Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலாவுடனான சந்திப்பு... சிக்கலில் துணைவேந்தர்கள்!

Featured Replies

சசிகலாவுடனான சந்திப்பு... சிக்கலில் துணைவேந்தர்கள்!

 

துணைவேந்தர்கள் சசிகலா சந்திப்பு

தற்போது சசிகலாவை அதிமுக-வின் பொதுச் செயலாளராக பதவி ஏற்க வேண்டும் என மாவட்ட அளவிலும், பேரவை அளவிலும் தீர்மானம் போட்டு அதனை போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலாவிடம் கொடுத்து வருகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் உள்ள பத்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் ஒன்றிணைந்து போயஸ் தோட்டத்தில் சென்று சசிகலாவை சந்தித்து இருக்கிறார்கள்.  இந்தச் சந்திப்பு இப்போது புது புயலைக் கிளம்பி இருக்கிறது. இவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர்களா அல்லது மாவட்டச் செயலாளர்களா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

மாநில அரசு பொறுப்பில் இல்லாத ஒருவரைச் சந்தித்து இருக்கும் துணைவேந்தர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆளுநருக்குக் கடிதம் எழுதி இருக்கிறார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்தச் சந்திப்பு தவறானது என்று குறைசொல்லி இருக்கிறார்கள். 'தூக்கி எறிய வேண்டும் எந்தத் துணைவேந்தர்களை' என்று  எஸ்பி உதயகுமார் பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார். 

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி, கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி, தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஏ.எம். மூர்த்தி, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். பாஸ்கரன், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளி, அம்பேத்கர் பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கணேசன், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முத்துகுமார், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முருகன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமி, தமிழ்நாடு கால்நடை மருத்து பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பையா போன்றோரும் சசிகலாவை சந்திருக்கிறார்கள். 

நெட் -ஸ்லாட் அமைப்பின் பொதுச்செயலாளர் நாகராசன் நம்மிடம் இதுகுறித்துப் பேசினார்:

துணைவேந்தர்கள் என்பவர்கள் எந்த அரசியல் கட்சியும் சாராதவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அனைவரும் சென்று அரசியல் சார்பாக ஒரு கருத்தை தெரிவிக்கிறார்கள். அரசு ஊழியர்கள் அரசியல் சார்ந்த கருத்து தெரிவித்தால் பணியில் இருந்து நீக்கம் செய்யலாம் என்று விதி இருக்கிறது. இவர்கள் தனிப்பட்ட முறையில் சென்று சந்திக்கவில்லை. துணைவேந்தர்கள் என்ற போர்வையில் தான் சென்று சந்தித்து இருக்கிறார்கள்.

இது முற்றிலும் விதிமீறல். 2010-யூஜிசி விதிமுறைப் படி 1454756166675_16221.jpgஎந்தத் துணைவேந்தரும் துணைவேந்தருக்கு உரியதகுதி இல்லாமல் தான் இருக்கிறார்கள். இதனைப் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக உள்ள ஆளுநர்களிடம் புகாராக தெரிவித்தும் எந்த நடவடிக்கை இல்லை.

தற்போது துணைவேந்தராக உள்ளவர்களின் மீது ஊழல் புகார் இருக்கிறது. இதனை மறைக்கவும் அரசியல் ஆதாயம் தேடவும் தான் சென்று இருக்கிறார்கள். இதனை தற்போது உள்ள வேந்தரும் கண்டுகொள்ளவில்லை என்றால் துணைவேந்தர் மாவட்டச் செயலாளர்கள் ஆகி விடுவார்கள். மாவட்டச் செயலாளர்கள் துணைவேந்தர் ஆகி விடுவார்கள். இப்போதே இவர்களுக்கு வித்தியாசம் இல்லாமல் தான் இருக்கிறார்கள். இதனை உடனே ஆளுநர் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடற்கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மூர்த்தி ‘யூஜிசி-யில் இருந்து பணம் வரவில்லை. அதனால் சசிகலாவை பார்த்து சொல்லி இருக்கிறோம்’ என்றிருக்கிறார். சசிகலாவை பார்த்துக் கேட்டால் யூஜிசி-யில் இருந்து பணம் வந்து விடுமா என்று தெரியவில்லை. வணங்காமுடி அரசியல் நிலைத்தன்மைக்காக சந்தித்து விட்டு வந்திருப்பதாக தகவல் சொல்லி இருக்கிறார். இவர் அரசுக்கு நிலைத்தன்மைக்காக என்னென்ன ஆலோசனை இதுவரை ஏதாவது வழங்கி இருக்கிறார் என்று தெரியவில்லை. ". இவ்வாறு நம்மிடம் பகிர்ந்து கொண்டார் நாகராசன். 

 

சசிகலாவைச் சந்திக்கச் சென்றவர்களில் ஒருவரான, vcphotoAug2016_16146.jpgவேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமியிடம் பேசிய போது "அந்தச் சமயத்தில் ஒன்றிணைந்து துக்கம் விசாரிக்கச் சென்றோம். இதனைப் பெரிதுபடுத்த வேண்டாம்" என்றார்.

'பத்து பேர் ஒன்றிணைந்து சென்று இருக்கிறீர்களே' என்று கேட்ட போது பல்கலைக்கழக "துணைவேந்தர்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஓர் அமைப்பு உருவாக்க வேண்டும் என்று கூடினோம். அந்த நேரத்தில் தான் அனைவரும் ஒன்றாகச் செல்லலாம் என்று முடிவெடுத்தோம்" என்று சொல்லி முடித்துக்கொண்டார். 

தற்போது சசிகலாவை சந்தித்த பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் அலுவலகத்தில் கடிதம் சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்து இருக்கிறது. இதனால் இவர்கள் மேலும் சிக்கலில் உள்ளார்கள் என்பது தெரியவருகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/75764-problem-for--vice-chancellors-due-to-meeting-with-sasikala.art

எங்கள் சசிகலா மேடம் ஓர் நடமாடும் பல்கலைக்கழகம். துணை வேந்தர்கள் தங்கள் கடமையைத்தான் செய்துள்ளார்கள். சிலருக்கு சின்னம்மாவை களங்கப்படுத்துவதே தொழிலாய் போயிற்று.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கலைஞன் said:

எங்கள் சசிகலா மேடம் ஓர் நடமாடும் பல்கலைக்கழகம். துணை வேந்தர்கள் தங்கள் கடமையைத்தான் செய்துள்ளார்கள். சிலருக்கு சின்னம்மாவை களங்கப்படுத்துவதே தொழிலாய் போயிற்று.

கலைஞன்..... கேட்கிறனெண்டு, குறை நினைக்காதேங்கோ......   
நடமாடும்  பல்கலைக் கலைக்கழகமான... சின்னம்மாவின் குரலை... இது வரை நான் கேட்டதில்லை.
ஒருக்கா... கேட்க வேணும் போல் உள்ளது,  உங்களிடம்... சின்னம்மாவின் குரல்  ஒலிப்  பதிவு இருந்தால்......
இணைத்து விடுங்களேன், ப்லீஸ்.  :grin:

  • தொடங்கியவர்

சசிகலாவுடன் துணைவேந்தர்கள் சந்திப்பு விவகாரம்: தமிழக உயர்கல்வித் துறையிடம் விளக்கம் கோரியது ஆளுநர் அலுவலகம்

 

 
sasi_3104519f.jpg
 
 
 

பல்கலைக்கழக துணைவேந்தர் கள் சசிகலாவை சந்தித்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளதால், உயர் கல்வித் துறையிடம் ஆளுநர் அலுவலகம் விளக்கம் கோரி யுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து அவரது தோழி சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளர், முதல்வர் பதவியேற்க வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். அதிமுகவின் அமைப்பு ரீதியிலான 50 மாவட்டங்கள் மற்றும் பல்வேறு அணியினர் தொடர்ந்து தீர்மானங் கள் நிறைவேற்றி சசிகலாவைச் சந்தித்து அளித்துள்ளனர். வரும் 29-ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவில் கட்சி யின் பொதுச் செயலாளராக சசிகலா அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த வாரம் தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழக துணைவேந்தர்கள் 11 பேர் சசிகலாவைச் சந்தித்து பேசினர். அண்ணா பல்கலைக்கழக பதி வாளரும் அக்குழுவில் இடம் பெற்றிருந்தார். அவர்கள், சசிகலாவிடம் முதல்வர் மறைவு தொடர்பாக விசாரித்ததாக கூறப் பட்டது.

ஆனால், ஆளுநரை வேந்தராக வும் அமைச்சரை இணைவேந்த ராகவும் கொண்டு செயல்படும் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், அரசின் எந்தப் பொறுப்பிலும் இல்லாத சசி கலாவைச் சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. சசிகலாவை சந்தித்த துணைவேந்தர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநருக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந் தார். பல்வேறு அரசியல் கட்சிகளும் துணைவேந்தர்களின் செயல்பாடுகளை விமர்சித்தன.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக தமிழக உயர்கல்வித் துறையிடம் ஆளுநர் அலுவலகம் விளக்கம் கோரியுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

http://tamil.thehindu.com/tamilnadu/சசிகலாவுடன்-துணைவேந்தர்கள்-சந்திப்பு-விவகாரம்-தமிழக-உயர்கல்வித்-துறையிடம்-விளக்கம்-கோரியது-ஆளுநர்-அலுவலகம்/article9443728.ece?homepage=true&relartwiz=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.