Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா சவப்பெட்டி மாதிரியை வைத்து ஓ.பி.எஸ் அணியினர் நூதன பிரசாரம்!

Featured Replies

ஜெயலலிதா சவப்பெட்டி மாதிரியை வைத்து ஓ.பி.எஸ் அணியினர் நூதன பிரசாரம்!

Jaya_2_20104.jpg

ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் களத்தில் இருக்கும் பிரதான வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில், ஓ.பி.எஸ் அணி சார்பில் திறந்த நிலை வாகனம் மூலம் மாஃபா பாண்டியராஜன், மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அவரது வாகனத்தின் முன்பு, ஜெயலலிதா இறந்த பின்னர் ராஜாஜி ஹாலில் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது போலவே, ஒரு மாதிரி சவப்பெட்டியை பொருத்தி அதில் ஜெயலலிதா பொம்மையை செய்து வைத்து, அவர் நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டார். 

ஏற்கெனவே, ஓ.பி.எஸ் அணியினர் 'ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக' கூறிவரும் நிலையில், இன்று இந்நிலையில் பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

jaya_3_20393.jpg

 

http://www.vikatan.com/news/tamilnadu/85644-pannerselvam-side-takes-propaganda-to-a-different-level-in-rknagar.html

 

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவுக்கு காட்டும் நன்றிக் கடனும் பண்பாடும் இதுதானா? - கொதிக்கும் ஸ்டாலின்

ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வெற்றியை குறிவைத்து தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி  உள்ளனர். ஜெயலலிதா மரணம்தான் இந்த தேர்தலின் மைய புள்ளி. அதை ஆயுதமாக எடுத்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதே டி.டி.வி.தினகரன் அணியின் வேலையாக இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளின் செயல்பாடுகளையும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வருத்தெடுக்கிறார். 

ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் திறந்த நிலை வாகனம் மூலம் மதுசூதனனுக்கு ஆதரவாக  மாஃபா பாண்டியராஜன் பிரசாரம்  செய்தார். அவரது வாகனத்தின் முன், ஜெயலலிதா இறந்த பின்னர் ராஜாஜி ஹாலில் சவப்பெட்டியில் வைக்கப்பட்டதுபோலவே ஒரு மாதிரி சவப்பெட்டியை வைத்து  நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டனர். தெருத்தெருவாக கொண்டு சென்ற அந்த வாகனத்தை பொதுமக்கள் ஆச்சரியமுடனும் அனுதாபத்துடனும் பார்த்தார்கள். இப்படியொரு  வாகனம் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ளார்.

unnamed_%281%29_23225.jpg

unnamed_%282%29_23409.jpg

மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆர்.கே. நகர் தேர்தல் பிரச்சாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணியின் சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சவப்பெட்டியை வைத்து வாக்கு கேட்பது ஈவு இரக்கமற்ற மனிதநேயமற்ற செயல். இது போன்று அநாகரிகமான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கும் இத்தகைய தரம்தாழ்ந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச்செல்ல அனுமதித்திருக்கும் ஓ.பி.எஸ்-க்கும் தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றவர். 

மேலும்,“இதய தெயவம் புரட்சித் தலைவி அம்மா” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர்  ஓ. பன்னீர்செல்வம், மறைந்த ஜெயலலிதாவுக்கு காட்டும் நன்றிக் கடனும் பண்பாடும் இதுதானா? ஜெயலலிதா சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பது வழக்கமான அனுமதிக்கப்பட்ட தேர்தல் நடைமுறை. அதையும் தாண்டி அவரது மரணத்தை முன் வைத்து வாக்கு கேட்கிறீர்கள். ஆனால், இப்போது மறைந்த முதல்வரின் சவப்பெட்டியை வைத்து; அதுவும் தேசியக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டியை தெருவெல்லாம் இழுத்துச் சென்று குறுகிய அரசியல் நோக்கத்துடன் வாக்கு கேட்பது தேசியக் கொடியின் மாண்பையும் கண்ணியத்தையும் கறைபடியச் செய்வதாகாதா என்பதை ஓ.பன்னீர்செல்வம் ஒரு முறை யோசித்துப் பார்ப்பது நல்லது'' என்று அறிவுரை கூறி இருக்கிறார்.

''இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கும்,  ஓ.பி.எஸ் அணியில் உள்ளவர்களுக்கும் ஜெயலலிதா மீது எந்த அளவிற்கு வன்மம் மனதிற்குள் இருக்கிறது என்பதையும் சுயநலத்தை நிறைவேற்றிக் கொள்ள ஜெயலலிதாவின் உருவத்தை எந்த எல்லைக்கும் எடுத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதையும் இந்த இதயமற்ற பிரச்சாரம் எடுத்துக் காட்டுகிறது. இந்தப் பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்திட தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.கே நகர் வாக்காளர்கள் பண்பாடற்ற இந்தப் படுபாவிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஸ்டானின் கடுமையாக சாடியுள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/85666-stalin-statement-about-rk-nagar-election-campaign.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்திலேயே ஒரு கேவலம்கெட்ட அரசியல் பிரச்சாரம் என்றால் இதுதான்.
தமிழக நண்பர்கள் மன்னிக்கவும்..

  • தொடங்கியவர்

சவப்பெட்டி பிரசாரம்; ரத்த வன்முறை... ஆர்.கே. நகர் திகில் நிமிடங்கள்! #TimelineStory #VikatanExclusive

ஆர் கே நகர் சவப்பெட்டி ஊர்வலம்

சென்னை ஆர்.கே. நகர்த் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே பரபரப்புக்குக் குறைவில்லாமல் அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களுக்கு இல்லாத முக்கியத்துவம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. காரணம், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்து, இடைத்தேர்தலைச் சந்திக்கின்றன. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் இத்தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார்.

டி.டி.வி. தினகரன் அணியினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக, ஓ.பி.எஸ் அணியினரும், தொப்பி அணிந்து கொண்டு ஓ.பி.எஸ் அணியினர் பணம் கொடுப்பதாக பதிலுக்கு தினகரன் அணியினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டினர். இருதரப்பினரும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளனர்.இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், ஜெயலலிதா உருவப்படத்தை சவப்பெட்டியில் வைத்து தங்கள் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ததால், ஆர்.கே.நகர் தொகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டு, இருதரப்பினருக்கும் இடையே கலவரம் வெடித்தது.

ஆர் கே நகர் கலவரம்

6.4.2017 இரவு 9.00 மணி: ஆர்.கே.நகர்த் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணியினரை இரும்புக்கம்பியால் தினகரன் அணியினர் தாக்கினர். காரில் வந்த பெண்கள் எதிரணியினர் மீது தாக்குதல் நடத்தினர். ஓ.பி.எஸ் தரப்பைச் சேர்ந்த இருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இரவு 10.00 மணி: திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை முன்பு திரண்ட இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இரவு 11 மணி: டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள், தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர் அலுவலகத்தின் முன் திரண்டனர். ஓ.பி.எஸ் அணியினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆர கே நகர்

இரவு 12 மணி : ஒருமணி நேரத்திற்கும் மேலாக மறியல் நடந்ததால், அந்த வழியாக வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அவ்வழியாக ஓ.பி.எஸ் அணியினரின் கார் மீது, மறியலில் ஈடுபட்டவர்கள் தாக்குதல் நடத்தினர். எதிர்தரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நள்ளிரவு 1.30 மணி: தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மறியலைக் கைவிடாவிட்டால், அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டது. முறையாகப் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதிகாலை 4 மணி: தினகரன் அணியினரையும், ஓ.பி.எஸ் அணியினரையும் வேறு, வேறு வழியாக கலைந்து செல்லுமாறு போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து இருதரப்பினரும் கலைந்து சென்றனர். போலீஸாருக்கு உதவியாக துணை ராணுவப் படையினரும் செயல்பட்டனர். பின்னர் அமைதி ஏற்பட்டாலும், எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பதற்றத்துடனேயே ஆர்.கே.நகர்த் தொகுதி உள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/85760-this-what-happened-in-r-k-nagar-yesterday.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.