Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப்போரில் இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பில் சாட்சியம் அளிக்க சவேந்திர சில்வாவை அழைக்கவேண்டும் என வேண்டுகோள்.!

Featured Replies

இறுதிப்போரில் இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பில் சாட்சியம் அளிக்க சவேந்திர சில்வாவை அழைக்கவேண்டும் என வேண்டுகோள்.!

 

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட 12 பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

1.jpg

இந்த ஆட்கொணர்வு மனு தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் எஸ்.எம்.எஸ் சம்சுதீன் முன்னிலையில் இன்றையதினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இன்றையதினம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவரத்தன மன்றில்  முன்னிலையாகியிருந்தார். இந்த வழக்கு விசாரணைகள் காரசாரமான வாதப்பிரதிவாதங்களுடன் இடம்பெற்றிருந்த நிலையில், மன்றில் சாட்சியம் அளித்த மேஜர் ஜெனரல் சாணக குணவர்த்தன வளமைபோன்றே இன்றும் தனக்கு சரணடைத்தவர்கள் தொடர்பில் எதுவும் தெரியாது எனவும் இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் 58வது படைப்பிரிவின் கட்டளையதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே இருந்ததாகவும் தெரிவித்தார்.

2.jpg

சரணடைத்தவர்கள் தொடர்பில் சாட்சியம் அளிக்க மேஜர் ஜெனரல்  சவேந்திர சில்வா வரவேண்டும்!! 

இந்த நிலையில் வழக்கு தொடுனர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரத்னவேல், 

அப்படியானால் சரணடைந்தவர்கள் தொடர்பில் மன்றில் சாட்சியம் அளிக்கவும் போரில் சரணடைத்த விடுதலைப்புலிகள் தொடர்பான முக்கிய சாட்சியமாக  ஓய்வுபெற்ற 58வது படைப்பிரிவின் கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றுக்கு அழைக்கவேண்டுமென நீதிமன்றத்திடம் வேண்டுகோளினை முன்வைத்தார். 

3.jpg

இந்த நிலையில் வழக்கு தொடுநர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி  ரத்னவேலின் வேண்டுகோளுக்கு எதிர்ப்பு வெளியிட்ட இராணுவத்தரப்பில் முன்னிலையான  சட்டத்தரணி, அவ்வாறு சவேந்திர சில்வாவை அழைக்கமுடியாது எனவும் அவர் இந்த வழக்கில் தொடர்பு படவில்லை எனவும் வழக்குத்தொடுநர் தரப்பு சட்டத்தரணி வழக்கை  திசை திருப்ப முனைகின்றார் எனவும் குற்றஞ்சாட்டினார். 

இந்த நிலையில் குறுக்கிட்ட வழக்கு தொடுனர் தரப்பு சட்டத்தரணி ரத்னவேல் இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் 58வது படைப்பிரிவின் கட்டளையதிகாரியாக மேஜர் ஜெனரல் சவெந்திர சில்வாவே செயற்பட்டார் எனவும் எனவே அவரை இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க மன்றுக்கு அழைக்கவேண்டும் என மன்றுக்கு தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த விண்ணப்பம் தொடர்பான கட்டளைக்காக இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் சார்பில் அவரது மனைவியான வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், கிருஷ்ணகுமார் ஜெயகுமாரி, விஸ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி காந்தி, கந்தசாமி பொன்னம்மா உள்ளிட்ட பன்னிரண்டு பேர் இந்த ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் தம்மிடம் இருப்பதாகவும் அந்த ஆவணத்தை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாகவும் மேஜர்ஜெனரல் சாணக குணவர்தன  தெரிவித்திருந்தார்.

எனினும் இந்த வழக்கு தொடர்பிலான விசாரணை கடந்த ஜுலை மாதம் 14 ஆம் திகதி நடைபெற்ற நிலையில், இறுதி யுத்தத்தில் 58 ஆவது படைப்பிரிவிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள், புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு மேஜர் ஜெனரல் சானக்க குணவர்த்தனவால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தை ஏற்றுக்கொள்ள முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதேவேளை, குறித்த அறிக்கையானது முழுமையற்ற ஒரு ஆவணமாக காணப்படுவதாக அறிவித்துள்ள நீதிபதி, அனைத்து விபரங்களும் அடங்கிய முழுமையான ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/18480

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.