Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

72 மணி நேரத்தில் அமெரிக்காவில் வெளியேற வேண்டும்: ரஷ்ய அதிகாரிகளுக்கு அதிபர் ஒபாமா உத்தரவு

Featured Replies

72 மணி நேரத்தில் அமெரிக்காவில் வெளியேற வேண்டும்: ரஷ்ய அதிகாரிகளுக்கு அதிபர் ஒபாமா உத்தரவு

 

ரஷ்ய நாட்டை சேர்ந்த தூதரக அதிகாரிகள் 35 பேரை நீக்கம் செய்ததோடு, 72 மணி நேரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

 
 
 
வாஷிங்டன்:
 
அமெரிக்காவில் கடந்த 8–ந் தேதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் ‘பாப்புலர் ஓட்டு’ என்று அழைக்கப்படுகிற மக்கள் ஓட்டுகளை பெருவாரியாக பெற்றாலும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ‘எலெக்டோரல் ஓட்டு’ என்னும் தேர்தல் சபை வாக்குகளை அதிகம் பெற்றதால், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
 
இந்த தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
 
இந்த தேர்தல் முறையில் ரஷியாவை சேர்ந்த ஹேக்கர்கள் (சட்டவிரோதமாக மோசடி செய்து நுழைகிறவர்கள்) நுழைந்து மோசடி செய்து விட்டதாக கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன் குற்றம் சாட்டி இருந்தார்.
 
தற்போது அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடன், இதே குற்றச்சாட்டை கூறி இருந்தார். டொனால்டு டிரம்ப் வெற்றி பெறும் வகையில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் கூஷிபேர் 2.0 என்ற மால்வேர் பயன்படுத்தப்பட்டதாகவும், இதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் ஸ்னோடன் தெரிவித்தார். 
 
இந்நிலையில், அதிபர் தேர்தலில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து 
 
அந்நாட்டு அதிகாரிகள் 35 பேர அமெரிக்கா அதிரடியாக நீக்கம் செய்துள்ளது. மேலும் தூதரக அதிகாரிகள் 35 பேரை அவர்களுடன் குடும்பத்துடன் அமெரிக்காவை விட்டு வெளியேற 72 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/World/2016/12/30033028/1058973/US-slaps-sanctions-on-Russia-expels-35-diplomats.vpf

  • தொடங்கியவர்

35 தூதரக அதிகாரிகள் வெளியேற அமெரிக்கா உத்தரவு: பதிலடி கொடுக்க ரஷ்யா உறுதி

 
 
புதியன் - ஒபாமா
 முறுகல் நிலையில் உறவு

அமெரிக்காவில் சமீபத்தில் முடிந்த அதிபர் தேர்தலின்போது, கணினிகளில் ஊடுருவி ரகசிய தகவல்களைத் திருடி, தேர்தலின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தியதாக ரஷ்யா மீது அமெரிக்கா புகார் கூறி வரும் நிலையில், ரஷ்யாவின் 35 தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கு உரிய முறையில் பதிலடி கொடுக்கப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் பதில் நடவடிக்கை, அமெரிக்காவுக்கு பெருமளவு அசெளகரியத்தை ஏற்படுத்தும் என்று ரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் வரை காத்திருக்கப் போவதாக ரஷ்யா குறிப்புணர்த்தியுள்ளது. ரஷ்யா கணினி தகவல்களைத் திருடியதாகக் கூறப்படும் அமெரிக்க அரசின் குற்றச்சாட்டை டிரம்ப் புறந்தள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.

35 அதிகாரிகள் வெளியேறுகிறார்கள்  ரஷ்ய அதிகாரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை கெடு

தங்கள் நாட்டின் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷ்யா, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்திலும், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள துணைத் தூதரகத்திலும் உள்ள 35 ரஷ்ய தூதரக அதிகாரிகளும் 72 மணி நேரத்துக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இரண்டு ரஷ்ய புலனாய்வு அமைப்புக்களான ஜிஆர்யு, எஃப்எஸ்பி உள்பட ஒன்பது நிறுவனங்கள் மற்றும் தனியார் மீதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நியுயார்க் மற்றும் மேரிலேண்டில் ரஷ்ய உளவு நிறுவனங்கள் பயன்படுத்திய இரு வளாகங்களை அமெரிக்கா மூட உள்ளது.

அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக இணையத் தகவல் திருட்டு குற்றத்தில் ஈடுபட்ட ரஷ்யா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ஒபாமா எச்சரித்திருந்தார்.

http://www.bbc.com/tamil/global-38461281

  • தொடங்கியவர்

அமெரிக்கா ரஷ்யா உறவைச் சிதைத்த அதிபர் தேர்தல்! - மீண்டும் பனிப்போர்!?

 

அமெரிக்கா

டந்து முடிந்த அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றார். தேர்தலில் அவர், வெற்றிபெற்றதற்கு ரஷ்யா அதிகாரிகள் செய்த சூழ்ச்சியே முக்கியக் காரணம் என்று கண்டுபிடித்து உள்ளனர். அதன் காரணமாக, ‘‘அமெரிக்காவின் ரஷ்ய தூதரகத்தில் இருக்கும் 35 ரஷ்ய அதிகாரிகள் இன்னும் 72 மணிநேரத்தில் எங்கள் நாட்டைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும். இல்லை என்றால்... பிரச்னை வேறுமாதிரி இருக்கும்’’ என்று ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார்.

ட்ரம்ப்க்கு எதிராகப் புகார்கள்!

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில்... ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்டு ட்ரம்பும் மோதினர். இந்த நிலையில், நவம்பர் மாதம் 8-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஹிலரி கிளிண்டன், குடிமக்கள் போடும் ஓட்டுகளான ‘பாப்புலர் ஓட்டு’களை பெரும்பான்மையாகப் பெற்றிருந்தாலும், தேர்தல் சபை வாக்குகளான ‘எலெக்டோரல் ஓட்டு’களை, அதிகமாகப் பெற்று ட்ரம்ப் வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து வரும் 2017 ஜனவரி மாதத்தில் பதவியேற்கும் நிலையில் இருக்கிறார் ட்ரம்ப். இருப்பினும், ஹிலரி கிளிண்டனே அதிக வாக்குகள் பெற்றார். ட்ரம்ப், கிளிண்டனைவிடக் குறைவான வாக்குகளையே பெற்றார் என அடுத்தடுத்த புகார்கள் ட்ரம்ப்-க்கு எதிராக எழுந்தன. மேலும், ‘‘ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்ய அதிகாரிகள் உறுதுணையாக இருந்தனர்’’ என்று அமெரிக்காவின் கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன் ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தார்.

ரஷ்ய அதிகாரிகளே காரணம்!

இந்த நிலையில், நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெறுவதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்ககளில் நடத்தப்பட்ட ஹேக்கிங்தான் முக்கியக் காரணம். ட்ரம்ப்தான் வெற்றிபெற வேண்டும் எனச் சில நாடுகள் எண்ணம்கொண்டிருந்தன. இதன் காரணமாக ஹேக்கர்களைவைத்து ட்ரம்ப்க்கு ஆதரவாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன. ‘‘இந்த ஹேக்கிங் செயலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் ரஷ்ய தூதரகத்தில் இருக்கும் ரஷ்ய அதிகாரிகளே காரணம்’’ என்று எட்வர்ட் ஸ்னோடன் தெரிவித்துள்ளார். இவர், அமெரிக்காவின் மத்திய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி ஆவார். அத்துடன், அந்த நாட்டின் உளவுத்துறை ரகசியங்களையும் அம்பலப்படுத்தியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், அவரிடம் இதற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும், தேவைப்பட்டால் அவை அனைத்தையும் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒபாமாவின் அறிக்கை!

US-2_15439.jpg

ஜனாதிபதி தேர்தலில், ட்ரம்ப்க்கு ஆதரவாக ரஷ்ய அதிகாரிகள் ஹேக்கிங் செய்திருப்பதை தற்போதைய அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா வன்மையாகக் கண்டித்துள்ளார். மேலும், இந்தச் சதிச்செயலுக்குக் காரணமாக இருந்த ரஷ்ய அதிகாரிகள் 35 பேரையும் நாட்டைவிட்டு வெளியேறுமாறு அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை உத்தரவு விட்டிருந்தது. இதுதொடர்பாக தற்போதைய ஜனாதிபதி ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கிளிண்டனைவிடக் குறைவான ஓட்டுகள் பெற்ற ட்ரம்ப் வெற்றிபெற்றார். இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம், ரஷ்ய தூதரகத்தில் உள்ள ரஷ்ய அதிகாரிகள் செய்த சூழ்ச்சியாகும். இந்தச் சதிச்செயலை செய்வதற்குக் காரணமாக இருந்த ரஷ்ய அதிகாரிகள் இனி அமெரிக்காவில் இருக்கக் கூடாது. இன்னும் 72 மணி நேரத்தில் அந்த அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தோடு அமெரிக்காவைவிட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால், விளைவு வேறுமாதிரியாக இருக்கும்’’ என்று எச்சரித்துள்ளார்.

ஆதாரம் இல்லாத பழி!

ரஷ்ய அதிகாரிகள் அமெரிக்காவைவிட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘‘இதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஆனால், அமெரிக்கா ஏன் இப்படி எங்கள் மீதுகுற்றம் சுமத்துகிறது என்று தெரியவில்லை. இந்தச் செயல் எங்கள் நாட்டை அவமதிப்பதாக இருக்கிறது. ‘கணினித் தகவல்களை மாற்றியமைத்தோம்’ என்று எந்த ஆதாரமும் இல்லாமல் எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா மிகப்பெரிய பழியைச் சுமத்தியுள்ளது’’ என்று கூறியுள்ளார். மேலும், புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப், ஆட்சியில் அமரும்வரை அமைதி காக்கப்போவதாகவும், பின் அவரிடம் இதுகுறித்து முறையிடப் போவதாகவும் ரஷ்ய அரசு தெரிவித்ததுள்ளது. 

ரஷ்ய நிறுவனங்கள் மூட உத்தரவு!

US-obama-putin_15008.jpg

இதனிடையே, ரஷ்ய அதிகாரிகள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேற 72 மணி நேரம்.... அதாவது, ஞாயிற்றுக்கிழமை வரை அமெரிக்கா கெடு விதித்திருந்தது. ஆனால், இன்றுவரை அந்த ரஷ்ய அதிகாரிகள் அமெரிக்காவைவிட்டு வெளியேறவில்லை. இதனால் இரண்டு ரஷ்ய புலனாய்வு அமைப்புக்களான ஜி.ஆர்.யூ., எஃப்.எஸ்.பி. உட்பட ஒன்பது நிறுவனங்கள் மீதும் ரஷ்யாவுக்கு சொந்தமான தனியார் நிறுவனம் மீதும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது அமெரிக்கா. மேலும், ‘நியூயார்க் மற்றும் மேரிலண்டில் உள்ள ரஷ்ய உளவு நிறுவனங்கள் பயன்படுத்திய இரண்டு அலுவலகங்களையும் விரைவாக மூடவேண்டும்’ என அமெரிக்கா அறிவித்துள்ளது.

பதற்றத்தில் உலக நாடுகள்!

‘ரஷ்ய அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்’ என அறிவித்து... பின், ரஷ்ய நிறுவனங்களையும், புலனாய்வு அமைப்பையும் மூடுவதற்கு அதிரடியாக உத்தரவிட்டிருக்கும் அமெரிக்கா மீது... ரஷ்யா கடும் கோபம் கொண்டிருக்கிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே ஏதேனும் விபரீத விளைவுகள் ஏற்பட்டுவிடுமா என அனைத்து நாடுகளின் உளவுத்துறை பிரிவுகளும் கண்காணிப்புச் செயலில் தீவிரமாக இறங்கியுள்ளன. 

அமெரிக்க அதிபராகப் பதவியேற்கும் ட்ரம்ப்க்கு நிறைய சவால்கள் காத்திருக்கும் வேளையில்... அதிபர் பதவியில் இருந்து விடை பெற இருக்கும் ஒபாமா, ‘ரஷ்ய அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்’ எனச் சொல்லியிருப்பது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.  

http://www.vikatan.com/news/world/76394-barack-obama-kicks-russian-diplomats-out-of-united-states--another-cold-war.art

  • தொடங்கியவர்

வெளியேற்றப்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகள் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டனர்

 

அதிபர் ஒபாமா உத்தரவின்படி வெளியேற்றப்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகள் அனைவரும் அமெரிக்காவில் இருந்து இன்று புறப்பட்டனர்.

 
 
வெளியேற்றப்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகள் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டனர்
 
மாஸ்கோ:

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதன்காரணமாக வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து அந்நாட்டு அதிகாரிகள் 35 பேரை அதிரடியாக நீக்கம் செய்ய அதிபர் ஒபாமா உத்தரவிட்டார். மேலும் அவர்கள், குடும்பத்துடன் அமெரிக்காவை விட்டு வெளியேற 72 மணி நேரம் அவகாசமும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து நீக்கப்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகள் இன்று வாஷிங்டனில் இருந்து விமானத்தில் புறப்பட்டதாக ரஷ்ய தூதரக செய்தியை மேற்கோள் காட்டி ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் 35 பேரை வெளியேற்ற திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், வெளியுறவுத்துறையின் இந்த பரிந்துரைக்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளிக்கவில்லை.

அதேசமயம், அமெரிக்காவின் புதிய அதிபராக 20-ம்தேதி பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்பின் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அதன்பிற்கு ரஷ்யா-அமெரிக்க உறவுகளில் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என புதின் கூறினார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/01231138/1059470/Expelled-Russian-diplomats-leave-United-States.vpf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 30.12.2016 at 7:20 AM, நவீனன் said:

 

72 மணி நேரத்தில் அமெரிக்காவில் வெளியேற வேண்டும்: ரஷ்ய அதிகாரிகளுக்கு அதிபர் ஒபாமா உத்தரவு

 

இன்னும் கொஞ்ச நாள்தானே கிடக்கு....ஆடுறதை ஆடிட்டு போங்க....
20ம் திகதிக்கு பிறகு வாறான் சிங்கன்....... அடிக்கிறான் கம்மாரிசு....:cool:

Graffiti Trump und Putin

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.