Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டுவர இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகள் அவசியம்

Featured Replies

-ஐ.நா.பாதுகாப்பு சபை செயற்குழுவுக்கு இலங்கை வலியுறுத்தல்

விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட வேண்டுமெனவும், ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு இது குறித்து சிபார்சு செய்ய வேண்டுமெனவும் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான பாதுகாப்பு சபையின் செயற்குழு கூட்டத்தில் இலங்கை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரம் குறித்து செயலாளர் நாயகத்தின் அறிக்கையை ஆராயும் பொருட்டு நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்தில் சிறுவர்கள் மற்றும் ஆயுதமோதல்கள் தொடர்பான பாதுகாப்பு சபை செயற்குழு வெள்ளிக்கிழமை கூடியது.

இதன் போதே, ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியான பிரசாத் காரியவசம் செயற்குழுவினரிடம் மேற் கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது.

ஐ.நா.வுக்கான பிரான்ஸின் நிரந்தரப் பிரதிநிதியின் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் பாதுகாப்பு சபை அங்கத்துவ நாடுகளான சீனா, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, பெல்ஜியம், கொங்கோ குடியரசு, கானா, இந்தோனேசியா ,இத்தாலி, பனாமா, பெரு, கட்டார், ஸ்லோவாக்கியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அத்துடன், ஐ.நா. செயலாளர் நாயகத்தின், சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரம் தொடர்பான விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி,விசேட பிரதிநிதியின் ஆலோசகரும் அறிக்கையாளருமான அலன் ரொக் மற்றும் "யுனிசெப்"பின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

இலங்கை அரசின் பிரதிநிதிகளாக ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பிரசாத் காரியவசம் சொலிசிட்டர் ஜெனரல் சீ.ஆர்.டி.சில்வா. பிரதி சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கொடகொட உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செயலாளர் நாயகம் சார்பாக ராதிகா குமாரசுவாமி இங்கு பேசியதுடன் , அறிக்கையாளர் ரொக் தனது இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பித்ததுடன் , புலிகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக ஆலோசிக்குமாறும் செயற்குழுவிடம் கேட்டுள்ளார்.

இதேநேரம் , 2001 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறையில் இருந்து வரும் யுனிசெப்பின் மதிப்பீடுகள் அடிப்படையில் புலிகள் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களை படையில் சேர்த்திருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் ரொக் , சிறுவர்களை படையில் இணைப்பதில்லையென புலிகளின் தலைமைத்துவம் தன்னிடம் உறுதியளித்திருந்த போதும் , அதை அவர்கள் மதித்து செயற்படவில்லையெனவும் கவலை தெரிவித்தார்.

இதேவேளை , இலங்கை குழுவினர் சார்பில் பேசிய பிரசாத் காரியவசம் , விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகளை பின்பற்றுவது தொடர்பாக ஐ.நா.செயலாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமெனவும், பாதுகாப்பு சபைக்கு சிபார்சு செய்யப்பட வேண்டுமெனவும் செயற்குழுவை வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற வைக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலமே வன்முறை இலக்கு மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளினால் எந்த பயனுமில்லையென புலிகளுக்கு புரிய வைத்து பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பெறும் நோக்குடன் அவர்களை மீண்டும் பேச்சு மேசைக்கு கொண்டு வர முடியுமெனவும் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம், கருணா குழுவினர் சிறுவர்களை கடத்தி படையில் சேர்ப்பது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த அரச தரப்பு பிரதிநிதிகள் யுனிசெப்பின் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான விசேட பிரதிநிதியின் அலுவலகத்துடன் கருணா குழுவினர் இணைந்து செயற்படுகின்றனரென தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாணைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அரச தரப்பினர் தெரிவித்திருக்கின்றனர்.

இதேநேரம், கருணா குழுவினர் சிறுவர்களை கடத்துவதில் அரச படையினர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆராயப்படாத மேலெழுந்தவாரியான வதந்தி செய்திகளை அரச தரப்பு பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளனர். எவ்வாறியிருப்பினும், இக் குற்றச்சாட்டுக்கள் குறித்து நம்பக்கூடியதும் சுயாதீனமானதுமான விசாரணைகளை நடத்த அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகவும் அவர்கள் செயற்குழு கூட்டத்தில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

http://www.thinakkural.com/news/2007/2/11/...s_page21149.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளை இராணுவப் பின்னடைவுகளால் விலைக்கு வாங்கத்தானே, சிங்களம் இதுவரைகாலமும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறது. வேறென்னவாம் புதிதாய், காணும் கனவைக்கூட புதிதாய் வைத்து இருக்கக் கூடாதாமா?

தன் படைபல இயலாமையின் ஒட்டுமொத்த கொபாவேசத்தையும், அப்பாவிகள் மீது பயங்கரவாதமாய் கட்டவிள்த்து விட்டு, மனித அவலங்களின் விலையால் தமிழ்த்தேசியத்தை பணியவைக்க கணக்கு பண்ணுகிறது சிங்களம்.

எமது பலத்தின் ஒரு சிறுதுளி செலவு செய்தால் போதும் இந்தக் கணக்குக்கு பதில் சொல்ல,

இருந்தும் எந்த நிலையிலும் எமதுவீரம் இப்படிக் கோளைத்தனமான பாதையை நாடாது சிங்களத்தைப் போல்.

இனிமேல் புலிகளால் வைக்கப்படப் போகும் இலக்குகளுக்கு முகங்கொடுக்க

அரசாங்கம் தயாராக இருக்கவேண்டும். அது அரசியல் இராணுவ இலக்குகளாக

இருக்குமென்பது திண்ணம். முதலாவது கட்டம் நிறைவேறியிருக்கிறது. பழைய

நிலைகளுக்குத் திரும்புதல் என்பதே அது.

அடுத்தது இன்னுமொரு அரசின் இராணுவநகர்வைத்தூண்டுவதாக இருக்கும்.

அவை முழுவதும் அரசின் செயற்பாடாகவே அமையும் தோற்றம் வெளிப்படை

யாகத் தெரியும். சிலவேளைகளில் அது வன்னி நோக்கிய நகர்வாக இருக்கு

மேயானால் அது முழுப்போர் ஒன்றிற்கானதே. இதில் அரசின் கோரிக்கைக்கு

ஐ.நா. சபை யாருக்கு அழுத்ததைப் பிரயோகிக்கும். ஏற்கனவே எந்த ஒரு

கோரிக்கையையும் சிங்கள அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதை உலகம்

புரிந்து கொண்டிருக்கிறது.

இனியொரு பாரிய அரசின் தோல்வியைத்தான் உலகம் எதிர்பார்க்கின்றது.

அப்படி நான் நம்புகின்றேன்.

அந்தப் பதிலை விடுதலைப்புலிகளிடந்தான் உலகம் கேட்டு நிற்கின்றது.

ஏனெனில் பேச்சுவார்த்தை ஒரு அசைவற்ற நிலைக்குச் சென்றுவிட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவன்,

எமது பலத்தின் ஒரு சிறுதுளி செலவு செய்தால் போதும் இந்தக் கணக்குக்கு பதில் சொல்ல,

எந்த அடிப்படையில் இதைச்சொல்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவன்,

எந்த அடிப்படையில் இதைச்சொல்கிறீர்கள்?

வேற என்ன பொருளாதார இலக்குகளை தெரிவு செய்யுறதுதான், அதை புலிகள் அல்ல நீங்கள் வேணும் எண்டாலும் செய்யலாம். பிச்சை வேண்டாம் நாயை பிடி எண்ட நிலமைக்கு கொண்டும் வரலாம்.

நடக்கப் போவது என்ன? அறிய விருப்பமா?

முழுமையான விரிவான விபரங்களுடன்

http://www.tamilnaatham.com/advert/2007/feb/PJ16/

நடக்கப் போவது என்ன? அறிய விருப்பமா?

முழுமையான விரிவான விபரங்களுடன்

http://www.tamilnaatham.com/advert/2007/feb/PJ16/

நக்கல் ......... :angry: :angry: :angry: உந்த நோய் மனிசருக்கும் வருமோ...????? :rolleyes::D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.