Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று நாடு திரும்பும் ரணிலுக்கு அமோக வரவேற்பளிக்க ஏற்பாடு! கட்டுநாயக்காவிலிருந்து வாகன பவனியில் அழைத்து வரப்படுவார்

Featured Replies

இன்று நாடு திரும்பும் ரணிலுக்கு அமோக வரவேற்பளிக்க ஏற்பாடு! கட்டுநாயக்காவிலிருந்து வாகன பவனியில் அழைத்து வரப்படுவார்

தென்னிலங்கை அரசியல் களத்தில் திடீர் திருப்பங்கள் நிகழ்ந்தபோது வெளிநாடுகளில் தங்கியிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்புகிறார்.

இன்று நண்பகல் நாடு திரும்பவுள்ள அவருக்கு அமோக வரவேற்பு அளிக்க ஐக்கியதேசியக் கட்சியினர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

18 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐ.தே.கட்சி இழந்துள்ள மிகவும் நெருக்கடியான ஒரு தருணத்தில் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்புகிறார்.

அவர் கட்டுநாயக்கவிலிருந்து வாகனத் தொடரணி மூலம் கொழும்புக்கு அழைத்துவர கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவை வரவேற்க செல்பவர்களுக்கு வாகன வசதிகள் மற்றும் ஏனைய வசதிகள் செய்துகொடுக்கப்படும் என கட்சியின் முக்கியஸ்தர் தினேஷ் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இன்று நாடு திரும்பும் ரணில் விக்கிரமசிங்க நாளை 3ஆம் திகதி ஐ.தே.க. மாகாணசபை உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார்.

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. அரசுடன் இணைந்து அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட 18 பேர் தொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். அரசுடன் இணைந்துஅமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட 18 பேரும் ஐ.தே.க. மாற்றுக் குழு வென தம்மை இனங்காட்டிக் கொள்வதை எதிர்த்து நீதிமன்ற தடை உத்தரவொன்றைப் பெறவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

  • தொடங்கியவர்

இது ஒரு சுவாரசியமான செய்தியை ஒத்ததாக இருக்கு.

புலிகளினால் அபாயமென்று மகிந்த ஒரு பாதுகாப்பு

வளையத்தைக் கொடுத்தார்.இப்போ கோலாகலமான

பவனி. இதெல்லாவற்றையும் பார்கும்போது வெட்டப்

படுவதற்குக் கொண்டு செல்லும் ஆடு மாதிரித்

தெரியவில்லையா?

அவரை அப்படியே கூட்டிக்கொண்டு போய் வீட்ட விடப்போகினம்.

இது ஒரு சுவாரசியமான செய்தியை ஒத்ததாக இருக்கு.

புலிகளினால் அபாயமென்று மகிந்த ஒரு பாதுகாப்பு

வளையத்தைக் கொடுத்தார்.இப்போ கோலாகலமான

பவனி. இதெல்லாவற்றையும் பார்கும்போது வெட்டப்

படுவதற்குக் கொண்டு செல்லும் ஆடு மாதிரித்

தெரியவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

டிபி விஜயதுங்காவிற்குப் பிறகு கட்சியைப் பொறுப்பேற்ற, ரணிலால், சென்ற ஒரு தேர்தலில் மட்டும் தான் வெற்றி பெற முடிந்தது. அதுவும் சந்திரிக்காவின் ஆட்சியால் ஏற்பட்ட விரக்தி, பொருளாதாரச்சுமை, என்பவை தான் அவரை வெல்ல வைத்தது. கடைசியில் அதுவும் போய்விட்டது.

அனுரா பண்டாராநாயக்காவிற்கு கால்சட்டை, பிறிதொருவர் போட்டு விடும் நிலமையில் இருந்து கூட, அவரே இவரின் ஆண்மை பற்றிக் கேலி செய்தார் என்றால் இவரின் நிலமை மிகக் கேவலம். பெரும்பாலும் சிங்கள ஊடகங்கள் ரணிலை அலி என்ற பாணியில் தான் காட்டூன் போடுவதுண்டு.

கட்சிக்காரர் இப்படி அம்போ என்று விட்டுப் போகும் நிலமையைப் பார்க்கும்போது அது தான் தோன்றுகின்றது. ஜஎல்பீரிஸ், திசாநாயக்கா, மகிந்த சமரசிங்காவோடு வந்த கூட்டம், பல மடங்கு உறுப்பினர்களை அள்ளிக் கொண்டு போய்விட்டது. திசாநாயக்காவும் போயிருப்பார்இ அவரின் பாராளமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதால் தான், கூட இருந்து நடிக்கின்றார்.

Front-1-l.gif

நேபாளம், இந்தியாவிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பிய ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சூழ்ந்து கொண்ட ஊடகவியலாளர்கள் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் பற்றி கேள்விக்கணைகள் தொடுத்த போது அவர் பதிலளிப்பதைக் காண்கிறீர்கள்.

கட்சிக்குள் களையெடுப்பு நடத்தும் வேளை வந்து விட்டது என்கிறார் ரணில்

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய அவரை வரவேற்க பெருந்திரளான ஆதரவாளர்கள்

- எம்.ஏ.எம். நிலாம் -

நேபாளம், இந்தியா ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெரும் திரளான மக்கள் கூடி நின்று வரவேற்றுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து வெளியேறியிருந்த காலகட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் கரு ஜயசூரிய தலைமையில் அரசு பக்கம் தாவியதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலை தோன்றியிருந்தது. கட்சித் தலைவர் நாடு திரும்பியதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படுமென பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார்.

வெளிநாடு சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டபடியே தமது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை நாடு திரும்பினார்.

கட்சியின் உயர்மட்டத்தினர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட, தொகுதி அமைப்பாளர்கள் ஆகியோருடன் கொழும்பு,

கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்த பெருந்தொகையான ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் கூடி நின்று வரவேற்றனர்.

அங்கு கூடி நின்றோர் மத்தியில் கருத்துத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறினாலும் கட்சியை பலவீனப்படுத்த முடியாது. ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆலமரமாகும். அதனை வீழ்த்துவதென்பது வெறும் பகற்கனவே ஆகும்.

கட்சி மறுசீரமைப்புடன் நிறைய களையெடுப்புகளை எடுக்க வேண்டிய தருணம் இன்று ஏற்பட்டுள்ளது. பதவி ஆசைக்காக அரசு பக்கம் தாவியவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உரிமை கோருவது கட்சியை அழிப்பதற்கான சதி முயற்சியின் அடுத்த பணியாகவே நோக்க வேண்டியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியையும் அதற்கு வாக்களித்த 47 இலட்சம் மக்களையும் பாதுகாப்பதற்காக நாம் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளத் தயாராகிவிட்டோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நாம் செய்து கொண்ட நல்லாட்சி குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பாக அடுத்த இரண்டு தினங்களுக்கிடையில் முக்கிய அறிக்கையொன்றை வெளியிட விருக்கின்றேன். அதிலிருந்துதான் எமது அடுத்த நடவடிக்கை ஆரம்பமாகின்றது என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, அங்கு கூடியிருந்தவர்களுடன் சிறிதுநேரம் கலந்துரையாடியதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க வாகன ஊர்வலம் மூலம் கொழும்பு புறப்பட்டார். இந்த வாகன ஊர்வலத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட வாகனங்கள் கலந்து கொண்டதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்

http://www.thinakkural.com/news/2007/2/3/i...s_page20667.htm

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சிரேஷ்ட உறுப்பினர்களுடன் ரணில் நீண்டநேரம் ஆலோசனை

- எம்.ஏ.எம். நிலாம் -

வெளிநாட்டு விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை நாடுதிரும்பிய எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுமாலை கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் சுமார் மூன்று மணிநேரம் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரம் தெரிவித்தது.

அரசுடன் இணைந்து கொண்ட 18 பேர் தொடர்பில் எத்தகைய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பது, அரசுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி நீண்ட நேரம் ஆராயப்பட்டதாகவும், இன்று சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கட்சியின் உயர்மட்ட மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்களின் கூட்டம் தொடர்பாகவும் நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இன்று நடைபெறவிருந்த கட்சி செயற்குழுக்கூட்டத்தை நாளை மறுதினம் திங்கட்கிழமை வரை பிற்போடுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் செயற்குழுக்கூட்டத்தின் போது அரசுடன் இணைந்த சகல உறுப்பினர்களையும் நீக்கிவிட்டு புதியவர்களை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவு

...என கட்சியின் முக்கியஸ்தர் தினேஷ் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

...கலந்து கொண்டதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

யு.என்.பி ஒன்றும் தமிழ் மக்களின் நண்பர்கள் அல்ல.. எனவே அவர்கள் பலம் இழந்தாலும், பலமடைந்தாலும் தமிழர்களுக்கு எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

ரனில் கெட்ட கேட்டுக்கு கட்டை வண்டி பவனியே பறவாயில்லை.

  • தொடங்கியவர்

கட்டை வண்டியென்று பாடையைத்தானே சொல்கிறீர்கள்

Edited by Iraivan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.