Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிமன்ற உத்தரவை கிழித்தவர்களை கைதுசெய்வதே உரிய நடைமுறை

Featured Replies

நீதி­மன்ற உத்­த­ரவை கிழித்­த­வர்­களை கைதுசெய்­வதே உரிய நடை­முறை

p20-663d38a780984491205e0925b543f18bacc878c6.jpg

 

நீதி­ய­மைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ 
(க.கம­ல­நாதன்)

மட்­டக்­க­ளப்­புக்கு செல்­ல­வி­ருந்த பொது­பல சேனா அமைப்பின் உறுப்­பி­னர்கள் மீது ஒரு குழு தாக்­குதல் நடத்துவதற்கும் முயற்சியில் இறங்கப்போவதாக எமக்கு தகவல் கிடைத்­தது. அதனால், அவர்கள் மட்டு. நக­ருக்குள் நுழையும் போது உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­ப­டாமல் தடுப்ப­தற்­கா­கவே இடை­ந­டுவில் அவர்­களை மறித்து தடை உத்­த­ர­வினை கைய­ளிக்­கு­மாறு பொலி­ஸாரை பணித்தோம் என நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ தெரி­வித்தார். 

அதே­நேரம் நீதி­மன்றத் தடைஉத்­த­ரவை கிழித்­தெ­றி­வது மன்­றினை அவ­தூறு

 செய்­வ­தா­கவே கருத்­தப்­படும். அந்த தவறை இழைப்­ப­வர்­களை கைது செய்­வதே உரிய நடை­மு­றை­யாகும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் புத்­த­சா­சன அமைச்சின் எதிர்­கால செயற்­திட்டம் குறித்து அறி­விக்கும் நோக்கில் நேற்று திங்­கட்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

வடக்கு மாகா­ணத்தில் உள்ள விகா­ரைகள் உடைக்­கப்­ப­டு­கின்­றமை தொடர்பில் விமர்­ச­னங்கள் உள்­ளன. இது தொடர்பில் தற்­போது அர­சாங்­கமும் கவனம் செலுத்த தீர்­மா­னித்­துள்­ளது. அதனால் வடக்கு மாகாண சபை­யிலும் கூட அமைச்­சர்கள் இது தொடர்­பி­லான தீர்­மா­னங்கள் மேற்­கொள்­வைத அனு­ம­திக்க முடி­யாது.

வடக்கு மாகாண சபை­யா­னது தனிப்­பட்ட ஒரு மதத்­திற்கு மாத்­திரம் முன்­னு­ரிமை அளிக்கும் சபை­யா­கவும் இருக்க முடி­யாது. அங்கு அவ்­வா­றான பிரே­ர­ணைகள் கொண்­டு­வ­ரப்­பட்­டாலும் அதனை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ளது. இந்த விட­யத்­தினை பொறுத்­த­வ­ரையில் வடக்கு மாகாண சபையில் மேற்­கொள்­ளப்­படும் தீர்­மா­னங்கள் பய­னற்­றது என்றே குறிப்­பிட முடியும்.

அதற்­கான அதி­கா­ரங்கள் மாகாண சபை­க­ளுக்கு இல்லை என்று பொருள்­பட கூற­வில்லை. இருப்­பினும் தனிப்­பட்ட மதம் சார்ந்த பிரே­ர­ணைகள் உரு­வாக்­கப்­பட்டால் அதனை ஏற்­க­மாட்டோம். இந்­நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­ட­டுள்ள மதச் சுதந்­தி­ரத்­தினை பறிப்­ப­தற்கு எந்த மாகாண சபை­க­ளுக்கும் நாம் இட­ம­ளிக்க மாட்டோம்.

திரு­கோ­ண­மலை மற்றும் மட்­டக்­க­ளப்பு நக­ரங்­களில் உள்ள பழைய விகா­ரை­களை புன­ர­மைப்­ப­தற்கு அர­சாங்கம் தற்­போது உத்­தே­சித்து வரு­கின்­றது. கடந்த காலங்­களில் யுத்த கார­ணத்­தினால் வடக்கு கிழக்கில் புன­ர­மைக்க முடி­யாது போன விகா­ரை­களை தற்­போது புன­ர­மைக்க தீர்­மா­னித்­துள்ளோம்.

இவ்­வா­றான நிலையில் மட்­டக்­க­ளப்பில் மங்­க­ள­ரா­மய விகா­ர­தி­பதி அம்­பிட்­டியே சும­ன­ரத்ன தேரரின் செயற்­பா­டுகள் நாட்டின் சமா­தா­னத்­தினை சீர்­கு­லைப்­ப­தா­கவே உள்­ளன. முன்னர் போன்று இல்­லாமல் எமது நாட்டின் நான்கு மதங்­க­ளுக்கு பொறுப்­பாக நான்கு அமைச்­சர்கள் உள்­ளனர். அவர்கள் அனை­வரும் ஜனா­தி­பதி தலை­மையில் இன்று கூடி பேச்­சு­வார்த்­தை­யொன்றை முன்­னெ­டுக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டின் சமா­தா­னத்­தினை நிலை­யா­ன­தாக மாற்­று­வது தொடர்பில் பேச தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த பேச்­சு­வார்­த­தைக்கு பெளத்த மற்றும் முஸ்லீம் தமிழ் மத­கு­ருக்­க­ளையும் நாம் பேச்­சு­வார்­தைக்கு அழைத்­துள்ளோம். அதே­நேரம் மட்­டக்­க­ளப்­பிற்கு செல்ல முற்­பட்ட பிக்­குகள் குழுவை அர­சாங்­கமே தடுக்க கோரி­யது. அதற்­கான முயற்­சி­களை மேற்­கொள்­ளு­மாறு பொலி­ஸா­ரி­டத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

அத­னை­ய­டுத்தே பொலிஸார் நீதி­மன்ற தடை உத்­த­ரவை பெற்­றுக்­கொண்டு பிக்­குகள் மட்டு. நக­ருக்குள் செல்ல விடாமல் தடுத்­தனர். அதே­நேரம் இங்­கி­ருந்து செல்லும் பிக்­குகள் குழு மீது தாக்­குதல் நடத்­துவும் மட்­டக்­க­ள­பிற்குள் குழு­வொன்று தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் எமக்கு தகவல் கிடைத்­தது அதன் பின்பே நாம் குறித்த பிக்­கு­களை செல்­லாது தடுக்க நேரிட்­டது அங்கு உயிர் சேதங்கள் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்றே நாம் அந்த தீர்­மா­னத்­தினை எடுத்தோம்.

எவ்­வா­றா­யினும் அங்கு நீதி­மன்ற தடை உத்­த­ரவு கிழித்­தெ­றி­யப்­பட்­டதை நியா­யப்­ப­டுத்த முடி­யாது காரணம் நீதி மன்றத் தடை உத்­த­ரவை கிழித்­தெ­றி­வது நீதி­மன்­றத்­தினை அவ­ம­திக்கும் செய­லாகும் எனவே அத­னுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை கைது செய்­வதே உரிய தீர்­மானம். இருப்­பினும் இந்தச் சம்­பவம் குறித்து ஆராய்ந்த ஆராய்ந்த பின்னர் அதற்­கான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­படும்.எவ்­வா­றா­யினும் பேச்­சு­வார்த்­தையில் தீர்வை எட்­டவே பெரிதும் முயற்­சிக்­கின்றோம்.

தன்­னின வாத­போக்கில் செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு அர­சாங்கம் இட­ம­ளிக்­கின்­றது என்ற குற்­றச்­சாட்டு இருந்­தாலும் கடந்த அர­சாங்கம் போன்ற தன்­னி­ன­வா­தி­க­ளுக்கு அரசாங்கம் இடம்கொடுக்கவில்லை பிரச்சினைகளின் பாரதூர தன்மையை அறிந்துகொண்டு செயற்படுதவற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இது போன்று அண்மையில் நான் பாராளுமன்ற உரையில் குறிப்பிட்ட ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு தொடர்பிலான விடயங்களை அரசாங்க தரப்பில் உள்ளவர்கள் மறுத்தாலும் அதன் முழுப்பொறுப்பினை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதனால் அரசாங்க தரப்பு அமைச்சர்களே இதனை நிராகரித்தாலும் உரிய தருணத்தில் எச்சரிக்கையாக இருங்கள என்பதையே நான் சுட்டிக்காட்டியிருந்தேன் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.