Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரைவில், சட்டசபை தேர்தல்

Featured Replies

gallerye_004434509_1765738.jpg

 

 

 

spaceplay / pause

qunload | stop

ffullscreen

shift + slower / faster

volume

mmute

seek

 . seek to previous

126 seek to 10%, 20% … 60%

 

தமிழகத்தில், ஆளும் கட்சிக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருவதால், விரைவில், சட்டசபை தேர்தல் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள் ளது. தி.மு.க., மற்றும் பா.ஜ.,வை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், அதே கருத்தை தெரிவித்திருப்பதால், முதல்வர் பழனிசாமி வட்டாரம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

 

Tamil_News_large_1765738_318_219.jpg

ஆளும் கட்சியான, அ.தி.மு.க., பிளவுபட்டு, இரு அணிகளாக செயல்படுகிறது. சசிகலா குடும்பத் திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள, பன்னீர்செல்வம் பக்கம், தொண்டர்கள் திரளாக உள்ளனர்.சசிகலா ஆசியுடன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ள பழனிசாமியை, 122 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரிக்கின்றனர். அதனால், ஆட்சி அதிகாரம், அவர் கையில் உள்ளது என்றாலும், அரசுக்கு நெருக்கடிகள் அதிகரிக்க துவங்கி உள்ளன.
 

தப்பவில்லை


அவரது அமைச்சரவையில் உள்ளவர்களே, விசாரணை வளையத்தில் சிக்கி தவிக்கும் நிலை உருவாகி உள்ளது. சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறை நுழைந்தது. அவருடன் தொடர் புள்ள அதிகாரிகள், உறவினர்கள் வீடுகளும், சோதனைக்கு தப்பவில்லை. சோதனையின் போது குறுக்கிட்ட குற்றத்திற்காக, அமைச்சர் கள், காமராஜ், ராதாகிருஷ்ணன், ராஜு மற்றும்

டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது, சென்னை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

வருமான வரித்துறை சோதனையின் அடிப் படையில், சென்னை, ஆர்.கே.நகர் இடை தேர்தல் நிறுத்தப்பட்டது. பணப்பட்டு வாடா தொடர்பான ஆதாரங்கள் சிக்கியதால், பழனிசாமி அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டது. அந்த தொகுதியில், பழனிசாமி அணி வேட்பாள ராக களமிறங்கிய, அக்கட்சியின் துணை பொது செயலர் தினகரன், டில்லி போலீ சாரால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் உள்ளார். முடக் கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, அவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.

அது தொடர்பானவிசாரணை, நாடு முழுவதும் நடந்து வரும் நிலையில், கோடநாடு எஸ்டேட் டில் கொலையும், கொள்ளை முயற்சியும் நடந் துள்ளது. அதன் பின்னணி மர்மங்கள் முழுமை யாக அவிழாத நிலையில், அதில் சம்பந்தப் பட்டவர்களின் தொடர் மரணங்களும் நடந்து வருகின்றன.
 

வழக்கு பதிவு


இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்தின் கடுமை யான கண்டிப்புக்கு ஆளாகிய பின், அமைச்சர் காமராஜ் மீது, மோசடி வழக்கு பதிவு செய்யப் பட்டு உள்ளது. இது போன்ற சிக்கல்கள் சூழ்ந் துள்ளதால், எந்த நேரத்திலும், சட்டசபைக்கு தேர்தல் வரலாம் என்ற கருத்து, தமிழக அரசி யல் வட்டாரத்தில் காணப்படு கிறது.

'உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்' என வலியுறுத்தி வந்த, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், சமீபத்தில் அளித்த பேட்டியில், 'உள்ளாட்சி தேர்தலுக்கு முன், சட்டசபைக்கு தேர்தல் வரும்' என்றார்.

 

அதே கருத்தை தான், ஆரம்பத்தில் இருந்து, தமிழக, பா.ஜ., தலைவர் கள் தமிழிசை சவுந்தர ராஜன், எச்.ராஜா போன்றவர்கள் கூறி வருகின் றனர். 'ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை அறிவிக்க வேண் டும்' என்ற கருத்தை, பா.ம.க., போன்ற கட்சி களும் தெரிவித்து வருகின்றன.
 

எதிர்பார்ப்பு


இந்நிலையில், இருஅணிகளும் இணைந்து, மீதமுள்ள நான்காண்டு ஆட்சியை தொடர விரும்பிய பன்னீர்செல்வ மும், 'உள்ளாட்சித் தேர்லுக்கு முன்னதாக, சட்டசபைக்கு தேர்தல் வரும்' என கூறியிருப் பது, பழனிசாமி வட்டாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. மத்திய பா.ஜ., அரசு நேரடியாக, பன்னீர் அணிக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டா லும், சசிகலா கும்பலுக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகள், அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதையே காட்டுகின்றன.

தமிழக, பா.ஜ., தலைவர்கள், முன்னர் கூறியபடியே, ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தானது. அதனால், சட்டசபை தேர்தலும், விரைவில் வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
 

'விஷமத்தனமானது!'


''விரைவில் சட்டசபை தேர்தல் வரும் என, பன்னீர்செல்வம் கூறியிருப்பது விஷமத்தன மானது,'' என, நிதி அமைச்சர், ஜெயகுமார் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:முதல்வர் பழனிசாமி தலைமையில், ஜெ., கனவு நனவாக்கப்படு கிறது. அடுத்து வரும் தேர்தலிலும், அ.தி.மு.க., வெற்றி பெறும். அதற்கு மாறாக, 2 சதவீதம் பேரை வைத்துள்ள பன்னீர்செல்வம், 'விரைவில் சட்டசபை தேர்தல் வரும்' என, கூறியிருப்பது விஷமத்தனமானது.

இதை, யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உறுதியாக, 2021ல் தான் சட்டசபை தேர்தல் வரும்; மீண்டும், அ.தி.மு.க., ஆட்சி அமையும். யாரையும் இழக்கக் கூடாது என்ற அடிப்படை யில் தான், எம்.ஜி.ஆர்., - ஜெ., வழியில், அனை வரையும் அரவணைத்து செல்ல விரும்புகி றோம்.

அவர்கள் முன்வந்தால், நாங்கள் பேசத் தயார்.ஆனால், இப்படிப்பட்ட விஷமத்தனமான கருத்துகளை ஏற்க முடியாது. எனினும், அவர் கள் இப்போது வந்தாலும், ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளோம். இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1765738

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.