Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டயானா இறந்த பின் மன நலம் பாதிக்கப்பட்டேன்: மனம் திறந்தார் இளவரசர் ஹாரி

Featured Replies

டயானா இறந்த பின் மன நலம் பாதிக்கப்பட்டேன்: மனம் திறந்தார் இளவரசர் ஹாரி

 

 
 
trio1_3155409f.jpg
 
 
 

தனது தாய் டயானாவின் திடீர் மரணத்தால் மனநலம் எப்படி பாதிக்கப்பட்டது? அதில் இருந்து மீள எத்தனை ஆண்டுகள் ஆனது என்பது குறித்து இளவரசர் ஹாரி முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.

‘த டெய்லி டெலிகிராப்’ நாளிதழுக்கு இளவரசர் ஹாரி (32) அளித்த அந்த பேட்டி நேற்று பிரசுரமானது. அதில் அவர் கூறியதாவது:

எனது தாய் டயானா 1997-ல் நடந்த கார் விபத்தில் உயிரிழந்த தும், அந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்தேன். சுமார் 20 ஆண்டுகள் வரை அந்த சோகத்தை நினைத்து மன ரீதியான பாதிப்புக்கு ஆளானேன். பலமுறை முழுமையாக மனம் உடைந்து காணப்பட்டேன். அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்கான வழி தெரியாததால், 2 ஆண்டுகள் கடுமையாக அவதிப்பட்டேன். ஒரு கட்டத்தில் எனக்கு மன நலம் சார்ந்த கவுன்சலிங் தேவைப்பட்டது. அந்த அளவுக்கு தாய் டயானாவின் மரணம் என்னை வெகுவாக பாதித்தது.

இவ்வாறு ஹாரி கூறியிருந்தார்.

பிரிட்டன் அரச பரம்பரை விதிகளுக்கு முரணாக, ஹாரி தனது மவுனத்தை கலைத்து மனம் திறந்து பேசியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

http://tamil.thehindu.com/world/டயானா-இறந்த-பின்-மன-நலம்-பாதிக்கப்பட்டேன்-மனம்-திறந்தார்-இளவரசர்-ஹாரி/article9645337.ece?homepage=true

  • தொடங்கியவர்

"அம்மாவை இன்னமும் மிஸ் செய்கிறோம்!” கலங்கும் டயானா மகன்கள்

 
 

டயானா

யானா... 90களில் உலகளவில் உள்ள ஆண்கள், பெண்கள் என பலரையும் கிறங்க வைத்த... பொறாமை கொள்ள வைத்த... ரசிக்க வைத்த ஒரு பெயர்!  பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தில் மணம்முடித்து இருந்தாலும், டயானா சாமானிய மக்களிடையே  காட்டிய அன்பும் பரிவுமே, வரலாற்றில் மறக்கமுடியாத நபர்களில் பட்டியலில் அவரைச் சேர்த்தது.

கடந்த 1997ஆம் ஆண்டு, அவர் ஒரு கார் விபத்தில் இறந்ததும், அதனைத் தொடர்ந்து  எழும்பிய பல்வேறு சர்ச்சைகளையும் உலகம் அறிந்ததே. ஆனால், டயானாவின் மரணம்... அவருடைய இரண்டு மகன்களையும் எந்தளவுக்குப் பாதித்தது என்பதை பல வருடங்கள் கழித்து இப்போது மனம் திறந்து பேசியிருக்கிறார்கள். 

சமீபத்தில், டயானாவின் மரணம் குறித்து அவரின் இரண்டு மகன்களான வில்லியம்ஸூம், ஹாரியும்  பிரிட்டன் ஊடகங்களுக்கு மனம் திறந்து பேசியிருக்கிறார்கள். பிரிட்டனின் பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த  இளவரசன் ஹாரி, ”என் அம்மாவின் இறப்பு என்னை வெகுவாக பாதித்தது.  20 வருடங்களாக, நான் எல்லா விதமான உணர்வுகளையும் என்னுள் புதைத்துக்கொண்டேன்.  

முன்பெல்லாம், என் அம்மா குறித்த எண்ணங்களையே தவிர்த்து வந்தேன். அவரைப் பற்றி நினைத்து மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது என்று நினைத்தேன். ’என் வாழ்க்கை நன்றாக இருக்கிறது’;  ‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று திரும்பதிரும்ப என் மனதை நான்  ஏமாற்றிக்கொண்டிருந்தேன். ஆனால், இந்தப் போக்கு என்  தனிப்பட்ட வாழ்வை மட்டுமல்ல... என் பொது  வாழ்க்கைப் பணியையும் மிகவும் பாதித்தது. 

பல  தருணங்களில், நான் உடைந்து அழும் நிலையில் இருந்திருக்கிறேன்.  என் அம்மாவின் மரணம் குறித்து எழுந்த சர்ச்சைகள் அனைத்தும் என் கண்முன் நிழலாடியது. இந்த காரணத்தால், கடந்த இரண்டு வருடங்களாக பெரும் மனகுழப்பங்களுக்கு ஆளானேன். என் அண்ணன் வில்லியம்ஸ்தான் என் மனகுழப்பத்திற்கு தீர்வு கூறினார். “எதுவும் உன்னை பாதிக்காமல் இருப்பது சாதாரணமானதல்ல'' என்றார். 

இதனைத் தொடர்ந்து, வில்லியம்ஸூம்  ஒரு  தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,” என் அம்மா உயிருடன் இல்லை என்ற உணர்வு என்னைவிட்டு அகலவே  இல்லை.  அப்போது எனக்கு 15 வயது. கடந்த 20 வருடங்களாக, இந்த அதிர்ச்சி என்னை பின் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. 

நான் என் அம்மாவுடன் சேர்ந்து செய்த சமூக பணிகள்.. நான் அவருடன்  பயணித்த இடங்கள்.. என எல்லாமே என் மனநிலையை பாதித்தது. இவை அனைத்தையும் தாண்டி வருவதே பெரும் போராட்டமாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் தாண்டி வருவதுதான் ஆரோக்கியம் என எனக்கு நானே சொல்லிகொண்டேன்.

நம் வாழ்வில் நடக்கும் அதிர்ச்சிகள் நீண்டகாலம் நிலைப்பதில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள்.  ஆனால், நம் வாழ்வில் நடக்கும் எதிர்பாராத அதிர்ச்சிகள் நீண்டகாலம் நம்மை பாதிக்கும். அந்த உணர்வு என்றுமே மறையாது.  இந்த வலியுடன்  எப்படி வாழ்வது என்பதை மட்டுமே நாம் கற்றுக்கொள்ளமுடியும்” என்று உருக்கமாக  தெரிவித்தார். 

டயானா மறைந்து 20 வருடங்களை  கழித்து,அவரது மகன்களை மனம் திறந்து கூறியிருப்பது பிரிட்டிஷ் ஊடகங்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. 

http://www.vikatan.com/news/miscellaneous/87060-we-still-miss-our-mother-dianas-sons-speak-on-her-death.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நவீனன் said:

"அம்மாவை இன்னமும் மிஸ் செய்கிறோம்!” கலங்கும் டயானா மகன்கள்

 
 

டயானா

யானா... 90களில் உலகளவில் உள்ள ஆண்கள், பெண்கள் என பலரையும் கிறங்க வைத்த... பொறாமை கொள்ள வைத்த... ரசிக்க வைத்த ஒரு பெயர்!  பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தில் மணம்முடித்து இருந்தாலும், டயானா சாமானிய மக்களிடையே  காட்டிய அன்பும் பரிவுமே, வரலாற்றில் மறக்கமுடியாத நபர்களில் பட்டியலில் அவரைச் சேர்த்தது.

கடந்த 1997ஆம் ஆண்டு, அவர் ஒரு கார் விபத்தில் இறந்ததும், அதனைத் தொடர்ந்து  எழும்பிய பல்வேறு சர்ச்சைகளையும் உலகம் அறிந்ததே. ஆனால், டயானாவின் மரணம்... அவருடைய இரண்டு மகன்களையும் எந்தளவுக்குப் பாதித்தது என்பதை பல வருடங்கள் கழித்து இப்போது மனம் திறந்து பேசியிருக்கிறார்கள். 

சமீபத்தில், டயானாவின் மரணம் குறித்து அவரின் இரண்டு மகன்களான வில்லியம்ஸூம், ஹாரியும்  பிரிட்டன் ஊடகங்களுக்கு மனம் திறந்து பேசியிருக்கிறார்கள். பிரிட்டனின் பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த  இளவரசன் ஹாரி, ”என் அம்மாவின் இறப்பு என்னை வெகுவாக பாதித்தது.  20 வருடங்களாக, நான் எல்லா விதமான உணர்வுகளையும் என்னுள் புதைத்துக்கொண்டேன்.  

முன்பெல்லாம், என் அம்மா குறித்த எண்ணங்களையே தவிர்த்து வந்தேன். அவரைப் பற்றி நினைத்து மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது என்று நினைத்தேன். ’என் வாழ்க்கை நன்றாக இருக்கிறது’;  ‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று திரும்பதிரும்ப என் மனதை நான்  ஏமாற்றிக்கொண்டிருந்தேன். ஆனால், இந்தப் போக்கு என்  தனிப்பட்ட வாழ்வை மட்டுமல்ல... என் பொது  வாழ்க்கைப் பணியையும் மிகவும் பாதித்தது. 

பல  தருணங்களில், நான் உடைந்து அழும் நிலையில் இருந்திருக்கிறேன்.  என் அம்மாவின் மரணம் குறித்து எழுந்த சர்ச்சைகள் அனைத்தும் என் கண்முன் நிழலாடியது. இந்த காரணத்தால், கடந்த இரண்டு வருடங்களாக பெரும் மனகுழப்பங்களுக்கு ஆளானேன். என் அண்ணன் வில்லியம்ஸ்தான் என் மனகுழப்பத்திற்கு தீர்வு கூறினார். “எதுவும் உன்னை பாதிக்காமல் இருப்பது சாதாரணமானதல்ல'' என்றார். 

இதனைத் தொடர்ந்து, வில்லியம்ஸூம்  ஒரு  தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,” என் அம்மா உயிருடன் இல்லை என்ற உணர்வு என்னைவிட்டு அகலவே  இல்லை.  அப்போது எனக்கு 15 வயது. கடந்த 20 வருடங்களாக, இந்த அதிர்ச்சி என்னை பின் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. 

நான் என் அம்மாவுடன் சேர்ந்து செய்த சமூக பணிகள்.. நான் அவருடன்  பயணித்த இடங்கள்.. என எல்லாமே என் மனநிலையை பாதித்தது. இவை அனைத்தையும் தாண்டி வருவதே பெரும் போராட்டமாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் தாண்டி வருவதுதான் ஆரோக்கியம் என எனக்கு நானே சொல்லிகொண்டேன்.

நம் வாழ்வில் நடக்கும் அதிர்ச்சிகள் நீண்டகாலம் நிலைப்பதில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள்.  ஆனால், நம் வாழ்வில் நடக்கும் எதிர்பாராத அதிர்ச்சிகள் நீண்டகாலம் நம்மை பாதிக்கும். அந்த உணர்வு என்றுமே மறையாது.  இந்த வலியுடன்  எப்படி வாழ்வது என்பதை மட்டுமே நாம் கற்றுக்கொள்ளமுடியும்” என்று உருக்கமாக  தெரிவித்தார். 

டயானா மறைந்து 20 வருடங்களை  கழித்து,அவரது மகன்களை மனம் திறந்து கூறியிருப்பது பிரிட்டிஷ் ஊடகங்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. 

http://www.vikatan.com/news/miscellaneous/87060-we-still-miss-our-mother-dianas-sons-speak-on-her-death.html

உங்கடை அம்மா எப்பிடி உங்களுக்கு பெரிசோ.....அது மாதிரித்தான் மற்றவையின்ரை அம்மாக்களும் பெரிசு.......
பேசாமல் மற்றவன் பொண்டாட்டியின்ரை பின்பக்கத்தை தட்டுறதை விட்டுட்டு மனிசராய் வாழப்பழகுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உங்கடை அம்மா எப்பிடி உங்களுக்கு பெரிசோ.....அது மாதிரித்தான் மற்றவையின்ரை அம்மாக்களும் பெரிசு.......
பேசாமல் மற்றவன் பொண்டாட்டியின்ரை பின்பக்கத்தை தட்டுறதை விட்டுட்டு மனிசராய் வாழப்பழகுங்கள்.

நீங்கள் இப்படி சொல்லுறியள் 

வெள்ளைகள் வாழவில் சகஜம் தானே அடுத்தவன்டதை ஆட்டைய போடுறதில்   நாம சொல்லுற களவெடுக்கிற மாங்காய் , இளநிர் தானே ரு சி அதிகம் என்று சொல்லுறாப்போல  கேட்டியளோ மிஸ்டர் கு.சா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, முனிவர் ஜீ said:

நீங்கள் இப்படி சொல்லுறியள் 

வெள்ளைகள் வாழவில் சகஜம் தானே அடுத்தவன்டதை ஆட்டைய போடுறதில்   நாம சொல்லுற களவெடுக்கிற மாங்காய் , இளநிர் தானே ரு சி அதிகம் என்று சொல்லுறாப்போல  கேட்டியளோ மிஸ்டர் கு.சா

வெள்ளை வேட்டி கட்டேக்கை மனமும் வெள்ளையாய் இருக்கோணும்......

அந்த மனம் இல்லையெண்டால் வெறும் சாறத்தோடையும் நடந்து போகலாமெல்லோ 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

வெள்ளை வேட்டி கட்டேக்கை மனமும் வெள்ளையாய் இருக்கோணும்......

அந்த மனம் இல்லையெண்டால் வெறும் சாறத்தோடையும் நடந்து போகலாமெல்லோ 

மனம் ஒரு குரங்கு அது அலைபாயும் அப்படி  இப்படியென்று சொல்லியிருங்காங்க தானே   அவருக்கு லைட்டா சிலிப்பாயிருக்காதா என்ன இதில் என்ன வெள்ளை வேட்டி எண்டுக்கிட்டு   வெள்ளையில் விழாதவன்(ள்)  இருக்கானா என்ன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, முனிவர் ஜீ said:

மனம் ஒரு குரங்கு அது அலைபாயும் அப்படி  இப்படியென்று சொல்லியிருங்காங்க தானே   அவருக்கு லைட்டா சிலிப்பாயிருக்காதா என்ன இதில் என்ன வெள்ளை வேட்டி எண்டுக்கிட்டு   வெள்ளையில் விழாதவன்(ள்)  இருக்கானா என்ன

வெள்ளைக்கு ...

மயங்காதவர்... 

கிறுங்காதவர் ...

இசையாதவர்...

அடங்காதவர் பலர்..


வெள்ளைக்கு மயங்கிய சிலர்..

வாழ்க்கையை அழித்தவர் ஆவர்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

வெள்ளைக்கு ...

மயங்காதவர்... 

கிறுங்காதவர் ...

இசையாதவர்...

அடங்காதவர் பலர்..


வெள்ளைக்கு மயங்கிய சிலர்..

வாழ்க்கையை அழித்தவர் ஆவர்.

 

th_hmmm-anm-hmmm-female-smiley-emotico.g

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.