Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவமானம்

Featured Replies

 
 
gallerye_000913860_1750230.jpg

அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தால், தேர்தல் நின்றதால் மக்கள் கொதித்தெழுந்து உள்ளது; குடியிருப்பு பகுதிகளில், 'டாஸ்மாக்' கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு என, ஆளுங்கட்சி மீது, பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tamil_News_large_175023020170412232517_318_219.jpg

ஆளுங்கட்சியினர் வீதியில் இறங்கினாலே, மக்களின் சுடுசொற்களை எதிர்கொள்ள முடியாமல், அவமானத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆங்காங்கே வெடித்து கிளம்பும் போராட்டங்களால், அமைச்சர்கள் பீதியடைந்து உள்ளனர். பெரும்பாலானோர், கட்சியை காப்பாற்ற, பன்னீர் அணிக்கு மாற ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சென்னை அருகே, கூவத்துாரில், எம்.எல்.ஏ.,க் களை அடைத்து வைத்திருந்த போது, அவர்களுக்கு, 4கோடி ரூபாய் பணம்; அரசு பணிகளில், 'டெண்டர்' தருவதாக, சசி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.அதன் காரணமாக, பொதுமக்கள் எதிர்ப்பை மீறி, 122 எம்.எல்.ஏ.,க் கள், சசி அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

உறுதி அளித்தபடி, எம்.எல்.ஏ.,க் களுக்கு,1 கோடி ரூபாய் ரொக்கம்; 1 கோடி ரூபாய் மதிப்பிற்கு தங்கம் வழங்கப்பட்டு உள்ளது; மீதி பணம் தரப்படவில்லை. மேலும், அரசு பணி டெண்டர் ஒதுக்கீட்டிலும், அதிக கமிஷன் கேட்கப்படுவ தால், எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியடைந்து உள்ளனர்.
 

மக்கள் கோபம்


அதோடு, அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத் தால், ஆர்.கே.நகர் தேர்தலும் ஒத்தி வைக்கப் பட்டு உள்ளதால், ஆளுங்கட்சி மீது, மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.இந்த சூழ்நிலை யில், உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி,

நெடுஞ் சாலைகளில் உள்ள, டாஸ்மாக் கடை கள் மூடப்பட்டு உள்ளன. அவற்றை குடியிருப்பு பகுதிகளில் திறக்க, அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
இதற்கு, பொதுமக்களி டம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.ஆங்காங்கே, பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னையை கண்டித் தும், போராட்டங்கள் நடந்து வருகின்றன.
 

அதிர்ச்சி


போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், அரசு மீது சுடுசொற்களை வீசி வருகின்றனர். அவற்றை எதிர்கொள்ள முடியாமல், ஆளுங்கட்சியினர் அவமானத்தால் தலைகுனிந்துஉள்ளனர். குறிப் பாக, சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, போராட்டம் அதிகரித்து உள்ளது. திருப்பூரில், நேற்று முன்தினம், டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராடியவர் களை, போலீசார் தடியடி நடத்தியும், பெண்களை அடித்து, உதைத்தும் கலைத்தனர்.

இது போன்ற பொதுமக்களின் தொடர் போராட்டங்கள், அமைச்சர்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளன. மன உளைச்சலுடன், சசிகலா அணியில் இருப்பதற்கு பதிலாக, பன்னீர் அணிக்கு சென்றுவிடலாம் என, ஆலோசிக்க துவங்கி உள்ளனர்.
அதன் மூலம், மக்கள் கோபத்தில் இருந்து தப்பிக்கலாம்; கட்சியையும், ஆட்சியை யும், சசிகலா குடும்பத் திடம் இருந்து காப்பாற்ற லாம் என, அமைச்சர் கள் மற்றும் எம்.எல்.ஏ.,க் கள் ஆலோசித்து வருகின்றனர். இது, சசிகலா குடும்பத்தினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

கோவையில் அதிருப்தி!


அ.தி.மு.க., இரு அணிகளாக உடைந்ததும், பன்னீர் தலைமையிலான அணிக்கு, கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம், எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, முதல் ஆதரவு தெரிவித்து,
பரபரப்பை ஏற்படுத்தினார்.அதன் தொடர்ச்சி யாக, மேட்டுப்பாளையம், எம்.எல்.ஏ., சின்ராஜ், பன்னீர் அணிக்கு மாறினார்.

 

கூவத்துார் விடுதியில் இருந்த கவுண்டம்பாளையம், எம்.எல்.ஏ., அருண்குமார், சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை புறக்கணித்தார்; பின், பன்னீர் அணிக்கு வந்தார்.

மாவட்டத்தில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒன்பது பேரில், மூன்று பேர், பன்னீர் அணியில் உள்ளனர்; மற்ற ஆறு பேர், சசிகலா அணியில் உள்ளனர். இவர்களில், அமைச்சர் வேலுமணி, அவரது ஆதரவாளரான கோவை தெற்கு எம்.எல்.ஏ., அர்ஜுனன், அணி மாற வாய்ப்பு குறைவு.
சூலுார், எம்.எல்.ஏ., கனகராஜ், பன்னீர் அணிக்கு மாறப் போவதாக, இருமுறை
எச்சரித்து விட்டார். பொள்ளாச்சி, எம்.எல்.ஏ., ஜெயராமன், சீனியரான தனக்கு அமைச்சர் பதவி தராததால், வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் உட்பட, சசிகலா அணியில் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள், இன்று வரை போலீஸ் பாதுகாப்பின்றி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கஷ்டமான விஷயமாகவே உள்ளது. டாஸ்மாக் பணத்தால் பலனடையும் கிளை நிர்வாகிகள், கூட்டுறவு வங்கிப் பதவியில் இருப்பவர்கள் தவிர, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும், இவர்களை கடுமையாக எதிர்க்கின்றனர்.

இவர்கள் அனைவருமே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன் தோற்று விட்டால், எல்லாரும் இணைந்துவிடுவர் என, நினைத்துக் கொண்டிருந்தனர். இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், அவர்களுக்கு குழப்பம் அதிகரித்துள்ளது. இதனால், அவர்கள் அணி மாற ஆலோசித்து வருகின்றனர்.
 

கமிஷன் அதிகரிப்பு!


கூவத்துார் விடுதியில், எம்.எல்.ஏ.,க்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர்கள் அணி மாறாமல் இருக்க, அரசு பணி டெண்டர் வழங்குவதாக, சசி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி டெண்டர் வழங்குகின்றனர். ஆனால், ஜெ., இருந்த போது, 8 சதவீதம் கமிஷன் கேட்பர்; தற்போது, 14 சதவீதம் கமிஷன் கேட்கின்றனர்.எனவே, அணி மாறினால், கமிஷன் பிரச்னை தீரும்; மக்கள் எதிர்ப்பு குறையும் என நம்புவதாக, சசி ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் சிலர் தெரிவித்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1750230

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.