Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எட்காவை எதிர்க்கும் எதிரணியின் பின்னணி என்ன?

Featured Replies

எட்­காவை எதிர்க்கும் எதி­ரணியின் பின்­னணி என்ன?

ETCA-protest-7ac0400ce0aefcfdc7f7d82ae7acaab95c9af14c.jpg

 

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் எட்கா எனப்­படும், பொரு­ளா­தார, தொழில்­நுட்ப ஒத்­து­ழைப்பு உடன்­பாட்டை செய்து கொள்ளும் முயற்­சிகள் இரண்டு நாடு­களின் தரப்­பிலும் தீவி­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

இந்­தி­யா­வுடன் எட்கா உடன்­பாட்டைச் செய்து கொள்­வ­தற்கு, இலங்­கையில் பல்­வேறு தரப்­பி­னரும் கடும் எதிர்ப்பைத் தெரி­வித்து வரு­கின்­றனர். இந்த உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­பட்டால், சேவைத் துறைக்குள் இந்­திய நிபு­ணர்கள் நுழைந்து விடு­வார்கள் என்றும், இந்­தியத் தொழி­லா­ளர்கள் படை­யெ­டுத்து வரு­வார்கள் என்றும் பய­மு­றுத்­து­கின்­றனர்.

எட்கா உடன்­பாட்டின் பிர­தான அம்­சங்கள் என்ன- அதன் உள்­ள­டக்கம் என்ன என்­பது பற்றி இன்­னமும் இரண்டு நாடு­களும் உறு­திப்­ப­டுத்­த­வில்லை. உடன்­பாட்டு வரைவு கூட இன்­னமும் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை என்றே கூறப்­ப­டு­கி­றது. இவ்­வாறு உத்­தேச நிலையில் உள்ள ஓர் உடன்­பாட்­டுக்கு இலங்­கையில் கடும் எதிர்ப்புக் கிளம்­பி­யி­ருப்­பது கவ­னிக்­கத்­தக்­கது.

அதே­வேளை, அர­சாங்­கமோ, இந்­தி­யா­வுடன் எட்கா உடன்­பாட்டைச் செய்து கொள்­வது என்­பதில் உறு­தி­யான நிலையில் இருக்­கி­றது. இது­கு­றித்துப் பேச அமைச்­சர்கள், அதி­கா­ரிகள் புது­டில்­லிக்குச் சென்று வரு­கி­றார்கள். அங்­கி­ருந்தும், அதி­கா­ரிகள், அமைச்­சர்கள் இங்கு வந்து பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருக்­கின்­றனர்.

இன்னும் சில மாதங்­க­ளுக்குள் இந்த உடன்­பாட்டில் கைச்­சாத்­திடும் முடிவில் இரண்டு நாடு­களும் உறு­தி­யாக இருக்­கின்­றன. ஆனால், இலங்­கையின் அர­சியல் சூழல் இந்த உடன்­பாட்டைக் கையெ­ழுத்­தி­டு­வ­தற்கு இட­ம­ளிக்­குமா என்­பது சிக்­க­லான விட­ய­மாகத் தெரி­கி­றது.

மருத்­துவ அதி­கா­ரிகள் சங்கம் போன்ற சில தொழிற்­சங்­கங்கள் மற்றும் அமைப்­புகள், இந்­தி­யாவில் இருந்து தொழி­லா­ளர்கள், நிபு­ணர்­களின் படை­யெ­டுப்பு நிகழும் என்­ப­தற்­காக எட்­கா­வுக்கு எதிர்ப்புத் தெரி­விக்­கின்­றனர்.

ஆனால், மஹிந்த ராஜபக் ஷவும், அவ­ரது அணி­யி­னரும் எட்­கா­வுக்கு எதிர்ப்புத் தெரி­விப்­ப­தற்குப் பின்னால், நாட்டின் பொரு­ளா­தார நலன்கள் கார­ண­மாக இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

அண்­மையில் கொழும்பில் நடந்த ஒரு நிகழ்வில் உரை­யாற்­றிய அமைச்சர் எஸ்.பி.திசா­நா­யக்க, பொரு­ளா­தார நலன்­களை இலக்கு வைத்து இலங்­கை­யுடன் எட்கா உடன்­பாட்டைச் செய்து கொள்ளவே இந்­தியா திட்­ட­மி­ட­வில்லை என்று கூறி­யி­ருந்தார்.

பிராந்­திய அர­சியல் தலை­மைத்­து­வத்தை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கே எட்கா உடன்­பாட்டில் கையெ­ழுத்­தி­டு­வ­தற்கு இந்­தியா விரும்­பு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

எனினும், இந்தக் கருத்து இந்­திய அர­சாங்கம் முன்னர் வெளி­யிட்ட கருத்­துக்­க­ளுக்கு முர­ணா­ன­தாக உள்­ளது.

இலங்கை அர­சாங்­கமே எட்கா உடன்­பாட்டை செய்து கொள்ள விரும்­பு­வ­தாக இந்­தியா முன்னர் கூறி­யி­ருந்­தது. தமக்கு அதில் ஆர்வம் இல்­லா­தது போன்று அப்­போது இந்­தியா காட்டிக் கொண்­டது.

பிராந்­திய அர­சியல் தலை­மைத்­து­வத்தை உறு­திப்­ப­டுத்த இந்­தியா, விரும்­பு­வது உண்­மை­யானால், எட்கா உடன்­பாடு குறித்து தீவிர ஆர்வம் காட்­டி­யி­ருக்கும். அதே­வேளை, பொரு­ளா­தார நோக்கில் எட்கா உடன்­பாட்டைச் செய்து கொள்­வ­தற்கு இந்­தியா முனை­ய­வில்லை என்றும், அர­சியல் நோக்கம் கரு­தியே இந்த உடன்­பாட்டை செய்து கொள்ளவே முனை­வ­தா­கவும், முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் அண்­மையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஆட்­சி­மாற்­றத்­துக்கு இந்­தியா ஆத­ரவு அளித்­தது. அதற்குப் பிரதி உப­கா­ர­மா­கவே, இந்த உடன்­பாட்டை செய்து கொள்­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் இணங்­கி­யி­ருக்­கி­றது என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

எட்கா உடன்­பாட்டைச் செய்து கொள்­வ­தற்கு இந்­தியா ஆர்வம் காட்­டு­கி­றது என்­பது தெளி­வான உண்மை. ஏனென்றால் இதற்குப் பின்னால் அர­சியல் நலன்­களும் இருக்­கின்­றன. பொரு­ளா­தார நலன்­களும் இருக்­கின்­றன.

சீனாவின் செல்­வாக்கு இந்­தியப் பெருங்­க­டலில் அதி­க­ரித்து வரு­கின்ற நிலையில், அதுவும் இலங்­கையில் சீனாவின் தலை­யீ­டுகள் மீண்டும் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யுள்ள நிலையில், பிராந்­திய அர­சியல் தலை­மைத்­து­வத்தை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு இந்­தியா தன்­னா­லான எல்லா முயற்­சி­க­ளையும் எடுக்கும்.

தனது பிராந்­திய அர­சியல் தலை­மைத்­து­வத்தை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு மாத்­தி­ர­மன்றி, பொரு­ளா­தார நலன்­களை அடை­வ­தற்கும் இந்­தியா இந்தச் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்திக் கொள்­ளவே விரும்பும்.

எந்த நாடுமே, தமது நலன்­களை முன்­னி­றுத்தித் தான், பிறி­தொரு நாட்­டுடன் உடன்­பா­டு­களைச் செய்து கொள்ளும். அவ்­வாறு எதிர்­பார்க்­கப்­படும் நலன்­களில் எப்­போ­துமே பொரு­ளா­தார நலன்­க­ளுக்கே முத­லிடம் இருக்கும். அதற்­க­டுத்து பாது­காப்பு நலன்கள் இருக்கும்.

இலங்­கை­யுடன் செய்து கொள்­ளப்­படும் எத்­த­கைய பொரு­ளா­தார உடன்­பா­டு­களின் மூலமும் அதி­க­ளவில் இந்­தி­யாவே வாய்ப்­பு­களைப் பெறும் என்­பதில் சந்­தே­க­மில்லை. ஏனென்றால், இந்­தியா மிகப்­பெ­ரிய நாடு, கைத்­தொழில் முன்­னேற்­றங்­களை எட்­டி­யுள்ள நாடு.

அங்கு உற்­பத்­தி­யாகும் பல்­வேறு பொருட்­களும், இலங்­கைக்குத் தேவைப்­ப­டு­வது அதற்கு மற்­றொரு பலம். எனவே பொரு­ளா­தார உடன்­பா­டு­களைப் பயன்­ப­டுத்தி அதி­க­ளவு ஏற்­று­ம­தி­களை இந்­தி­யா­வினால் இலங்­கைக்கு மேற்­கொள்ள முடியும்.

ஏற்­க­னவே சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் அர­சாங்­கத்­தினால், இந்­தி­யா­வுடன் சுதந்­திர பொரு­ளா­தார உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. இதன் மூலம், இலங்­கைக்கு அதிக நன்­மைகள் கிட்டும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. இலங்­கையின் உற்­பத்­திகள் அதி­க­ளவில் இந்­திய சந்­தை­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­படும் என்றும் எதிர்­பார்க்­கப்­பட்­டது.

எனினும் அவ்­வாறு நடக்­க­வில்லை. இந்­தி­யாவில் இருந்­தான இறக்­கு­ம­திகள் தான் அதி­க­ரித்­தன. இந்­தி­யாவில் இருந்து ஆண்­டுக்கு 4000 மில்­லியன் டொலர் வரை­யான இறக்­கு­ம­திகள் இடம்­பெ­று­கின்­றன.

ஆனால், இலங்­கையில் இருந்து அந்­த­ள­வுக்கு ஏற்­று­ம­திகள் இடம்­பெ­று­வ­தில்லை. அதா­வது வர்த்­தகச் சம­நிலை பேணப்­ப­ட­வில்லை.

இது இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான பொரு­ளா­தார உற­வு­களில் ஒரு­வித குழப்­பத்­துக்குக் காரணம். இத­னையே மஹிந்த ராஜபக் ஷ தரப்பு தமக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்ள முனை­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்­துடன் சீபா எனப்­படும் விரி­வான பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பு உடன்­பாட்டைச் செய்து கொள்­வ­தற்கு இந்­தியா முயற்­சித்­தது. ஆனால் மஹிந்த அர­சாங்கம் அதற்கு இணங்­க­வில்லை.

அந்தக் கோபத்தில் தான் மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தை இந்­தியா தோற்­க­டித்­தது என்று முன்னர் ஒரு­முறை விமல் வீர­வன்ச குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

இப்­போது பீரிஸ், ஆட்­சியைக் கவிழ்ப்­ப­தற்கு உத­விய இந்­தி­யா­வுக்கு நன்றிக் கடன் செலுத்­தவே, தற்­போ­தைய அர­சாங்கம், இந்­தி­யா­வுடன் எட்கா உடன்­பாட்டில் கையெ­ழுத்­திட முனை­வ­தாக கூறு­கிறார்.

ஆனால், எட்கா உடன்­பாட்டில் கையெ­ழுத்­தி­டு­வ­தற்கு இந்­தியா அழுத்தம் கொடுக்­கவோ, காலக்­கெடு விதிக்­கவோ இல்லை என்று கொழும்பு வந்­தி­ருந்த போது இந்­திய வர்த்­தக அமைச்சர் நிர்­மலா சீத்­தா­ராமன் கூறி­யி­ருந்தார்.

எனினும் இந்த உடன்­பாட்டில் கையெ­ழுத்­தி­டு­வ­தற்கு இந்­தியா தீவிர ஆர்வம் காட்­டு­கி­றது.

அதனால் தான், இந்­தியா பல்­வேறு மட்­டங்­க­ளிலும், இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள எதிர்ப்­பு­களை தணிக்க முயற்­சித்து வரு­கி­றது. கருத்­த­ரங்­குகள், கூட்­டங்­களை நடத்­து­கி­றது.

இதற்குக் காரணம், இந்­தி­யா­வுக்கு இந்த உடன்­பாடு தேவை­யா­னது. அது பிராந்­திய தலை­மைத்­து­வத்தைப் பேணு­வ­தற்­கா­கவும் இருக்­கலாம். பொரு­ளா­தார நலன்­க­ளுக்­கா­கவும் இருக்­கலாம்.

அதே­வேளை, இலங்கை அர­சாங்­கமும் இந்த உடன்­பாட்டை செய்து கொள்­வதில் ஆர்வம் காட்­டு­கி­றது. கூட்டு எதி­ர­ணியின் எதிர்ப்­புக்கு மத்­தியில் இந்­தியா இந்த உடன்­பாட்டின் மீது ஆர்வம் காட்­டு­கி­றது என்றால், அதற்குக் காரணம், வெறும் நன்றிக் கட­னாக மாத்­திரம் இருக்க முடி­யாது.

அதே­வேளை, பொரு­ளா­தார நலன்­களை அடைய முடியும் என்ற கார­ணியும் இருக்­காது. ஏனென்றால், ஏற்­க­னவே செய்து கொள்­ளப்­பட்ட சுதந்­திர வர்த்­தக உடன்­பாட்டின் மூலம் இலங்­கைக்கு பெரி­ய­ளவில் நன்மை கிட்­ட­வில்லை.

ஆனாலும் இலங்கை அர­சாங்கம் எட்கா மீது தீவிர ஆர்வம் காட்­டு­வ­தற்கு காரணம் இருக்­கி­றது. சீனா, தென்­கொ­ரியா, ஜப்பான் போன்ற நாடு­களின் அழுத்­தமே அது­வாகும்.

இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை உயர்த்த வேண்­டு­மானால் இனிமேல், கடன் வாங்க முடி­யாது. வெளி­நாட்டு முத­லீ­டு­களின் மூலமே அதனைச் சாத்­தி­யப்­ப­டுத்த முடியும்.

வெறும் இரு­பது மில்­லியன் மக்கள் தொகையை மாத்­திரம் கொண்ட- இலங்­கையில் குறு­கிய சந்தை வாய்ப்­புகள் மாத்­தி­ரமே உள்­ளது.

வெளி­நாட்டு முத­லீ­டு­களைப் பெருக்க வேண்­டு­மென்றால் பரந்­து­பட்ட சந்தை வாய்ப்பு இருக்க வேண்டும். அதனை தான் வெளி­நா­டுகள் எதிர்­பார்க்கும்.

இலங்கை அர­சாங்­கத்­தி­டமும். சீனா, தென்­கொ­ரியா, ஜப்பான் போன்ற நாடுகள் அத­னையே எதிர்­பார்க்­கின்­றன.

இந்­தி­யா­வுடன் எட்கா உடன்­பாட்டை செய்து கொண்டால் இல­கு­வாக இங்கு உற்­பத்­தி­யாகும் பொருட்­களை பெரிய சந்தைவாய்ப்புள்ள இந்தியாவுக்கு கொண்டு செல்ல முடியும். அதற்காகத் தான் இந்தியாவுடன் எட்கா உடன்பாட்டை விரைவுபடுத்த இந்த நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றன.

இவ்வாறு உடன்பாடு செய்து கொள்ளப்பட்டால் எதிர்காலத்தில் இலங்கையின் உற்பத்திகள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன.

ஒரு உடன்பாட்டில் சாதகமான அம்சங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியாது. சில பாதகங்களும் இருக்கவே செய்யும். ஒன்றை விட்டுக் கொடுத்தே இன்னொன்றை அடைய முடியும். அவ்வாறு தான் இந்தியாவுடன் எட்காவில் கையெழுத்திட இலங்கை முனைகிறது,இதற்கு கூட்டு எதிரணி ஏன் எதிர்க்கிறது? நன்றிக்கடனுக்காகவே எட்காவில் கையெழுத்திட அரசாங்கம் முனைவதாக பீரிஸ் கூறியிருந்தாரே அதுவே கூட்டு எதிரணியின் எதிர்ப்புக்கும் காரணம்.

தம்மைத் தோற்கடித்த இந்தியாவை சீண்டுவதும், தம்மைக் கவிழ்த்து ஆட்சிக்கு வந்தவர்களை பலமடையாமல் தடுப்பதும் தான் கூட்டு எதிரணியின் திட்டம்.   

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-18#page-3

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரையில் 

யாழ் குடாநாட்டில் பொதைவஸ்து மற்றும் மது பாவனை அதிகரித்துக் காணப்படுவதில் அதீத மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு சந்ததி எப்படியெல்லாம் இருக்ககூடாது என்பதற்கான உதாரணமாக யாழ்குடாநாட்டின் தற்போதைய சந்ததியினர் மிக நல்ல உதாரணமாக எதிர்காலத்தில் காட்டக்கூடியவர்களாக இருப்பது எவ்வளவு பெருமையான விடையம்.

தவிர,
 இரண்டாயிரத்து ஒன்பது மே மாதம் வன்னிப்பெருநிலப்பரப்பில் மிகப்பெரிய மனித அவலம் நடந்துகொண்டிருந்தவேளையில் சினிமாப்பட இசையமைப்பளரும் தற்போதைய நடிகருமான விஜை ஆண்டனி சிறீலங்காவின் இராணுவ முகாம்களில் புத்துணர்ச்சி இசை நிகழ்ச்சி நடாத்தி அதை குடாநாடெங்கும் பொதுமக்களுக்கு மேடைபோட்டு நாக்கமூக்கப் பாடல்களை பாடி பரவசமாக்கியபோது சிறீலங்காவின் இராணுவத்தின் கட்டளைப்பீடங்களின் இலக்கங்களைக் கூறி இந்நிகழ்சியை உங்களுக்குப் பெருமையுடன் வழங்குபவர்கள் என கட்டளைப்பீட இலக்கம்கூறியவேளை அதே கட்டளைப்பீடங்களே அதே இனத்தின் இன்னுமொரு பகுதி மக்கள்மீது குண்டுகளைக்கொட்டியது.சிறப்பாக தென்னிந்திய யாழ்ப்பாணத்துச் சம்பந்தி (இளையதளபதி?) விஜையது தாயார் தனது மருமகள் வீட்டுச் சீதனங்களை பார்வையுட்டு ஒழுங்குபடுத்துவதற்காக விஜை ஆண்டனியுடன் வந்து கெட்ட பாட்டுக்குக் கெட்ட ஆட்டம் போட்டது வேறகதை.

அப்படி இருந்தும் எதுவித விவஸ்தையும் இல்லாது அப்பன் ஆத்தை மாமன் மாமி பேரன்பேத்தி இவைபற்றிய வேறுபாடு இல்லாது போய் கெட்டாட்டம் போட்டவர்களே இந்த அற்பங்கள். பத்தாக்குறைக்கு புலிகளை ஒழித்தால் சீக்கிரம் பாதை திறக்கும் சாமான்சட்டு மலியும் இவங்கள் துலையவேண்டும் எனக்கூறியவர்களே அதிகம்.

யாருக்காக இவர்கள் எல்லோரும் அன்று இப்படிக்கூறினார்களோ அதே சந்ததி அவர்கள் கண்முன்னாலேயே சீரளிகின்றதில் எனக்குச் சந்தோசமே.

இவர்களால் இராணுவப்புலனாய்வுத்துறை ஒட்டுக்குழு இவைபோன்றவைகளை மீறி ஒன்றும் செய்யமுடியாதிருந்தது என்பது வேறுவிடையம். சரி மெளனமாக இருந்தவர்கள் இந்த இசைநிகழ்ச்சியில் பங்குபற்றாதிருந்திருக்கலாம். (அதுதானே மெளனமாக யாழ்குடாநாட்டுமக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்திக்கொள்வதில் வல்லவர்கள் எனப்புழகாங்கிதம் அடைபவர்கள்) இந்த விடையத்தில் பங்குகொள்ளாதிருந்து கள்ளமெளனம் காத்திருக்கலாமே. 

இதில் ஒருசிலர்தான் காரணம் என்றால்கூடப் பரவாயில்லை எல்லொரும் குற்றவாளிகளே இவர்களுக்கும் புலம்பெயர்தேசத்தில் மக்களிடம் காசு சேர்த்து அதை ஆட்டையைப்போட்டு இப்போ ரெம்பவும் குளுக்ளுப்பாக வாழ்கிறார்களே புலம்பெயர் புலிப்பெயர் சொல்லும் பொறுக்கிகள் இவர்களுக்கும் அவர்களுக்கும் எதுவித வித்தியாசம் இல்லை. 

அதுக்காக எல்லொரும் அழியவேண்டுமெனக்கூறலாமா என நீங்கள் கூறலாம்
கண்ணகிக்குக் கயமை செய்தது பாண்டியன் மாத்திரமே அதற்காக மதுரை நகரம் தப்பிக்கவில்லையே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.