Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவின் மரணத்தில் 15 மர்மங்கள்!

Featured Replies

01- மிக நன்றாக இருந்தவர் 2மாதங்களுக்கு முன்பு திடீரென இரவோடு இரவாக மருத்துவமனையில் மர்மமாக அனுமதி.

02- சாதாரண காய்ச்சல் தான் 2 நாட்களில் வீடு திரும்புவார் என தகவல்.

03- தினம், தினம், ஒவ்வொரு நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக மாறி, மாறி அறிவிப்பு.

04- 3மாதம் ஆனபோதும் கூட எவரையும் பார்க்க கடைசிவரை அனுமதிக்கவில்லை.
இது யாருடைய உத்தரவு??

05- 3மாதம், கட்சி , மற்றும் அரசு யாருடைய கட்டுப்பாட்டில் இயங்கியது?

06- அனைத்து ம் சரியாகிவிட்டது சராசரி உணவை சாப்பிட தொடங்கி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டார் 2நாளில் நலமுடன் வீடு திரும்பவுள்ளார் என்று சொன்னீர்களே…??

07- கடைசி வரை சிகிச்சை எடுக்கும் ஒரு புகைப்படம் கூட வெளியிடவில்லையே ஏன்?

08- இறப்பதற்கு முன்பே தமிழகம் முழுவதும் உள்ள எல்லா அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு உடனடியாக ஒன்று கூடி புதிய முதல்வரை தேர்வு செய்தனர்.

09-அமைச்சர்களும் எந்த குழப்பமின்றி இலாகா நியமிக்கப்பட்டு உடனடியாக எப்படி பதவியேற்க முடிந்தது?

10- ரத்த உறவான அவரது அண்ணன் மகளை கூட மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் மிரட்டி வீட்டுக்கு செல்ல சொன்ன காரணம் என்ன?

11- தந்தி டிவி மரணத்தை முன் கூட்டியே அறிவித்ததும், அதை உடனே திரும்பபெற்றதும் யாரால், ஏன்?

12- இறந்து அரை மணி நேரம் கூட ஆகாத இந்த துக்கத்திலும் இவ்வளவு தெளிவாக ஆளுநரை சந்தித்து முதல்வராக பதவியேற்பு நிகழ்சி நடத்தியது எப்படி ?

13- கைது நேரத்தில் பேச முடியாமல் குழுங்கி குழுங்கி அழுது கொண்டே உறுதிமொழியை பாதியிலேயே நிறுத்திவிட்டு பதவியேற்ற நீங்கள் தற்போது சிறப்பாக அழுகையின்றி உறுதி மொழி எடுக்க எவ்வாறு முடிந்தது??

14-காலையில் இருந்து இந்த இரவு் வரையும் கூட மருத்துவமனை முன்பாக பட்டினியாக அழுது உருண்டு கிடப்பதில் பஞ்சபராரி பாமர மக்களை தவிர ஒரு பண முதலை கூட தென்படவில்லையே எப்படி.??

15- இன்னும் கேள்விகள் ஆயிரம் உள்ளது எனது சார்பில் அல்ல..
முதல்வர் மீது மாசில்லா அன்பு கொண்டு வாக்களித்த எம் வெள்ளந்தி பாமர தமிழ்மக்கள சார்பாக.

http://kathiravan.com/138593

  • கருத்துக்கள உறவுகள்

மர்மங்கள் மர்மங்களாகவே இருக்க திட்டமிடப்பட்டுள்ளதை நடந்த சம்பவங்கள் காட்டுகின்றன. ஜெயலலிதாவின் இரகசிய வாழ்க்கை கூட இவற்றுக்கு காரணங்களாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nunavilan said:

மர்மங்கள் மர்மங்களாகவே இருக்க திட்டமிடப்பட்டுள்ளதை நடந்த சம்பவங்கள் காட்டுகின்றன. ஜெயலலிதாவின் இரகசிய வாழ்க்கை கூட இவற்றுக்கு காரணங்களாக இருக்கலாம்.

சரியான  கருத்து, நுணா.

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவனை ரகசியத்தை வெளியிட்டார் பிரான்ஸ் தமிழச்சி

22-செப்டம்பர் 2016 இல், இரவு 9.30க்கு வேதா நிலையத்தில் இருந்து ஜெயலலிதா ஆம்புலன்ஸ் மூலமாக அப்போலோவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போலோவிற்குள் ஆம்புலன்ஸ் நுழைந்த நேரம் இரவு 10.15.

வேதா நிலையத்தில் இருந்து சென்னை க்ரிம்ஸ் லைனில் உள்ள அப்போலோவிற்குள் நுழைய ஆம்புலன்ஸ் எடுத்துக் கொண்ட நேரம் 45 நிமிடங்கள்.

23- செப்டம்பர் 2016 நள்ளிரவு 1.00 மணியளில், “ஜெயலலிதா சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் ஏற்பட்ட உடல் சோர்வுக்கு சிகிச்சை பெற அப்போலோ மருத்துவனையில் அனுமதிப்பட்டுள்ளார்” என்று தாமதமாக அப்போலோ நிர்வாகம் முதன் முறையாக அதிகாரப்பூர்லமாக அறிவித்தது. அதன் பிறகே தமிழ்நாட்டு மக்களுக்கு பொதுஊடகங்கள் வழியாக செய்திகளை அறிய முடிந்தது.

அரசியலில் ஆளும் கட்சியில் முதல்வராக உள்ள நபர் வசிப்பிடத்தில் 24 மணிநேரமும் கண்காணிப்பு கேமராவை நுழைவு வாயில் வழியில் பொறுத்தப்பட்டு இருக்கும். யார் உள்ளே சென்றாலும் அல்லது யார் வெளியே சென்றாலும் காட்சிகள் பதிவாகும்.

அப்படித்தான் ஜெயலலிதாவை ஆம்புலன்ஸ் மூலமாக அப்போலோ கொண்டு செல்லப்பட்ட போது காட்சிகள் பதிவாகி இருக்கும். அதேப்போல் அப்போலோ நுழைவு வாயில் வழியிலும் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அதிலும் காட்சிகள் பதிவாக இருக்கும்.

அந்த காட்சியில் ஜெயலலிதா சுயநினைவுடன் அமர்ந்து இருந்தாரா? சுயநினைவற்ற நிலையில் படுக்க வைக்கப்பட்டிருந்தா? என்ற காட்சியை தமிழ்நாட்டு மக்களிடம் காட்ட வேண்டும். ஆனால் அப்படி எந்த காட்சிகளும் ஊடகத்தில் வரவில்லை.

இப்போது ஜெயலலிதாவின் மர்மான மரணம் தமிழர்களிடையே மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பேசும் நிகழ்வாகி உள்ளது. எனவே பொதுநல வழக்கு தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் என்ன காட்சிகள் பதிவாகி உள்ளன என்பதை இந்திய மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கும் அப்போலோவிற்கும் உள்ளது.

இப்படி ஒரு வழக்கு தொடரப்படுமானால் வேதா நிலையத்தில் ஆம்புலன்ஸ் வெளியேறிய அன்று கேமரா வேலை செய்யவில்லை என்பார்கள். அப்போலோவில் கேட்டால் அவ ர்களும் அன்று கேமரா வேலை செய்யவில்லை என்பார்கள்.

ஏனெனில் சுவாதி படுகொலை செய்யப்பட்ட இடத்திலும் கேமரா வேலை செய்யவில்லை. ராம்குமார் சிறைக்குள் படுகொலை செய்யப்பட்ட அன்றும் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை. ஜெயலலிதாவுக்கும் இதே பதில் வருமானால்….

ஜெயலலிதா மர்மமாக சாவதற்கு என்ன அவர் சாதாரண மனிதரா? அவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவருடைய மரணம் என்பது பா.ஜ.க / ஆர்.எஸ்.எஸ் / சசிகலா, மன்னார்குடி மாபீயா கூட்டணிகளினால் நடத்தப்பட்ட படுகொலை என்று பொதுநல வழக்கு தொடரப்படுமானால்…

இந்திய நீதிமன்றத்தில், ‘படுகொலை அல்ல, இயற்கை மரணம்’ என்பதை நிறுபிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கும், அப்போலோ மருத்துவனைக்கும் உள்ளது.

அதிமுகவின் உண்மை தொண்டர்கள் இதற்காகவாவது போராடுவார்களா?
தமிழச்சி

http://kaalaimalar.net/tamilzachi-jaya/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.