Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதையும்... இப்போதைய அ.தி.மு.க. நிலையும்!

Featured Replies

ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதையும்... இப்போதைய அ.தி.மு.க. நிலையும்!

ளையே காலி செய்துவிடும் அக்னி நட்சத்திர வெயில்பொழுது ஒன்றில், அலுவலகத்துக்கு விடுமுறையான ஒருநாளில், அறிவுத் தேடலுக்கு விடை சொல்லும் நூலக வாசலில் அ.தி.மு.க நிர்வாகி ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. வயதான உருவம்; வசீகரிக்கும் புன்னகை; வளைந்துகொடுக்கும் தன்மை என அவருடைய தோற்றம் இருந்தது. அமரர்களாகி விட்ட எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உருவம் பொறித்த படங்கள் அவருடைய சட்டையின் வெள்ளை நிறத்தையும் தாண்டி வெளியே தெரிந்தன. அ.தி.மு.க கறை வேட்டியுடனும், துண்டுடனும் காட்சியளித்த அவர், அனைத்து இதழ்களின் செய்திகளையும் படித்துவிட்டு வெளியே வந்தார். 'இன்றைய நிலைமையில் அ.தி.மு.க பற்றி இவரிடம் கேட்டால் எண்ணற்ற விஷயங்கள் வெளியே வரும்' என்று நினைத்து அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். 

இன்றைய நிலைமையில் அ.தி.மு.க.!

'' 'வாழ்க்கையில் ஏழு அதிசயங்கள் இருப்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவை, இரண்டுதான்' என்று ஒருமுறை சொன்னார் 'தீபம்' பார்த்தசாரதி. பின், அதற்கான விளக்கத்தையும் இப்படிச் சொல்வார். 'வாழ்க்கையில் யாரை, எப்போது சந்திக்கிறோம் என்பது ஓர் அதிசயம்; யாரை, எப்போது பிரிகிறோம் என்பது இரண்டாவது அதிசயம். சிலரைச் சந்தித்தபிறகு மேம்படுகிறோம்; சிலரைச் சந்தித்தபிறகு நாசமாகிப் போய்விடுகிறோம். சிலரின் பிரிந்த துயரத்தை வாழ்நாளின் இறுதிவரை சுமக்க வேண்டியிருக்கிறது. சிலரைப் பிரிந்த பிறகுதான் உருப்படுகிறது.' 

'தீபம்' பார்த்தசாரதி சொல்வதைப்போல், சசிகலாவின் கதையும் ஓர் அதிசயம்தான்... ஆம், ஜெ-வைச் சந்தித்தபிறகு அவர் மேம்பட்டார்; ஆனால், இப்போது என்ன நிலையில் இருக்கிறார் என்பதை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள். அதேபோல், இன்றைய அ.தி.மு.க-வின் ஆட்சியும் அப்படித்தான் இருக்கிறது. தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு இடையே அந்தக் கட்சி பயணித்துக்கொண்டிருந்தாலும், எந்தநேரத்திலும் அது பள்ளத்தில் விழுந்துவிடும் சூழ்நிலையிலேயே இருக்கிறது'' என்றார், அந்த நிர்வாகி. 

சசிகலா

உண்மையிலேயே, அவர் அ.தி.மு.க-வின் விசுவாசிதான். ஆனால், தற்போதைய ஆட்சி பிடிக்காமல் அவர் நம்மிடம் சொன்ன அத்தனை விஷயங்களும் அருமை. அப்போதுதான் தெரிந்துகொண்டேன், அ.தி.மு.க-காரரான அவருக்கே இந்த ஆட்சி பிடிக்கவில்லை என்பதை. பிளவுபட்ட அ.தி.மு.க-வை; பிரயோஜனமில்லாத ஆளும் கட்சியை; பணம், பதவி பித்துப்பிடித்து அலையும் அந்தக் கட்சியின் ஆட்களை எல்லாம் சகட்டுமேனிக்குத் திட்டித்தீர்த்தார். 

இறுதியில், ஒரு முடிவுக்கு வந்தவராய் ஜெயலலிதா சொன்ன ஒரு குட்டிக்கதையைச் சொல்ல ஆரம்பித்தார். ''இப்போது அது எதற்கு'' என்றேன். ''இன்றைய நாட்டுநடப்பே அந்தக் கதையில்தான் இருக்கிறது'' என்றார். ''சரி... சொல்லுங்கள்'' என்றேன். அவரும் ஆரம்பித்தார்... 

ஜெ. சொன்ன குட்டிக்கதை!

''அரசர் ஒருவர் தன் அமைச்சரிடம், 'இங்கு உண்டு... அங்கு இல்லை; இங்கு இல்லை... அங்கு உண்டு; இங்கும் இல்லை... அங்கும் இல்லை; இங்கும் உண்டு... அங்கும் உண்டு - இதற்குச் சரியான விளக்கத்தை என் கண்முன்னே காட்டுங்கள்' என்று கட்டளையிட்டார். இதற்காகக் கொஞ்சம் காலஅவகாசம் கேட்ட அமைச்சர், வெளியே சென்றுவரவும் அனுமதி பெற்றார். பின்பு, தன்னுடன் நான்கு பேரை அழைத்துவந்த அமைச்சர், அரசரைச் சென்று அந்த நால்வரைப் பற்றியும் சொல்லி... 'நீங்கள் கேட்டதற்கான விடையும் இதுதான்' என்றார். 'நான் கேட்டதற்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தம்' என்று அரசர் கேட்க... விளக்கம் கொடுத்தார் அமைச்சர்.

நிர்வாகி சொன்ன கதைக்கு (குட்டிக்கதை) உரியவர்கள்...

தான் அழைத்துவந்த நான்கு பேரில் முதலாமவனை அழைத்து, 'இவன் ஒரு கொள்ளைக்காரன்; இவன் ஊர்ப்பணத்தை எல்லாம் கொள்ளையடித்து நல்ல வசதியோடு வாழ்கிறான்; இங்கு, மகிழ்ச்சியோடு இருக்கிறான்; ஆனால், இவனுக்கு மேலுலகில் இடமில்லை. ஆக, நீங்கள் சொன்ன முதல் புதிருக்கு இவனே உதாரணம்' என்றவர்... இரண்டாமவனை அழைத்து, 'ஞானியான இவர், எப்போதும் ஆண்டவனையே நினைத்துக்கொண்டு இருக்கிறார்; ஆகையால், இந்த உலகத்தில் இவருக்கு எதுவும் தேவையில்லை. இதனால், இந்த ஞானிக்கு மேலுலகில் இடமுண்டு' என்றார். 

பின்னர் மூன்றாமவனை அழைத்து, 'பிச்சைக்காரனான இவனுடைய வாழ்க்கை பரிதாபமானது; இவனுக்கு இந்த வாழ்க்கை ஒரு தண்டனையாகவே இருக்கிறது; மேலும், இவன் எந்தவொரு நல்ல செயலையும் செய்யவில்லை. எனவே, இவனுக்கு இங்கும் இடமில்லை... அங்கும் இடமில்லை' என்றார். பிறகு, நான்காமவனைப் பார்த்து, 'வள்ளலான இவன், தன்னிடம் இருப்பதைப் பிறருக்கும் கொடுத்து வாழ்கிறான். அதனால், இவனுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் கிடைக்கிறது. மேலும், இவனை மக்கள் மதிக்கிறார்கள்... புகழ்கிறார்கள். ஆகவே, இவனுக்கு இரண்டு இடங்களிலும் இடம் உண்டு' என்றார். 

அருமையான விளக்கம் கொடுத்த அமைச்சருக்கு அரசர் பரிசை அள்ளி வழங்கினார்'' என்று ஜெ. சொன்ன அந்தக் கதையை நிறைவுசெய்தார் அ.தி.மு.க நிர்வாகி. 

ஓ.பன்னீர்செல்வம்

கொள்ளைக் கும்பல்!

''இந்தக் கதைக்கும், இப்போதைய நாட்டுநடப்புக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே'' என்றேன். ''இருக்கிறதே'' என்றவர், பின் தொடர்ந்தார். ''தற்போது தமிழ்நாடு, கொள்ளையடிக்கும் நாடாக மாறியிருக்கிறது. அம்மாவின் (ஜெ-வின்) சொத்துக்களையும், ஆளும் கட்சி என்ற பெயரில் தமிழ்நாட்டையும் மொத்தமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் மன்னார்குடி கூட்டம்தான் இங்கே கொள்ளைக் கும்பல். இப்போது மமதையில் மிதக்கும் அவர்களுக்கு இனிவரும் காலங்களில் மகிழ்ச்சியே இருக்காது. இதைத்தான், 'இங்கு உண்டு... அங்கு இல்லை' என்ற புதிரை மாற்றி, 'இப்போது உண்டு... இனிவரும் காலங்களில் இருக்காது' என்று சொல்லலாம்...

மக்கள் ஆதரவு!

அதேபோல், இரண்டாவதாக நான் சொன்ன ஞானி என்று அ.தி.மு.க-வில் தற்போது யாரும் கிடையாது. ஆனால், அம்மாவின் உண்மையான விசுவாசியாக மக்கள் மன்றத்தில் ஓ.பி.எஸ் அறியப்படுகிறார். அவருக்கும், அவரது அணியினருக்கும் பொதுமக்கள் ஆதரவு இருக்கிறது. இவர்களைப் பொறுத்தவரை அ.தி.மு.க-வை அம்மா வழியில் கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான். தற்போது அவர்களிடம் அதிகாரம் செய்வதற்கான பலம் இல்லை. ஆனால், விரைவிலேயே அதற்கான தகுதியை அடைந்துவிடுவர். இதைத்தான், 'இங்கு இல்லை... அங்கு உண்டு' என்ற புதிரை மாற்றி, 'இப்போது இல்லை... இனிவரும் காலங்களில் கிடைக்கும்' என்று சொல்லலாம்...

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா

மன்னார்குடி ஆதரவாளர்கள்!

அதேபோன்று, மூன்றாவதாக நான் சொல்வது மன்னார்குடி கும்பலிடம் காசு வாங்கிக்கொண்டு அடிமைகளாக இருக்கும் எம்.எல்.ஏ-க்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும்தான். அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு பிச்சைக்காரர்களாக இருக்கும் இந்த மனிதர்களுக்குக் காலம் முழுவதும் இதுதான் தண்டனையாக இருக்கும். அத்துடன், இவர்கள் மக்களுக்கு எந்தவொரு நல்ல செயலையும் செய்யவில்லை. ஆகவே, இவர்களுக்கு இனிவரும் காலங்களில் எங்கும் (எந்த அணியிலும்) இடமிருக்காது. 'இங்கும் இல்லை... அங்கும் இல்லை' என்ற புதிருக்கு இவர்கள்தான் சரியான உதாரணம். 

வாழும் வள்ளல்கள்!

இறுதியாக வள்ளல் என்று நான் சொல்வது, வாழ்ந்து மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரையும், புரட்சித்தலைவி அம்மாவையும்தான். இவர்கள் இருவரும் மக்களுக்காக வாழ்ந்தவர்கள்; அதனால்தான் இன்றும் மக்கள் மனங்களில் குடிகொண்டிருக்கிறார்கள்; புகழுடன் போற்றப்படுகிறார்கள். இவர்களுடைய பெயர்களைச் சொன்னாலே மக்களின் ஆதரவு எங்கும், எப்போதும் உண்டு'' என்று இன்றைய நாட்டுநடப்பை ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை மூலம் மிகவும் அருமையாகவும், அழகாகவும், ஆழமாகவும் சொன்னார். 

 

இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு... அவரிடமிருந்து விடைபெற்ற நான், அவருடைய இரண்டு கைகளையும் பிடித்து, ''சூப்பர்'' என்றேன். புரியாதவர்களுக்குக்கூடப் புரியும்வகையில் இருக்கும் இந்தக் கதையை முதலில், மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். 

http://www.vikatan.com/news/tamilnadu/88611-a-short-tale-told-by-jayalalithaa-and-current-situation-of-admk.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.