Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்கச் செயற்பாடுகளைக் குழப்புவதற்குச் சிலர் முயற்சி! - சம்பந்தன் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sampanthan-400-seithy.jpg

நாட்டில் தற்போது நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனை குழப்புவதற்கு சிலர் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை, சம்பூர் – நாவலடி பிரதான வீதி இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

   

நாட்டில் இதுவரை காலமும் எந்தவொரு அரசியல் சாசனமும் மக்களது சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. தற்போதைய அரசாங்கத்தால் கொண்டு வருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் சாசனமானது நாட்டின் சகல மக்களதும் அங்கீகாரத்துடன் கொண்டு வரப்பட வேண்டும். நாட்டில் தற்போது நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனை குழப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். அவற்றை தவிர்த்து செயற்பட வேண்டியது அவசியம். இந் நாட்டில் வாழும் சகல மக்கள் மத்தியிலும் நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்பட்டிருப்பதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்கு அனைவரும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=171659&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

 

நல்லிணக்கச் செயற்பாடுகளைக் குழப்புவதற்குச் சிலர் முயற்சி! - சம்பந்தன் குற்றச்சாட்டு

 

கிழக்கில் எழுக தமிழை சொல்கிறாரோ??

அரசின் கொள்­கையால் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டு­கி­றது குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த யாரும் முய­லக்­கூ­டாது

p9-71a6a283728f7e18f40ecdd31d820b135de934b3.jpg

 

திரு­ம­லையில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் வலி­யு­றுத்தல்
(மூதூர் நிருபர்)

இந்த நாட்டில் வாழும் சகல மக்­களும்  இந்­த ­நாட்­டில்தான் வாழ்ந்­தாக வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை. அதுவே சிறந்த வழி­யாகும். அதற்கு அர­சியல் சாச­ன­மாற்றம் வழி­வ­குக்க வேண்டும். இற்றை ­வ­ரையில் இந்த நாட்டில் நில­விய எந்த ஒரு அர­சியல் சாச­னமும் மக்­க­ளு­டைய சம்­ம­தத்­துடன் அல்­லது கூடு­த­லான அர­சியல் கட்­சி­களின் சம்­மத்­துடன்  நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­க­வில்லை. ஆகவே நிறை­வேற்­றப்­ப­ட­வுள்ள அர­சியல் சாசனம் சகல மக்­க­ளி­னதும் அங்­கீ­கா­ரத்­துடன் நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

நீண்ட கால யுத்­தத்தின் பின்னர் இந்த நல்­லாட்சி சூழல் ஏற்­பட்­டுள்­ளது. தற்­போது தேசிய அர­சாங்கம் ஆட்சி செய்து வரு­கின்­றது. இதனால் மக்கள் மத்­தியில் நல்­லி­ணக்கம், புரிந்­து­ணர்வு ஏற்­பட்­டி­ருப்­ப­தனை நாங்கள் அவ­தா­னிக்­கின்றோம். ஆனாலும் சிறு­சிறு குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த யாரும் முய­லக்­கூ­டாது என்றும் அவர் வலி­யு­றுத்­தினார்.

சம்­பூரில் 53.7 மில்­லியன் ரூபாய் செலவில் அமைக்­கப்­பட்ட பிர­தான வீதிப்­ப­ணிகள் நிறை­வ­டைந்து திறந்­து­வைத்து மக்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்வு மூதூர் நாவ­ல­டிச்­சந்­தியில் நேற்றுக் காலை 10 மணி­ய­ளவில் இடம்­பெற்­றது. இங்கு பிர­தம விருந்­தி­னரா கலந்து கொண்டு வீதியை திறந்து வைத்த சம்­பந்தன் மேற்­படி விட­யத்தை வலி­யு­றுத்­தினார்.

இந்­நி­கழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனார்டோ,கிழக்கு மாகாண அமைச்­சர்­க­ளான சி.தண்­டா­யு­த­பாணி, ஆரி­ய­வ­தி­க­லப்­பதி, துரை­ரா­ஜ­சிங்கம், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் க.துரை­ரெட்­ண­சிங்கம், மாகாண உறுப்­பினர் கு.நாகேஸ்­வரன், கிழக்கு மாகாண பிர­தம செய­லாளர், அர­சாங்க அதிபர் என்.புஸ்­ப­கு­மார உள்­ளிட்ட உயர்­மட்­டத்­தினர் பலரும் கலந்து கொண்­டனர்.

 இங்கு மேலும் பேசிய சம்­பந்தன் குறிப்­பி­டு­கையில்,

இந்த நாட்டில் வாழும் சகல மக்கள் மத்­தி­யிலும் ஒரு நல்­லி­ணக்கம், புரிந்­து­ணர்வு ஏற்­பட்­டி­ருப்­ப­தனை நாங்கள் அவ­தா­னிக்­கின்றோம்.அதற்கு காரணம் மக்கள் மத்­தியில் சமா­தானம், சமத்­துவம், அத­ன­டிப்­ப­டையில் ஒரு நல்­லி­ணக்கம், மக்கள் மத்­தியில் புரிந்­து­ணர்வு ஏற்­பட வேண்டும் என தற்­போ­தைய அரசின் கொள்­கை­யாக விருப்­ப­தே­யாகும்.மக்கள் அனை­வரும் ஒற்­று­மை­யாக வாழ­வேண்­டி­யுள்­ளது. இந்­தப்­பி­ர­தே­சத்தில் மூவின மக்­களும் வாழ்­கின்­றார்கள்.

நாங்கள் எல்­லோரும் ஒற்­று­மை­யாக வாழ­வேண்­டு­மா­க­வி­ருந்தால். தேயில்­லாத பிரச்­ச­னை­களை உரு­வாக்­காது எல்­லோரும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட வேண்டும்

இந்த நாட்டில் வாழும் சகல மக்­களும் இந்­த­நாட்­டில்தான் வாழ்ந்­தாக வேண்டும்.வேறு வழி­யில்லை அதுவே சிறந்­த­வ­ழி­யாகும். நீண்­ட­கால யுத்­ததின் பின்னர் இந்த நல்­லாட்சி சூழல் எற்­பட்­டுள்­ளது.தற்­போது இந்த நாட்டில் தேசிய அர­சாங்கம் ஒன்று இயங்கி வரு­கி­றது.அதில் இரண்டு பிர­தான கட்­சி­களும் அங்கம் வகிக்­கின்­றன. இதற்குள் சிறு சிறு குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த யாரும் முய­லக்­கூ­டாது.சிலர் அவ்­வாறு முயற்­சிக்­கின்­றனர்.

பாரா­ளு­மன்றம் அர­சி­ல­மைப்புச் சபை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. பல குழுக்கள் அமைக்­கப்­பட்டு கரு­மங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. நாங்கள் எதிர் பார்க்­கின்றோம் ஒரு அரசில் சாசனம் தாம­த­மில்­லாமல், கூடி­ய­வி­ரைவில் அர­சியல் சாசன சபை­யி­னாலும் பாரா­ளு­மன்­றத்­தி­னாலும் முன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யினால் நிறை­வேற்­றப்­படும் என்று. அவ்­வி­த­மாக நிறை­வேற்­றப்­ப­ட­கின்ற அர­சியல் சாசனம் ஒரு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் முலம் சகல மக்­க­ளது விருப்­புடன் நிறை­வேற்­றப்­பட வேண்டும் அந்த அர­சியல் சாசனம் சகல பிரிவு மக்­க­ளாலும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்டும்.

இந்த நாட்டின் பெரும் பான்­மை­யின மக்கள்,தமிழ்­மக்கள், தமிழ் பேசும் முஸ் லீம் மக்கள் மற்றும் ஏனை­ய­வர்­க­ளுக்கு ஏற்­பு­டை­ய­தாக இருத்தல் அவ­சி­ய­மாகும். இற்­ற­வ­ரையில் இந்த நாட்டில் நில­விய எந்த ஒரு அர­சியல் சாச­னங்­களும் மக்­க­ளு­டைய சம்­ம­தத்­துடன் அல்­லது கூடு­த­லான அர­சியல் கட்­சி­களின் சம்­மத்­துடன் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­க­வில்லை அவ்­வா­றான ஒரு முயற்­சியே இந்­த­தே­சிய நல்­லாட்சி அர­சாங்­கத்தால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. அதற்கு தமிழ், முஸ்லிம், மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், உள்­ளிட்ட கட்­சிகள் மற்றும் ஜே.வி.பி. ஏனைய இந்த நாட்டின் பெரும்­பான்மைக் கட்­சிகள் இணைந்து ஆத­ர­வ­ளித்த வரு­கின்­றது.ஆன­ப­டியால் பேச்­சு­வார்த்தை மூல­மாக பிரச்­சி­னை­களை தீர்க்க முயற்­சித்து வரு­கின்றோம்.

முரண்­பா­டுகள் இல்லை என்று கூற­மு­டி­யாது, கருத்து வேற்­று­மைகள் இல்­லை­என்று கூற­மு­டி­யாது. ஆனால் என்­ன­வி­த­மான முரண்­பாடு, கருத்­து­வேற்­று­மைகள் இருந்­தாலும் அவ்­வான விட­யங்­களை பேச்­சு­வார்த்­தைகள் மூலம் பேசித் தீர்வு காண­வேண்டும்.

தீர்வு காண்­ப­தற்கு வேறு வழி­யில்லை இனி எங்­க­ளுக்கு வன்­முறை தேவை­யில்லை. 30வருட கால­மாக இந்த நாட்டில் வன்­முறை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.அது­மு­டி­வுக்கு வந்­துள்­ளது. ஆகவே இனி எமக்கு வன்­முறை தேவை­யில்லை.

உல­கத்தில் பல்­வேறு நாடு­களில் பல்­வேறு இனங்­க­ளைச்­சார்ந்த மக்கள் பல்­வேறு மதங்­க­ளைப்­பின்­பற்­று­கின்ற மக்கள்,பல்­வேறு கலா­சா­ரங்­களை உள்­ள­டக்­கிய மக்கள், பல வித­மான ஒழுங்­கு­களின் மூல­மாக ,பல­வி­த­மான நட­மு­றை­களின் மூல­மாக, பல­வி­த­மான கட்­ட­மைப்­பு­களின் மூல­மாக .தாங்கள் சுபீ­ட­ச­மாக, சமா­தா­ன­மா­கவும் சமத்­து­வ­மா­கவும் வாழக்­கூ­டி­ய­வ­கையில் ஒழுங்­குகள் செய்­தி­ருக்­கின்­றார்கள்.

அர­சியல் சாச­னத்தை உரு­வாக்க இவ்­வாறு பல்­வேறு விட­யங்கள் உதா­ர­ணங்கள் இருக்­கின்­றன. மக்­க­ளா­கிய நீங்­களும் இந்­தக்­க­ரு­மத்தில் நம்­பிக்கை வைக்க வேண்டும். ஆகவே நிறை­வேற்­றப்­ப­ட­வுள்ள அர­சியல் சாசனம் சகல மக்­க­ளி­னதும் அங்­கீ­கா­ரத்­துடன் நிறை­வேற்­றப்­பட வேண்டும்.

இன்­றைய நிகழ்­வைப்­பொ­றுத்­த­வரை இந்த சம்பூர் மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­ப­டுமா? அவர்கள் மீளக்­கு­டி­யேற்­றப்­ப­டு­வார்­களா என்ற கேள்­வியே நிலவி வந்­தது. நாட்டில் ஏற்­பட்ட மாற்றம் கார­ண­மாக மக்கள் மீளக்­கு­டி­ய­மர்த்­தப்­படும் நில­மை­ஏற்­பட்­டுள்­ளது.

சம்­பூரில் உள்ள மக்­களின் காணிகள் பல தனியார் கம்­பனித் தொழிற்­சா­லை­கள்­க­ளுக்கு எடுக்­கப்­பட்ட நிலையில் அவை நிறுத்­தப்­பட்டு மக்­க­ளுக்க வழங்கி மக்கள் மீளக்­கு­டி­ய­மர்த்­தப்­பட்­டனர். கடற்­ப­டை­யி­ன­ருக்கு எடுக்­கப்­பட்ட காணி­களும் கடற்­ப­டை­யினர் அந்தக் காணி­களை மக்­க­ளுக்கு வழங்க வேண்டும் என்ற கார­ணத்தின் நிமிர்த்தம் அவர்­களும் வெளி­யே­றி­யதன் கார­ண­மா­கவும் அந்தக் காணி­க­ளிலும் மக்கள் குடி­யேறி யிருக்­கின்­றார்கள். இன்னும் அனல் மின்­நி­லை­யத்­திற்கு ஒதுக்­கிய காணி 500 ஏக்கர் மற்றும் அதற்­கான நீர் நிலக்­கரி கொண்டு செல்­ல­வென பாதை­க­ளுக்­காக எடுக்­கப்­பட்ட காணிகள் விடு­விக்­கப்­ப­டாமல் உள்­ளன. அதனால் மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.தற்­பொ­ழுது பல கார­ணங்­களால் அனல் மின்­நி­லயம் நிறுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

அதனால் மக்­களின் பல வாழ்­வா­தார தொழில் முயற்­சிகள் பாதிக்­கப்­பட்டு வரு­வ­தாக மக்கள் சுட்­டிக்­காட்டி வரு­கின்­றனர். அதனை அவர்கள் திருப்­பித்­த­ர­வேண்டும் என விரும்­பு­கின்­றார்கள். மக்­களின் காணிகள் முற்­றாக விடு­விக்­கப்­பட்டால் மக்­களின் பிரச்­ச­னைகள் தீர்க்­கப்­படும். ஆன­ப­டியால் நாம் மக்­களின் காணி­களை விடு­விக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. அவற்றை நாம் தீர்த்து மக்­க­ளுக்கு வழங்க வேண்­டி­யுள்­ளது. எல்­லோரும் இணைந்து இந்தப் பிரச்­சி­னையைத் தீர்க்க வேண்­டி­யுள்­ளது.

 இந்த வீதி புனர்­வாழ்வு அமைச்சின் நிதி மூல­மாக மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. கடற்­ப­டை­யினர் இந்த வீதியை துரி­த­மா­கவும் செம்­மை­யா­கவும் அமைத்­தி­ருப்­ப­தாக நான் அறி­கிறேன். அதற்கு நாம் கடற்­ப­டை­யி­னர்க்கு நன்­றியை தெரி­விக்க வேண்டும்

மக்­க­ளுக்கு பல்­வேறு தேவைகள் உள்­ளன. அதனை அவர்கள் கடி­தங்கள் மூலம் தந்­துள்­ளனர். ஆனால் ஒன்றை மக்­களும் நாங்­களும் எல்­லோரும் உண­ர­வேண்டும். 30 வரு­டங்­க­ளாக யுத்தம் நடை­பெற்­றது. அதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டனர். மக்கள் தங்களுடைய காணிகளில் மீளக்குடியேறி வருகின்றனர். விசேடமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இவ்வாறு குடியேறிக்கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறே வடகிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் எல்லா மாவட்டங்களிலும் பூரணமாக தமது தேவைகள் நிறைவேற்றப்பட்டு மீளக்குடியமர்த்தப்பட்டதாக நாங்கள் இன்னமும் கூறமுடியாது. பல்வேறு காரணங்களின் நிமித்தம் அவை இடம்பெறவில்லை. ஆனால் அவை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இங்குள்ள மக்களுக்கும் பல தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. ஆனால் மகாண சபை, ஆளுநர், உங்களது அமைச்சர்கள் எல்லோரும் சேர்ந்து அவற்றை படிப்படியாக நிறைவேற்ற முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்.

அதனை நாம் சந்திப்புகளில் எல்லாம் வலியுறுத்தி வருகின்றோம் எனவே மக்களும் இவற்றைப்புரிந்து கொண்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-14

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.