Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வட கொரியாவுடன் மிகப்பெரும் பிரச்னைக்கு வாய்ப்பிருக்கிறது! ஆனால்...' - மனம் திறந்த ட்ரம்ப்

Featured Replies

'வட கொரியாவுடன் மிகப்பெரும் பிரச்னைக்கு வாய்ப்பிருக்கிறது! ஆனால்...' - மனம் திறந்த ட்ரம்ப்

 
 

Donald trump

அமெரிக்கா - வட கொரியா இடையே நடக்கும் பனிப்போர், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசு, அதன் ராணுவத் துருப்புகளை கொரிய தீபகற்பத்துக்குப் பக்கத்தில் அனுப்புவதும்... வட கொரிய அரசு, அமெரிக்காவை அச்சுறுத்துவதுபோல அணு ஆயுதச் சோதனை நடத்தி எச்சிரிக்கை விடுவதும்,  இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழலை உருவாக்கிவருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், 'வட கொரியாவுடன் மிகப் பெரும் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னைக்கு, பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காணத் தயாராகவே இருக்கிறோம்.' என்று கூறியுள்ளார்.

மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த விஷயத்தையும் அணுகுவதுபற்றி ட்ரம்ப், 'எனக்குத் தெரிந்த இரு நாட்டு சச்சரவைத் தீர்ப்பதற்கு, சீன அதிபர் ஜின்பிங் அதிக சிரத்தையுடன் முயல்கிறார். கண்டிப்பாக, அவர் இரு நாட்டுக்கும் இடையில் கொந்தளிப்பை விரும்பவில்லை.' என்றுள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகம், நேற்று வட கொரியாவின் நிலையை, 'அவசர நிலையில் இருக்கும் தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் மற்றும் வெளியுறவு விஷயத்தில் உச்சக்கட்ட முன்னுரிமை கொடுக்கப்படவேண்டிய விஷயம்' என்று சுட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவருவதால், வட கொரியாவைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பதற்றமான சூழ்நிலையே நிலவிவருகிறது. 

http://www.vikatan.com/news/world/87782-there-is-a-chance-that-we-could-end-up-having-a-major-conflict-with-north-korea-says-trump.html

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நவீனன் said:

'வட கொரியாவுடன் மிகப்பெரும் பிரச்னைக்கு வாய்ப்பிருக்கிறது! ஆனால்...' - மனம் திறந்த ட்ரம்ப்

 
 

Donald trump

அமெரிக்கா - வட கொரியா இடையே நடக்கும் பனிப்போர், உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசு, அதன் ராணுவத் துருப்புகளை கொரிய தீபகற்பத்துக்குப் பக்கத்தில் அனுப்புவதும்... வட கொரிய அரசு, அமெரிக்காவை அச்சுறுத்துவதுபோல அணு ஆயுதச் சோதனை நடத்தி எச்சிரிக்கை விடுவதும்,  இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழலை உருவாக்கிவருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், 'வட கொரியாவுடன் மிகப் பெரும் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னைக்கு, பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காணத் தயாராகவே இருக்கிறோம்.' என்று கூறியுள்ளார்.

மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த விஷயத்தையும் அணுகுவதுபற்றி ட்ரம்ப், 'எனக்குத் தெரிந்த இரு நாட்டு சச்சரவைத் தீர்ப்பதற்கு, சீன அதிபர் ஜின்பிங் அதிக சிரத்தையுடன் முயல்கிறார். கண்டிப்பாக, அவர் இரு நாட்டுக்கும் இடையில் கொந்தளிப்பை விரும்பவில்லை.' என்றுள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகம், நேற்று வட கொரியாவின் நிலையை, 'அவசர நிலையில் இருக்கும் தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் மற்றும் வெளியுறவு விஷயத்தில் உச்சக்கட்ட முன்னுரிமை கொடுக்கப்படவேண்டிய விஷயம்' என்று சுட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவருவதால், வட கொரியாவைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பதற்றமான சூழ்நிலையே நிலவிவருகிறது. 

http://www.vikatan.com/news/world/87782-there-is-a-chance-that-we-could-end-up-having-a-major-conflict-with-north-korea-says-trump.html

தும்பி ட்ரம்ப் 
அணுகுண்டு வைத்திருக்கான் .....ஆட்டுக்குட்டி வைத்திருக்கான் என்று மற்றைய நாடுகளை காலி செய்தது போல் அல்ல  வடகொரியா 
கையை வைத்தீர் ....உலகப்போர் 3 தான் ....அப்பு வல்லவனுக்கு வல்லவனும் உள்ளான் 

  • தொடங்கியவர்

வட கொரியா விவகாரம்: சீன அதிபருக்கு டிரம்ப் திடீர் புகழாரம்

 
 

வட கொரிய பிரச்சனையை சீன அதிபர் ஷி ஜின்பிங் கையாளும் விதம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழ்ந்து பேசியுள்ளார். ஷி ஜின்பிங், தன்னுடைய நாடான சீனாவை நேசிக்கின்ற "நல்லதொரு மனிதர்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்படத்தின் காப்புரிமைREUTERS

ராய்டஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய டிரம்ப், வட கொரிய பிரச்சனைக்கு ராஜீய வழிகளில் தீர்வு காண விரும்புவதாகவும், அது முடியாத பட்சத்தில், போர் தவிர்க்க முடியாமல் போகும் என்றும் கூறியுள்ளார்.

இத்தகைய சிறிய வயதிலேயே வட கொரியாவை கிம் ஜாங் உன் ஆள்வது "மிகவும் கடினம்" என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

இன்று வெள்ளிக்கிழமை வட கொரிய பிரச்சனை பற்றி விவாதிக்க ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது.

வட கொரியா இனி அணு சோதனைகள் நடத்தினால் தடைகள் விதிக்கப்படும் என்று சீனா தெரிவித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு செயலர் ரெக்ஸ் தில்லர்சன் தெரிவித்திருக்கிறார்.

 

சீனாவை குற்றஞ்சாட்டிய டிரம்ப்

அமெரிக்க அதிபராக டொனல்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், வட கொரிய பிரச்சனை தொடர்பாக சீனா போதுமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியதோடு, அமெரிக்கா தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

போர் பயிற்சிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனால், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வைத்து ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய விரிவான பேட்டியில், இந்த மாதத்தின் தொடக்கத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்த அதிபர் டிரம்ப், "கொந்தளிப்பும், மரணமும் ஏற்படுவதை சீன அதிபர் விரும்பவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

 

"அவர் மிகவும் நல்ல மனிதர். அவரை பற்றி நான் நன்றாக அறிய வந்துள்ளேன் சீனாவையும், சீன மக்களையும் அவர் மிகவும் நேசிக்கிறார். ஒருவேளை சாத்தியப்படாது என்றாலும், அவர் ஏதாவது செய்ய விரும்புகிறார்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கிம் குறித்து பேசிய டிரம்ப், "அவருக்கு 27 வயதுதான் ஆகிறது. அவர் தந்தை காலமான பின்னர் கிம் ஆட்சிக்கு வந்துவிட்டார். நீங்கள் அவரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அது எளிதானதல்ல" , என்றார்.

 

ஆனால், அவருக்கு நன்மதிப்பு அளிக்க வேண்டும் என்று இவ்வாறு கூறவில்லை என்று கூறிய டிரம்ப் , கிம் '' பகுத்தறிவுடன் நடந்து கொள்வார்" என்று நம்புவதாகக் கூறினார்.

 

தடையை மீறி வட கொரியா ஏவுகணை சோதனை

சமீபத்திய மாதங்களில் வட கொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்துள்ளது. 6வது அணு சோதனையை நடத்த போவதாக மிரட்டி வருகிறது.

வட கொரியா இனி ஏவுகணை சோதனைகளை நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியதாக தில்லர்சன் வியாழக்கிழமை ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார்.

புதினும் ஷின்சோ அபேவும்படத்தின் காப்புரிமைEPA

சீனாவின் அறிவுறுத்தல்கள் புறக்கணிக்கப்பட்டால், என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அவர் குறிப்பாக தெரிவிக்கவில்லை.

இந்த செய்தியை சீனா எப்போது வட கொரியாவிடம் தெரிவித்தது என்றும் தில்லர்சன் விவரிக்கவில்லை. சீனாவிடம் இருந்து இது பற்றி எந்தவித உறுதியும் இதுவரை வழங்கப்படவில்லை.

அணு சோதனை நடத்தாமல் அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தாமல், வட கொரியா அதனுடைய முக்கிய பொது நினைவு கொண்டாட்டத்தை நடத்தியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தில்லர்சன் தெரிவித்திருக்கிறார்.

 

பேச்சுவார்த்தைக்கு புதின் அழைப்பு

முன்னதாக, கொரிய தீபகற்பத்தில் பதட்டம் அதிகரிப்பதை தொடர்ந்து, வட கொரியாவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.

மாஸ்கோவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்த புதின் பேசுகையில், இந்த பிரச்சனையில் ஈடுபட்டுள்ளோர் போர் குணமிக்க சொல்லாடல்களை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்

http://www.bbc.com/tamil/global-39741949

  • கருத்துக்கள உறவுகள்
On 28.4.2017 at 8:13 AM, அக்னியஷ்த்ரா said:

தும்பி ட்ரம்ப் 
அணுகுண்டு வைத்திருக்கான் .....ஆட்டுக்குட்டி வைத்திருக்கான் என்று மற்றைய நாடுகளை காலி செய்தது போல் அல்ல  வடகொரியா 
கையை வைத்தீர் ....உலகப்போர் 3 தான் ....அப்பு வல்லவனுக்கு வல்லவனும் உள்ளான் 

எப்படி அவளவு உறுதியகக் கூறமுடியும்.  ஈராக்  லிபியா என நாடுகளைச் சூறையாடிவரும் மேற்குலகு  விரைவான வளர்ச்சியையும் பொருண்மிய நிலைத்தன்மையையும் பெற்றுவரும் சீனாவைக்கண்டு மிரள்கிறது. இனி என்னதான் முயன்றாலும் சீனாவை கடந்துபோய் நிமிர்தல் சாத்தியமில்லை. அதனால் அதனது செல்லப்பிள்ளைகளை வீழ்த்துவதூடாக நெருக்கடியைக் கொடுக்க முயல்கிறது. மத்தியகிழக்கில் கொதிநிலையைப் பேணியவாறு வடகொரியாவை நசுக்கவே மமேற்குலகு முனைகிறது. அண்மைய திரேசாமேயினது கூற்றும் அதனை வலுப்படுத்தகிறது. சீனா என்னதான் கதைத்தாலும் ஒரு கட்டத்தின் மேல் அனைத்து அனைத்துலக நகர்வுகளிலும் அகப்படாது பார்வையாளரகவே இருக்கிறது. ஆனால் மேற்குலகோ அமெரிக்கா தாக்கினால் உடன் பிரித்தானியாவும் தாக்குதலில் இணைகிறது. அண்மைய சிரியத் தாக்குதலே சாட்சி. 

வல்லவனுக்கு வல்லவன் உள்ளான் என்பது உண்மைதான். ஆனா அது யார் என்பதே விடைதெரியாத வினா. ஏனெனில் இன்றை தொழில் நுட்பப்பாய்ச்சல். இன்று வெற்றியைத் தீர்மானிப்பது போக்கிலித்தனமும் தொழில் நுட்பமுமே. அதற்கே நாமும் பலியானோம். வடகொரியத் தாக்குதல் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுத்தாலும் அழிவு உலகுக்கானதென்பதை நினைத்தப்பார்க்க மனம் ஏதோசெய்கிறது. 

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.