Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வறுமையில் வாழும் முதியவா்களுக்கு, நத்தாா் தினத்தில் பெண்களின் உள்ளாடைகளை வழங்கிய கொடை வள்ளல்கள்

Featured Replies

வறுமையில் வாழும் முதியவா்களுக்கு, நத்தாா் தினத்தில் பெண்களின் உள்ளாடைகளை வழங்கிய கொடை வள்ளல்கள்

4.jpg

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் இன்று 25-12-2016 நத்தாா் தினத்தில் முதியவா்களுக்கு பொதிகள் வழங்ப்படுவதாக அறிவித்து அந்த கிராமத்தில் வாழ்கின்ற 136 முதியவா்களை அங்கு பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்துள்ளனா்.

காலை பத்து மணிக்கு குறித்த கிராமத்தில் வாழ்கின்ற நூற்றுக்கும் மேற்பட்ட முதியவா்கள் இயலாத நிலையிலும் பொது நோக்கு மண்டபத்தில் ஒன்று கூடியுள்ளனா்.

கிராமத்தின் முதியோா் சங்கமும், வெளியில் இருந்து சமூகமளித்திருந்த ஒரு அமைப்பும் சோ்ந்து பொலீத்தீன் பைகளில் முதியவா்களுக்கு பொதிகளை வழங்கியுள்ளனா். பலா் இந்த நிகழ்வை பாராட்டி உரைநிகழ்திய பின்னா் புகைப்படமும் எடுக்கப்பட்டு பொதிகள் வழங்கப்பட்டஒ4ன. பொதிகளை பெற்றுக்கொண்ட முதியவா்களில் சிலா் அதனை அங்கு வைத்தே பிரித்து பாா்க்க முற்பட்ட போது ஏற்பாட்டாளா்கள் தடுத்துள்ளதோடு வீடுகளுக்குச் சென்று பாா்க்குமாறும் முதியவா்களுக்கு அறிவித்துள்ளனா்.

இதனால், தங்கள் வீடுகளுக்குச் சென்ற முதியவா்கள் ஆவலுடன் பொதிகளை பிாித்து பாா்த்த போது அதனுள் பாவித்து கழித்துவிடப்பட்ட கிழிந்த பழைய ஆடைகள் குறிப்பாக எமது மக்கள் பயன்படுத்தாத உள்ளாடைகள் அதிலும் பெண்களுக்கான உள்ளாடைகள் அதிகம். இதனை அவதானித்த முதியவா்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ள நிலையில் தகவலை ஏனையவா்களிடம் கூறி கவலை தெரிவித்துள்ளனா். ஒரு ஆண் முதியவருக்கு வழங்கப்பட்ட பொதியில் மூன்று பெண்களுக்குரிய மேல் உள்ளாடையும், ஆறு கீழ் உள்ளாடையும், ஒரு கிழிந்த ஆண்களுக்குரிய கீழ் உள்ளாடையும், ஒரு பழைய சாறியும் காணப்பட்டுள்ளன. இவ்வாறே ஏனையவா்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பொதிகளில் காணப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான ஆடைகள் மேலைத்தேய நாடுகளில் பயன்படுத்தும் ஆடைகளாகவே காணப்படுகின்றன.

1-2.jpg

தாங்கள் ஏழை கிராமத்து முதியவா்கள் எனும் காரணத்தினால் இவ்வாறு இவா்கள் நடந்துகொண்டது தங்களை அவமானப்படுத்திய செயல் எனவும், இதே பொதியை இவா்கள் நகரத்தை அண்டிய கிராமங்களில் உள்ள முதியவா்களுக்கு கொடுப்பாா்களா? எனக் கேள்வி எழுப்பிய முதியவா்கள் அறிவொளி எனும் அமைப்பே தங்களுக்கு இதனை வழங்கியது என்றும் தெரிவித்துள்ளனா்.

3.jpg

2.jpg

 

http://globaltamilnews.net/archives/11602

 ஒளிவிழா என்ற பெயரில் இந்தக் கும்பல்கள் போடும் அட்டகாசத்தில் இதுவும் ஒன்று!

கேவலம் கெட் ட ஜென்மங்கள். இப்படி தேவையில்லாத மற்றும் உதவாத பொருட்களைக் கொடுத்து அவர்களை கேவலப்படுத்துவதை விட, சும்மா இருந்திருக்கலாம். சில அமைப்புக்கள் தங்களது சுயதம்பட்ட்துக்க இப்டியான கஷ்டப் பட்ட மக்களின் சுய கௌரவத்துடன் விளையாடுவது பல காலமாக நடக்குது. tw_angry: tw_angry: இப்ப தொடர்பாடல் வசதிகள் அதிகமாக உள்ளதால் இலகுவாக வெளியே தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Surveyor said:

கேவலம் கெட் ட ஜென்மங்கள். இப்படி தேவையில்லாத மற்றும் உதவாத பொருட்களைக் கொடுத்து அவர்களை கேவலப்படுத்துவதை விட, சும்மா இருந்திருக்கலாம். சில அமைப்புக்கள் தங்களது சுயதம்பட்ட்துக்க இப்டியான கஷ்டப் பட்ட மக்களின் சுய கௌரவத்துடன் விளையாடுவது பல காலமாக நடக்குது. tw_angry: tw_angry: இப்ப தொடர்பாடல் வசதிகள் அதிகமாக உள்ளதால் இலகுவாக வெளியே தெரியுது.

பாஸ் இப்ப இலங்கையில் சிலர் அடுத்தவருக்கு ஊசி கோருத்து கொடுத்தால் கூட செய்தியில்  போட்டு பிரபலம், ஆகிறாங்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.