Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன்னைத்தானே சித்திரவதை செய்து கொண்டு புகலிடம் பெற்றுக்கொள்ள முயற்சித்த இலங்கையர் ?

Featured Replies

தன்னைத்தானே சித்திரவதை செய்து கொண்டு புகலிடம் பெற்றுக்கொள்ள முயற்சித்த இலங்கையர் ?

question-1.jpg
புகலிடம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இலங்கையர் ஒருவர் தன்னைத் தானே சித்திரவதை செய்து கொண்டுள்ளார். 35 வயதான குறித்த இலங்கையர், பிரித்தானியாவில் புகலிடம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அவர் இவ்வாறு தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சூடான இரும்புக் கம்பிகளைக் கொண்டு குறித்த நபர் தன்னைத் தானே தாக்கிவிட்டு இலங்கை அரச படையினர் துன்புறுத்தியதாகத் தெரிவித்து இவர் புகலிடம் கோரியுள்ளார்  எனவும் அவர் தமக்கு புகலிடம் வழங்குமாறு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, மேன்முறையீடு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான காயங்கள் செயற்கையான அடிப்படையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக குறித்த இலங்கையர் பிரித்தானியாவிற்குள் பிரவேசித்திருந்தார். 2007ம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையம் மீதான தாக்குதல் தொடர்பில் தம்மை இலங்கை அதிகாரிகள் விசாரணை செய்தாகத் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தம்மை இலங்கைப் படையினர் சித்திரவதை செய்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். 22, 000 சொற்களைக் கொண்டு மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் சித்திரவதைச் சம்பவங்கள் செயற்கையானது என தெரிவித்து பிரித்தானிய நீதவான் இந்த மனுவை நிராகரித்துள்ளார். இந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு ஒன்றை மீளவும் செய்ய உள்ளாரா என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

http://globaltamilnews.net/archives/24734

  • கருத்துக்கள உறவுகள்

இப்புடி கனபேர் செய்தவங்கள்  ஆனால் என்ன உயிர் பயம் ஒன்று இருக்குத்தானே வாழட்டும்  பாருங்கள் அவங்கள் பிரித்தானியா அரசாங்கம் கருணை காட்டும் படி கேட்டுக்கொள்கிறோம்  அவருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் அகதி அந்தஸ்துக் கோரிய தமிழர்களில் எத்தனை பேர் உண்மையான அகதிகள்..??! பெரும்பாலும்.. பொய் அகதிகள். பொருளாதார அகதிகள். இவர் பாவம் எம்பிட்டிட்டார். எம்பிடாதவை.. பிரிட்டிஷ் பாஸ்போட்டில ஊருக்கு சுற்றுலா போகினம். அவ்வளவு தான் வித்தியாசம். tw_blush::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.