இன்று வெகுதூரம் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

dm-suwaminathan13ஆவது திருத்தத்தை சரியாக அமுல்படுத்தினால் அரசியல் தீர்வு கிடைக்கும் என்கிறார் சுவாமிநாதன்:

13ஆவது திருத்தச் சட்டத்தை முறையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களின் முக்கிய அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வாகும் எனக் குறிப்பிட்ட அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அதனை செய்யத் தவறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இன்று வடக்கிலும் கிழக்கிலும் 160,000 வீடுகள் தேவையாக உள்ளதென குறிப்பிட்டதோடு, இதனை கட்டிக்கொடுப்பதற்கு சிலர் இடையூறு விளைவிப்பதாகவும் ஐந்து வருடங்களின் பின்னர் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லையென தம்மை குறைகூற வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் உரிமைகளை பெற்று விடிவை காண்பதற்காக எல்லோரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வடக்கில் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றும் செயலணியில் தாம் அங்கம் வகிப்பதானது, வடக்கை முஸ்லிம்களுக்கு கொடுக்கும் செயலல்ல என சுட்டிக்காட்டிய சுவாமிநாதன், முஸ்லிம், சிங்களவர், தமிழர் என யாராக இருந்தாலும் அவர்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தால், அதற்கான அத்தாட்சி இருந்தால் அவர்களுக்கு குறித்த இடம் திருப்பி கொடுக்கப்பட வேண்டுமென்பதே தமது சிபாரிசு என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/9308

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.