Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தநிறுத்த உடன்படிக்கையை இன்னும் ஒருவாரத்தில் ரத்து செய்யாவிடின் பேரபாயம்

Featured Replies

-தேசிய பிக்கு முன்னணி தெரிவிப்பு

-ப. பன்னீர்செல்வம்-

விடுதலைப்புலிகளுடனான யுத்தநிறுத்த உடன்படிக்கையை பொருட்படுத்துவதில்லை, எனவே தான் புலிகள் மீது தாக்குதல்களை நடத்துகின்றோமென அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். ஆனால், ஏன் அந்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக இரத்துச் செய்து அரசாங்கமும் வெளியேறாமல் இருக்கின்றதென கேள்வியெழுப்பும் தேசிய பிக்கு முன்னணி 5 வருட பூர்த்திக்கு இன்னும் ஏழு நாட்களே அதற்கு முன் இரத்துச் செய்யாவிட்டால் பாரிய எதிர்ப்பை முன்னெடுப்போமென்றும் தெரிவித்தது.

யுத்தநிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்து அதிலிருந்து வெளியேற வேண்டுமென வலியுறுத்தி தேசிய பிக்கு முன்னணி கடந்த மூன்று நாட்களாக விகாரமாதேவி பூங்கா முன்னிலையில் சத்தியாக்கிரகம் நடத்தி வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அதன் தலைவர் தம்பர அமில தேரர் இதனைத் தெரிவித்தார்.

யுத்தநிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை நாம் பொருட்படுத்துவதுமில்லை, கவனத்திலெடுப்பதுவுமில்லை. எனவே தான் படையினர் புலிகள் மீது தாக்குதல்களை நடத்தி இன்று கிழக்கு மாகாணத்தை் மீட்டு வருகின்றனரென அமைச்சரும் பாதுகாப்புத்துறை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அது உண்மையானால் ஏன் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியேறாது, இரத்துச் செய்யாது அமைதியாக இருக்கின்றது.

இவ் உடன்படிக்கை 5 வருட பூர்த்திக்கு இன்னமும் ஏழு நாட்களே உள்ளன. அதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. அதனை விடுத்து மௌனமாக இருந்தால் நாடு பல நெருக்கடிகளை சந்திக்கும்.

வெள்ளைப் புலிகளும், தமிழ் புலிகளும் இணைந்து நாட்டை பிரிப்பதற்கான தமது சூழ்ச்சியின் இறுதித் துருப்புச் சீட்டை பயன்படுத்துவார்கள்.

புலிகளின் பின்னடைவுக்கு மத்தியிலும் பிரபாகரன் அடையாள அட்டைகளை வழங்குகின்றார். வேறும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எதற்காக? புரிந்துணர்வு உடன்படிக்கையில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் இருக்கின்றதென்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்தி தம் வசம் சிவில் நிர்வாகம் இருக்கிறதென்றும் முப்படையினர் தமக்கு இருக்கின்றார்களென்றும் காண்பிப்பதற்காகவே பிரபாகரன் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டு அமைதியாக இருக்கின்றார்.

இறுதியில் வெள்ளைப் புலிகளுடன் இணைந்து ஐ.நா.வில் தனி நாட்டுக்கான அங்கீகாரத்தை புலிகள் கோரி நிற்பார்கள். அதற்கு வெள்ளைப் புலிகளும் உதவி வழங்கும்.

எனவே, இனி ஏழு நாட்களுக்குள் நாடு சந்திக்கப்போகும் பயங்கரமான நெருக்கடியை கவனத்தில் கொண்டு ஒற்றையாட்சிக்குள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென்று உறுதியளித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ யுத்தநிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக இரத்துச் செய்து வெளியேற வேண்டும்.

நாட்டின் தேசிய பாதுகாப்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவது உண்மையென்றால் இதனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எமது போராட்டம் மாறுபடும்.

இதுவரையில் எமது சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பாக கேட்டறிய எந்தவொரு அரச தரப்பினரும் முன்வரவில்லையென்றும் தம்பரஅமில தேரர் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/2007/2/15/...s_page21354.htm

22ம் திகதி தக்குதல் திட்டம் பற்றி யாழ் கள உளவாளிகள் மூலம் பிக்குகளும் அறிந்துகொண்டுள்ளனர்.

ஆட்டுப்பால் அத்தாஸ் இப்போது கொழும்பில் இருப்பதாக கேள்வி.

இருக்கும்டி பிள்ளை எங்கட சப்பாத்துஆய்வாளர் நல்லவனையும் காணவில்லை

ஆர்மிக்கு சப்பாத்து தைச்சு கொடுக்க போய்ட்டாரோ??????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்தநிறுத்த ஒப்பந்தத்தினை முறிப்பதற்கு ஏன் 22ம் திகதி வரை காத்திருக்க வேண்டும் என்று எனக்கு விளங்கவில்லை. எப்ப விலகுவதாக அறிவித்தல் கொடுக்கிறோமோ அன்றிலிருந்து 14 நாளுக்கு யுத்த நிறுத்தம் அமுலிலிருக்கும். அப்படிப்பார்த்தால் Feb 08 க்குப்பிறகு எப்ப அறிவித்தல் கொடுத்தாலும் யுத்தநிறுத்தம் காலாவதியாகும்போது Feb 22 கடந்து விடும்.

:rolleyes:

யுத்த நிறுத்த உடன்படிக்கையை இன்னும் ஒருவாரத்தில் ரத்து செய்யாவிடின் பேராயம் என்ற தலைப்பைப்பார்க்கும் போது தமிழர்கள் இன்னும் ஒருவாரகாலத்திற்கா காவல் காக்க வேண்டும் அல்ல இன்னும் பல வார காலத்திற்கு காவல் காக்க வேண்டுமா என்ற கேள்வியும் வருகின்றது ஆனால் இலங்கையில் இருக்கும் சில திருந்தாத ஜென்மங்கள் என்ன நினைக்கின்றது என்றால் இந்த யுத்த நிறுத்தத்தினால் தமிழர்கள் ஏதோ நன்மை அடைந்தவர்கள் போலும் சிங்கள மக்கள் நின்மதி குலைந்து அலைந்து திரிபவர்கள் போலும் கதை அளந்து கொண்டு திரியினம் ஆனால் உண்மையில் என்ன நடக்க இருக்கின்றது என்று பார்த்தாள் தமிழர்தரப்பு இன்னும் காலத்தை கணியவைப்பதற்காக காத்து இருக்கின்றது காரணம் உலக நாடுகள் இன்னும் எம்மை புரிந்து கொள்ளதா என்று ஆனால் அவையும் புரிந்தும் புரியாத புதிராக விடுதலைப்புலிகள் பலம் இழந்து விட்டனர் எனவே நாம் இனி கண்டும் காணாமல் இருந்து விடலாம் என்ற தோரணத்தில் தான் இருக்கின்றனர் ஆனால்! தமிழர் சேனை எப்பொழுது முன்னேறுகின்றதோ அன்று பதுங்கி இருக்கும் சிங்களவனும் சிங்களத்தின் தூதர்களும் (அமெரிக்கா காரன் முதலில்) அமெரிக்க வல்லாதிக்க அடிவருடிகளும் உடன் சண்டையை நிறுத்தி பேச்சுக்கு இரு தரப்பும் செல்ல வேண்டும் அப்பாவி மக்கள் பாவம் என்று எல்லாம் கதை அளக்க வெளிக்கிடுவினம் ஆனால் இப்பொழுது எல்லா நாடுகளும் அரக்கனுக்கு உதவுவதும் ஆயுதங்கள் பார்த்து பார்த்து கொடுப்பதும் தான் இவைகளின் வேளை ஆனால் தாங்கள் கொடுத்த ஆயுதங்களால் தான் இவ்வளவு பிரச்சனை என்பதை உலகம் ஒருமுறை சிந்திக்க மறந்து விட்டது ( சிந்திக்க நினைத்தும் மறுதளிக்கின்றது) அல்லது மறக்கின்றது ஆனால் விடிவு விரைவில் வரும் அல்லது நீண்ட பின்பு விடிவு தமிழர்க்கு வரும் என்ற உறுதியோடு தமிழர் தாயகத்தை தமிழர் வரவேற்க காத்து இருக்கின்றனர் ( அன்று இஸ்ராயேல் நாட்டினர் எதிர்பார்த்து காத்து இருந்தது போல்!

நிச்சயம் எமக்கு விடிவு வரும் அதுவும் தமிழர் தாயகமாக அண்ணன் பிரபாவின் காலத்தில்! இதை நாம் வரவேற்க காத்து இருப்போம்!

நன்றி

யுத்தநிறுத்த ஒப்பந்தம் விலக்கிக் கொள்ளப்படுதல் சம்பந்தமாக ஏற்கெனவே

மாவீரர் நாளுரையில் பூடகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர கடந்த

வாரம் தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக் கணிப்பும்

அதனை உறுதிப்படுத்துகின்றது.

www.tamils.info/

Edited by Iraivan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.