Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் துயிலும் இல்லங்களை அழிப்பது சிறீலங்கா படையினரின் கலாச்சாரம்: விடுதலைப்புலிகள்

Featured Replies

[ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2007, 01:56 ஈழம்] [க.திருக்குமார்]

வாகரை கண்டலடியில் அமைந்திருந்த மாவீரர்துயிலும் இல்லம் நேற்று சிறீலங்காப் படையினரால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. தமது வெற்றியை அடையாளப்படுத்தும் வகையில் கனரக இயந்திரங்களின் உதவியுடன் கண்டலடி மாவீரர்துயிலும் இல்லத்தை சிறீலங்காபடையினர் நேற்று முற்றாக அழித்துள்ளனர்.

சர்வதேச ஜனநாயக விதிகளின் படி போர்க்கைதிகள், போரில் காயமடைந்தவர்கள், போர் நினைவாலயங்கள் என்பவை யார் வசம் இருந்தாலும் மதிக்கப்பட வேண்டியவை. போரில் வீரமரணம் அடைந்த போராளிகளின் உடல்களை அடக்கம் செய்யும் பிரதேசம் மாவீரர் துயிலும் இல்லமாகும்.

இது தமிழ் மக்களின் மிக விசேடமான நினைவுச்சின்னமாகும், மரணமடைந்த வீரர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் முகமாக இவ் இல்லங்களுக்கு சென்றுவருவது வழமை. சிறீலங்கா அரசு தனது இனப்போரின் ஒரு பகுதியாக மாவீரர் துயிலும் இல்லங்களை நீண்ட காலமாக அழித்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக வாகரையில் இருந்த கண்டலடி மாவீரர்துயிலும் இல்லமும் அழிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா இராணுவத்தினால் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களின் விபரங்கள் வருமாறு:

கோப்பாய் - யாழ்பாணத்தில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லம் 1995 ஆம் ஆண்டு உளவுஇயந்திரங்களின் மூலம் தரைமட்டமாக்கப்பட்டது.

வேலனை சாட்டி – யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லம் 1995 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது.

கொடிகாமம் - தென்மராட்சியில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லம் 1996 ஆம் ஆண்டு உளவுஇயந்திரங்களின் மூலம் தரைமட்டமாக்கப்பட்டது.

எல்லான்குளம் - வடமராட்சியில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லம் 1996 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது.

ஆலன்கேணிக்குளம் - சம்பூரில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லம் 2006 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது.

கஞ்சிக்குடிச்சாறு – அம்பாறையில்; அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லம் 2007 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது.

1995 – 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டின் பின்னர் மீண்டும் புனரமைக்கப்பட்டன. எனினும் கடந்த ஆண்டு சிறீலங்கா படையினரால் இவை மீண்டும் சேதமாக்கப்பட்டுள்ளன. மேலும் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட மாவீரர்களுக்காக பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னங்களையும் சிறீலங்காபடைகள் தொடர்ச்சியாக அழித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த காட்டுமிராண்டிகளிடம் போய் மனிதாபிமானத்தை பற்றி கதைப்பதைப் போல முட்டாள்தனம் ஏதும் இல்லை..

மாவீரர்களே! நீங்கள் புதைக்கப்படவில்லை.. விதைக்கப்பட்டுள்ளீர்கள்.. மண்ணில் மட்டும் அல்ல.. தமிழர்களின் மனங்களிலும்!

  • கருத்துக்கள உறவுகள்

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.