Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்

Featured Replies

சர்வதேச பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்

samanthan-copy-48d11da7960588d935e24b7ab5f157ec8f025981.jpg

 

அரசாங்கத்தின் தார்மீக கடமை என்கிறார் சம்பந்தன்

(ஆர்.ராம்)

"நீதிக்­காக எதிர்­பார்த்­தி­ருக்கும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளித்து விசா­ரணைப் பொறி­மு­றையில் சர்­வ­தே­சத்தின் பங்­க­ளிப்பை உறு­தி­செய்­ய­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் தார்­மீக கட­மை­யாகும்" என்று எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசி யக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் வலி­யு­றுத்­தி­னார்.

ஜனா­தி­பதித் தேர்­தலின் போது நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­டு­மென்ற வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்டே மக்கள் ஆணை பெறப்­பட்­டது. அர­சி­ய­ல­மைப்பு சபை­யிலும் அம்­மு­றைமை மாற்­றத்­துக்கு இணக்­கப்­பா­டுகள் உள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். 

அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட நல்­லி­ணக்கம் தொடர்­பான மக்கள் கருத்­த­றியும் செய­லணி பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான பொறுப்­புக்­கூ­று­லுக்­கான நீதி­வி­சா­ரணைப் பொறி­மு­றையில் ஆகக்­கு­றைந்­தது ஒரு சர்­வ­தேச நீதி­ப­தி­யா­வது பங்­கேற்­க­வேண்­டு­மென்­பது அதி­க­ள­வான மக்­களின் கருத்­தா­க­வுள்­ள­தாக சுட்­டிக்­காட்டி சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்பை பரிந்­து­ரைத்­துள்­ளது.

இந்­நி­லையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான பொறுப்­புக்­கூ­று­த­லுக்­கன விசா­ரணைப் பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்பை அர­சாங்கம் மீண்டும் முற்­றாக நிரா­க­ரித்­துள்­ளது. இவ்­வி­டயம் தொடர்­பா­கவும், நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை மாற்றம் குறித்தும் பிர­தான கட்­சிகள் சார்பில் முன்­னுக்கு பின்­ முரணான கருத்­துக்­கள் வெளியிடப்பட்டு வருகின்றமை தொடர்­பா­கவும் கருத்து வெளியி­டு­கை­யி­லேயே எதிர்க்­கட்­சித்­த­லை­வரும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இவ்­வி­டயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தில் பொறுப்­புக்­கூ­றுதல் பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதித்­து­றையின் பங்­க­ளிப்பு வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த தீர்­மா­னத்­திற்கு இலங்கை அர­சாங்­கமும் இணை அனு­ச­ரணை வழங்­கி­யுள்­ளது. அதன் பிர­காரம் அர­சாங்கம் அக்­க­ரு­மத்தை நிறை­வேற்­று­வ­தாக ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

அத­னைத்­தொ­டர்ந்து அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட நல்­லி­ணக்க செய­ல­ணியும் அறிக்­கையை சமர்ப்­பித்­துள்­ளது. அவ்­வ­றிக்­கை­யிலும் உள்­ளக விசா­ர­ணையில் அதி­க­ள­வி­லான பாதிக்­கப்­பட்ட மக்கள் நம்­பிக்கை இழந்­துள்­ளனர். ஆகவே ஒரு சர்­வ­தேச நீதி­ப­தியை உள்­ள­டக்­கி­ய­தாக நீதிக்­கான விசா­ரணைப் பொறி­முறை அமைக்­கப்­ப­ட­வேண்டும் என சிபார்சு செய்­யப்­பட்­டுள்­ளது.

இதற்கு முன்­ன­தாக இந்­தியாவின் நீதி­பதி பக­வதி தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட சர்­வ­தேச நிபு­ணர்­கு­ழுவின் அறிக்­கை­யிலும் சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பிர­சன்னம் தொடர்­பாக பகி­ரங்­க­மாக கூறப்­பட்­டுள்­ளது. ஆகவே இவ்­வா­றான சிபார்­சு­களை அடிப்­ப­டை­யாக கொள்­கின்­ற­போது உள்­நாட்டில் நடை­பெ­று­கின்ற விசா­ர­ணை­களில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நம்­பிக்கை இல்லை என்­பது வௌிப்­ப­டை­யா­கின்­றது.

விசே­ட­மாக திரு­ம­லையில் ஐந்து மாண­வர்கள் படு­கொலை, மூதூரில் 17தன்­னார்வ தொண்டு நிறு­வன ஊழி­யர்கள் படு­கொலை, குமா­ர­புரம் படு­கொலை, முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவிராஜ் படு­கொலை ஆகி­ய­வற்றில் நியா­ய­மான நீதி கிடைத்­தி­ருக்­க­வில்லை.

ஆகவே தான் பாதிக்­கப்­பட்ட மக்கள் சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்பை தொடர்ச்­சி­யாக கோரி­நிற்­கின்­றார்கள். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நியா­ய­மான நீதியை வழங்கும் கரு­மத்தை அர­சாங்கம் பொறுப்­புடன் முன்­னெ­டுக்க வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்களின் உணர்­வு­க­ளுக்கு அர­சாங்கம் மதிப்­ப­ளிக்க வேண்டும். அத­ன­டிப்­ப­டையில் நியாயமான முடிவெடுத்து சர்வதேச பங்களிப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் தார்மீக கடமையாகும். அதிலிருந்து அவர்கள் விலகிச் செல்ல முடியாது.

நிறைவேற்று அதிகார

ஜனாதிபதி முறைமை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கப்படுமென தற்போதைய ஜனாதிபதி உட்பட முக்கிய ஜனாதிபதிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களின் போது வாக்குறுதியை முன்வைத்துள்ளனர். அதேநேரம் அரசியல் சாசன சபையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் மாற்றங்கள் ஏற்படுததவதற்கு இணக்கப்பாடுகள் உள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-14#page-1

  • தொடங்கியவர்

திருப்­பு­மு­னை­யாக அமை­ய­வேண்டும்

 

எதிர்க்­கட்­சித் ­த­லைவர் பொங்கல் வாழ்த்து 

இலங்­கைவாழ் மக்­க­ளி­டையே புரிந்­து­ணர்வு, நல்­லி­ணக்கம் ஏற்­பட்டு சாந்தி, சமா­தா­னத்­துடன் கூடிய சௌபாக்­கி­ய­மிக்க நாடாக இந்­நாடு சிறப்­புற, பிறக்கும் தைத்­திங்கள் வழி­ச­மைத்­திட வேண்டும். இலங்கை வர­லாற்றில் ஒரு திருப்­பு­மு­னை­யாக இது அமை­ய­வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் பொங்கல் வாழ்த்துச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார்.  

இலங்கைத் திரு­நாட்டில் வாழும் தமிழ் மக்­க­ளுக்கு மட்­டு­மன்றி புலம்­பெ­யர்ந்து வாழும் எம்­மக்­க­ளுக்கும் தைப்­பொங்கல் நல்­வாழ்த்­துக்­களைத் தெரிவித்துக் கொள்­வதில் பெரு­ம­கிழ்­வெய்­து­கின்றேன்.

உழவர் திருநாள், தமிழர் பெருநாள் என்­றெல்லாம் பெரு­மைப்­படும் தைத்­தி­ரு­நா­ளான இன்று தமிழ்­கூறும் நல்­லு­லகம் எங்கும் இத் தைப்­பொங்கல் விழா மகிழ்­வுடன் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது.

இப் பூவு­லகில் சூரிய பக­வானால் பரு­வ­கா­லங்கள் உண்­டா­கின்­றன. அவற்றுள் மாரி­காலம் வழங்கும் மழை­யினால் பயிர்கள் விளை­கின்­றன. மாரி­கால ஆரம்­பத்தில் விதைக்­கின்ற பயிர் வகைகள் யாவும் மழை­வீழ்ச்சிக் காலத்தில் வளர்ந்து, முற்றி தைமா­தத்தில் அறு­வடை செய்­யப்­ப­டு­கின்­றன.

அந்த வகையில் எமக்குத் தேவை­யான உண­வுப்­பொ­ருட்­களை விளை­விக்க உத­விடும் சூரிய பக­வானை வர­வேற்று தை முதல் நாளில் புரண கும்பம் வைத்து புதிய அடுப்பில் புதுப் பானை வைத்து புதி­தாக அறு­வடை செய்த அரி­சியில் பாற்­பொங்கல் பொங்கிப் படைத்து நன்றிக் கடன் செலுத்தும் திரு­நாளே, தைப்­பொங்கல் திரு­நா­ளாகும்.

தைமாதம் பிறக்கும் ஆண்டுத் தொடக்கம் மக்­க­ளுக்குப் பல எதிர்­பார்ப்­புக்­களை உரு­வாக்கும். அந்த வகையில் தமி­ழரின் எதிர்­பார்ப்­பாக முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள அர­சி­ய­ல­மைப்­பா­னது நீண்­ட­கா­ல­மாகத் தீர்க்­கப்­ப­டா­துள்ள தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நியா­ய­மா­னதும் நீடித்து நிலைத்­தி­ருக்­கக்­கூ­டி­ய­து­மான தீர்­வினைக் காண வழி­காட்ட வேண்­டு­மெ­னவும், அது இலங்கை வர­லாற்றில் ஒரு திருப்­பு­மு­னை­யாக அமைந்­திட வேண்­டு­மெ­னவும், இதய சுத்­தி­யு­ட­னான இன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்­டு­மெ­னவும் இந் நன்­னாளில் நாம் நம்­பிக்கை கொள்வோம்.

எதிர்­பார்ப்­புக்­களும் சவால்­களும் நிறைத ஆண்­டொன்­றினுள் காலடி வைத்­துள்ள இத்­த­ரு­ணத்தில் இலங்­கைவாழ் மக்­க­ளி­டையே புரிந்­து­ணர்வு, நல்­லி­ணக்கம் ஏற்­பட்டு சாந்தி, சமாதானத்துடன் கூடிய சௌபாக்கியமிக்க நாடாக இந்நாடு சிறப்புற, பிறக்கும் தைத்திங்கள் வழிசமைத்திட வேண்டுமென எனது உளம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு எல்லாம் வல்ல இறைவனையும் பிரார்த்திக்கின்றேன் என்றுள்ளது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-14#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.