Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நான் ஒதுங்கி போக மாட்டேன்”- மல்லுக்கட்டும் தினகரன்!

Featured Replies

“நான் ஒதுங்கி போக மாட்டேன்”- மல்லுக்கட்டும் தினகரன்!

 
 

Dina_1_500_05220.jpg

அ.தி.மு.க-வை விட்டு தினகரனை வெளியேற்றும் திருவிளையாடல்களை அவரது அணியில் உள்ளவர்களே ஆரம்பித்துவிட்டனர். ஆனால், மன்னார்குடி உறவுகளிடம் கட்சியை விட்டு நான் ஒதுங்கி போகமாட்டேன் என்று மல்லுக்கட்ட ஆரம்பித்துள்ளார் தினகரன்.

சசிகலா உறவுகளிடம் அ.தி.மு.க.வினர் காட்டிய பயமும், பவ்வியமும் இள்று காணமல் போய்விட்டது. சசிகலா உறவுகள் இனிமேல் அ.தி.மு.க.வில் கோலோச்ச வேண்டாம் என்ற கருத்துகள் பரவிவரும் நிலையில் சசிகலா உறவுகளுக்குள்ளும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. 

சசிகலாவினால் துணைப் பொதுச்செயெலாளராக அறிவிக்க தினகரன் கட்சி, ஆட்சி என இரண்டிலும் கோலோச்சுவதை பிற உறவுகள் விரும்பவில்லை. தினகரன் தனி ஆவர்த்தனம் செய்வதை திவாகரனும், அவருடைய மகன்  ஜெயஆனந்தும் விரும்பாமல் இருந்தனர். எடப்பாடியிடம் தனக்கு வேண்டிய சிலருக்கு பணியிடம் மாற்றம் குறித்து திவாகரன் கேட்டுள்ளார். அதற்கு முட்டுக்கட்டை போட்ட தினகரன், தனது உறவினர்கள் எதைக் கேட்டாலும் செய்ய வேண்டாம் என்று சொல்லியுள்ளார். இந்த புகைச்சலில் உறவுகள் இருந்து வந்த நேரத்தில், அமைச்சர்கள் சிலர் தினகரனுக்கு எதிராக திரும்பியுள்ள சூழ்நிலையில், திவாகரன் தரப்பு அந்த அமைச்சர்களுக்கு ஆதவராக இப்போது களத்தில் இறங்கியுள்ளார்.

தினகரனுக்கு எதிராக இருக்கும்  அவருடை உறவினர்கள், கட்சியில் இருந்து அவரை வெளியேற்றுங்கள், நாங்கள் வழக்கம் போல் பின்னால் இருந்தே கட்சியை இயக்குகின்றோம். ஆட்சியையும் கட்சியையும் நீங்கள் நடத்துங்கள் என்று சொல்லியுள்ளார்கள். அதே போல் பன்னீர் தரப்பிடமும் திவாகரன் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

சசிகலா உறவினர் மகாதேவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த தஞ்சாவூர் வந்திருந்த தினகரனிடம் உறவுகள் அனைவரும் சரியாக பேசவில்லையாம். இவர்களுக்குள் இருந்த மோதல் அங்கு வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்த நிலையில் தான் கொங்கு அமைச்சர்கள் வேறு தனக்கு எதிராக திரும்பி நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளது தினகரனை மேலும் கடுப்பேற்றியுள்ளது. அமைச்சரவையில் தினகரன் ஆதரவாளராக விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு உள்ளிட்டோர் மட்டுமே உள்ளனர். திவாகரன் ஆதரவு அமைச்சர்களாக சிலரும் உள்ளார்கள். தனக்கு வேண்டிய உறவினர் ஒருவரிடம் தஞ்சாவூரில் வைத்து தினகரன், “சித்தி கட்சியை என்னை நம்பி தான் விட்டு போய் உள்ளார்கள். இந்த கட்சியின் வளர்ச்சியில் எனது பங்கும் உள்ளது. உறவுகளால் கட்சிக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்று தான் அனைவரையும் ஒதுக்கி வைத்தேன். ஆனால், இப்போது அவர்களே எனக்கு எதிராக சதி செய்ய ஆரம்பித்துள்ளனர். நான் ஒதுங்கிபோய்விடுவேன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நான் ஒதுங்கிபோகும் நிலை வந்தால், கட்சிக்கும் ஆட்சிக்கும் முடிவுரை எழுதிவிட்டு தான் ஒதுங்கிபோவேன்” என்று ஆக்ரோஷமாக பேசியதை பார்த்த அந்த உறவினர் கொஞ்சம் ஆடிப்போய்விட்டாராம்.

தினகரனுக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்கள் இருக்கும் தைரியத்தில் தான் அவர் இப்படி பேசுகிறார் என்கிறார்கள் திவாகரன் ஆதரவு அமைச்சர்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/86662-i-will-not-go-away-ttv-dinakaran-affirms.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.