Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டவர் தலையீடு (தலையிடி)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாட்டவர் தலையீடு (தலையிடி)

புனிதன் (அவுஸ்திரேலியா)

வெளிநாட்டவர்களால் இலங்கைத்தீவில் அமைதியையும் சமாதானத்தையும் கொண்டுவர முடியாது என்றும், பிரித்தானியா தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசும் என்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த அதே கிம் ஹவல்ஸ் கூறியதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டும் ஒன்றோடு ஒன்று முரண்படுவது போலத் தோன்றுகிறது. எனவே, இதை ஆழமாகப் பார்க்க வேண்டியது அவசியம் ஆகிறது.

திருமணம் பேசுகின்ற காலத்தில் படித்தவரா? எவ்வளவு உயரம்? எந்தச் சாதி? எந்த ஊர்? ஆள் கறுப்பா? வெள்ளையா? பொதுநிறமா? சாதகம் பொருந்தியதா? போன்ற மேலோட்டப் பார்வைகளிலிருந்து தமிழீழச் சமூகம் வெளியேறிவிட்டதா? புலம் பெயர்ந்த தமிழீழச் சமூகம் வெளியேறவில்லை. ஊறியிருக்கின்றது. புலத்தில் உள்ள தமிழீழச் சமூகம் வெளியேறி விட்டதா? தெரியவில்லை. 18 ஆண்டுகளின் பின்னர் 3 வாரம் தமிழீழ மண்ணை மிதித்தபோது இதை அனுமானிக்கவும் முடியவில்லை. ஆழமாகப் பார்த்தால் அழகுக்கும் - நிறத்துக்கும், அறிவுக்கும் - குணத்துக்கும், சாதகத்துக்கும், சாதிக்கும் - ஊருக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகும். அறிவும், குணமுமா? அல்லது அழகும், நிறமுமா? அல்லது சாதியும், ஊருமா? ஆழமாகப் பார்ப்பவர்க்கு மிஞ்சுவது அறிவும், குணமும் (நற்குணமும்) மட்டுமே.

தமிழீழ விடுதலை பற்றிய அறிவு இன்றைய பிரித்தானிய தலைவர்களுக்கு எவ்வளவு உண்டு? தமிழீழ மக்களின் இன்றைய அவலம் பற்றிய தெளிவு இன்றைய பிரித்தானிய தலைவர்களுக்கு எவ்வளவு உண்டு? அறிவும், குணமும் போல ஆழமான சிந்தனைக்கு இவை உள்ளாக வேண்டியவை. அவன் வெள்ளைக்காரன், வெள்ளைக்கில்லை கள்ளச் சிந்தை, வெள்ளை அழகு போன்ற வெள்ளை மனநிலையிலிருந்து, வெளிநாட்டு மோகத்திலிருந்து வெளியேறி சிந்தனையைத் தெளிவாக்கி இதை அணுகவேண்டும். வெளிநாடு எல்லாம் வெள்ளையல்ல (வெள்ளை என்பது மரபுச் சொல்லாக உபயோகிக்கப் படுகிறது. இது தமிழ் இலக்கணத்திலிருந்து அகற்றப் படவேண்டியது).

ஒருபுறம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசவேண்டும். ஆனால் அவர்களைப் பயங்கரவாதப் பட்டியலில் இணைத்துள்ளோம் - அவர்களின் நிதி திரட்டலை நிறுத்துகிறோம் என்று மறுபுறம். இந்த மூன்றில் பிரித்தானியாவின் குணம் எது? சிந்திக்க வேண்டாமா? இது பிரித்தானியாவின் முதலாவது சட்டயாப்பின் குறைபாடு என்பதையாவது ஏற்றுக் கொள்கிறார்களா? இதைத் தீர்ப்பதில் அவர்களுக்கு ஒரு தார்மீகக் கடமை உண்டு என்பதை ஏற்காத வரை பிரித்தானியர்கள் எதைப் பேசுவார்கள்? இது பிரித்தானியாவின் நிறம்.

விடுதலைப் புலிகளைத் தடை செய்தோம், அவர்களின் ஆதரவாளர்களைச் சிறையிட்டோம், அவர்களால் தமிழீழ மக்கள் அனைவரின் அவலமும் எமக்கு ஆனந்தம். ஆனால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நோர்வே ராஜதந்திரிகள் கொழும்பிலிருந்து புறப்பட்டு நோர்வே சென்றடையுமுன் இடையில் இறங்கி, சொல்லாமல் போகக் கூடாது. தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை இந்திப் பட ஆதிக்கத்தாலும், சில தாழ்வு மனம் (ஐகெநசழைசவைல உழஅpடநஒ) கொண்ட ஊடகங்களின் ஆதரவாலும் அமுக்கிவிட முடியும் என நினைப்பது இந்திய நிறம். எமக்கு நில எல்லை கூடுதலாக இருந்ததால் கிழக்கு பாகிஸ்தானை வங்காள தேசமாக்கினோம். எமக்கு கடல் எல்லை மட்டுமே இருப்பதால் தமிழீழத் தனிநாடு வேண்டாம் என நினைப்பது இந்திய குணம். ஒன்று பட்ட இலங்கைத் தீவில் தமிழர்கள் தமிழ்நாடு மாநிலத்தில் வாழ்வது போல தமிழர்கள் வாழவேண்டும் என வலியுறுத்தாதது ஏன்? (கர்நாடக மாநிலத் தமிழர்கள்; கதி...?)

இவ்வாறு ஐக்கிய அமெரிக்கா (USA)இ ஐரோப்பிய ஒன்றியம் (European Union)இ ஐக்கிய நாடுகள் சபை (United Nation Organisation) அனைத்துக்கும் குணமும் உண்டு. நிறமும் உண்டு.

இவ்வாறு வெளிநாட்டவரின் தலையீடு தலையிடியில் முடியுமா? வெளிநாட்டவரின் தலையீட்டால்தான் எமது அவலங்கள் சர்வதேச அரங்கேறியதை மறக்கத்தான் முடியுமா? குறையற்றதென்று எதுவும் இல்லை. முழுநிறைவுற்றதென்றும் எதுவும் இல்லை. குறைக்கும் நிறைக்கும் இடையில் ஒரு பாதை உண்டு. ஆயபநெவiஉ குநைடனஇ நடநஉவசiஉ கநைடன ல் வருவது போன்ற ஒரு நெரவசயட pழiவெ ழச pயவா உண்டு. இதற்கும் வளைவதுபோல அல்லது வளையாதது போல அதற்கும் வளைவதுபோல அல்லது வளையாதது போல ஒரு கூரிய கத்தி மேல் இரத்தம் சிந்தாது நடக்க வேண்டிய கடமை எம் தேசீயத் தலைமையுடையது. பெப்ரவரி 22, அல்லது இன்னும் 14 நாள் கூட்டி மார்ச் 8 என்று ஒன்றுக்கு நாலு விளையாட வேண்டாம். எம் தேசீயத் தலைமையிடம் அதை விடுவது சாலச் சிறந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பெயர்ந்த தமிழீழச் சமூகம் வெளியேறவில்லை. ஊறியிருக்கின்றது. புலத்தில் உள்ள தமிழீழச் சமூகம் வெளியேறி விட்டதா?

புலம் பெயர்ந்த தமிழீழச் சமூகம், புலத்தில் உள்ள தமிழீழச் சமூகம் என்ற இரு சொற்றொடர்களும் ஒன்றையே குறிக்கின்றன.

புலம் என்பதற்கு எதிர்ச்சொல் என்ன? தாயகம் என்று வருமா?

புலம் பெயர்ந்த தமிழீழச் சமூகம், புலத்தில் உள்ள தமிழீழச் சமூகம் என்ற இரு சொற்றொடர்களும் ஒன்றையே குறிக்கின்றன.

புலம் என்பதற்கு எதிர்ச்சொல் என்ன? தாயகம் என்று வருமா?

புலம் எனும் சொல் தாயகத்தைதான் குறிக்கிறது. தாயகத்தில் இருந்து பெயர்ந்ததால் அது "புலம்பெயர்ந்தவர்" என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் எனும் சொல் தாயகத்தைதான் குறிக்கிறது. தாயகத்தில் இருந்து பெயர்ந்ததால் அது "புலம்பெயர்ந்தவர்" என்கிறார்கள்.

அப்படியானால் யாழ் களத்தில் கருத்துக்களம் என்ற கீழ்வரும் பகுதியில், தமிழீழம், புலம் என்ற இரு உப பகுதிகள் உள்ளன. இரண்டும் ஒன்றே?! நிர்வாகிகள் கவனத்திலெடுக்கவும்.

http://www.yarl.com/forum3/index.php?showforum=64

புலம் பெயர்ந்த தமிழீழச் சமூகம், புலத்தில் உள்ள தமிழீழச் சமூகம் என்ற இரு சொற்றொடர்களும் ஒன்றையே குறிக்கின்றன.

புலம் என்பதற்கு எதிர்ச்சொல் என்ன? தாயகம் என்று வருமா?

"புலம்"என்பதன் எதிர்ச்சொல் "களம் "எனவரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.