Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

32 வருடங்களின் பின்னர் நெடுங்கேணி காட்டுப்பகுதியில் முரளிப்பழம்

Featured Replies

32 வருடங்களின் பின்னர் நெடுங்கேணி காட்டுப்பகுதியில் முரளிப்பழம்
 
 
32 வருடங்களின் பின்னர் நெடுங்கேணி காட்டுப்பகுதியில் முரளிப்பழம்
வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு காட்டுப்பகுதியில் 1984 ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் முரளி ப்பழம் காய்த்துள்ளது 
 
1984 ஆண்டு இப்பகுதி காட்டுப்பகுதியில் அதிகளவு முரளிப்பழம் பழுத்திருந்து. அவற்றை பறித்து அதிகளவு விலைக்கு விற்பனை செய்து வந்த மக்கள் மீண்டும் 32 வருடங்களுக்கு பின் நெடுங்கேணி ஒலுமடு காட்டுப்பகுதிகளில் முரளிமரங்களில் அதிகமாக பழம் காணப்படுவதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இப்பகுதி மக்களும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் மக்களும், வயது வித்தியாசம் இன்றி ஆர்வத்துடன் காட்டுப்பகுதிகளில் முரளிப்பழம் பறிப்பதை காணக்கூடியதாகவுள்ளது.
15356794_1222543404525849_1480766891_n.jpg
அந்தவகையில் இந்த மரமானது வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி காட்டுப்பகுதியில் அதிகமாக காணப்படுகின்றது. இதன் பழமானது உருண்டை வடிவாகவும் மணமுள்ளதாகவும்  காணப்படுகின்றது. 
பல ஆண்டுகளுக்கு பின் மக்கள் ஆர்வர்த்துடன் தேடி ஆய்ந்து விற்பனை செய்து வருவதையும் காணக்கூடி யதாகவுள்ளது.
15356937_1222543397859183_1160494051_n.jpg
இப்பழமானது ஒரு கிலோ 120 – 150 ரூபா விலை வரை விற்பனை செய்யப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.
 
15401350_1222543401192516_358774924_n.jpg

http://www.onlineuthayan.com/news/21159

  • தொடங்கியவர்

அச்சத்திலும் சந்தோசத்திலும் மக்கள் : 32 வருடங்களின் பின்னர் வவுனியாவில் நிகழ்ந்த சம்பவம்

 

 

D0d9590d.jpg

வவுனியா, நெடுங்கேணி ஒலுமடு  கிராமத்தில் ஒரு தொகை முரளி மரம் பழுத்து குலுங்கியுள்ளது. இதனால் ஒரு பகுதியினர் அச்சத்திலும், ஒரு பகுதியினர் சந்தோசத்திலும் பழத்தினை பிடுங்கி விற்பனை செய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றனர்.D55d0dd.jpg

 இதேபோன்று 1984 ஆம் ஆண்டு முரளி மரம் பழுத்து குலுங்கியுள்ளது. இக் காலப்பகுதியில்  மக்கள் பெரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.0fd55df.jpg

இந்நிலையில் 32 ஆண்டுகளின் பின்னர் தற்போது  அதிகப்படியான பழம் காய்த்துள்ளமையால் 1984 ஆண்டு ஏற்பட்ட வறட்சி போன்று தற்போதும் ஏற்பட்டு விடுமா என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.Dd5f09f.jpg

 இதேவேளை குறிப்பிட்ட சிலர் பழங்களை பிடுங்கி ஒரு கிலோகிராம் 160 ரூபா தொடக்கம் 200 ரூபா வரை விற்பனை செய்து வருகின்றார்கள். Dfd.jpg

மேலும்  ஒரு சிலர் பழங்களை பிடுங்குவதற்காக மரம் அறுக்கும் கருவியை பயன்படுத்தி   மரங்களை அறுத்து விழுத்துவதனால்  அவ்விடத்தில் பொலிசாரும், வனவள பகுதியினரும்  குவிக்கப்பட்டுள்ளனர்.dsfdsfd.jpg

 

 நெடுங்கேணி ஒலுமடு, ஊஞ்சால்கட்டி, மருதோடை, காஞ்சிர மோட்டை வயல் பிரதேசம், முல்லைத்தீவு  தண்ணிமுறிப்பு பகுதிகளிலும்  முரளிப்பழம் பழுத்து குலுங்கியுள்ளமை  குறிப்பிடத்தக்கது. Fdfds.jpgFsfdf.jpgUntitled-2.jpg

http://www.virakesari.lk/article/14332

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் ஒரு பழம் இருக்கா? இதை யார் முரளியா கண்டு பிடித்தவர்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.