Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘வாய்ப்பை தவறவிட்டுவிட்டது வடமாகாண சபை’

Featured Replies


‘வாய்ப்பை தவறவிட்டுவிட்டது வடமாகாண சபை’
 
 

article_1484627877-fghdfg.jpgக.அகரன்

“வட மாகாணசபையில், நான் குறைபாட்டைக் காண்கின்றேன். அதிகமாக அதிகாரம் வேண்டுமென நீங்கள் கேட்கின்றீர்கள். அது நியாயமானதுதான். ஆனால், வழங்கிய அதிகாரங்களை கூட, சரியான நேரத்தில் வட மாகாணசபை பயன்படுத்தியதாக இல்லை” என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.  

வவுனியா மத்திய பஸ் நிலையத்தை நேற்று (16) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“இராணுவத்திடம் இருந்த பல காணிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தினால், விடுவித்துத் தரப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட காணிகளில், ஏதாவது பயன்தரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா” என்றும் அமைச்சர் வினவினார்.

அனைத்து மாகாணங்களிலும் கூட மாகாணங்களுக்கிடையிலான செயற்றிட்டங்களை கொண்டு வந்து செயற்படுத்துகின்றனர். வட மாகாண சபைக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, வட மாகாண சபைக்கு பாரிய பொறுப்புள்ளது. இந்த மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் செய்யவேண்டும். அதற்கான நிதியை ஒதுக்கி கொடுக்கவேண்டும்.

வட மாகாண சபைக்கு தேவையான அத்தனை விடயங்களையும் நாம் நிறைவேற்றி தருவோம். அதற்குத் தயாராக இருக்கின்றோம். இந்த மேடையிலும் அனைத்து கட்சியினரும் இருக்கின்றார்கள். இது மக்களின் சேவைக்காக ஒன்றுபட்டுள்ளோம். ஆனால், தேர்தல் காலங்களில் பிரிந்திருந்து தேர்தலில் போட்டியிடுவோம்.

வடக்கு- கிழக்கு ஒரு காலகட்டத்தில் பிரிக்கப்பட்டது மாத்திரமல்லாது போர்ச்சூழலும் காணப்பட்டது. அது அதிகாரத்தை பகிர்வது தொடர்பானதாக இருந்தது.

போக்குவரத்து துறையிலும் தமது அதிகாரத்தை காட்டுவதற்காக சிலர் செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது” என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/189818/-வ-ய-ப-ப-தவறவ-ட-ட-வ-ட-டத-வடம-க-ண-சப-#sthash.sfP7Mqd6.dpuf
  • தொடங்கியவர்
இருக்கின்ற அதிகாரங்களையும் பயன்படுத்த தவறுகிறது வடமாகாணசபை- அமைச்சர் நிமால் குற்றச்சாட்டு
இருக்கின்ற அதிகாரங்களையும் பயன்படுத்த தவறுகிறது வடமாகாணசபை- அமைச்சர் நிமால் குற்றச்சாட்டு
இருக்கின்ற அதிகாரங்களைக்கூட சரியாக பயன்படுத்த தவறுகிறது வடமாகாணசபை என போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறி பால டிசில்வா குற்றம் சாட்டியுள்ளார்.
 
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தினை நேற்றையதினம்  திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
தொடர்ந்தும் உரையாற்றிய அவர் வட மாகாணசபையில் நான் குறைபாட்டை காண்கின்றேன். நீங்கள் அதிகமாக அதிகாரம் வேண்டும் என கேட்கின்றீர்கள். அது நியாயமானதுதான். ஆனால் வழங்கிய அதிகரங்களை கூட அவர்கள் சரியான நேரத்தில் பயன்படுத்தியதாக இல்லை. 
 
ஜனாதிபதி தலைமையில் இராணுவத்திடம் இருந்து பல காணிகள் விடுவித்து தரப்பட்டுள்ளது. ஆனால் அந்த விடுவிக்கப்பட்ட காணிகளில் ஏதாவது பயன்படக்கூடியவகையில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளீர்களா?.
 
இரண்டு மில்லியன் ரூபா ஒரு வீட்டுக்கு என ஒன்றரை வருடங்களாக அரசாங்கம் பணத்தை ஒதுக்கி தந்துள்ளது. வீடுகளை கட்டி னீர்களா? 
 
இது எங்களுக்கு பாரிய பிரச்சனை. பால் போத்தலை கேட்கின்றனர். பால் கொடுக்கின்றோம். ஆனால் அவர்கள் பாலை குடிக்கி ன்றார்கள் இல்லை.
 
 மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் சிறுபான்மை இனத்திற்கான உரிமையை பெற்றுக்கொடுக்கவேண்டும் என செயற்படும் அரசாங்கம். ஆகவே அந்த அரசாங்கத்திடம் இருந்து நீங்கள் பிரயோசனங்களை பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய பகுதியில் உள்ள பிரச்சனையை நீங்கள் தீர்த்துக்கொள்ளுங்கள். 
 
அனைத்து மாகாணங்களிலும் கூட மாகாணங்களுக்கிடையிலான செயற்றிட்டங்களை கொண்டு வந்து செயற்படுத்துகின்றனர். ஊவா மாகாணத்தில் கூட அது தாமதமாகி அண்மையில் செயற்படுத்தியிருந்தனர். அவை மாகாண ரீதியில் செயற்படவேண்டிய விடயங்கள். 
 
வட மாகாணசபைக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே வட மாகாணசபைக்கு பாரிய பொறுப்புள்ளது. இந்த மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் செய்யவேண்டும். அதற்கான நிதியை ஒதுக்கி கொடுக்கவேண்டும். 
 
வட மாகாணசபைக்கு தேவையான அத்தனை விடயங்களையும் நாம் நிறைவேற்றி தருவோம். அதற்கு தயாராக இருக்கின்றோம். 
 
இந்த மேடையிலும் அனைத்து கட்சியினரும் இருக்கின்றார்கள். மக்களின் சேவைக்காக ஒன்றுபட்டுள்ளோர். ஆனால் தேர்தல் காலங்களில் பிரிந்து தேர்தலில் போட்டியிடுவோம். 
 
வடக்கு கிழக்கு ஒரு காலகட்டத்தில் பிரிக்கப்பட்டது மாத்திரமல்லாது போர்ச்சூழலும் காணப்பட்டது. அது அதிகாரத்தை பகிர்வு தொடர்பானதாக இருந்தது. அதற்கு ஓர் குறியீடாக இந்த பேரூந்து நிலையமும் உள்ளது.
 
போக்குவரத்து துறையிலும் தமது அதிகாரத்தை காட்டுவதற்காக சிலர் செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது. அதுதான் தனியார் பேரூந்து சங்கமும் இலங்கை போக்குவரத்து சபையுமாக உள்ளது, 
 
ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளும் அரசாங்க இராணுவமும் போரிட்டது போல் இன்று தனியார் பேரூந்து உரிமையாளர்களும் இலங்கை பேரூந்து சபையினரும் மோதுகின்றனர். இவர்கள் கீரியும் பாம்பும்போல் சண்டை பிடிக்கின்றனர். 
 
இன்று நாட்டில் போர் முடிந்து விட்டது. எனவே இவர்களுடைய சண்டையும் முடியும் காலம் வந்துவிட்டது. கடந்த கலங்களில் இ.போ.சபேருந்துகளுக்கு கல் எறிந்து பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படு த்துவது போன்று போக்குவரத்து சேவையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 
 
இரு பேருந்து சேவையினரும் தாங்கள் நினைத்தபடி செற்பட முடியாது இணைந்த நேர அட்டவணையின் பிரகாரமே செயற்பட வேண்டும். 
2.png
வடமாகாணத்தில் சமாதானத்தை ஏற்படுத்தியது போன்று வட மாகாணத்தில் உள்ள பேருந்து சேவையிலும் சமாதானமும் சக வாழ்வும் ஏற்பட வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றறேன். 
 
இதற்கு விசேடமாக பொலிஸாரின் ஒத்துழைப்பு அவசியம். வட மாகாணசபையின் ஒத்துழைப்பு அவசியம். அரசியல் தலைமை களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். 
 
அனுமதி அற்ற பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன. அவர்களை பிடித்து தண்டம் அறவிட்டால் மீண்டும் சேவையில் ஈடுபடு கின்றனர். எனவே இவ்வாறானவர்களை கட்டுப்படுத்த 2 இலட்சம் ரூபா அபராதம் அறவிடப்பட வேண்டும் என அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்றுள்ளேன். இன்னும் ஓரிரு நாட்களில் அது நடைமுறைக்கு வரும் அதன் பின்னர் சட்ட ரீதியாக அமுல்படுத்தப் ப்படும். 
 
அதேவேளை புகையிரத சேவையினையும் நாம் நவீன மயப்படுத்தி வருகின்றோம். ஓமந்தையில் இருந்து அனுராதபுரம் வரையான புகையிரத பாதைகள் திருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது. 
 
இதன் காரணமாக சேவைகள் தடைப்படலாம். இல்லாவிட்டால் சரியான தரத்திற்கு அதனை புனரமைப்பு செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/22777

  • கருத்துக்கள உறவுகள்

நிமலின் கருத்துடன் எத்தனை பேர் ஒத்துப் போவீர்களோ தெரியாது. உண்மையான கதையும் அதுதான்.

வடமாகாண சபைக்கு அரசாங்கத்தாலும் வெளிநாட்டு அரசு மற்றும் நிதியுதவி நிறுவனங்களாலும் ஒதுக்கப்பட்ட நிதியினை அவர்கள் பயன்படுத்த தவறியமையால் அந்த நிதி பிற மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

பாரிய தொழிற்சாலை அமைக்க அரசு முன்வந்த போது அதற்கு வடமாகாண சரியான பதில் வழங்கப்படாத காரணத்தினால் அவற்றை இரண்டாக பிரித்து அனுராதபுரத்திலும் அம்பாறையிலும் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

யதார்த்தவாதி என கருதப்பட்ட சி.விக்கினேஸ்வரன் கூட யதார்த்த நிலையில் இல்லை. அரசியல் தீர்வு பெற்ற பின்னரே அபிவிருத்தி திட்டம் தொடர்பில் சிந்திக்கலாம் என கூறி வருகின்றார். அப்படி எனில் அங்கே வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் தவறான வழிகளில் செல்வது தவிர்க்க முடியாமல் போய்விடும். அதுதான் தற்போது இடம்பெற்றும் வருகின்றது.

கிழக்கு மாகாண சபை தமக்கு கிடைக்கின்ற நிதியினை சரியான முறையில் பயன்படுத்தி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். யாழ். நகரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் மட்டக்களப்பு நகரம் நன்றாக உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண சபையில் ஒரு திட்டத்தை கொண்டுவந்தால், எதிர்பு தெரிவிப்பவர்கள்

1) ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 

2) வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள்

3) வடமாகாண ஆளுநர்

4) அரச அதிகாரிகள்

 

  • தொடங்கியவர்
தமிழ் மக்களின் இதயத்தை வெற்றிகொள்வதே கடினமானது-வடக்கு ஆளுனர்
 
 
தமிழ் மக்களின் இதயத்தை வெற்றிகொள்வதே கடினமானது-வடக்கு ஆளுனர்
தனது பிள்ளைகளை சிங்களவர்களுக்கு திருமணம் செய்துகொடுத்த வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், தற்போது அடையாளம் குறித்து பேசுவதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே விமர்சித்துள்ளார்.
 
கிளிநொச்சி வட்டக்கச்சியில் உள்ள  சிவில் பாதுகாப்புத்  திணைக்களத்தின் பண்ணையில்  இன்று  காலை  9.30 க்கு ஆர ம்பமான பொங்கல்  நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கேற்று உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவ த்தார்.
 
30 வருடம் இடம்பெற்ற யுத்தத்தினால் வேதனை மாத்திரமே மிஞ்சியதாக குறிப்பிட்ட ரெஜினோல்ட் குரே, தமிழ் மக்களின் இதயத்தை வெற்றிகொள்வதே கடினமானது என குறிப்பிட்டார்.
 
மத்திய அரசாங்கத்தில் அதிகளவான நிதி வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட போதிலும் அரசியல்வாதிகளின் சண்டைகள் காரணமாக அந்த பணம் பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
சிவில் பாதுகாப்பு  திணைக்களத்தின்  முல்லைத்தீவு  மற்றும்  கிளிநொச்சிக்கான  இணைந்த  கட்டளைத்  தலைமையக த்தின்  ஏற்பாட்டில் இந்த பொங்கல் விழா நடைபெற்றிருந்தது.

http://www.onlineuthayan.com/news/22804

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.