Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுப்பிரமணியன் மர்ம மரணம்!

Featured Replies

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுப்பிரமணியன் மர்ம மரணம்!

 

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும்,  நாமக்கல் ஒப்பந்தக்காரருமான சுப்பிரமணியன் இன்று அவரது தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

Vijayabaskar

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏப்ரல் 7-ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். மேலும், அ.தி.மு.கவை சேர்ந்த சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதிகளிலும் சோதனை நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டட ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் வீடுகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 

நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டட ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று நாமக்கல் அருகே உள்ள மோகனூரில் சுப்பிரமணியனின் உடல் அவரது தோட்டத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதலில் சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது, ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/88736-minister-vijayabaskars-friend-subramani-died-in-a-mysterious-way.html

  • தொடங்கியவர்
gallerye_234348506_1766933.jpg

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும் கட்டட ஒப்பந்ததாரருமான நாமக்கல் சுப்ரமணியம், மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். விஜயபாஸ்கர் நண்பர் என்பதால் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி வந்த நிலையில் நாமக்கல் அருகே பண்ணை வீட்டில் அவர் இறந்து கிடந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

 

Tamil_News_large_1766933_318_219.jpg


நாமக்கல், ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் வசித்தவர் அரசு கட்டட ஒப்பந்ததாரர் சுப்ரமணியம், 58. இவர் புதுக்கோட்டையில் ஒப்பந்த அடிப்படையில், அரசு மருத்துவக் கல்லுாரி கட்டடப் பணியை மேற்கொண்டு வந்தார்.கடந்த ஏப்ரல் 7ல், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், அவரது நண்பர்கள் உறவினர்கள் மற்றும் நடிகர் சரத்குமார் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
 

மகனிடம் சம்மன்


அப்போது, விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரும், ஒப்பந்ததாரருமான, சுப்ரமணியம் வீட்டில் அன்றைய தினம் காலை 6:00 மணி முதல் மறுநாள் இரவு 3:00 மணி வரை தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனை நடந்தபோது சுப்ரமணியம் சுவிட்சர்லாந்து சென்றிருந்தார். அதனால், சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில், விசாரணைக்கு ஆஜராவதற்கான சம்மனை, அவரது மகன் சபரீசனிடம் அதிகாரிகள் வழங்கினர்.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய சுப்ரமணியம், கடந்த 4ல், சென்னை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு சென்று, விசாரணைக்கு ஆஜரானார்.

இந்நிலையில் நேற்று காலை 8:15 மணியளவில் நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள தன் பண்ணை வீட்டில் அசைவற்ற நிலையில் சுப்ரமணியம் கிடந்துள்ளார். அதை பார்த்த பண்ணை மேற்பார்வையாளர் வடிவேல் 24, அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
 

விசாரணை


சுப்ரமணியத்துக்கு சாந்தி 52, என்றமனைவி, அபிநயா, 28, என்ற மகள், சபரீசன், 25, என்ற மகன் உள்ளனர். மகன் சபரீசனும், மருமகன் அரவிந்தும், சுப்ரமணியம் மேற்கொண்ட ஒப்பந்த பணிகளை கவனித்து வருகின்றனர். சுப்ரமணியத்தின் மர்ம மரணம் குறித்து, மோகனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலிதாவுக்கு சொந்தமான, கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த வழக்கில் தேடப்பட்டு வந்த, ஜெ.,யின் முன்னாள் கார் டிரைவர் சேலம் கனகராஜ், ஆத்துாரில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அதேபோல், கேரளாவைச் சேர்ந்த சயான், குடும்பத்தினருடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். அதில், சயான் உயிர் தப்பினார். இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரும் ஒப்பந்ததாரருமான நாமக்கல் சுப்ரமணியம், மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேகர் ரெட்டியிடம் சிக்கிய டைரி மூலம், வருமான வரித்துறையின் நடவடிக்கையால், ஆளுங்கட்சி தரப்பு பீதியடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்த மர்ம மரணங்கள், பல்வேறு சந்தேகங்களை கிளப்பி வருகின்றன.
 

விஷம் குடித்தாரா?


நேற்று மாலை, 5:30 மணியளவில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, நகராட்சி மின் மயானத்தில்

 

சுப்ரமணியத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில், சுப்ரமணியம் இறந்து கிடந்த பண்ணை வீட்டில் ஒரு குளிர்பான பாட்டில் சிக்கியுள்ளது. அதனால், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பண்ணை வீட்டில் பணியாற்றும் பெருமாள் மனைவி ரத்தினம் கூறியதாவது: நேற்று காலை 8:00 மணிக்கு தனியாக காரில் வந்தார். வழக்கம் போல் தோட்டத்தை சுற்றிப் பார்த்தவர், தென்னை மட்டை விழுந்து கிடப்பதை எடுத்து அப்புறப்படுத்த வேலையாட்களிடம் கூறினார். தொடர்ந்து அறைக்குள் சென்றார். சிறிது நேரத்தில் மேற்பார்வையாளர் சென்று பார்த்தபோது, மெத்தை கட்டிலில் விழுந்து கிடந்தார். எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தற்கொலை செய்தாலும் விசாரணை தொடரும்


வருமான வரித்துறையிடம் முக்கிய ஆவணங்கள் சிக்கியதே நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்ரமணி தற்கொலைக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு தலைமை அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் வருமான வரித்துறை ஏப்., 7ல் சோதனையிட்டபோது நாமக்கல்லில் உள்ள ஒப்பந்ததாரர் சுப்பிரமணியின் வீட்டிலும் 'ரெய்டு' நடந்தது.
அப்போது மிக முக்கிய ஆவணங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் அவரிடம் விசாரித்தோம். தற்போது அவர் உயிரிழந்து விட்டார். எனினும், சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், விசாரணை தொடரும். சிக்கியது எத்தகைய ஆவணம் என கூறினால், வழக்கின் போக்கு பாதிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1766933

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.