Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரி யோவான் பொழுதுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
blogger-image--1892461066.jpg
 
 
1979ல் Cemetryக்கு அந்த பக்கமிருக்கும் Primary school gateக்கால நுழைந்து 1990ல் Cemetryக்கு இந்த பக்கமிருக்கும் Main gateக்கால வெளிக்கிட மட்டும், பரி யோவானில் கழித்த பொழுதுகள் இனிமையானவை, பசுமையானவை. பரி யோவானின் பரந்த வளாகத்திற்குள் சந்தித்த மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையை செதுக்கிய உன்னத சிற்பிகள், அதனுள் நடந்த சம்பவங்கள் அனைத்தும் வாழ வழிகாட்டிய வாழ்க்கைப் பாடங்கள். 
 
 
அந்த காலத்தில் பரி யோவானின் Primary school மிகவும் குளிர்ச்சியானது...அங்கு இருக்கும் பெரிய மரங்களால் மட்டுமல்ல, அங்கு கற்பிக்கும் இளம் ஆசிரியைகளாலும் தான். சுண்டுக்குளி மகளீர் கல்லூரியில் AL முடிக்கும் மாணவிகள் அடுத்த வருடம் பரி யோவானில் அழகிய பாலர் வகுப்பு ஆசிரியைகளாக அவதாரம் எடுப்பார்கள். Primary school Head Masterக்கு "அந்தப்புரத்து காவலன்" என்ற பட்டம் வழங்கி, சிரேஷ்ட மாணவ தலைவர்கள் கெளரவிப்பார்கள். 
 
 
LKGல் Louise Miss, 1ம் வகுப்பில் John Miss, 2ம் வகுப்பில் Sivaguru Miss என்ற மென்வலுக்களை கடந்து 3ம் வகுப்பில காலடி எடுத்து வைக்க.. வன்வலு காத்திருந்தது. 
 
 
3ம் வகுப்பில் Joshua master, class teacher. அடி பின்னி எடுத்திட்டார். அவர் முன்னாள் Senior Prefect வேற, ஒழுக்கம் கட்டுப்பாடு எல்லாம் கொஞ்சம் ஓவரா கடைபிடித்தார். உம்மென்றா பிரம்படி இம்மென்றா காதில நுள்ளு.. 
 
 
இந்த கண்டத்திலிருந்து தப்பித்து 4ம் வகுப்பிற்கு தாவினா தங்கராஜா டீச்சர்.. முதல் இரண்டு Termsம் சந்திரிக்கா கால யுத்த நிறுத்தம் மாதிரி, நிம்மதியா கழிஞ்சுது. துரைசாமி மாஸ்டர் மட்டும் அனுருத்த ரத்வத்தை மாதிரி இடைக்கிடை வந்து விளாசிட்டு போனார்.. 
 
 
July 83 திருநெல்வேலி தாக்குதலோடு பள்ளிகூடம் மூடப்பட்டது. பிரச்சினை முடிஞ்சு schoolற்கு போனால் நிறைய புதுப் பெடியள் நிற்கிறாங்கள், கொழும்பில இருந்து வந்த அகதிகளாம். நாலு வருஷமா ஒன்றா இருந்த classஐ வேற பிரிச்சிட்டாங்கள் என்ற கடுப்பு ஒரு பக்கம் கொச்சை தமிழ் கதைக்கிற இவங்கட இம்சை இன்னொருபக்கம்.. வாழ்க்கை வெறுத்துச்சுது. புது classல் கிடைத்த ஒரே blessing, கணிதம் படிப்பிக்க வந்த தேவதாசன் மாஸ்டர். கட்டுப்பாடு குலையாத கண்டிப்புடன் கணிதத்தை விரும்ப வைத்தவர், தேவதாசன் மாஸ்டர்.
 
 
5ம் வகுப்பில் அவர் தான் எங்களுக்கு Class teacher.  ஆனந்தராஜா மாஸ்டர் Principal, துரைச்சாமி மாஸ்டர் Head master, தேவதாசன் மாஸ்டர் Class teacher.. கொடுத்து வைத்த காலங்கள். பரி யோவானில் நான் படித்த மிகச்சிறந்த வகுப்புகளில் இந்தாண்டும் கட்டாயம் இடம் பிடிக்கும். 
 
 
அந்த வருடம்,  தேவதாசன் மாஸ்டரின் நெறியாள்கையில் பாடசாலைகளிற்கிடையிலான ஆங்கில மொழி போட்டிகளிற்காக Merchant of Venice நாடகம் 5ம் வகுப்பு மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகத்திற்கான நடிகர்கள் திறமை அடிப்படையில் மட்டும் தெரிவு செய்யப்பட்டார்கள். தேவதாசன் மாஸ்டர் கண்ணியமும் நேர்மையும் மிக்க ஒரு சிறந்த ஆசிரியர். பழைய மாணவனாவும் இருந்ததால் Johnian valuesஐ அடுத்த தலைமுறைக்கு ஊட்டுவதில் அதீத அக்கறை எடுத்துக் கொள்வார். 
 
 
நாடகத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் PK, Dilash, Ramo நடிக்க எனக்கு ஒரு சிறிய Messenger வேடம்.. இரண்டு வசனம் தான் பேசணும்.. அந்த பலமான அணியில் இடம் கிடைத்ததே நான் பெற்ற பாக்கியம். தேவதாசன் மாஸ்டர் நாடக குழுவிற்கு காலையும் மாலையும் கடுமையாக பயிற்சி அளித்தார். ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக அமைய எல்லா நடிகர்களையும் பின்னி பெடலெடுத்தார். 
 
 
முதலாவது சுற்று, யாழ் வட்டார பாடசாலைகளிற்கிடையில் Jaffna English Conventல் நடந்தது. வாழ்வில் முதல்முறையாக ஒரு Girls schoolல் ஒரு நாளை கழித்த அனுபவம் புதுமையாக இருந்தது...ஆனா அம்மாவாண சத்தியமா நாங்க யாரையும் ஏறெடுத்து பார்க்கல்ல..நாங்க ஜொனியன்ஸாம்.. 
 
 
வட்டார போட்டியில் நாங்கள் இலகுவாக முதலிடம் பிடித்து மாவட்ட ரீதியான போட்டிக்கு தெரிவானோம்.  மாவட்ட மட்ட போட்டி வேம்படியில் நடந்தது,..மீண்டும் Girls school..அம்மாவாண.. நாங்க  ஜொனியன்ஸாம்..
 
 
எங்களுக்கும் Jaffna collegeக்கும் கடுமையான போட்டி, இறுதியில் நாங்கள் தான் ஜெயித்து, தேசிய மட்ட போட்டிக்கு தெரிவானோம். Trinity Collegeல் நடைபெறவிருந்த போட்டியில் அன்றைய காலத்தில் நிலவிய போர் சூழலால் நாங்கள் பங்குபெற முடியவில்லையே என்ற ஏக்கம் அந்த நாடக குழுவில் இருந்த எல்லோரிடமும் இன்றும் இருக்கிறது. 
 
 
நாடகம் பாடசாலையில் நடந்த நிகழ்வுகளில் இரண்டு முறை மேடையேற்றப்பட்டது. 1985ல், அநியாயமாக சுட்டு கொல்லப்படுவதற்கு சில மாதங்களிற்கு முன்னர் அதிபர் ஆனந்தராஜா முன்னிலையில், English Dayக்கு நாடகம் மீண்டும் அரங்கேறியது. நாடகம் முடிய, அதிபர் ஆனந்தராஜா நான் நடித்த பாத்திரத்தை குறிப்பிட்டு என்னுடைய அம்மாவிடம் என்னை பாராட்டினார். 
 
 
அது தான் ஆனந்தராஜா மாஸ்டர்...பாடசாலையில் படிக்கும் ஒவ்வொரு மாணவனின் பெயரும் அவருக்கு ஞாபகம், ஒவ்வொரு மாணவனின் செயல்பாட்டிலும் அக்கறை செலுத்துவார். அவருடன் பயணிக்க வேண்டிய எமது பரி யோவான் நாட்களை நாம் இழந்தது எமது வாழ்வின் மிகப்பெரிய துர்பாக்கியம். 
 
 
ஆனந்தராஜா மாஸ்டர் ஒவ்வொரு நாளும் rounds வருவார். அவர் வாற நேரம் குழப்படி செய்ததால் வகுப்பிற்கு வெளியில் அனுப்பப்பட்ட மாணவர்களிற்கு தனிகவனிப்பு நடக்கும். 
 
 
1983-85 காலத்தில் ஆமிக்காரன் கட்டுபாட்டில் குடாநாடு, இயக்கங்கள் ஆமிக்கு அலுப்பு குடுக்க ஆரம்பித்த காலகட்டங்கள்.  பாடசாலை நேரத்தில் ஏதாவது குண்டுவெடிப்பு, துப்பாக்கி சூடு நடந்து யாழ்ப்பாணம் அல்லோகல்லப்படும். பதறி அடித்துக்கொண்டு பிள்ளைகளை கூப்பிட வரும் பெற்றோருக்கு Main Gateல் வெள்ளையும் சொள்ளையுமாய் கம்பீரமாக நிற்கும் ஆனந்தராஜா மாஸ்டரின் உருவம் நெஞ்சுக்குள் பாலை வார்க்கும். எந்த ஒரு மாணவனுக்கும் தீங்கு வராமல் பாதுகாக்கும் அக்கறையும் துணிவும் அதில் தெரியும். 
 
 
சில ஆண்டுகளிற்கு முன்னர் இறைவனடி சேர்ந்த தேவதாசன் மாஸ்டரை பாடசாலை காலங்களிற்கு பின்னரும் யாழ்ப்பாணத்திலும் மெல்பேர்ணிலும் சந்திக்கும் வாய்புக்கள் கிட்டின. 1994ம் ஆண்டு AL, CIMA சோதனைகளை கொழும்பில் முடித்து விட்டு, சந்திரிக்காவின் யுத்த நிறுத்த காலத்தில் மீண்டும் பரி யோவான் திரும்பிய போது, தேவதாசன் மாஸ்டர் Primary school Headmaster. அவர் என்னை ஒவ்வொரு வகுப்பாக கூட்டிக்கொண்டு போய், மாணவர்களிற்கு "இவர் ஒரு Old Boy, என்னிடம் படித்தவர்" என்று பெருமையாக அறிமுகப்படுத்திய போது.. எந்தன் பார்வை மாணவர்களை நோக்கவில்லை..பரி யோவானின் அந்தப்புரம் குளிர்மையானது..
 
நாங்க ஜொனியன்ஸாம்..
kanavuninaivu.blogspo
  • கருத்துக்கள உறவுகள்

இது உங்கள் பதிவா இல்லையா கொழும்பான் ???

On ‎3‎/‎28‎/‎2017 at 6:28 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது உங்கள் பதிவா இல்லையா கொழும்பான் ???

இதனை எழுதியவர் ஜூட் பிரகாஷ். அவரது புளொக் தான் kanavuninaivu.blogspot

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

இதனை எழுதியவர் ஜூட் பிரகாஷ். அவரது புளொக் தான் kanavuninaivu.blogspot

ஓ நன்றி நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.