Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரூ.89 கோடி எப்படி வந்தது? - ஐ.டி ரெய்டுக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டவர்கள்!

Featured Replies

ரூ.89 கோடி எப்படி வந்தது? - ஐ.டி ரெய்டுக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டவர்கள்!

 

ஜூவி லென்ஸ்

 

p42a.jpg‘ஆபரேஷன் வி.’

இதுதான் அமைச்சர் விஜயபாஸ்கரை குறிவைத்து நடந்த ரெய்டுகளுக்கான சங்கேத வார்த்தை.

சேகர் ரெட்டி குரூப் இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடவடிக்கை எடுப்பதற்கு முன் ரகசியமாகத் தயாரிக்கப்பட்ட லிஸ்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர், ஓ.பன்னீர்செல்வம் குடும்பப் பிரமுகர்... இப்படி சிலரின் பெயர்கள் இருந்தன. கடைசி நிமிடத்தில் டெல்லி ரெட் சிக்னல் காட்டியதால், விஜயபாஸ்கர் தப்பித்தார். ஆனாலும், அவர் மீது எப்போதும் கண்காணிப்பு இருந்தது. ‘கூவத்தூர் சொகுசு விடுதியில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது ஒவ்வொருவருக்கும் சுமார் மூன்று கோடி ரூபாய் பணம், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் தட்சணையாக வழங்கப்பட்டது’ என பன்னீர் அணியினர் புகார் செய்தனர். அப்போதும் இந்த விவகாரங்களைக் குறிவைத்து ரெய்டு நடத்துவதற்கு வருமான வரித் துறையினர் தயாரானார்கள். அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தினகரனுக்கு நெருக்கமான தளவாய் சுந்தரம் ஆகியோர்தான் இந்தப் பரிவர்த்தனைகளின் முக்கிய நபர்களாக இருக்கிறார்கள் என்றும்கூட தகவல்களைச் சேகரித்து டெல்லிக்கு அனுப்பினார்கள். ஆனால், டெல்லியில் அனுமதி கிடைக்கவில்லை.

இதே மூவர், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு பெருந்தொகையை வாக்காளர்களுக்கு வழங்க ரெடி செய்தார்கள். ஏப்ரல் 3 மற்றும் 4 தேதிகளில் ஆர்.கே. நகரை ஒட்டியுள்ள கடல் பகுதி வழியாக இரவு நேரங்களில் படகில் வைத்து பண பண்டல்களைக் கொண்டுவர ஏற்பாடு நடந்தது. எல்லா தகவல்களையும் சேகரித்த வருமான வரித்துறையின் உளவுப் பிரிவு அதிகாரிகள், அதிரடி ரெய்டுக்கு டெல்லி மேலிடத்திடம் அனுமதி கேட்டனர். சற்று லேட்டாக, ஏப்ரல் 5-ம் தேதியன்றுதான் விஜயபாஸ்கர் பெயரை மட்டும் டிக் செய்து, ரெய்டு நடத்த க்ரீன் சிக்னல் கிடைத்தது. ‘‘எந்த விமர்சனங்களைப் பற்றியும் கவலைப்படாமல் தமிழக ரெய்டுகளை நடத்துங்கள்’’ என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் பிரதமர் மோடி சொன்னதாகத் தகவல்.

p42.jpg

இதையடுத்து, தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பணிபுரியும் சுமார் 250 தமிழ் தெரிந்த ஐ.டி. அதிகாரிகளின் பட்டியலை ரெடி செய்தார்கள். சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வருமான வரித்துறை (விசாரணை) அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பிளான் முடிவானது. மொத்தம் 35 இடங்கள். ஒரு இடத்துக்கு ஏழு பேர் என்று டீம் பிரித்தனர்.

ஐந்து உயர் அதிகாரிகள்கொண்ட டீமை நியமித்து, ரெய்டுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கிறார்கள். மத்திய வருவாய் துறை செயலாளர் ஹாஸ்முக் ஆதியா இந்த தமிழக ஆபரேஷனின் ‘பாஸ்’ ஆக நியமிக்கப்பட்டாராம். இவரின் நம்பிக்கைக்கு உரியவரான முரளிகுமார், தற்போது சென்னை மண்டல ஐ.டி. (விசாரணை) பிரிவின் டைரக்டர் ஜெனரலாக இருக்கிறார். இவர்தான் ரெய்டுகளை நடத்தி முடித்தவர். ரெய்டு விவகாரங்களில் இவரோடு இணைந்து செயல் பட்டவர் மத்திய உளவுப்பிரிவான ஐ.பி-யின் சென்னை மண்டல இணை இயக்குநர் வர்மா. ரெய்டில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் மூக்கை நுழைக்கக் காத்திருப்பவர்கள் மத்திய அமலாக்கப் பிரிவினர். இந்தத் துறையின் இயக்குனர் கர்னல் சிங் மற்றும் சென்னை மண்டல இயக்குநர் பிரசாத் ஆகியோர்தான் அந்த ஐவர். இவர்களுக்குக் கீழே, மேலும் சில முக்கிய அதிகாரிகள் களத்தில் இறக்கிவிடப்பட்டு இருக்கிறார்கள்.

ஐ.டி. அதிகாரிகளை சென்னை மற்றும் திருச்சியில் குறிப்பிட்ட இடங்களில் வந்து ஆஜராகுமாறு கடந்த ஏப்ரல் 5-ம் தேதியன்று சொன்னார்களாம். ‘‘பாதுகாப்புக்கு உள்ளூர் போலீஸ் வேண்டாம்’’ என்று டெல்லி மேலிடம் ஆலோசனை சொன்னதாம். அதையடுத்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அவசரமாக வரவழைக்கப் பட்டனர். 

p42b.jpg

சென்னையில் ரெய்டுக்கு முதல் நாள்... அதாவது ஏப்ரல் 6-ம் தேதி மாலை ஆஜரானார்கள் அதிகாரிகள். அவர்களின் செல்போன்கள் அணைக்கப்பட்டன. அனைவரும் இரவு நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் தங்கவைக்கப்பட்டனர். மறுநாள் விடியும் நேரத்தில், வாடகை கார்கள் வந்தன. அதிகாரிகள் அனைவரும் ஏ, பி, சி, டி என பல ‘டீம்’களாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு டீமின் தலைவர்களை அழைத்த வருமானவரித் துறை உயர் அதிகாரிகள், சென்னையின் லேண்ட்மார்க் பாயின்ட்களைச் சொல்லி, ‘‘அங்கே உங்களுக்காக ஒரு அதிகாரி தயாராக இருப்பார். அவரை சந்திக்கும்போது கவர் தருவார். அதைப் பிரித்துப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளுங்கள்” என்று உத்தரவிட்டனர். இதெல்லாம் வழக்கமாக ரெய்டு நேரத்தில் நடக்கும் வைபவம் என்பதால், அதிகாரிகள் அலட்டிக் கொள்ளவில்லை. ‘‘பணத்தைவிட, ஆவணங்களைக் கைப்பற்றுவதுதான் முக்கியம். கவனமாகச் செயல்படவும்’’ என்று சொல்லி அனுப்பினர். அதன்படிதான், ரெய்டுகள் ஆரம்பமாகின.

அவசரம் காட்டாமல் வேறு சில வி.ஐ.பி-களின் வீடுகளிலும் படிப்படியாக ரெய்டுகளை நடத்த முடிவெடுத்து உள்ளார்களாம்.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.