Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சலசலப்பு புதிதல்ல; சசிகலா பேட்டி

Featured Replies

 
சலசலப்பு புதிதல்ல; சசிகலா பேட்டி
 
 
 
 
 

பதிவு செய்த நாள்

12 பிப்
2017
15:33
 
Tamil_News_large_1709398_318_219.jpg
 

சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பு புதிதல்ல என்றும், பல்வேறு அரசியல் நிகழ்வுகளை நான் ஜெயலலிதாவுடன் இருந்து பார்த்தவள், ஒரு பெண் என்பதால் அரசியலில் இருப்பது கஷ்டமானது என்றும் அதிமுக பொது செயலாளர் சசிகலா கூறினார். எம்.எல்.ஏ.,க்ள் தங்கி இருக்கும் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு இன்று மதியம் கிளம்பிய சசிகலா காரில் இருந்தபடி நிருபர்களிடம் கூறியதாவது:

 

 

சென்றிருக்கும் புல்லுருவிகள்:

எம்ஜிஆர் இறந்தபோது அதிமுக வில் இதே போன்ற நிலை ஏற்பட்டது. அதன் பிறகு ஜெயலலிதா அந்த கஷ்ட நஷ்டங்களில் இருந்து வென்று வந்து இன்று வரை இந்த கட்சியையும் ஆட்சியையும் கொண்டுவந்தார். அன்று கட்சியை நடத்தி கொண்டிருந்த நிகழ்வுகள் அத்தனையும் கூட இருந்து பார்த்துள்ளேன். எங்களுக்கு இந்த சலசலப்பு புதிதல்ல. ஆரம்பம் முதல், எம்.ஜி.ஆருக்கு பின்னால், பெரிய இயக்கமாக இருக்கிறது அதிமுக இதனை. இரண்டாக உடைக்க வேண்டும் என்று நினைத்து வெளியே சென்றிருக்கும் புல்லுருவிகள் .
ஜெ., இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக கொண்டு வந்து ஆட்சி அமைத்தார். தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி நடத்தக்கூடிய நிலையை ஜெயலலிதா செய்தார். இன்று நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது, பத்திரிகையை சேர்ந்தவர்கள், உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டும் என்று இல்லை. உங்களுக்கே புரியும் இந்த சூழ்ச்சியில் யார் யார் இருக்கிறார்கள் என தெரியும்.

 

சோதனைகள் பழக்கப்பட்ட ஒன்று :

நான் கடிதம் எழுதியதாகவே, சமூக வலைதளங்களில் வந்துள்ளது. நான் ஏதோ உயிரை விட்டுவிடுவேன் நான் கவர்னருக்கு எழுதியதாக கூறப்படும் கடிதம். இது சமூக வலைதளத்தில் வருவதாக நண்பர் கூறினார். ஒரு பெண் அரசியலில் இருக்க வேண்டும் என்பது கஷ்டமான விஷயம். இதேபோல் ஜெயலலிதா சந்தித்துள்ளார் அவர் மீண்டு வந்துள்ளார். நான் அதிமுக பொது செயலாளராக வந்துள்ளேன். இந்த சோதனைகள் பழக்கப்பட்ட ஒன்று. இதிலிருந்து நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன். அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஒரளவிறகு பார்த்து கொண்டுள்ளோம். ஜனநாயகத்தை நம்புகிறோம். எங்களிடம் உள்ள எம்.எல்.ஏ., அன்போடு இருக்கிறார்கள். அங்கு செல்கிறேன். அவர்களோடு பேச போகிறேன். எம்பிக்கள் எதிரணிக்கு செல்வது பின்னணி உங்களுக்கு தெரியும். யார் பின்னணியில் உள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியும். பன்னீர் குற்றச்சாட்டுக்கு தக்க நேரத்தில் பதில் அளிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1709398

  • தொடங்கியவர்

'யாரையும் அடைத்து வைக்கவில்லை...!'- சசிகலா பேட்டி

Sasikala

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா கூவத்தூரில் இருக்கும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா செய்தியாளர்கள் மத்தியில் பேட்டியளித்தார்.

'யாரையும் அடைத்து வைக்கவில்லை. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சுதந்திரமாக உள்ளனர். இங்கிருந்து சென்றவர்களும், எதிரிக் கட்சியினுரும் தான் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். குடும்பங்களுடன் இங்கிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில்தான் இருக்கின்னர். அரசுக்கு எந்தவித பங்கமும் வரக்கூடாது என்று அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கின்றனர்.' என்று பேசியுள்ளார்.

Sasikala in Koovathur

சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது,  'வழக்கில் தீர்ப்பு வரட்டும், பார்க்கலாம். தீர்ப்பு வருவதற்கு முன்பே அதைப் பற்றி ஏன் பேச வேண்டும்' என்று பதிலளித்தார்.

மேலும் ’எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்?' என்ற நிருபரின் கேள்விக்கு ’எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள் வேண்டும் என்றால்’ என்று பதிலளித்தார். ’ஆட்சி அமையாது என்ற செய்தி தவறானது என ஆளுநர் மாளிகையே செய்தி வெளியிட்டு  இருக்கிறது. வெளியில் உள்ளவர்கள் திட்டமிட்டு தவறான கருத்தைப் பரப்புகின்றனர்.' என்று கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80555-sasikala-denies-allegations.html

 

எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன்: சசிகலா

 

 

பதிவு செய்த நாள்

12 பிப்
2017
20:40
 
Tamil_News_large_1709414_318_219.jpg
 


சென்னை: ‛யாருக்கும் பயப்பட மாட்டேன். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன்' என சசிகலா எம்.எல்.ஏ.,க்களிடம் பேசினார்.

கூவத்துாரில் இன்று (பிப்.,12) எம்.எல்.ஏ.,க்களிடையே சசிகலா பேசியதாவது:
 

 

குட்டி சிங்கம்!


ஓ. பன்னீர் செல்வத்தையும் என்னையும் ஒப்பிட்டு பார்க்கின்றனர். அவர் அமைதியானவர் போல் தோற்றம் அளிப்பதாக கூறுகிறார்கள். ஆனால், நான் சிங்கத்துடனேயே இருந்தவள். இந்த குட்டி சிங்கத்தை பார்த்து சிலருக்கு பயம் உருவாகி உள்ளது. என்னுடன் இருக்கும் நீங்களும் சிங்கங்கள் தான்.

அ.தி.மு.க., ஆட்சியை எப்படியாது கலைத்து விடலாம் என சில எட்டப்பர்கள் உருவாகி உள்ளனர். ஆட்சியை கைப்பற்ற எதிரிகள் சதி வலை பின்னுகிறார்கள். அந்த வலையில் சிக்கவிடக் கூடாது.
 

 

எந்த கொம்பனாலும் முடியாது


ஆட்சி நம் கைக்கு வந்த பின் ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களும் உங்கள் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட சிக்கல்களை எடுத்து கூறுங்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம். டில்லி வரை சென்று வெற்றி பெறுவோம். இந்த இயக்கத்தை ஆட்சியையும் உயிர் உள்ள வரை காப்பாற்றி கொள்வேன் என உறுதி எடுத்து தான் பொறுப்பேற்றுள்ளேன். இயக்கத்தையும் ஆட்சியையும் எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது.
 

 

பின்வாங்க மாட்டேன்


வசதி வாய்ப்புடன் ஒரு அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் கட்சியை இரண்டாக பிரிக்க பார்க்கிறார். நானும் விவசாயி குடும்பத்திலிருந்து வந்தவள். நீங்கள் எனக்கு துணையாக இருந்தால் எதையும் நான் சாதிப்பேன். யாருக்கும் பயப்பட மாட்டேன். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
 

 

ஜெயிலை பார்த்திருக்கிறோம்


எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ எடுப்பேன். ஜெயலலிதாவும் நானும் சென்னை ஜெயிலையும் பார்த்திருக்கிறோம். பெங்களூரு ஜெயிலையும் பார்த்திருக்கிறோம். பின்னர், ஆட்சியில் சாதித்தும் இருக்கிறோம்.
 

 

சட்டசபை ஜெ., படம்


ஆட்சி அமைத்து ஜெயலலிதா சமாதிக்கு போவோம். அங்கு கேபினட் அமைச்சர்களுடன் புகைப்படம் எடுப்போம். ஜெயலலிதாவின் ஆசி பெற்று கோட்டைக்கு செல்வோம். ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் வைப்போம். அதற்கு தி.மு.க., வினர் தடை போட முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1709414

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது மணல் மாஃபியாவுக்கும் மன்னார்குடி மாஃபியாவுக்குமான அதிகார யுத்தம்....

C4ez48sUYAEdVOg.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.