Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கீதா லட்சுமி... துணைவேந்தர் பணவேந்தர் ஆன கதை!

Featured Replies

கீதா லட்சுமி... துணைவேந்தர் பணவேந்தர் ஆன கதை!

 

மைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமானவரிச் சோதனையைக் காட்டிலும், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் கீதா லட்சுமி வீட்டில் நடந்த வருமானவரிச் சோதனை, அரசியல் அரங்கையே அதிரவைத்துள்ளது.

மருத்துவத் துறை வட்டாரத்தில், கடந்த சில ஆண்டுகளில், டாக்டர் கீதா லட்சுமி குறித்து ஏராளமான குற்றச்சாட்டுகள் வலம் வந்தன. இந்த நிலையில், அவருடைய வீட்டில் தற்போது நடந்துள்ள வருமானவரிச் சோதனை அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கீதா லட்சுமி மீது குற்றச்சாட்டுகளைத்  தொடர்ந்து எழுப்பிவரும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசினோம்.

p8b.jpg

‘‘மருத்துவத் துறையில், மிகக் குறுகிய காலத்தில் உயர் பதவிகளை அடைந்தவர் கீதா லட்சுமி. மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு அவரைவிடத் தகுதியானவர்கள் பலர் இருந்தபோதிலும், அவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு இவருக்கு அந்தப் பதவி தரப்பட்டது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவைப் பெற்றவர். சுகாதாரத் துறையில் நடந்த பல ஒப்பந்தங்களில் இவருடைய பங்கு இருந்துள்ளது. குறிப்பாக, ராம மோகன ராவின் மகன் விவேக்கின் பங்குதாரரான பாஸ்கர் நாயுடு கனுமுரி பத்மாவதி ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டதில் கீதா லட்சுமியின் தலையீடு இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

ஸ்டான்லி மருத்துவமனை நோயாளிகளுக்காக வேலைசெய்தபோது, கீதா லட்சுமியின் செயல்பாடுகளை நேரடியாக அறிந்திருக்கிறேன். மருத்துவக் கல்வி இயக்குநராக அவர் இருந்தபோது, எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சுகாதாரத் துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசாமல், அவரை ஒதுக்கிவிட்டு, அமைச்சர் விஜயபாஸ்கரிடமே நேரடியாகப் பேசிவிடுவாராம். அந்த அளவுக்குச் செல்வாக்கு மிகுந்தவராக அவர் வலம் வந்தார்.

p8a.jpgகடந்த வாரம் இவர் குடியரசுத் தலைவரிடம் இருந்து ‘பி.சி.ராய் விருது’ பெற்றார். இந்த விருதை இவர் பெற்றதன் பின்னணியில், விஜயபாஸ்கரின் செல்வாக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கீதா லட்சுமி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக வருமானவரித் துறைக்கு ஏற்கெனவே தகவல் போயிருந்தது. வருமானவரித் துறையினரின் தொடர் கண்காணிப்பில் இவர் இருந்து வந்தார். தற்போது, ஆர்.கே. நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாகத் தகவல்கள் வந்துகொண்டிருந்த நிலையில், கீதா லட்சுமி வீட்டில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்’’ என்றார்.

மருத்துவத் துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, சுவாரஸ்யமான பல தகவல்கள் வந்து விழுந்தன. ‘‘எல்லோரும் அவரை ‘பட்டுப்புடவை கீதா லட்சுமி’ என்றுதான் சுகாதாரத் துறையில் அழைப்பார்கள். ஆய்வு முடிக்கும் மாணவர்களிடம் பட்டுப் புடவையை அன்பளிப்பாக வாங்குவதால், அவருக்கு இந்தப் பெயர் வந்தது என்கிறார்கள். மருத்துவக் கல்வி இயக்குநராக கீதா லட்சுமி வந்த பிறகு, ஊழியர்களின் பணி இடமாற்றத்துக்குக் கணிசமாக ‘கவனிக்க’ வேண்டிய நிலை வந்தது. அப்போதுதான், இடமாற்றம் கிடைக்கும். பணி இடமாற்றத்துக்கான கலந்தாய்வு நடக்கும்போது, கீதா லட்சுமியுடன் விஜயபாஸ்கரின் உதவியாளரும் இருப்பார்.

ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தில் விஜயபாஸ்கருக்கு முக்கியப் பங்கு இருக்கும் என்றால், அதில் கீதா லட்சுமிக்கும் தொடர்பு இருக்கும் என்று மருத்துவத் துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது’’ என்றனர். 

கீதா லட்சுமியுடன் பணிபுரிந்த மருத்துவர் ஒருவரிடம் நாம் பேசியபோது, ‘‘மிகக் குறுகிய காலத்திலேயே துணைவேந்தர் பதவிக்கு வந்தவர் கீதா லட்சுமி. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். மருத்துவக் கல்லூரியில் துறைத் தலைவராக அவர் இருந்த காலத்தில், பணம் கொடுத்தால்தான் எந்த வேலையுமே நடக்கும் என்ற நிலை இருந்தது. ஒரு முறை எங்கள் துறையின் பேராசிரியர் ஒருவர், ஒரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதைச் சரிசெய்வதற்காக, காஸ்ட்லி பரிசு ஒன்றை வாங்கிக்கொடுத்துள்ளார். அவர் செய்த மிகப் பெரிய தவறுகளில் ஒன்று, விதிமுறைகள் தெரியாமல், 2013 பேட்ச் மாணவர்களை அதிரடியாக ஃபெயிலாக்கியது. இதனால், அந்த மாணவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியானது’’ என்றார்.

p8.jpg

‘‘பணி இடமாற்றம், பதவி உயர்வு, மருத்துவப் பல்கலைக் கழகத்தில் இணைப்பு பெற்றுள்ள தனியார் கல்லூரிகளுக்குச் செய்துகொடுக்க வேண்டிய பணிகள் என எல்லாவற்றுக்கும் ஆதாயங்கள் எதிர்பார்ப்பார். அவர் கேட்டமாதிரி செய்ய முடியாமல், சிலர் வேலையை விட்டே சென்றுவிட்டனர். இப்படி வருவதில், அமைச்சருக்குச் செல்ல வேண்டியது தவறாமல் போய்விடும். அந்த விஷயத்தில் இவர் மிகுந்த நாணயத்தோடு செயல்பட்டிருக்கிறார். முன்னாள் தலைமைச்செயலாளர் ராம மோகன ராவ் வீட்டிலும் அலுவலகத்திலும் வருமானவரிச் சோதனை நடந்தபோதே, கீதாலட்சுமி வீட்டிலும் சோதனை நடந்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் உஷாராகி, பணத்தைப் பதுக்கிவிட்டனர். ஆனாலும் இப்போது பணத்தை வெளியே எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், சோதனையில் சிக்கிக்கொண்டனர்’’ என்றார் மருத்துவத் துறை அலுவலர் ஒருவர்.

கீதா லட்சுமி மீதான புகார்கள் குறித்து விளக்கம் கேட்பதற்காக, அவரை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டோம். நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை. அதனால், குறுஞ்செய்தி ஒன்றை அவருக்கு அனுப்பினோம். அதற்கு அவர் பதில் அனுப்பினார். அதில், ‘‘இந்த நடவடிக்கை எனக்கு மிகுந்த மனவருத்ததைக் கொடுத்துள்ளது. அசாதாரணமான சூழலில் இருக்கிறேன். எதிலும் என் பங்கு இல்லை. ஒழுக்கத்தையும், தர்மத்தையும் மட்டுமே கடைப்பிடித்து வருகிறேன். என் தரப்பில் எந்தத் தவறும் இல்லை. எந்தத் தவறும் செய்யாத என்னை இதில் ஏன் சிக்க வைத்துள்ளார்கள்?’’ என்று சொல்லியுள்ளார்.

‘‘தன்மீது எந்தத் தவறும் இல்லை என்றால் அதனை அவரே வெளிப்படையாக வந்து நிரூபித்திருக்க வேண்டும்” என்று ஒரு தரப்பும், ‘‘இவ்வளவு பண நடமாட்டம் உள்ள இடத்துக்கு நேர்மையான ஒருவரை வைத்திருப்பார்களா?’’ என்று இன்னொரு தரப்பும் சொல்கின்றன. மொத்தத்தில் சிக்கலில் இருந்து  கீதாலட்சுமி விடுபடுவது சிரமம்தான்!

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.