Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஐக்கிய குடியரசு என பிரகடனம் செய்யப்பட வேண்டும் வழிநடத்தல் குழுவுக்கு முன்மொழிய நான்கு அரசியல் தரப்புக்கள் தயாராகின்றன

Featured Replies

இலங்கை ஐக்­கிய குடி­ய­ரசு என பிர­க­டனம் செய்­யப்­பட வேண்டும்

 

வழி­ந­டத்தல் குழு­வுக்கு முன்­மொ­ழிய நான்கு  அரசியல் தரப்புக்கள் தயாரா­கின்­றன
(ஆர்.ராம்)

இலங்கை ஜன­நா­யக சோஷ­லிஸ குடி­ய­ரசு என்­பது இலங்கை ஐக் ­கிய குடி­யரசு என பிர­க­டனம் செய்­யப்­பட வேண்டும். நிறை­வேற்று அதி­கார முறை­மையில் சில மாற்­றங்கள் செய்­யப்­பட்­டாலும் நாட் டின் தலைவர் மக்­களால் தெரி­வு­செய்­யப்­படும் ஜனா­தி­பதி ஆவார்.

ஜனா­தி­பதி சார்ந்­தி­ருக்­காத ஏனைய மூன்று இனங்­களை பிர­தி­நி­தித்­துவப்­ப­டுத்தும் வகையில் மூவர் துணை ஜனா­தி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்­பது உட்­பட முக்­கிய பரிந்­து­ரைகள்

இலங்கை ...

அடங்­கிய வரைபை புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­­வ­தற்­காக அர­சி­ய­ல­மைப்பு சபை­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான வழி­ந­டத்தல் குழு­விடம் முன்­மொ­ழி­வ­தற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு கூட்­டணி, ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்சி மற்றும் நல்­லாட்­சிக்­கான மக்கள் இயக்கம் ஆகி­யன தயா­ரா­கி­யுள்­ளன.

குறித்த வரை­பா­னது எதிர்­வரும் வாரத்தின் நடுப்­ப­கு­தியில் இறு­தி­செய்­யப்­பட்டு உட­ன­டி­யாக வழி­ந­டத்தல் குழு­விடம் கைய­ளிக்­கப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு கூட்­டணி, ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்சி, நல்­லாட்­சிக்­கான மக்கள் இயக்கம் ஆகிய அர­சியல் கட்­சி­க­ளுக்­கி­டையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­தற்­காக அர­சி­ய­ல­மைப்பு சபை­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான வழி­ந­டத்தல் குழ­விடம் கைய­ளிப்­ப­தற்­கான முன்­மொ­ழி­வு­களை இறுதி செய்­வ­தற்­கான விசேட சந்­திப்­பொன்று நேற்று புதன்­கி­ழமை மு.காவின் தலை­மை­ய­க­மான தாரு­ச­லாமில் மாலை 6.30முதல் இரவு 8 மணி வரையில் நடை­பெற்­றி­ருந்­தது.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் சார்பில் எந்­த­வொரு பிர­தி­நி­தி­களும் கலந்­து­கொண்­டி­ருக்­காத நிலையில் மு.கா.சார்பில் அதன் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கிம் தலை­மை­யி­லான குழு­வி­னரும், தமிழ் முற்­போக்கு கூட்­டணி சார்பில் அதன் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ­க­ணேசன் தலை­மை­யி­லான குழு­வி­னரும், ஆழ­மக்கள் ஜன­நா­யக கட்சி சார்பில் அதன் செய­லாளர் நாய­கமும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்ளஸ் தேவா­னந்தா தலை­மை­யி­லான குழு­வி­னரும், நல்­லாட்­சிக்­கான மக்கள் இயக்­கத்தின் சார்பில் அதன் பொதுச்­செ­ய­லாளர் நஜாப் மொஹமட் ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இதன்­போது வழி­ந­டத்தல் குழ­விடம் கைய­ளிப்­ப­தற்­கான வரைவில் கூறப்­பட்­டுள்ள முன்­மொ­ழி­வுகள் ஒவ்­வொன்­றாக ஆரா­யப்­பட்­டன. குறி்ப்­பாக நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை, அர­சாங்­கத்தின் தன்மை, மதங்கள், தேர்தல் முறைமை, அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­டுதல் உள்­ளிட்ட பல விட­யங்கள் விரி­வாக ஆரா­யப்­பட்­டன. இருப்­பினும் கொள்கை அளவில் நான்கு தரப்­பி­ன­ரி­டை­யேயும் பல விட­யங்­களில் இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டுள்ள போதும் தேர்தல் முறைமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஏனைய அர­சியல் தரப்­பு­க­ளி­லி­ருந்து வேறு­பட்டு புதி­ய­தொரு முறை­மையை பரிந்­து­ரைத்­துள்­ளன. குறித்த சந்­திப்பில் ஆரா­யப்­பட்­ட­தாக கூறப்­படும் விட­யங்­களில் சாரம்சம் வரு­மாறு,

ஜனா­தி­பதி முறையும் தெரிவும்

1978ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்டு தற்­போது நடை­மு­றையில் உள்ள இரண்­டா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­வா­றான நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­பதி முறை­மையில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­ப­திக்­குள்ள சில அதி­கா­ரங்கள் முழ­மை­யாக நீக்­கப்­ப­ட­வேண்டும்.

எனினும் நாட்டின் தலை­வ­ராக ஜனா­தி­ப­தியே இருக்­க­வேண்டும். அப்­ப­த­வி­யா­னது வெறு­மனே கௌரவப் பத­வி­யாக இருப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. ஜனா­தி­ப­தி­யா­னவர் நேர­டி­யாக மக்­களால் தெரிவு செய்­யப்­ப­டு­ப­வ­ராக இருக்க வேண்டும். ஆவர் பாரா­ளு­மன்­றத்­திற்கு பதி­ல­ளிப்­ப­வ­ரா­கவும் இருக்­க­வேண்டும். அதுவே சிறு­பான்மை மக்­க­ளுக்கு பாது­காப்­பா­ன­தாக அமையும் என்ற முன்­மொ­ழிவை நான்கு தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர்.

அத்­துடன் இலங்­கையில் சிங்­க­ள­வர்கள், இலங்கைத் தமிழர், முஸ்­லிம்கள், மலைய தமி­ழர்கள் ஆகிய நான்கு இனங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. ஆகவே ஜனா­தி­பதி தெரிவு செய்­யப்­படம் நபர் சார்ந்­தி­ருக்­காத ஏனைய மூன்று இனங்­க­ளையும் பிர­தி­நித்­துவம் செய்யும் வகையில் மூன்று துணை ஜனா­தி­ப­திகள் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்ற முன்­மொ­ழி­வையும் நான்கு தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர்.

அரசின் தன்மை

தற்­போது இலங்கை ஜன­நாய சோச­லிச குடி­ரசு எனக் காணப்­ப­டு­கின்­றது. ஆங்­கில மொழியில் சிறி­லங்கா யுனிற்­றரி ஸ்ரேட் என்றே உள்­ள­மை­யினால் அனைத்து இனத்­தவர் மத்­தி­யிலும் இலங்­கையர் என்ற எண்­ணப்­பாடு மனதில் ஏற்­ப­டு­வதை வலு­வாக்கும் வகையில் இலங்கை ஐக்­கிய குடி­யசு என பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பது நான்கு தரப்­பி­ன­ராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

தேர்தல் முறைமை

மு.கா விசேட யோசனை

தேர்தல் முறைமை தொடர்­பாக தமிழ் முற்­போக்கு கூட்­டணி, ஈழ­மக்கள் ஜன­நாய கட்சி, நல்­லாட்­சிக்­கான மக்கள் இயக்கம் ஆகி­ய­வற்­றுக்­கி­டையில் விகி­தா­சார முறை­மையில் தேர்­தலை நடத்­து­வ­தற்கு கொள்­கை­ய­ளவில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்ள போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் புதி­ய­தொரு யோச­னையை முன்­வைத்­துள்­ளது.

அதா­வது வடக்கு கிழக்கு மற்றும் வடக்­கு­கி­ழக்கு வௌியில் சித­றி­வாழும் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­து­வங்­களை கருத்­திற்­கொண்டு நாடு 108வல­யங்­க­ளாக வகுக்­கப்­பட்ட தேர்தல் முறை­மை­யொன்றை யோசனை செய்­யப்­பட்­டுள்­ளது. ஆத்­துடன் சிறு­பான்மை மக்­களை தனித்­து­வ­மாக கொண்ட தேர்தல் வல­யங்­களில் விகி­தா­சா­ரத்தின் அடிப்­ப­டையில் பிர­நி­தித்­து­வங்கள் இடம்­பெ­ற­வேண்டும் எனவும் யோச­னை­யொன்ற முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கு மேல­தி­க­மாக மதம் தொடர்­பான விட­யமும் விரி­வாக ஆராயப்பட்டதோடு வழிநடத்தில் குழவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இரண்டாவது சபை, அதற்கான அங்கத்துவங்கள் நியமனம் குறித்தும் ஆராயப்பட்டபோதும் இறுதியான இணக்கப்பாடொன்று எட்டப்படவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் வாரத்தின் நடுப்பகுதியில் அந்த விடயங்கள் உள்ளிட்ட ஏனைய முன்மொழிவுகளையும் மறுபரிசீலனை செய்து வரைபை இறுதிசெய்து உடனடியாக வழிநடத்தல் குழவிடம் கையளிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அதிகாரப்பகிர்வு விடயத்தில் எவ்விதமான முன்னேற்றமற்றதொரு புதிய அரசியலமைப்புக்கோ அல்லது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கோ ஒருபோதும் இணங்குவதில்லையெனவும் குறித்த கட்சிகளின் பிரதிநிதிகள் கடுமையான தொனியில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக மேலும் தெரியவருகின்றது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-19#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.