Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிவராத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுடில்லி:நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் நேற்று மகா சிவராத்திரி திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் மற்றும் கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்து, பயபக்தியுடன் சிவபெருமானை வழிபட்டனர்

மகா சிவராத்திரியை ஒட்டி, சிவன் கோவில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.சிவபெருமானை போற்றி வழிபடும் தினங்களில் மகா சிவராத்திரி வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால் பல நன்மைகள் உண்டாகும் என இந்துக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. இதையொட்டி, மகா சிவராத்திரி திருநாளான நேற்று நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்கள் விழாக் கோலம் பூண்டிருந்தன.பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோவில் நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நாகா சாதுக்கள் "ஹர ஹர மகாதேவா' என முழங்கியவாறே காசி விசுவநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கங்கை நீர், பால் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபட்டனர். நுõற்றுக்கணக்கான பெண்கள் விரதம் இருந்து சிவபெருமானை பயபக்தியுடன் வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், காசி விசுவநாதர் கோவில் மற்றும் மார்க்கண்டேய மகாதேவர் கோவில் போன்ற இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.மகா சிவராத்திரி திருநாளை அர்த் கும்ப மேளாவின் இறுதி நாளாகவும் பக்தர்கள் அனுசரித்தனர். இதையொட்டி, அலகாபாத்தில் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் ஏராளமான சாதுக்கள் புனித நீராடினர்.

மகாராஷ்டிராவில் சிறப்பு வழிபாடு:மகா சிவராத்திரியை ஒட்டி, மும்பையில் பபுல்நாத் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். நாசிக் திம்பகேஸ்வரர் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். கோதாவரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சிவபெருமானை வழிபட்டனர்.மத்திய பிரதேசத்தில் கோலாகலம்:மத்திய பிரதேசத்தில் உள்ள சிவபெருமானின் ஜோதிர் லிங்க தலங்களில் ஒன்றான மகா காலேஸ்வரர் கோவிலிலும் மகா சிவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவபெருமானை வழிபட்டனர். உஜ்ஜயினியில் உள்ள சிவன் கோவிலிலும் சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடந்தது. இப்பகுதியில் உள்ள பக்தர்கள் சிவராத்திரி திருநாளை, சிவபெருமான்பார்வதியின் திருமண நாளாக கொண்டாடி வழிபாடுகள் நடத்தினர். போபாலில் உள்ள சிவன் கோவிலில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மேயர் சுனில் உள்ளிட்ட பிரபலங்களும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுற்றுலா தலமான கஜுரா கோவில் உள்ள மாதங்கேஸ்வரர் கோவிலிலும் சிவராத்திரி வழிபாடு கோலாகலமாக நடந்தது.

நன்றி தினமலர்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அரகர சிவசிவ சம்போ. இந்த அரைப்போத்தல்கள்ளுக்கு ஏனிந்த வம்போ?

அரை போத்தல் கள்ளுக்கு இந்த கொப்பி பேஸ்டோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரகர சிவசிவ சம்போ. இந்த அரைப்போத்தல்கள்ளுக்கு ஏனிந்த வம்போ?

அரை போத்தல் கள்ளுக்கு இந்த கொப்பி பேஸ்டோ

ஓய் புத்து இவ்வளவு நாளும் கிடந்துட்டு இப்ப ஏனப்பா இதை தோண்டி வெளியிலை எடுக்குறீர்? :rolleyes:

சிவராத்திரி விரதத்தை திருகோணமலை கோணேஸ்வரர் கோயிலில் எனது ஏழு வயது வரை அனுட்டித்த பாக்கியம் எனக்கு கிடைத்தது. இரவிரவாக கோயிலைச் சுற்றி கொடுக்கப்படும் கோப்பிப் பந்தல்களில் இருந்து கோப்பியை வாங்கிக் குடித்துக் கொண்டு கோயில்வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் நடக்கும் ஈழத்து மற்றும் தமிழகத்தின் பிரபல கலைஞர்களின் மேள, பாட்டுக்கச்சேரிகளை பார்த்தபடி இரவிரவாக நித்திரை முழிப்போம். இரவில் தூங்கிவிடக்கூடாது என்பதற்காக காலையில் நன்றாக தூக்கம் போடுவோம். அது ஒரு அழகிய அனுபவம்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் புத்து இவ்வளவு நாளும் கிடந்துட்டு இப்ப ஏனப்பா இதை தோண்டி வெளியிலை எடுக்குறீர்? :rolleyes:

ஓய் கும்மு அப்படி தான் நான் என்னவும் செய்வன் நானும் பன்னியா உறுமாறி அடியை தேடி போனனான் அங்கே தண்ணி கூட இருந்தது தண்ணியின்டா எனக்கு அலர்ஜி அது தான் ஓடி வந்துவிட்டேன்

:blink::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய் கும்மு அப்படி தான் நான் என்னவும் செய்வன் நானும் பன்னியா உறுமாறி அடியை தேடி போனனான் அங்கே தண்ணி கூட இருந்தது தண்ணியின்டா எனக்கு அலர்ஜி அது தான் ஓடி வந்துவிட்டேன்

:D:lol:

ஓமோம் இப்பவாவது உண்மையை ஒத்துக்கொண்டியளே!!!!!!!!உங்களுக்கெல்லாம் தமிழரின்ரை இரத்தத்தையும்,இரத்த ஆற்றையும் பார்த்து பழகின கண்களுக்கு தண்ணியை கண்டால் அலர்ஜியாகத்தானே இருக்கும்.இஞ்சை பாரடா புத்துவின்ரை விண்ணாணத்தை :icon_idea: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.