Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் அதிமுக அமைச்சர்கள் திடீர் ஆலோசனை..!

Featured Replies

சென்னையில் அதிமுக அமைச்சர்கள் திடீர் ஆலோசனை..!

 

சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் அதிமுக அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

15_22028.jpg

அதிமுகவில் இரு அணிகளும் இணைவதற்கான இனக்கமான சுழல் உருவாகி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னை வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஐ.என்.எஸ் போர்க் கப்பலை பார்க்க வருமாறு எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, தற்போது அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்னன் வீட்டிலும் ஆலோசனை நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் 20 அமைச்சர்களும், எம்.பிக்களும் பங்கேற்று ஆலோசித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாகவே அதிமுகவின் இரு அணி அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், ஓபிஎஸ், தம்பிதுரை உள்ளிடோரும் இரு அணிகள் இணைவது குறித்து ஆதரவாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

http://www.vikatan.com/news/tamilnadu/86757-admk-ministers-sudden-meet-at-thangamanis-home.html

  • தொடங்கியவர்

அதிமுக அணிகளுக்கிடையில் சமரசமா? அமைச்சர்கள் ஆலோசனையின் பின்னணி என்ன?

 
 

அதிமுகவை மீண்டும் ஒன்றுபடுத்தி, இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக , திங்கள்கிழமை இரவு நடந்த தமிழக அமைச்சர்களின் அவசர சந்திப்புக்குப் பிறகு, மூத்த அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

அமைச்சர்களின் அவசர சந்திப்பு ஏன்?

பரபரப்பான தமிழக அரசியல் சூழலில், திங்கட்கிழமை இரவு மின் துறை அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் தமிழக அமைச்சர்களின் திடீர் ஆலோசனை நடைபெற்றது.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரும்பான்மை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ''அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை மீட்க தேவையான பத்திரப்பிரமாணத்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் அளிக்க வேண்டும். இதற்கு 8 வாரம் அவகாசம் கேட்டிருந்தோம். இது குறித்து தற்போது விவாதிக்கப்பட்டது'' என்று தெரிவித்தார்.

''இரு அணிகளின் இணைப்பு குறித்து இன்று ஓபிஎஸ் தெரிவித்த கருத்து வரவேற்கத்தக்கது. இந்த கருத்தையொட்டி அதிமுகவை ஒற்றுமையாகவும், வலிமையாகவும் செயல்பட வைப்பது தொடர்பாகவம் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுப்பது குறித்தும் தற்போது ஆலோசிக்கப்பட்டது'' என்று ஜெயக்குமார் மேலும் தெரிவித்தார்.

ஓ. பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக ஜெயகுமார் குறிப்பிட்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் பங்கேற்றனரா என்று கேட்டற்கு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஒற்றுமையாகத்தான் உள்ளனர் என்று ஜெயகுமார் மேலும் தெரிவித்தார்.

டி டி. வி. தினகரன் கட்சியின் துணை பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவாரா என்று கேட்டதற்கு, அது குறித்து தற்போது நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

கட்சியின் பொது செயலாளரான வி.கே. சசிகலா கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் அளித்ததாக செய்திகள் வந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவ்வாறு எந்த தகவலும் இல்லை என்று ஜெயகுமார் தெரிவித்தார்.

சசிகலா, தினகரன் நீக்கமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசசிகலா, தினகரன் நீக்கமா?

முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வரும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், டி.டி.வி.தினகரன் அணியினருக்கு அந்த சின்னத்தை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக கூறி, சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி காவல்துறையினர் திங்கட்கிழமை காலையில் கைது செய்துள்ளனர்.

 

சந்திரசேகர் அளித்துள்ள வாக்குமூலத்தில், அந்த பணத்தை டி.டி.வி.தினகரனிடமிருந்து பெற்றதாகவும், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக தினகரன் அதை தன்னிடம் கொடுத்தாகவும் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தமக்கு சுகேஷ் சந்திரசேகர் என்கிற பெயர் கொண்ட எவரையும் தெரியாது என்றும், அவரிடம் பணம் கொடுத்ததாக வெளியாகும் தகவல் பொய்யானது என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே டெல்லி காவல்துறையினர் செவ்வாய்கிழமை சென்னை வரவிருப்பதாகவும், டி.டி.வி.தினகரனுக்கு இந்த வழக்கு தொடர்பில் விளக்கம் அளிக்க கூறி சம்மன் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன

http://www.bbc.com/tamil/india-39623436?ocid=socialflow_facebook

  • தொடங்கியவர்

சசிகலா அணி அமைச்சர்கள் போர்க் கப்பலில் பயணம்!

 
 

ஐ.என்.எஸ்.சென்னை போர்க் கப்பலை சசிகலா அணியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

INS chennai
 

ஐ.என்.எஸ். சென்னை போர்க் கப்பலை சென்னைக்கு அர்ப்பணிக்கும் விழா  சென்னை துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு போர் கப்பலின் மாதிரியைப் பெற்றுக் கொண்டார். மேலும் நினைவுப் பரிசு ஒன்றை இந்திய கடற்படையின் கிழக்கு மண்டலத் தலைமை அதிகாரி பிஷ்ட்டிடம் முதல்வர் வழங்கினார். விழா முடிந்ததும் போர் கப்பலின் உள்ளே சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில் இன்று அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் குடும்பத்தினருடன் ஐ.என்.எஸ் போர்க் கப்பலை பார்வையிடுகின்றனர். மேலும் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்து அ.தி.மு.க நிர்வாகிகளும் போர்க்கப்பலை பார்வையிடுவது மட்டுமின்றி பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/86776-sasikala-camp-admk-ministers-and-mlas-visits-ins-chennai.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.