Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோடநாடு கொலை வழக்கு: சசிகலாவிடம் விசாரணை?

Featured Replies

கோடநாடு கொலை வழக்கு:
சசிகலாவிடம் விசாரணை?
 
 
 

கோவை:கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக, சிறையிலுள்ள சசிகலாவிடம், தமிழக போலீசாரால் விரைவில் விசாரணை நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tamil_News_large_176507920170505234038_318_219.jpg

ஜெயலலிதாவை சிறையில் தள்ளி, அவரை மரணம் வரை கொண்டு சேர்த்ததில், அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கிற்கு முக்கியப் பங்குண்டு. அந்த சொத்துக்களின் பட்டியலில், மிக முக்கிய இடம் பிடித்தது, கோடநாடு எஸ்டேட். சொத்து குவிப்புப் பட்டியலில், இந்த எஸ்டேட்டின் பரப்பு, 900 ஏக்கர் என, குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பின், இந்த எஸ்டேட் நிர்வாகத்தின் கீழ், பல நுாறு ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன.
 

பங்குதாரர்


இவற்றில், பெரும்பாலான சொத்துக்கள், சசி கலாவின் உறவினர்கள் பெயர்களில் வாங்கப் பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தைப் பொறுத்த வரை, ஜெ., - சசிகலா ஆகியோர் மட்டுமே, பங்குதாரர்களாக இருந்துள்ளனர். இதில், ஜெ.,

பங்கு யாருக்குப் போகும் என்ற கேள்வி எழுந்துள் ளது. இந்த சூழ் நிலையில் தான், கோடநாடு எஸ்டேட்டில், கொலை மற்றும் கொள்ளை நடந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, சம்பவத்தில் தொடர்பு உடையதாகக் கூறப்படும், எஸ்டேட் முன்னாள் டிரைவர் கனகராஜ், சயான் ஆகியோர் வெவ்வேறு விபத்து களில் சிக்கினர்.கனகராஜ், சயான் மனைவி, மகள் உயிர்இழந்தனர்; சயான், தற்போது கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவங்கள் தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த பலர், தமிழகம் மற்றும் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில், பெரிதும் சந்தேகிக்கப்பட்ட சஜீவன், 'எனக்கும் இந்த சம்பவங்களுக்கும் எதுவும் தொடர் பில்லை' என்று கூறியுள்ளார். ஜெ., - சசிகலா, கோட நாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜனுக்கு அடுத்த படியாக, அந்த பங்களாவைப் பற்றி துல்லியமாக அறிந்த ஒரே நபர், இவர் மட்டுமே என்பதால், இவர் மீதான சந்தேகப் பார்வை, பலருக்கும் விலக வில்லை. தமிழக போலீசார், இவரை இதுவரை விசாரிக்கவே இல்லை.

இதற்கிடையில், கோடநாடு எஸ்டேட்டில், ஜெ., அறையில் வைக்கப்பட்டிருந்த உயிலை கொள்ளை அடிப்பதற்காக நடந்த முயற்சியே, தற்போது நடந்த கொலை,கொள்ளை என்று கட்சிக்காரர்கள் பேசத் துவங்கியுள்ளனர்.

எஸ்டேட் வருவாயில், 85 சதவீதத்தை, பொது மக்கள் நலனுக்கும், 15 சதவீதத் தொகையை எஸ்டேட் நிர்வாகத்துக்கும் பயன் படுத்த, டிரஸ்டை உருவாக்குவதற்கு, ஜெ., உயில் எழுதி வைத்துள்ள

 

தாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

சந்தேகம் ஒரு வேளை அப்படி அவர் எழுதி வைத்து இருந்தால், அது வக்கீல் அல்லது ஆடிட்டர்கள் மூலமாக, ஏதாவது ஓரிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து கூறுகின்றனர்.ஆனால், அரசு நிர்வாகம், சசிகலா ஆதரவாளர்களிடம் இருக்கும் நிலையில், இது போன்ற உயிலை துணிச்சலாக வெளிக்கொண்டு வருவதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் முன் வருவரா என்பது சந்தேகமாகிஉள்ளது.

இதன் காரணமாக, எஸ்டேட் சொத்தின் உரிமை குறித்து, போலீசார் விசாரிக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. இதற்காக, கர்நாடகாவில் சிறையில் உள்ள சசிகலாவிடம், விரைவில் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்படி விசாரணை நடந்தால், கோடநாடு எஸ்டேட் கொலை பின்னணி தெரியா விட்டா லும், எஸ்டேட்டின் எதிர்காலம் பற்றியாவது தெரியவரும்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1765079

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.