Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினகரனை கழற்றி விடுவது சாத்தியமா?

Featured Replies

தினகரனை கழற்றி விடுவது சாத்தியமா?

 

 

சென்னை: அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக்க, 'தினகரனை கட்சியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்' என்ற ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் நிபந்தனை நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதற்கு ஏற்றவாறு, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தமிழக அரசின் டில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் இன்று காலை அவரை சந்தித்து பேசி வருகின்றனர்.

அ.தி.மு.க.,வில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பல பரபரப்பான சம்பவங்கள் நடந்தேறின. மதுரை செல்வதற்கு முன் நிருபர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், 'இரு அணிகளும் இணைய நிபந்தனை ஏதும் இல்லை 'என்றார். ஆனால், அவரது அணியை சேர்ந்த மதுசூதனன், 'ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்களிடம் கட்சி சென்று விட கூடாது' என, கருத்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி வீட்டில் நேற்று இரவு, 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, இரு அணிகளும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு அதிகம் என்றே கருதப்பட்டது.


தொடர்ந்து தினகரனுக்கு ஆதரவு:

எனினும், தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, டில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் தொடர்ந்து பேசி வந்தனர். தினகரனுக்கு ஆதரவாக இருந்த லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் நடுநிலை வகிக்க துவங்கினர்.


இந்த சூழ்நிலை இன்று காலை மாற துவங்கியது. பெங்களூருவிற்கு சென்று இருந்த தினகரன் நள்ளிரவே சென்னை திரும்பி, இன்று காலை முதல் அடையாற்றில் உள்ள வீட்டில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த துவங்கினார். அவரை சந்திக்க அமைச்சர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், டில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் சென்றனர்.

அவர்களுடன் தினகரன் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பு நடப்பதற்கு முன் நிருபர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், ' இரு அணிகளும் ஒன்று சேர்ந்தால் சந்தோஷம் தான்' என்று மட்டும் பேசி, இரு அணிகளும் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பினார்.

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்றதாக தினகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ள டில்லி குற்றப்பிரிவு போலீசார் சென்னையில் முகாமிட்டு உள்ள நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, தினகரன் தரப்பினர் எதை வேண்டுமானாலும் செய்ய துணிவார்கள் என ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.


ஒன்று சேர என்ன வேண்டும்?:

இப்போது உள்ள சூழ்நிலையில், இரு அணிகளும் சேர வேண்டும் என்றால், ஒன்று சசிகலா தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது தேர்தல் ஆணையம் சசிகலா நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். மூன்றாவதாக தினகரன் மேல் உள்ள, இரண்டு முக்கிய வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றால் ஒழிய, அனைவரும் விரும்பினாலும் இந்த இணைப்பு நடக்காது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


சென்னை ஐகோர்ட்டில், 'ஜூலை மாத இறுதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்' என்று எந்த நேரத்திலும் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இரட்டை இலை இல்லாமல், அ.தி.மு.க.,வினர் எந்த கால கட்டத்திலும் தேர்தலை சந்திக்க விரும்ப மாட்டார்கள். இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற இரு அணிகளின் இணைப்பு ஒன்றே சாத்தியம். இதை மனதில் வைத்து, தினகரனை மீறி அ.தி.மு.க.,வினர் முடிவு செய்வார்களா. அ.தி.மு.க.,வினர் எதிர்காலம் சில தினகரன் ஜால்ராக்களின் கைகளிலே உள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1753941

  • தொடங்கியவர்

அமைச்சர்களுக்கு எதிராக பகீர் புகாரைக் கிளப்பும் சசிகலா அணி எம்எல்ஏ!

 

டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளரும் அ.தி.மு.க. அம்மா அணியின் எம்எல்ஏ-வுமான வெற்றிவேல், சற்றுமுன் பேட்டி அளித்துள்ளார். டி.டி.வி.தினகரனின் உத்தரவு இல்லாமல் அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

vettrivel

அவர் அளித்துள்ள பேட்டியில், 'பதவிக்காக யார் யார் எவரெவர் கால்களில் விழுந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அதை மறந்துபோய் இருக்கிறார்கள். எதற்காகவும் நாங்கள் யாரிடமும் மண்டியிட மாட்டோம், அதற்கான அவசியமும் இல்லை. துணைப் பொதுச்செயலாளர் தினகரன் நேற்று ஊரில் இல்லாதபோது, அமைச்சர்களின் இப்படியொரு ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. யாருடைய உத்தரவின் பேரில் இந்தக் கூட்டம் நடந்தது என்று தெரியவில்லை. எது எப்படி நடந்தாலும், சசிகலாதான் கழகப் பொதுச்செயலாளர். டி.டி.வி.தினகரன் தான்  துணைப் பொதுச்செயலாளர். இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அமைச்சர்கள் விவாதிக்க தனிக்குழு எதுவும் போடப்படவில்லை' என்று கூறினார்.

http://www.vikatan.com/news/politics/86805-admk-mla-vettrivel-slams-opanneer-selvam-and-team-indirectly.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.