Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மரணம்!

Featured Replies

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மரணம்!

 
 

Mahadevan_10344.jpg

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், இன்று திடீரென மரணம் அடைந்தார். திருவிடைமருதூர் கோயிலுக்குச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வயது 47.

சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகன். இவரது மகன் மகாதேவன். மன்னார்குடியில் வசித்து வந்த மகாதேவன், ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக இருந்து வந்தார்.

இந்நிலையில், மகாதேவன் இன்று காலை திருவிடைமருதூர் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மகாதேவனை உறவினர்கள் கொண்டு சென்றனர். அப்போது, போகும் வழியில் மகாதேவன் உயிரிழந்தார். அவரது உடல் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மகாதேவன் மரணம் அடைந்த தகவல் உடனடியாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. பரோலில் அவர் வரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/86502-sasikal-nephew-mahadevan-was-died.html

  • தொடங்கியவர்

சசிகலா பரோலில் வர விரும்பினால் ஏற்பாடு செய்யப்படும்: டி.டி.வி. தினகரன்

 

 
சசிகலா (இடது), டி.டி.வி. தினகரன் (வலது)
சசிகலா (இடது), டி.டி.வி. தினகரன் (வலது)
 
 

சசிகலா பரோலில் வர விரும்பினால் அதற்கான ஏற்பாடு செய்து தரப்படும் என்று அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் டி.டிவி. தினகரன் கூறியுள்ளார்.

சசிகலாவின் இரண்டாவது அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன் இன்று (சனிக்கிழமை) திருவிடைமருதூர் கோவிலுக்கு செல்லும் வழியில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதனையடுத்து மகாதேவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டி.டி.வி. தினகரன் தஞ்சை சென்றுள்ளார்.

மகாதேவன் மரணம் குறித்து டி.டி.வி தினகரன் கூறும்போது, "மகாதேவன் மரணம் குறித்து சசிகலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா பரோலில் வர விரும்பினால் அதற்கான ஏற்பாடு செய்து தரப்படும்" என்று கூறினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/சசிகலா-பரோலில்-வர-விரும்பினால்-ஏற்பாடு-செய்யப்படும்-டிடிவி-தினகரன்/article9641137.ece?homepage=true

  • தொடங்கியவர்

அ.தி.மு.கவில் மறைந்த மகாதேவனின் பங்கு என்ன? 

 
 

மகாதேவன்

சிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பினால் மரணமடைந்தார். 'மகாதேவன்'- என்ற பெயரைக் கேட்டால் வெளியுலகம் எப்படியோ, அரசியல் களத்தை கலக்கம் அடையச் செய்யும். சசிகலா குடும்ப உறவுகளே கொஞ்சம் கலக்கமடைவார்கள். குடும்ப உறுப்பினர்களோ கொஞ்சம் தள்ளியே நிற்பார்கள். அப்படி அதிரடியான செயல்பாடுகளும் விநோத நடைமுறைகளையும், கொண்ட ஒரு மனிதர் மகாதேவன்.

சசிகலா குடும்பத்தில் ஜெயலலிதாவினால் பதவி வழங்கப்பட்டவரில் மகாதேவன் இரண்டாமவர். தினகரன் பதவியை ஜெயலலிதா பிடுங்கிய நேரத்தில் 'தனது அக்கா மகனுக்குப் பதிலாக தனது அண்ணன் மகனை' கட்சிக்குள் நுழைத்தார் சசிகலா. ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலாளர் பதவியைப் பெற்ற சில மாதங்களிலேயே  இவருடைய பந்தாவினாலும், பகட்டாலும் பதவியைப் பறிகொடுத்தார்.

மகாதேவனை 'பணத்தேவன்' என்று தான் அவருக்கு நெருக்கமானவர்களே அழைப்பார்கள். பண விஷயத்தில் அந்த அளவுக்கு கடுமை காட்டுவார். காவிரி டெல்டாவில் டெண்டர்கள் அனைத்திலும் இவர் வாரிச் சுருட்டிய கதையை இன்றுவரை அ.தி.மு.கவினர் அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள். 

தஞ்சாவூரில் மகாதேவன் வீட்டில் அவரை  டெண்டர் உள்ளிட்ட விஷயங்களுக்காக பார்க்கச் செல்லும் நபர்களை அன்போடு உபசரித்து உள்ளே அழைத்து செல்வார்கள். மகாதேவனுடன் போட்டோ செஷன் நடைபெற்று முடிந்து பிறகு வெளியேறும் நேரத்தில் கையில் ஒரு துண்டுச்சீட்டை கொடுப்பார்கள். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையை கொடுத்துவிட்டு தான் வீட்டை விட்டு வெளியேற முடியும். இப்படி அவரை சந்திப்பதற்கே கப்பம் கட்ட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. 

“தன்னை ஒரு டெரராக காட்டிக்கொள்வதில் அலாதி விருப்பமுடையவர் மகாதேவன்.  ஆந்திர திரைப்பட வில்லன்களைப் போல தன்னைச் சுற்றி எப்போது பத்து அடியாட்களை சபாரி சூட்டுடன் நிற்கவைத்திருப்பார். இவர்களைத் தாண்டித் தான் மகாதேவனை யாரும் நெருங்க முடியும்.

மகாதேவன் மீதான மற்றொரு சர்ச்சை,  துப்பாக்கியைக் காட்டி  மிரட்டுவார் என்பது. பிரச்னைக்காக பஞ்சாயத்து பேச அழைத்துவருபவர்களிடம் அவர்களை நிற்க வைத்துக்கொண்டே பேசியபடி மெதுவாக டேபிளின் மீது துப்பாக்கியை எடுத்துவைப்பார். அதுவே வந்தவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். இதுதான் அவரது 'முதற்கட்டப் பேச்சுவார்த்தை'. அப்படியும் பேச்சுவார்த்தை நீண்டு ஒரு முடிவு வராமல் போவதாக தெரிந்தால் துப்பாக்கியை கையில் சுழற்றியபடி பேசிக்கொண்டு இருக்கும்போதே “துப்பாக்கியைத் தூக்கி சுட்டுப்புடுவேன்” என்று எழுந்து நிற்பார் சடாரென. இதுதான் இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை. மிரண்டுவிடுவார்கள் வந்தவர்கள். இந்த 2 பேச்சுவார்த்தைகளில் பெரும்பாலும் எதிலாவது ஒன்றில் தீர்வு கிடைத்துவிடும். 

சசிகலா

 

சில முறை டென்ஷன் அதிகமாகி துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டதும் நடந்திருக்கிறது என்கிறார்கள் அவருடன் இருந்த நபர்கள்.
விதவிதமான அசைவ உணவு, எப்போதும் 'உற்சாக' வெள்ளம் என இருந்த மகாதேவனின் கடைசிக் காலம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆன்மிகப் பாதைக்குத் திரும்பியது.

தன்னிடம் பணிபுரிபவர்களிடம் பர்ஃபெக்ட் ஆக இருக்கவேண்டும் அவருக்கு. காரின் ஓட்டுநர் கூட கையில் கிளவுஸ், தலையில் தொப்பி என நேர்த்தியாக கார் ஓட்ட வேண்டும். கிளவுஸ் இல்லாமல் காரில் ஏறினால் கார் டிரைவர் பாடு அதோகதி தான். மகாதேவன் காரில் தற்காப்பு ஆயுதங்கள் இல்லாமல் இருக்காது என்கிறார்கள். தன் கார் பின்னால் இவருடைய ஆதரவாளர்கள் காரும் எப்போதும் பயணித்துக்கொண்டே இருக்கும்.

இவருடைய ஆட்கள் தான் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கும், போயஸ் கார்டன் பாதுகாப்புக்கும் இருந்தவர்கள். இப்போது போயஸ்கார்டன் பாதுகாப்பில் இருக்கும் தனியார் செக்யூரிட்டியின் ஆட்கள்கூட இவருடைய ஆட்கள் தான்.  தஞ்சையில் மகாதேவன் பற்றிய பிரச்னை கிளப்பும் சர்வ அதிகாரம் படைத்தவர் திமுகவின் முக்கிய பிரதிநிதி ஒருவர்தான். ஆனால் நீங்கள் அவரிடம் போய் இவரது அடாவடியைச் சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்த மறுவினாடி, நீங்கள் வந்துபோன தகவல் மகாதேவனுக்கு போய்ச் சேர்ந்துவிடும். அதுதான் மகாதேவன்! 

2011-ம் ஆண்டு அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட பின் மிகவும் சைலண்டாக இருந்தார். தனது பஸ் கம்பெனியைக்கூட தனது தம்பி தங்கமணியை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு,கோயில் குளம் என்று பயணிக்க ஆரம்பித்தவரின் இறுதி மூச்சும் அதே கோவில் வாயிலிலேயே முடிந்துள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/86558-this-is-the-contribution-of-mahadevan-to-aiadmk.html

  • தொடங்கியவர்

அண்ணன் மகன் இறுதி சடங்கில் சசிகலா பங்கேற்க‌வில்லை

 

 
சசிகலா | கோப்புப் படம்.
சசிகலா | கோப்புப் படம்.
 
 

பெங்களூருவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தன் உறவினர் மகாதேவனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோல் கோரவில்லை.

அதிமுக அம்மா கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் நேற்று மாரடைப்பினால் கால மானார். இதையடுத்து அக்கட்சி யின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்த தகவலை சசிகலாவிடம் தெரிவிக்குமாறு கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தியிடம் செல்போன் மூலம் தெரிவித்தார்.

இதையடுத்து புகழேந்தி பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மூலமாக மகா தேவன் மரணமடைந்த தகவலை கடிதத்தின் வாயிலாக ச‌சிகலாவி டம் தெரிவித்தார். இதனால் சசிகலா மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். சுதாகரனும், இளவரசியும் வருத்தம் அடைந் ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப் பாளர் கிருஷ்ணகுமார் கூறிய போது, ‘‘உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா தரப்பில் பரோல் கேட்க வில்லை. ஒருவேளை அவர் பரோல் கேட்டிருந்தால், சிறைத் துறை விதிகளின்படி பரிசீலித்து முடிவெடுத்து இருப்போம்'' என்றார்.

சிறையில் இருந்து வெளியே வந்த புகழேந்தி கூறியபோது, ‘‘மகாதேவனின் மரணத்தினால் சசிகலா ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளார். எனினும் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பரோல் கேட்க வேண்டாம் என சொல்லிவிட்டார்'' என்றார்.

http://tamil.thehindu.com/india/அண்ணன்-மகன்-இறுதி-சடங்கில்-சசிகலா-பங்கேற்கவில்லை/article9642141.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.