Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சசி சூழ்ச்சி!

Featured Replies

சசி சூழ்ச்சி!
கோடநாடு எஸ்டேட்:
சசியின் மற்றொரு சூழ்ச்சி அம்பலம்
 
 
 

ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா மற்றும் எஸ்டேட், அவரது மறைவுக்கு பின், தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அங்கு, சமீபத்தில் நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள், பல யூகங்களை கிளப்பி விட்டுள்ளன.

 

Tamil_News_large_176626920170508001050_318_219.jpg

இந்த சூழ்நிலையில், கோடநாடு எஸ்டேட்டை, பிரிட்டனை சேர்ந்தவரிடம் இருந்து, கூலிப் படையினர் மூலம், சசிகலா குடும்பத்தினர் மிரட்டி வாங்கிய, 'பகீர்' தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கோடநாடு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளர், பிரிட்டனை சேர்ந்த, பீட்டர் கிரேக் ஜோன்ஸ். இவர், தன்னிடம் இருந்து, கோடநாடு எஸ்டேட் கைமாறியது குறித்து, ஜெ., சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் விபரம்:

என் பெற்றோர், பிரிட்டன் பிரஜைகள். எனக்கு, மார்கரெட், கிறிஸ்டின், ரோசலின் மற்றும் டயான் என, நான்கு சகோதரிகள். அவர்களில், மார்கரெட்டும், கிறிஸ்டினும், பிரிட்டனில் உள்ளனர். மற்ற இருவரும், பெங்களூரில் வசிக் கின்றனர். எங்களுக்கு, கர்நாடகாவின் குடகு பகுதியில், 298 ஏக்கர், காபி எஸ்டேட் உள்ளது. காபி கொட்டைகளை, பெங்களூரிலிருந்து ஏற்றுமதி செய்கிறோம். ஆந்திரா வங்கி மற்றும், விஜயா வங்கிகளில், எங்களுக்கு கணக்குகள் உள்ளன.

1975ல், கோத்தகிரியில் உள்ள கோடநாடு டீ எஸ்டேட்டை, 33 லட்சம் ரூபாய்க்கு வாங்கினோம். அதன் மொத்த பரப்பளவான, 958 ஏக்கரில், 60 ஏக்கரை, 1976ல், விற்று விட்டோம். மீதமுள்ள, 898 ஏக்கர் மட்டுமே எங்களிடம் இருந்தது. எஸ்டேட்டை விலைக்கு வாங்கிய போது, விஜயா வங்கியில், 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கினோம்.

பின், 1978ல், கனரா வங்கியில் கடன் பெற்று, விஜயா வங்கி கடனை அடைத்தோம். 1995 வரை, அந்தக் கடன் தொகை, 3.5 கோடி ரூபா யாக உயர்ந்தது. இதற்கிடையில், கோடநாடு எஸ்டேட்டை, 1985 முதல் விற்க முயன்றோம். ராஜரத்தினம், சசிகலா மற்றும் உடையார்

குடும்பத்தை சேர்ந்தவர்கள், கோடநாடு எஸ்டேட்டை விலைக்கு வாங்க என்னை சந்தித்தனர். அவர்களுடன், தமிழக அரசின், 'டேன் டீ' நிறுவன அதிகாரிகளும் வந்தனர்.

சில நாட்கள் கழித்து, முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவும், கோடாநாடு எஸ்டேட்டை பார்வை யிட்டார். அதன்பின், ராஜரத்தினம் என்பவர், எங்களை அணுகி, டீ எஸ்டேட்டை அவர் வாங்க விரும்புவதாக கூறினார். இதுதொடர்பாக, ஐந்து முறை பெங்களூரில் பேச்சு நடந்தது. இரண்டு முறை நான் பங்கேற்றேன்; மூன்று முறை, என் குடும்பத்தினர் பங்கேற்றனர். பேச்சின் போது, ராஜரத்தினம் விதித்த நிபந்தனைகள், எங்களுக்கு ஒத்து வரவில்லை; அதனால், அவர் சொல்பவருக்கு எஸ்டேட்டை விற்க முடியாது என, தெரிவித்து விட்டோம்.

இதன்பின், ஆறு மாதம் கழித்து, 'நம்பர் பிளேட்' இல்லாத வண்டியில், குண்டர்கள் சிலர் கோட நாட்டிற்கு வந்து, 'சென்னையை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே எஸ்டேட்டை விற்க வேண்டும்' என மிரட்டியதாக, என் மேலாளர் தெரிவித்தார்.

இதுகுறித்து, 1993 அக்., 25ல், பெங்களூரு சூலுார் போலீசில், புகார் அளித்தேன். மறுநாள், நீலகிரி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் என்னை சந்தித்து, புகாரை திரும்ப பெற வலியுறுத்தியதால், புகாரை வாபஸ் பெற்றேன்.

பின், அடிசன்ஸ் மற்றும் எஸ்.ஆர்.குரூப்பை சேர்ந்தவர்கள் எங்களை அணுகினர். நாங்கள், 9.60 கோடி ரூபாய் விலை கூறினோம். சவுத் இந்தியா ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தினரும், எங்களை அணுகினர். ஆனால், அரசியல் செல்வாக் கால், அவர்களை எஸ்டேட்டை வாங்க விடாமல், சிலர் தடுத்து விட்டனர்.

இதையடுத்து, சென்னையை சேர்ந்த உடையார், அர்ஜுன்லால் என்பவரை என்னை சந்திக்க அனுப்பி வைத்தார். அவரது சந்திப்பின் போது நடந்த பேச்சின் படி, சென்னையில், அவரையும், உடையாரையும் நான் சந்தித்தேன்; இது, 1994ல், நடந்தது.

எங்களது பேச்சு, அப்போதைய, தமிழக அட்வகேட் ஜெனரலான, ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் நடந்தது. அப்போது, கிருஷ்ணமூர்த்தி யார் என்றே எனக்கு தெரியாது. அதன்பின் தான், அவர் தமிழக அட்வகேட் ஜெனரலாக இருந்தவர் என்பதும், உடை யாரின் உறவினர் என்றும்தெரிய வந்தது. எஸ்டேட் டிற்கு, நான், 9.50 கோடி ரூபாய் விலை கூறினேன்; பின், 7.50 கோடி ரூபாய் தருவதாகவும், எஸ்டேட் பெயரில் உள்ள சில கடன்களை அடைப்பதாகவும் அவர்கள் சம்மதித்தனர்.

இதன்பின், எங்களுக்கு தருவதாக சொன்ன, 7.50 கோடி ரூபாயை, வங்கி வரைவோலையாக, எங்க ளது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் கொடுத்தனர். ஆனால், வங்கியில் வாங்கிய கடனை அடைக்க

 

பணம் எதுவும் தரவில்லை.இதையடுத்து, உடையார் குடும்பத்தினருக்கு, எஸ்டேட் கைமாறியது. ஜெ., சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த, போலீசாரிடமும், இந்தத் தகவலை தெரிவித்துள்ளேன்.

கொடநாடு டீ எஸ்டேட்டில், காவலாளிகள் மற்றும், 'கேட் கீப்பர்கள்' உண்டு. சில சமயங்களில் சுற்றுலா பயணிகளும், எங்கள் எஸ்டேட்டை பார்க்கவும், புகைப்படம் எடுக்கவும் வருவர். இவ்வாறு அவர் தன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதே, சொத்து குவிப்பு வழக்கில், உடையாரின் மருமகள், ராதா வெங்கடாச்சலம் அளித்த வாக்குமூலத்தில், தங்களது குடும்பத்தினர் பெயரில், தன் மாமனார் வாங்கிய, கோடநாடு எஸ்டேட், பின், சசிகலா குடும்பத்தினருக்கு, 7.60 கோடி ரூபாய்க்கு கைமாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவும், தன் மாமனாரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் என்பதால், இந்த சொத்து, ஜெ., மற்றும் சசிகலா விருப்பத்தின்படி, மாற்றப்பட்டது என்றும், வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதன்படி பார்த்தால், சசிகலா குடும்பத்தினரின் மறைமுக மிரட்டல் காரணமாகவே, பீட்டர் கிரேக் ஜோன்ஸ் கோடநாடு எஸ்டேட்டை, உடையார் குடும்பத்தினருக்கு கைமாற்றி, பின், அது சசிகலா குடும்பத்திற்கு மாற்றப்பட்டது தெரிய வந்துள்ளது.
 

ஜெ.,வை ஈர்த்த 'வியூ பாய்ன்ட்!'


கோடநாடு டீ எஸ்டேட்டில் உள்ள, 'வியூ பாய்ன்ட்' என்ற இடத்தில் நின்று பார்த்தால், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங் களில் உள்ள ஊர்களும், இரவில், அங்குள்ள மின் விளக்குகளும் தெரியும். அந்த அழகை பார்த்ததும், கோடநாடு எஸ்டேட்டின் மீது, ஜெ.,வுக்கு ஈர்ப்பு வந்துள்ளது. அதனால் தான், அவர் அடிக்கடி, கோடநாட்டில் முகாமிட்டு ஓய்வு எடுத்துள்ளார். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1766269

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.