Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடிவே கிடைக்காதா ?

Featured Replies

விடிவே கிடைக்காதா ?

 

ரொபட் அன்­டனி

ஐ.நா.செயற்­கு­ழுவின் முக்­கிய பரிந்­து­ரைகள்

*பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை­யொன்று சர்­வ­தேச நீதி­ப­திகள், வழக்­க­றி­ஞர்கள், சட்­டத்­த­ர ­ ணிகள் மற்றும் விசா­ர­ணை­யா­ளர்­களைக் கொண்டு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும்.
* எக்­கா­ரணம் கொண்டும் இந்த விசா­ரணை செயற்­பாட்டில் இரா­ணு­வப்­ப­டை­யினர்  பங்­க­ளிப்பு        செய்யவோ தலை­யி­டவோ முடி­யாது.
*உட­ன­டி­யாக பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கி­விட்டு சர்­வ­தேச தரத்­திற்­குட்­பட்ட சட்­ட­ மொன்றை அறி­மு­கப்­ப­டுத்­த­ வேண்டும்.
*பாதிக்­கப்­பட்­டோரின் சங்­கங்கள், சிவில் சமூக நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து உண்­மை­யை ­கண்­ட­றியும் நிறு­வ­னத்தை உரு­வாக்­க­வேண்டும்.
* ஹெபியஸ் கோபஸ் முறைமை விட­யத்தில் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளுக்கு  அதி­கா­ரங்­களை வழங்கும் வகையில் சட்டம் கொண்­டு­வ­ரப்­ப­ட வேண்டும்.
* காணாமல்போனோரின் உற­வி­னர்­க­ளுக்கும் முழு­மை­யான பாது­காப்பும்  உத­வியும் வழங்­க­ வேண்டும்.
*பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு விசே­ட­மாக சிறு­வர்கள், பெண்­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கு­வது  தொடர்பில் அவ­ச­ர­கால நிலை­மையின் கீழ் தேசிய நஷ்­ட­ ஈட்­டுக் ­கொள்­கையை அர­சாங்கம்  தயா­ரிக்­க­வேண்டும்.

இலங்­கையை பொறுத்­த­வரை பல்­வேறு விட­யங்கள் எட்­டாக்­க­னி­யா­கவே உள்­ளன. என்­னதான் முயற்சி செய்­தாலும் இறு­தியில் கிடைத்­து­வி­டாத நிலை­மையில் பல விட­யங்கள் தொடர்ந்­து­கொண்­டுதான் இருக்­கின்­றன.

குறிப்­பாக தமிழ் பேசும் மக்­களின் தேசிய அர­சியல் பிரச்­சி­னைக்கு இது­வரை தீர்வைக் காண முடி­யாத சூழல் நில­வு­கின்­றது. என்­னதான் முயற்­சித்­தாலும் தமி­ழ­ருக்­கான தீர்வு என்­பது எட்­டாக்­ க­னி­யா­கவே இருந்­து­வ­ரு­கின்­றது. அதே­போன்­றுதான் தற்­போது காணாமல் போனோரின் விவ­கா­ரமும் மாறி­யுள்­ளது.

காணாமல் போனோ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை தெரிந்­து­கொள்ளும் உரிமை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இருக்­கின்­றது. அதனை யாரும் மறுக்க முடி­யாது. ஆனால் யுத்தம் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்கள் கடக்­கப்­போ­கின்ற நிலையில் இன்னும் காணாமல் போனோ­ருக்கு என்ன நடந்­தது என்ற சிறித­ளவு உண்­மையை கூட அறிந்­து­கொள்ள முடி­யாத நிலையில் பாதிக்­கப்­பட்ட மக்கள் உள்­ளனர்.

யுத்தம் முடிந்­த­தி­லி­ருந்து காணாமல் போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­ப­தனை அறிந்­து­கொள்ள முடி­யாமல் மக்கள் தவித்­து­வ­ரு­கின்­றனர். அவ்­வப்­போது மக்கள் பல இடங்­களில் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தி­வ­ரு­கின்­றனர். போராட்­டங்­க­ளையும் நடத்­தி­வ­ரு­கின்­றனர். காணாமல் போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற கேள்­வியை கேட்­ட­வாறே மக்கள் கிளர்ந்து எழுந்­து­ வ­ரு­கின்­றனர்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் காணாமல் போனோரின் உற­வி­னர்கள் தமது போராட்­டத்தை விரி­வு­ப­டுத்த ஆரம்­பித்­தனர். யுத்தம் நடை­பெற்ற காலத்தில் கூட மனோ கணேசன் மற்றும் விக்­ர­ம­பாகு கரு­ணா­ரட்ன போன்றோர் தலை­மையில் ஒரு­சிலர் காணாமல் போதல் மற்றும் கடத்தல் சம்­ப­வங்­க­ளுக்கு எதி­ராக போராட்­டங்­களை நடத்­தி­வந்­த­துடன் சர்­வ­தேச சமூ­கத்தின் கவ­னத்­தையும் ஈர்த்­தனர் என்­ப­தனை இங்கு குறிப்­பிட்­டா­க­வேண்டும்.

இந்­நி­லையில் யுத்தம் முடிந்­ததும் மக்கள் தொடர்ச்­சி­யாக வீதி­களில் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தினர். அந்­த­வ­கையில் 2010 ஆம் ஆண்டு அப்­போ­தைய மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­கு­ழுவை நிய­மித்து இந்த நாட்டில் போர் ஏற்­பட்­ட­தற்­கான கார­ணத்­தையும் எதிர்­கா­லத்தில் அவ்­வா­றா­ன­தொரு பிரச்­சினை ஏற்­ப­டாமல் இருப்­ப­தற்­கான பரிந்­து­ரை­க­ளையும் கண்­ட­றிந்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு கூறி­யது.

அந்­த­வ­கையில் கொழும்பில் தனது விசா­ரணை அமர்­வு­களை நடத்­திய கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­குழு மாவட்ட மட்­டங்­க­ளிலும் அமர்­வு­களை நடத்­தி­யது. கொழும்பில் நடை­பெற்ற அமர்­வு­களில் சாட்­சி­ய­ம­ளித்த மக்கள் அர­சியல் தீர்வு, நல்­லி­ணக்கப் பொறி­முறை உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து யோச­னை­களை முன்­வைத்­தனர்.

ஆனால் மாவட்ட மட்­டங்­களில் விசே­ட­மாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் நடை­பெற்ற கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் அமர்­வு­களில் நிலைமை தலை­கீ­ழாக மாறி­யது. அதா­வது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் நடை­பெற்ற அமர்­வு­களில் சாட்­சி­ய­ம­ளித்த பாதிக்­கப்­பட்ட மக்கள் காணாமல் போன தமது உற­வு­களை தேடித்­த­ரு­மாறு கதறி அழு­தனர். மன்­றா­டினர். கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­களை பார்த்து தமது உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு மன்­றாட்­ட­மாக வேண்டி நின்­றனர்.

அந்த மக்­களின் கத­றல்கள் ஆணை­யா­ளர்­களை நிச்­சயம் பாதித்­தி­ருக்கும். எது எவ்­வாறு இருப்­பினும் கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் காணாமல் போனோர் தொடர்பில் விசேட ஆணைக்­கு­ழுவை அமைத்து விசா­ரணை நடத்­த­வேண்டும் என பரிந்­துரை செய்­யப்­பட்­டி­ருந்­தது.

எனினும் கடந்த அர­சாங்கம் அதனை உட­ன­டி­யாக செய்­து­வி­ட­வில்லை. மாறாக இரண்டு வரு­டங்கள் கழித்து அதா­வது 2013 ஆம் ஆண்டு மக் ஷ்வல் பர­ண­கம தலை­மையில் காணாமல் போனோர் தொடர்பில் விசா­ரிக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது.

அந்த ஆணைக்­கு­ழுவும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் விசா­ரணை அமர்­வு­களை நடத்­தி­யது. அந்த அமர்­வு­களில் பழைய நிலை­யேதான் காணப்­பட்­டது. உற­வு­களை தொலைத்த மக்கள் ஆணைக்­குழு முன்­பாக கத­றி­ய­ழுது காணாமல் போன தமது உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரினர்.

அதன்­படி 19 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான எழுத்­து­மூல முறைப்­பா­டுகள் பர­ண­கம ஆணைக்­கு­ழு­வுக்கு கிடைத்­தன. எனினும் இந்த ஆணைக்­கு­ழுவில் சர்­வ­தே­சமும் பாதிக்­கப்­பட்ட தரப்பும் நம்­பிக்கை வைக்­க­வில்லை. இவ்­வா­றான நிலையில் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நாட்டில் ஆட்சி மாற்­றமும் ஏற்­பட்­டது. ஆட்­சி­மாற்­றத்­தின்­போது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு விடிவு கிடைக்கும் என்று பெரி­தாக எதிர்­பார்க்­கப்­பட்­டது.

குறிப்­பாக காணாமல் போனோர் விவ­கா­ரத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்றும் மக்கள் நம்­பிக்கை வைத்­தனர். அதற்கு ஏற்­றால்போல் புதிய அர­சாங்­கமும் மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­களை வழங்­கி­யது.

அந்­த­வ­கையில் 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பாக அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்­கமும் இணை அனு­ச­ர­ணையை வழங்­கி­யது. அத்­துடன் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கும் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் இலங்கை அர­சாங்கம் நல்­லி­ணக்க பொறுப்­புக்­கூறல் மற்றும் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­கான நீதி என்­பன குறித்து வாக்­கு­று­தி­க­ளையும் வழங்­கி­யது.

காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்­கான நிரந்­தர அலு­வ­லகம் ஒன்றை அமைப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தது. தென்­னி­லங்­கையின் கடும்­போக்கு சக்­திகள் அதனை கடு­மை­யாக எதிர்த்­த­போதும் அர­சாங்கம் அதற்­கான சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றி­யது.

ஆனால் சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்டு பல மாதங்கள் கடந்தும் இன்னும் அந்த அலு­வ­லகம் அமைக்­கப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் புதிய அர­சாங்கம் காணாமல் போனோர் விட­யத்தில் தீர்வை வழங்கும் என்ற நம்­பிக்­கை­யி­லி­ருந்த பாதிக்­கப்­பட்ட மக்கள் பொறு­மையின் எல்­லைக்கு சென்­றனர். அதன் பின்­னரே வவு­னி­யாவில் சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் ஆரம்­பித்­தனர்.

நிலைமை கட்­டு­மீறிச் செல்­லவே தற்­போது அர­சாங்கம் தலை­யிட்டு அதனை நிறுத்தி வைத்­துள்­ளது. குறிப்­பாக அர­சாங்கம் பாதிக்­கப்­பட்ட மக்­களின் உணர்­வு­க­ளுடன் தொடர்ச்­சி­யாக விளை­யாட முற்­ப­டக்­கூ­டாது. அந்த மக்கள் தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­ப­தனை கண்­ட­றி­வ­தற்­கான உரி­மையை கொண்­டுள்­ளனர். அதனை யாரும் மறுக்க முடி­யாது.

காணாமல் போன தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது கூட தெரி­யாமல் பாதிக்­கப்­பட்ட மக்கள் திண்­டா­டி­வ­ரு­கின்­றனர். காணாமல் போன­வர்கள் உயி­ருடன் இருக்­கின்­ற­னரா? இல்­லையா என்­பது கூட தெரி­யாமல் பாதிக்­கப்­பட்ட மக்கள் தவித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால் இந்த விட­யத்தில் தலை­யிட்டு விரை­வாக உண்­மையை கண்­டு­பி­டிப்­பதில் அர­சாங்கம் தொடர்ந்து தயக்கம் காட்­டி­வ­ரு­கின்­றது.

இது உணர்­வு­பூர்­வ­மான விடயம் என்­ப­தனை யாவரும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். இந்த விட­யத்தில் ஆழ­மாக செயற்­பட முயற்­சித்தால் தென்­னி­லங்­கையின் கடும்­போக்­கு­வா­திகள் அதனை பயன்­ப­டுத்தி ஆட்­சி­மாற்­றத்தை கூட செய்­து­வி­டு­வார்கள். எனவே இதனை அவ­தா­ன­மாக கையா­ள­வேண்டும். ஆனால் அதற்­காக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­காமல் இருக்க முடி­யாது. இந்தக் கார­ணத்தை வைத்து கடந்த அர­சாங்கம் நீதி வழங்­காமல் இருந்­த­மையின் கார­ண­மா­கவே மக்கள் நாட்டில் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தினர்.

எனவே காணாமல் போன தமது உற­வுகள் குறித்து எந்த தக­வலும் இல்­லாமல் இருக்கும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இலங்­கையில் காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் நோக்கில் 2015 ஆம் ஆண்டு இலங்­கைக்கு பல­வந்­த­மாக காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பி­லான ஐக்­கிய நாடு­களின் செயற்­குழு விஜயம் மேற்­கொண்டு கடந்த முறை ஐக்­கிய நாடுகள் அமர்வில் அறிக்கை சமர்ப்­பித்­தி­ருந்­தது.

2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் 18 ஆம் திக­தி­வரை இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்­தி­ருந்த ஐ.நா. செயற்­குழு தற்­போது தமது அறிக்­கையை இலங்கை அர­சாங்­கத்­திற்கும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கும் முன்­வைத்­தி­ருந்­தது.

அந்த அறிக்­கையில் பல்­வேறு பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அதா­வது பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை­யொன்று சர்­வ­தேச நீதி­ப­திகள், வழக்­க­றி­ஞர்கள், சட்­டத்­த­ர­ணிகள், மற்றும் விசா­ர­ணை­யா­ளர்­களைக் கொண்டு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். எக்­கா­ரணம் கொண்டும் இந்த விசா­ரணை செயற்­பாட்டில் இரா­ணு­வப்­ப­டை­யினர் பங்­க­ளிப்பு செய்­யவோ தலை­யி­டவோ முடி­யாது என்று பல­வந்­த­மாக காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பி­லான ஐக்­கிய நாடு­களின் செயற்­குழு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு தாக்கல் செய்த அறிக்கை ஊடாக அர­சாங்­கத்­திற்கு பரிந்­துரை செய்­தி­ருந்­தது.

அத்­துடன் உட­ன­டி­யாக பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கி­விட்டு சர்­வ­தேச தரத்­திற்­குட்­பட்ட சட்­ட­மொன்றை அறி­மு­கப்­ப­டுத்­த­வேண்டும். பாதிக்­கப்­பட்­டோரின் சங்­கங்கள், சிவில் சமூக நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து உண்­மை­யைக்­கண்­ட­றியும் நிறு­வ­னத்தை உரு­வாக்­குங்கள். இந்த நிறு­வனம் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உத­வு­வ­தாக இருக்க வேண்டும் என்றும் ஐ.நா. செயற்­குழு பரிந்­துரை செய்­தி­ருந்­தது.

ஹெபியஸ் கோபஸ் முறைமை விட­யத்தில் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளுக்கு அதி­கா­ரங்­களை வழங்கும் வகையில் சட்டம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும். காணாமல் போனோரின் உற­வி­னர்­க­ளுக்கும் முழு­மை­யான பாது­காப்பும் உத­வியும் வழங்­க­வேண்டும்.

பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு விசே­ட­மாக சிறு­வர்கள், பெண்­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கு­வது தொடர்பில் அவ­ச­ர­கால நிலை­மையின் கீழ் தேசிய நஷ்­ட­ஈட்­டுக்­கொள்­கையை அர­சாங்கம் தயா­ரிக்­க­வேண்டும்.

பாதிக்­கப்­பட்டோர் உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்கும் நீதியைக் கண்­ட­றி­வ­தற்­கு­மான உரி­மையை உறு­திப்­ப­டுத்தி காணாமல் போனோர் தொடர்­பான சான்­றி­தழை வழங்­க­வேண்டும். காணா­மல்­போனோர் தொடர்­பாக புதி­தாக முன்­வைக்­கப்­படும் முறைப்­பா­டுகள் அனைத்தும் சரி­யான முறையில் பொலி­ஸா­ரினால் விசா­ரிக்­கப்­ப­ட­வேண்டும். சட்­டமா அதிபர் திணைக்­களம் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்த வேண்டும். காணாமல் போனோரின் உற­வி­னர்­க­ளுக்கு அனைத்­து­வி­த­மான அனு­ம­தி­களும் அவ­சியம்.

பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு சமூக கொடுப்­ப­ன­வுகள், மருத்­துவ உத­விகள் வழங்­கப்­ப­ட­வேண்டும். பொரு­ளா­தார ரீதி­யிலும் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உத­விகள் வழங்­கப்­ப­ட­வேண்டும்.

காணாமல் போனோரின் உற­வி­னர்­க­ளுக்­கான முறை­யான மீள்­கு­டி­யேற்றத் திட்­ட­மொன்றை உரு­வாக்கி அதனை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். பாதிக்­கப்­பட்டோர் அவர்கள் எந்த இனத்­த­வ­ராக இருந்­தாலும் சரி நினைவு நிகழ்­வு­களை நடத்­து­வதை மதிக்­க­வேண்டும்.

உண்­மையைக் கண்­ட­றியும் சர்­வ­தேச உத­வியை மற்றும் நீதியை நிலை­நாட்டும் நல்­லி­ணக்­கத்தை முன்­னெ­டுக்கும் பொறி­மு­றைக்கு சர்­வ­தேச உத­வி­களைப் பெற்­றுக்­கொள்­வது குறித்து பரி­சீ­லிக்­க­வேண்டும். சுயா­தீன நிபு­ணத்­து­வ­மிக்க நிபு­ணர்­களை உண்மைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­விற்கு இணைத்துக் கொள்­ள­வேண்டும். இந்த செயற்­பாட்­டுக்கும் சிவில் சமூ­கத்­தி­லி­ருந்து பிர­தி­நி­தி­களை இணைத்துக் கொள்­ளுங்கள். உண்­மையைக் ­கண்­ட­றி­வ­தற்­கான தொழில்­நுட்ப உத­வி­களை பெற்­றுக்­கொள்­ளுங்கள். குறிப்­பாக தட­வியல் நிபு­ணர்­களின் உத­வி­களைப் பெறலாம். மனித எலும்­புக்­கூ­டுகள் தொடர்பில் முறை­யான விசா­ர­ணைகள் அவ­சியம்.

முறை­யான விசா­ரணை நடத்­து­வ­தற்­காக குறிப்­பிட்ட இடங்­களை பாது­காக்­க­வேண்டும். குறிப்­பாக மாத்­தளை, மனித எலும்­புக்­கூ­டுகள் தொடர்பில் விசா­ர­ணைகள் மீள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வேண்டும். இவ்வாறு மிகவும் பரந்துபட்ட பரிந்துரைகளை பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் செயற்குழு முன்வைத்திருந்தது.

இவ்வாறான நிலையிலேயே காணாமல் போனோர் விவகாரம் தற்போது இந்த நிலையை அடைந்துள்ளது. இந்த ஐக்கிய நாடுகள் செயற்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இதுவரை அந்த அலுவலகம் இயங்கவில்லை. எனவே பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையிழக்கும் அபாயம் தொடர்கின்றது. இதற்கு அரசாங்கம் தொடர்ந்து இடமளிக்கக்கூடாது. விரைவாக இந்த விடயத்தில் உண்மையை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும். மக்கள் நீதிக்காக ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அந்த காத்திருப்பு ஏமாற்றமளிப்பதாக மாறிவிடக்கூடாது. ஐக்கிய நாடுகள் செயற்குழு குறிப்பிட்டதைப்போன்று காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அதாவது பாதிக்கப்பட்டவர்களுக்குத் தற்போதைய நிலைமையில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கவேண்டும். அதற்காக விசேட பொறிமுறை உருவாக்கப்படவேண்டும்.

அதாவது ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப்போன்று காணாமல் போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறிந்துகொள்வதற்கான உரிமை பாதிக்கப்பட்ட மக்களுக்குள்ளது. அதேபோன்று அந்த மக்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்குரிய நஷ்ட ஈட்டைப் பெற்றுக்கொடுப்பதும் அரசாங்கத்தின் தலையாய கடமையாகும் என்பதனை மறந்துவிடக்கூடாது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-02-04#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.