Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு போகவேண்டாம்: இசைஞானியின் வீடு முற்றுகையிடப்படும்

Featured Replies


இலங்கைக்கு போகவேண்டாம்: இசைஞானியின் வீடு முற்றுகையிடப்படும்
 
 

article_1494670715-aa.jpgஇலங்கையில், இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் அவரது இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று, தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

இந்தப் போராட்டம் நாளை (14) நடைபெறும் என்று, இது குறித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம், வடக்கு மண்டல அமைப்பாளர் கரு அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“எதிர்வரும் ஜூலை மாதம், யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக, இசைஞானி இளையராஜா கலந்து கொள்கின்றார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (14), காலை 11 மணியளவில், இளையராஜாவின் வீட்டை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தப்படும்.

“இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை எதிர்த்தும் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும், தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அதைக் கருத்தில் கொள்ளாமல், இலங்கை அரசாங்கம், உலகை எமாற்றும், நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு, இசை நிகழ்வு நடத்துகின்றது. இந்நிகழ்வில் இளையராஜா பங்கு பற்றக்கூடாது என்று, முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.

“தமிழீழத்தில், இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, இரவு பகலாக, பெண்கள், சிறுவர்கள் என்று, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று, காணாமல் போனவர்களின் உறவினர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“இந்நிலையில், அங்கு நடை பெற இருக்கும் இசை நிகழ்வில், இளையராஜா கலந்து கொண்டு, இசை நிகழ்வு நடத்துவது, தமிழர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாக அமையும். எனவே, உலகத்தமிழர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, இந்நிகழ்வை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/196587/இலங-க-க-க-ப-கவ-ண-ட-ம-இச-ஞ-ன-ய-ன-வ-ட-ம-ற-ற-க-ய-டப-பட-ம-#sthash.yMGNVESM.dpuf
  • தொடங்கியவர்

இலங்கை செல்லக்கூடாதென இளையராஜா வீடு முன்பு போராடியவர்கள் கைது!

 

 
ilayaraja_3164322f.jpg
 
 
 

இசையமைப்பாளர் இளையராஜா வீடு முன்பு பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

இலங்கையில் நடக்கவிருக்கும் இசைநிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளவுள்ளதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியை இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷேவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ராஜசிங்கம் என்பவரும், நார்வேயிலுள்ள கமல் என்பவரும் இணைந்து நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளக் கூடாதென தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழீழ மக்களிடமிருந்து பரிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழர் நிலங்கள் இன்னும் அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை,இன்றும் வெள்ளை வண்டியில் தமிழ் இளைஞர்கள் கடத்திக் கொள்ளப்படுகின்றார்கள,தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகின்றன, கொடுமையான தமிழின அழிப்பு நடவடிக்கையாக தமிழீழ மண்ணில் சிங்களர் குடியேற்றம் விரைவுப்படுத்தப்படுகின்றது ,அரசியல் கைதிகள் விடுதலைக் குறித்து ஜனாதிபதியிடம் வலியுறுத்தியும் இன்றளவிலும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை,போர் முடிந்தநிலையிலும் இரண்டு லட்சத்திற்கும் மேலான சிங்கள படையினர் வட மாகாணத்தில் நிலைக்கொண்டிருப்பது மிகப்பெரிய ஒடுக்குமுறை நடவடிக்கை என்று வடமாகாண சபை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ மக்கள் அடக்குமுறைக்கு மத்தியில் உரிமைகளை இழந்த நிலையில் இருக்கும் இக்கால சூழலில் இசை நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/இலங்கை-செல்லக்கூடாதென-இளையராஜா-வீடு-முன்பு-போராடியவர்கள்-கைது/article9697674.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.