Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பாந்தோட்டை பதற்றநிலை ; 23 பேருக்கு விளக்கமறியல்

Featured Replies

அம்பாந்தோட்டை பதற்றநிலை ; 23 பேருக்கு விளக்கமறியல்

 

 

அம்பாந்தோட்டை கைத்தொழில் வலைய அடிக்கல் நாட்டு விழாவின் போது பதற்ற நிலையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களில் 23 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DASDA1.jpg

இதில் கைதுசெய்யப்பட்ட 21 பேரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரையும், ஏனைய இருவரையும் எதிர்வரும்  11 ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை குறித்த குற்றங்களுக்காக நேற்று 52 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

யுத்தகளமானது ஹம்பாந்தோட்டை

Heding-01-e63db3ba32ad5447ea7a8b97cf1032a65cf3bb13.jpg

 

ஹம்­பாந்­தோட்­டையிலிருந்து ஆர்.யசி
படப்பிடிப்பு: எம்.எஸ்.சலீம் 

ருகுணு பொருளாதார அபிவிருத்தி நிகழ்வை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டம்  : பரஸ்பரம் கல்வீச்சு

இலங்கை மற்றும் சீன அர­சாங்கம் முன்­னெ­டுத்த ருகுணு பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வலய நிகழ்­வினை எதிர்த்து பொது எதி­ர­ணி­யினர் நடத்திய பாரிய எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தை பொலிஸார் மற்றும் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் தண்­ணீர்­தாரை, கண்ணீர் புகை பிர­யோகம் மூலம் கட்­டுப்­ப­டுத்­தினர். பரஸ்­பரம் இரு தரப்­பி­னரும் மேற்­கொண்ட கல்­வீச்சுத் தாக்­கு­தலில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், பொது­மக்கள் என பலர் காய­ம­டைந்­தனர். இதனால் இப்பிர­தேசம் சில மணி நேரம் யுத்தகளம் போன்று காட்­சி­ய­ளித்­ தது. 

ருகுணு பொரு­ளா­தார அபி­வி­ருத்தி வலய ஆரம்ப நிகழ்­வுகள் நேற்று இலங்கை மற்றும் சீன அர­சாங்­கத்தின் கூட்டு முயற்­சியில் ஹம்­பாந்­தோட்டை மிரிஜ்­ஜ­வில  பிர­தே­சத்தில் நடை­பெற்­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் இடம்­பெற்ற இந்த நிகழ்­வுக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் பொது எதி­ர­ணி­யினர் ஆர்ப்­பாட்டம் ஒன்றை மேற்­கொள்ள தீர்­மா­னித்­தி­ருந்­தனர்.  

எனினும் இந்த ஆர்ப்­பாட்­டத்தை நடத்த அனு­ம­திக்­காது அர­சாங்கம் நீதி­மன்றத் தடை உத்­த­ர­வையும் பெற்­றி­ருந்­தது. இந்­நி­லையில் நீதி­மன்ற தடை உத்­த­ர­வையும் மீறி பொது எதி­ர­ணி­யினர் நேற்று தமது எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தை மேற்­கொண்­டனர். நேற்றுக் காலை 10 மணி­ய­ளவில் இவர்­க­ளது ஆர்ப்­பாட்டம் ஆரம்­ப­மா­னது. மிரிஜ்­ஜ­வி­லவில் நிகழ்வு நடை­பெறும் இடத்தில் ஆரம்­பிக்­கப்­பட்ட எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் பொது எதி­ர­ணியின் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளான டலஸ் அழ­க­பெ­ரும, உதய கம்­மன்­பில, சஷீந்­திர ராஜபக் ஷ மற்றும் பெளத்த பிக்­குகள் உள்­ளிட்ட ஆயி­ரத்­துக்கும் அதி­க­மா­ன­வர்கள் கலந்­து­கொண்­டனர். 

ஆரம்­பத்தில் எதிர்ப்பு கோஷங்­களை எழுப்­பியும், அர­சாங்­கத்தை விமர்­சிக்கும் பதா­தை­களை ஏந்­தியும் தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­திய ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் பின்னர் நிகழ்வு நடந்­து­கொண்­டி­ருந்த பகு­தியை நோக்கி கற்­களால் தாக்­குதல் நடத்­தினர். இந்­நி­லையில் நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் பொது எதி­ரணி ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் இடையில் மோதல் நிலை­மைகள் ஏற்­பட்­டன. இரு சாராரும் கற்­களால் ஒரு­வ­ருக்­கொ­ருவர் தாக்­குதல் நடத்­திய நிலையில் உட­ன­டி­யாக பொலி­ஸாரும், அதி­ரடி படை­யி­னரும் சம்­பவ இடத்­திற்கு அழைக்­கப்­பட்­டனர் . 

நிகழ்வை குழப்­பாது ஆர்ப்­பாட்­டத்தை நிறுத்­து­மாறு பொலிஸார் ஆர்ப்­பாட்­டக்­கார்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தியும் மோதல்­களை கட்­டுப்­ப­டுத்த இய­லாத நிலை ஏற்­பட்­டது. மேலும் ஆர்ப்­பாட்­டத்தில் கலந்­து­கொண்ட பெளத்த பிக்­குகள் பொலி­ஸா­ருடன் முரண்­பட்ட நிலையில் நிலைமை மோச­ம­டைந்­தது. மீண்டும் ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் பொது எதி­ரணி ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கும் இடையில் மோதல் நிலை­மைகள் ஏற்­பட்­டன. இந்­நி­லையில், குழப்­ப­கர சூழலை கட்­டுப்­ப­டுத்த பொலிஸார் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீதும் எதிர் தரப்­பினர் மீதும் தண்ணீர் தாரை தாக்­குதல் நடத்­தினர். 

தண்ணீர் தாரை தாக்­குதல் நடத்­தியும் இரண்டு தரப்­பி­னரும் மோதிக்­கொண்­டதை யடுத்து பொலிஸார் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை நோக்கி கண்­ணீர்ப்­புகை பிர­யோகம் மேற்­கொண்­ட­துடன் தடி­யடி தாக்­கு­த­லையும் நடத்தினர். சுமார் ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரம் இந்த குழப்பகர சூழல் நிலவியது. பின்னர் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை சம்பவ இடத்திலிருந்து வெளியேற்றினர். இந்நிலையில் ஆர்ப்பாட்டக்கார்கள் நடத்திய கல்வீச்சிலும் பொலிஸாரின் தாக்குதலில் 15இற்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்தனர். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-01-08#page-1

  • தொடங்கியவர்

ஹம்பாந்தோட்டை விவகாரம் மேலும் 20 பேர் கைது 

 

 

ஹம்பாந்தோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற பதற்றமிகு அசாதாரண சூழ்நிலை தொடர்பில் மேலும் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

நேற்று இரவு முதல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை,  வீதியில் டயர்களை எரித்தமை மற்றும் வீதியை மறித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. 

http://www.virakesari.lk/article/15220

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 4 Personen, Sportler, Text und im Freien

என்னமா யோசிக்குறானுக...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.