Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓய்வுக்கு சென்ற என்னை மீண்டும் இழுத்து எடுத்தது மைத்திரிதான் : கொழும்பில் 8 ஹெக்டேயர் நிலப்பரப்பை விற்க தீர்மானம் : வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருங்கள் : நுகேகொடவில் மஹிந்த

Featured Replies

ஓய்வுக்கு சென்ற என்னை மீண்டும் இழுத்து எடுத்தது மைத்திரிதான் : கொழும்பில் 8 ஹெக்டேயர் நிலப்பரப்பை விற்க தீர்மானம் : வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருங்கள் : நுகேகொடவில் மஹிந்த

 

 

நான் அரசியலிருந்து ஓய்வு பெறச் சென்ற போது 'நீங்கள் தற்போது ஓய்வு பெற முடியாது, மீண்டு வரவேண்டும் என மக்கள் கூறியிருந்தாலும், ஓய்வு பெறச் சென்ற என்னை மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் இழுத்து எடுத்தார் என்பதை அவரிடம் தெரிவித்துகொள்ள விரும்புகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.cccccC3Lr3tMUkAAdHzR.jpg

துறைமுகங்கள் அரச நிறுவனங்கள் என அனைத்தையும் சர்வதேசதத்துக்கு விற்பனை செய்ய ஆயத்தமாகியுள்ளனர். மேலும் கொழும்பு நகரில் 8 ஹெக்டேயர் நிலப்பரப்பையும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளார்கள். இதனை வாங்குபவர்கள் சற்று அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.

இதுபோன்று அரசிடம் கொள்யைடித்த பணத்தில் தொலைக்காட்சி,வானொலி மற்றும் பத்திரிகை நிறுவனங்களை வாங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். அரசாங்கத்திடம் கொள்ளையடித்த பணத்தில் எதை வாங்கினாலும் அனைத்தும் பொதுமக்கள் உடமையாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.Ccccc3Lr3tLVYAATYb8.jpg

நுகோகொடையில் கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துகின்றமை, அரச நிறுவனங்களை விற்பனை செய்கின்றமை, ஊழல் மோசடி என்பவற்றை பிரதானப்படுத்தி நடத்தப்படவுள்ள எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்த மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது நமது தலைவர்களுக்கு எந்தப் பக்கம் இழுத்துக்கொள்ளும் என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. ccC3Lr3tLUYAAOi88.jpg

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், இனி அரசியலிருந்து ஓய்வு பெறுவோம் என்ற எண்ணத்தோடு ஜனவரி 9 ஆம் திகதி காலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறி மெதமுலனவுக்கு சென்ற என்னை 'உங்களுக்கு தற்போது ஓய்வு முடியாது, மீண்டும் நீங்கள் வரவேண்டும்" என சொன்னது நீங்கள் தான்.

ஆனால் ஓய்வு பெறச் சென்ற என்றை மீண்டும் இழுத்து எடுத்தது மைத்திரிபால தான் என்பதை அவரிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கில் தற்போது புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குகின்றார்கள். 

பயங்கரவாதிகளுக்கு எதிராக பெற்று கொண்ட யுத்த வெற்றியை காட்டிகொடுக்க ஆயத்தமாக உள்ளார்கள். 

இந்த வரலாற்று யுத்த வெற்றியை பாதுகாக்கும் பொறுப்பு இந்த நாட்டு மக்களிடம்;, தலைவரிடமும் உள்ளது.

எனவே காட்டி கொடுப்புக்கான புதிய அரசியலமைப்பு பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

நாட்டின் பொருளாதார நிலைமையை அறிந்து கொண்டுதான் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே ஜனாதிபதி தேர்தலை நடத்தி வேண்டுமென்றே என்னுடைய சுயநலத்துக்காக தோல்வியடைந்ததாக கூறுகின்றார்கள்.Cccc3Lr3tNVYAAfNuz.jpg

நான் சர்வதேச நாடுகளிடம் கடன் பெற்று நாடு பொருளாதார ரீதியாக பாரிய பின்னடவை எதிர்கொண்டதால் நான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தேன் என்றால், எதற்காக நாடு கடனில் இருக்கும் போது  ஆட்சிக்கு வந்தீர்கள்.

தற்போதைய தலைவர்கள் இதுபோன்ற விளக்கமற்ற கதைகளை தான் கூறிகொண்டு இருக்கின்றார்கள்.

அரசாங்க நிறுவனங்கள், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய ஆயத்தமாக உள்ளார்கள்.

இதுபோன்று கொழும்பு நகரில் 8 ஹெக்டேயர் நிலபரப்பை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளார்கள்.

இந்த அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் அவதானித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

துறைமுகங்கள் மற்றும் அரச நிறுவனங்களை வாங்க நினைப்பவர்கள் சற்று அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கின்றோம்.

இதுபோன்று அரசாங்கத்திடம் கொள்ளையிட்ட பணத்தில் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை நிறுவனங்களையும், வங்கியில் ஒரு பகுதியையும் கொள்வனவு செய்ய உள்ளார்கள். ஆனால் இவர்களுக்கு ஒன்றை கூற விரும்புகின்றேன்.

அரசாங்கத்திடம் கொள்ளையிட்ட பணத்தில் வாங்கிய அனைத்தும் பொதுமக்களின் உடமையாக்கப்படும் என்பது நிச்சயம் என்றார்.

http://www.virakesari.lk/article/15934

  • தொடங்கியவர்

பிரிவினை அரசியலமைப்புக்கு ஒருபோதும் இடமளியோம்

 

அர­சாங்க எதிர்ப்பு கூட்­டத்தில் மஹிந்த ராஜ­பக் ஷ சூளுரை

(க.கம­ல­நாதன்,எம்.சி.நஜி­முதீன் )

எனது ஆட்சி வந்­த­வுடன் தற்­போது  ஊழலில் ஈடு­ப­டு­கின்­ற­வர்கள்  தண்­டிக்­கப்­ப­டு­வார்கள்

பிரி­வி­னை­வாத அர­சியல் அமைப்­பிற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்கப் போவ­தில்லை. அதி­காரப் பகிர்வு என்று மக்­களை ஏமாற்றி ஆட்­சி­பீடம் ஏறிய தற்­போ­தைய அர­சாங்கம் போர் வெற்­றியை காட்டிக் கொடுக்­கின்­றது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜபக் ஷ தெரி­வித்தார்.

தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வை பெற்­றுத்­தர நான் அன்று அழைத்­த­போது தேசிய மற்றும் சர்­வ­தேச பிரி­வி­னை­வாத சக்­தி­களை நம்பி எனது அழைப்பை புறக்­க­ணித்­த­வர்கள் இன்று மீண்டும் கூட்­டணி அமைத்து செயற்­ப­டு­கின்­றனர். நாட்டின் வளத்தை சூறை­யாடி நாட்­டுக்கு எதி­ராக செயற்­படும் அனை­வ­ருக்கும் மீண்டும் எமது ஆட்­சியில் தண்­டனை வழங்­குவோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

 புதிய மாற்­றத்­துக்­கான ஆரம்பம் எனும் தொனிப்­பொ­ருளில் பொது எதி­ர­ணியின் மக்கள் கூட்டம் நேற்று நுகே­கொ­டையில் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு விசேட உரை­யாற்­று­கை­ய­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார்.  

அவர் மேலும் கூறு­கையில், ஜனா­தி­பதி தேர்­தலில் நான் தோல்வி அடைந்­த­வுடன் அர­சி­யலில் இருந்து ஓய்வு பெறவே நினைத்தேன். அம்­பாந்­தோட்டை மெத­மு­ல­னையில் எனது வேலை­களை கவ­னித்­துக்­கொண்டு இருக்­கவே எண்­ணினேன். ஆனால் என்னை மீண்டும் இந்த அர­சியல் பய­ணத்தில் கொண்­டு­வந்­தது ஜனா­தி­பதி மைத்­தி­ர­பால சிறி­சே­ன­வே­யாகும். இந்த அர­சாங்­கத்தின் மோச­மான போக்கும் மக்கள் மீண்டும் என்னை அழைத்­தை­மையும் இன்று நான் மீண்டும் கள­மி­றங்க கார­ண­மா­கி­விட்­டது. எனது அடுத்த பய­ணத்தில் மக்­களின் இந்த ஆத­ரவும் ஒத்­து­ழைப்பும் என்னை மேலும் பலப்­ப­டுத்தும்.   

நான் தேர்­தலில் தோற்று ஓடி­விடும் எண்­ணத்தில் விரை­வாக தேர்­தலை நடத்­தி­ய­தாக கூறு­கின்­றனர். தேர்­தலில் தோற்க நான் போட்­டி­யிட வேண்­டிய அவ­சியம் இல்லை. இந்த நாட்­டையும் மக்­க­ளையும் மீட்­டெ­டுக்­கவே நான் எப்­போதும் முயற்­சித்து வந்தேன். எனினும் இந்த நாட்டின் பிரச்­சி­னை­களை தீர்க்க அர­சாங்­கத்தை அமைத்­த­தாக கூறு­கின்­றனர். நாம் பெற்­றுக்­கொ­டுத்த வெற்­றியை தக்க வைக்க வேண்­டிய கடமை அனை­வ­ருக்கும் உள்­ளது.

ஆனால் நாம் பெற்­றுக்­கொ­டுத்த வெற்­றியை அழித்து இந்த நாட்டை காட்­டிக்­கொ­டுக்கும் நட­வ­டிக்­கை­யையே இந்த அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது. இவர்கள் ஆட்­சிக்கு வந்­த­வுடன் நாட்டின் நிறை­வேற்று அதி­கா­ரத்தை பாரா­ளு­மன்ற அதி­கா­ர­மாக மாற்­று­வ­தாக கூறி­னார்கள். ஆனால் கொடுத்த வாக்­கு­று­தி­களை மீறி நாட்டை பிரிக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். புதிய அர­சி­ய­ல­மைப்பு மூல­மாக இந்த நாட்டை துண்­டாடும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது.

அதேபோல் இன்று இரா­ணுவம் தண்­டிக்­கப்­படும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச நீதி­ப­தி­களை வைத்து எமது இரா­ணு­வத்தை தண்­டித்து பழி­தீர்க்கும் முயற்­சி­களை அர­சங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது.

தமிழர் தரப்பின் தீர்வு தொடர்பில் இவர்கள் அக்­க­றை­யுடன் பேசு­வ­தாக கூறு­கின்­றனர். நாம் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த பின்னர் பல தட­வைகள் தமிழர் பிரச்­சி­னைக்­கான தீர்வை பெற்றுக் கொடுக்க பேச்­சு­வார்த்­தைக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர்கள் எவரும் எம்­முடன் பேச்­சு­வார்த்­தைக்கு வர­வில்லை. காரணம் அப்­போது சர்­வ­தேச பிரி­வி­னை­வா­திகள் அனை­வரும் அவர்­க­ளுடன் இணைந்து செயற்­பட்டு வந்­தனர். அதேபோல் நாம் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த பின்னர் சர்­வ­தேச கட்­ட­ளை­க­ளுக்கு அடி­ப­ணி­யாத நிலையில் எம்மை எதி­ரி­க­ளாக கரு­தினர். ஆனால் இன்று அனை­வரும் ஒன்­றி­ணைந்து நாட்டை துண்­டாடும் வியூ­கத்தை வகுக்­கின்­றனர்.

ஆட்­சிக்கு வந்­த­வுடன் பொய்­யான வாக்­கு­று­தி­களை வழங்கி மக்­களை ஏமாற்றி இன்று நாட்டை மிகவும் மோச­மான நிலை­மையில் இட்­டுள்­ளனர். இந்த மூன்று ஆண்­டு­களில் நாட்டில் ஊழல் அதி­க­ரித்­துள்­ளது. குற்­றங்கள் அதி­க­ரித்­துள்­ளது. நாம் கடன்­களை வாங்­கி­ய­தாக கூறு­கின்­றனர். ஆனால் இவர்கள் பல மில்­லியன் கடன்­களை வாங்கி அவை அனைத்­தையும் தமது சுய தேவை­க­ளுக்­காக செல­வ­ழித்து வரு­கின்­றனர். மத்­திய வங்கி பணத்தை கொள்­ளை­ய­டித்து தனிப்­பட்ட நிறு­வ­னங்­க­ளையும், வியா­பார நட­வ­டிக்­கை­கையும் மேற்­கொண்டு வரு­கின்­றனர். இவர்­க­ளுக்கு நான் ஒன்று சொல்­கின்றேன்.எமது ஆட்சி மீண்டும் வந்­ததும் இவர்கள் அனை­வ­ரையும் நான் தண்­டிப்பேன். அதேபோல் இவர்கள் கொள்­ளை­ய­டித்து வைத்­துள்ள சொத்­துக்கள் அனைத்­தையும் பறி­முதல் செய்து அனைத்­தையும் மக்­க­ளுக்கு வழங்­குவேன்.

இன்று நாட்டின் காணிகள் அனைத்தும் வெளி­நா­டு­க­ளுக்கு விற்­கப்­பட்­டுள்­ளன. அம்­பாந்­தோட்டை துறை­முகம், திரு­கோ­ண­மலை துறை­முகம், கொழும்பு துறை­முகம் , பலாலி விமான நிலையம் என அனைத்தும் விற்­கப்­பட்­டு­விட்­டன. இப்­போது கொழும்பில் எட்டு ஏக்கர் நிலத்தை வெளி­நாட்­டுக்கு விற்க அமைச்­ச­ர­வையில் தீர்­மா­னித்­துள்­ளனர். இவ்­வாறு நாட்டை முழு­மை­யாக சர்­வ­தேச நாடு­க­ளுக்கு விற்று வரு­கின்­றனர். இவ்­வாறு தேசத்­து­ரோக நட­வ­டிக்­கை­களை இந்த அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது. நாடு விற்­கப்­ப­டு­வது ஒரு­புறம் இருக்­கையில் மறு­புறம் நாட்டின் அரச நிறு­வ­னங்­க­ளையும், துறை­க­ளையும் தனியார் மயப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை அர­சங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது.

பெளத்த பிக்­குகள் சிறைப்­பி­டிக்கப் படு­கின்­றனர். இரா­ணு­வத்தை வீதியில் வைத்து தாக்­கு­கின்­றனர். மாண­வர்கள் தாக்­கப்­ப­டு­கின்­றனர். எமது உறுப்­பி­னர்­களை தண்­டிக்க சிறை­களில் அடைக்­கின்­றனர். ஆனால் இவை அனைத்தும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு நன்றாகவே தெரியும். ஆனால் ஜனாதிபதியும் இந்த சூழ்ச்சி வலைக்குள் இருந்துகொண்டு செயற்படுகின்றார். இன்று தலைவர்கள் சுகமாக வாழ்கின்றனர். ஆனால் இவர்களை நம்பி வாக்களித்த மக்கள் பசி பட்டினியில் வாழ்ந்து வருகின்றனர். விலைவாசி அதிகரித்துள்ளது. மானியங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. பசியால் வாழும் மக்களுக்கு குரோட்டன் இலைகளை உண்ணச் சொல்கின்றனர். இந்த நிலைமை இனியும் தொடர்ந்தால் மக்கள் புல், இலைகளை உண்டு மிருகங்களை போல வாழவேண்டிய நிலைமை ஏற்படும். ஆகவே மக்கள் இப்போது சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-28#page-1

  • கருத்துக்கள உறவுகள்
Quote

எனது ஆட்சி வந்­த­வுடன் தற்­போது  ஊழலில் ஈடு­ப­டு­கின்­ற­வர்கள்  தண்­டிக்­கப்­ப­டு­வார்கள்

இவரின் குடும்ப ஊழல் உலகறிந்தது. அதனை இன்னும் விசாரிக்கவில்லை. அதற்குள் இவர் மற்றவர்களை விசாரிக்க போகிறாராம்..

  • கருத்துக்கள உறவுகள்

தன் குற்றத்தை மற்றவர்மேல் போட்டுவிட்டால் தான் ஊழல்களிலிருந்து தப்பி விடலாம் என்று நினைப்பார் போலும். இந்த அரசாங்கம் காலந் தாழ்த்துவதால் பயம் விட்டு பேசுறார். இவர்போல சுடச்சுட தண்டித்திருந்தால் கலங்கியிருப்பார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.