Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று சர்வதேச தாய்மொழித் தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சர்வதேச தாய்மொழித் தினம்

[21 - February - 2007] [Font Size - A - A - A]

பெப்ரவரி 21 சர்வதேச தாய்மொழித் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. வங்காள மொழியை அரசகரும மொழியாக ஆக்கக் கோரிய போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக பெப்ரவரி 21 சர்வதேச அளவில் மொழி தொடர்பாக நினைவு கூரப்படும் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், சர்வதேச அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகளின் யுனஸ்கோ அமைப்பு பெப்ரவரி 21 , 1999 ஆம் ஆண்டு சர்வதேச தாய் மொழித்தினமாக பிரகடனப்படுத்தியது. 2000 ஆம் ஆண்டு முதல் இத்தினம் உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழித்தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த தினத்தில் , உலகில் உள்ள 6000-7000 வரையான மொழிகளுள் ஒன்றாக உள்ள தமிழ்மொழியினைப் பேசிவரும் நாம், தமிழ் மொழியை இன்றைய சர்வதேச ரீதியான சவால்களுக்கு மத்தியில் எத்தகைய நோக்கில் முன் கொண்டு செல்லப்போகின்றோம் என்பது, ஆக்கபூர்வமான உரையாடலுக்குரிய விடயமாக அமைகின்றது .

கடந்த நான்கு வருடங்களாக சர்வதேச தாய்மொழி தினத்தைக் கொண்டாடிவரும் மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத் திறன் செயற்பாட்டுக் குழுவினராகிய நாம் இன்றைய சூழலில் தமிழ் மொழி பற்றிய எமது கருத்துகளை ஆக்கபூர்வமான உரையாடலுகளுக்காகப் பகிர்ந்து கொள்ள முனைகின்றோம்.

இன்று உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் தாம் வாழும் நாடுகளின் சுதேச மொழிகளில் தமது இரண்டாவது தலைமுறையினரைப் பரிச்சயப்படுத்தி வரும் நிலையில்; இவ்விதம் உலகின் வித்தியாசமான மொழிகளின் ஆளுமைகளுடன் வளரும் தலைமுறையினருக்கான தொடர்பு மொழியாகத் தமிழை, உலகத்தமிழருக்கான இணைப்பு ஊடகமாக நாம் பயன்படுத்துவது ஆக்கபூர்வமான முன்னெடுப்பாக இருக்கும்.

இதனைச் சாத்தியமாக்குவதற்குரிய வகையிலேயே இன்றைய தகவல் தொழில்நுட்ப வலையமைப்பு "தமிழ் இணையம்" அமைந்துள்ளது . கணினித் தமிழுக்கூடாக உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் தொடர்ந்து தமிழர்களாக வாழ்வதற்கான சாத்தியப்பாடுகளை உருவாக்கிட முடியும்.

இத்தகைய செயற்பாடுகள் ஊடாக இதுவரை ஆங்கில மூடாக மட்டும் ஒரு பரிமாணத்தில் தரிசித்து வந்த உலகப்பார்வையினை நாம் பலபரிமாணத்தில் தரிசித்திட முடியும். அதாவது நேரடியாக ஜேர்மன் மொழியிலிருந்தும் பிரான்சிய மொழியிலிருந்தும் டச்சு மொழியிலிருந்தும் நோர்வீஜிய மொழியிலிருந்தும் ஸ்பானிய மொழியிலிருந்தும் தமிழுக்கு மொழி பெயர்ப்புகள் வரும்போது உலகம் பற்றிய பல பரிமாணங்களையும் நாம் தரிசிக்க முடியும்.

இதே போல் தமிழில் உள்ளதை உலகம் முழுவதும் பரவலாக்கவும் முடியும். இதனூடாக பலபரிமானங்களில் உலகப் பார்வையை வழங்கும் மொழியாகவும், உலகம் முழுவதும் பரவலாக்கிய மொழியாகவும் தமிழ் செழுமை அடையும் என்பது எமது எதிர்பார்ப்பு.

இன்று சுதேசிய மொழிகள் அனைத்தும் தாய்மொழிகள் என்றே அழைக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் இந்த மொழிகள் அனைத்தும் ஆண்களின் மொழியாகவே அமைந்திருக்கின்றன.

உதாரணத்திற்கு எமது தமிழ்மொழியினை எடுத்துக் கொண்டால் இம் மொழியில் கோபத்தினை,வெறுப்பினை வெளிக்காட்டுவதற்கான சொற்களாக பெண்களின் பாலுறுப்புக்களோடு தொடர்புபட்ட சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருவதனைக் காணலாம்.

இத்துடன், சாதியடிப்படையில் ஒடுக்குமுறைகளுக்குள்ளாகும் சமூகங்களின் சாதிப் பெயர்களும் தமிழில் கோபம் வெறுப்புக்கான மொழிகளாக அமைந்திருக்கின்றன.

இதே போல ஆணாதிக்க அதிகார ஒடுக்குமுறைச்சிந்தனைகளை மொழியூடாகக் கட்டமைத்துள்ள நிலையினைக்களைந்து. ஆணுக்கும் பெண்ணுக்கும் அனைத்து மனிதர்களுக்கும் உரிய சமத்துவத்தை வழங்கும் ஆக்கபூர்வமான மொழியாகத் தமிழை மீளமைத்துக் கொள்ளுதலே ஆக்கபூர்வமான தமிழ்மொழியின் நிலைப்பிற்குச் செய்யும் பணியாக அமையும்.

"மூன்றாவது கண் " (உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு)

தினக்குரல்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவ தெங்கும் காணோம்,

பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்

இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்!

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்

வள்ளவர்போல், இளங்கோ வைப்போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை,

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை!

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்

வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;

இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்ற வேண்டும்;

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

சொல்வதிலோர் மகிமை யில்லை;

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்

அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்!

உள்ளத்தில் உண்மையளி யுண்டாயின்

வாக்கினிலே ஒளியுண்டாகும்;

வெள்ளத்தின் பெருக்கைப்போற் கலைப்பெருக்கும்

கவிப்பெருக்கும் மேவு மாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்குங் குருடரெலாம்

விழிபெற்றுப் பதவி கொள்வார்;

தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்

இங்கமரர் சிறப்புக் கண்டார்!

- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்-

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மாரே தந்தைமாரே உலகில் எங்கிருந்தாலும் உங்கள் வாரிசுகளுக்கு உங்கள் தாய் மொழியை முதலில் கற்றுக் கொடுங்கள். தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கில மோகத்தில் தாய் மொழியில் கற்ற அம்மாவை அப்பாவை மம்மி டாட் என்று அழைப்பதோடு தொடங்கி வாரிசுகளுக்கு தமிழைக் கற்றுக் கொடுப்பதையே அவமானமாக அந்தஸ்துக்குறைவாகக் கருதுகின்றனர். ஆனால் என்ன சிறு குழந்தைகள் மூளையோ தாய் மொழிக்கு மட்டுமன்றி குறைந்தது 8 மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடிய தன்மைகளைக் கொண்டுள்ளது. ஆகவே தயவு செய்து தாய் மொழியை வீட்டில் தூயதாகப் பேசுங்கள் வாரிசுகளுக்கும் கற்றுக் கொடுங்கள். அது அவர்களை இரண்டாம் மொழி கற்பதைக் கூட இலகுவாக்கும். :icon_idea: :P

  • கருத்துக்கள உறவுகள்

சமயம், நடனம், சங்கீதம் என்பவற்றுக்கு முக்கியம் கொடுக்கும் பெற்றோர்களில் சிலர் 'எமது கலாச்சாரத்தினை பிள்ளைகளுக்கு பழக்க விரும்புவதாகச் சொல்கிறார்கள்'. நல்லவிடயம். ஆனால் பிள்ளைகளுடன் தமிழில் இவர்கள் கதைப்பதில்லை. தமிழை மறந்தால் அடையாளத்தினை இழக்கப்படுவார்கள் என்பதினை இவர்கள் நினைப்பதில்லை. சிங்களவன் அழிக்காமல் நீர்கொழும்புத் தமிழர்கள் (ஜெயராஜ் பெர்ணாண்டோ பிள்ளை) சிங்களவராக மாறிவிட்டார்கள். சிங்களவன் வேண்டுமென்றே தென்பகுதியில் உள்ள தமிழ்ப்பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களை நியாமிக்காததினால் , அங்குள்ள தமிழ்ப்பிள்ளைகள் சிங்களப் பாடசாலையில் படித்து சிங்களவராக மாறும் நிலையில் இருக்கிறார்கள். சிங்களவனின் விருப்பத்திற்கேற்ப புலம் பெயர்ந்த நாட்டிலும் சிறுவர்கள் தமிழை மறந்து அடையாளத்தினை இழக்கிறார்கள்.புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்த் தேசியப் பற்றுள்ளவர்களின் சிலரின் பிள்ளைகள் தமிழ் கதைப்பதில்லை. அவுஸ்திரெலியாவில் சில தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழைச் சொல்லிக்கொடுக்காமல் பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகள் கற்பிக்கிறார்கள். எனக்கு ஒரு ஆசை வெளினாட்டில் வெள்ளைக்காரன் எல்லொரையும் அடிக்க, இவர்கள் எல்லோரும் ஈழத்துக்கு அகதியாகச் செல்ல வேண்டும். அப்பொழுது தமிழ் தெரியாமல் இவர்கள் படும் கஸ்டத்தினை பார்த்து ரசிக்கவேணும்.

Edited by கந்தப்பு

சமயம், நடனம், சங்கீதம் என்பவற்றுக்கு முக்கியம் கொடுக்கும் பெற்றோர்களில் சிலர் 'எமது கலாச்சாரத்தினை பிள்ளைகளுக்கு பழக்க விரும்புவதாகச் சொல்கிறார்கள்'. நல்லவிடயம். ஆனால் பிள்ளைகளுடன் தமிழில் இவர்கள் கதைப்பதில்லை. தமிழை மறந்தால் அடையாளத்தினை இழக்கப்படுவார்கள் என்பதினை இவர்கள் நினைப்பதில்லை. சிங்களவன் அழிக்காமல் நீர்கொழும்புத் தமிழர்கள் (ஜெயராஜ் பெர்ணாண்டோ பிள்ளை) சிங்களவராக மாறிவிட்டார்கள். சிங்களவன் வேண்டுமென்றே தென்பகுதியில் உள்ள தமிழ்ப்பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களை நியாமிக்காததினால் , அங்குள்ள தமிழ்ப்பிள்ளைகள் சிங்களப் பாடசாலையில் படித்து சிங்களவராக மாறும் நிலையில் இருக்கிறார்கள். சிங்களவனின் விருப்பத்திற்கேற்ப புலம் பெயர்ந்த நாட்டிலும் சிறுவர்கள் தமிழை மறந்து அடையாளத்தினை இழக்கிறார்கள்.புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்த் தேசியப் பற்றுள்ளவர்களின் சிலரின் பிள்ளைகள் தமிழ் கதைப்பதில்லை. அவுஸ்திரெலியாவில் சில தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழைச் சொல்லிக்கொடுக்காமல் பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகள் கற்பிக்கிறார்கள். எனக்கு ஒரு ஆசை வெளினாட்டில் வெள்ளைக்காரன் எல்லொரையும் அடிக்க, இவர்கள் எல்லோரும் ஈழத்துக்கு அகதியாகச் செல்ல வேண்டும். அப்பொழுது தமிழ் தெரியாமல் இவர்கள் படும் கஸ்டத்தினை பார்த்து ரசிக்கவேணும்.

இலங்கையிலும் இது நடக்கிறது..நானும் இதற்ற்கு ஒரு பலி ஆடு ஆக்கபட்டேன்..அறியாவயதில், ஆங்கிலமொழி பாடசாலயில் தள்ளிவிடபட்டேன்..எமக்கு இரண்டாம் மொழியாகவேனும் தமிழ் படிப்பிக்கவில்லை..இது நடந்தது இலங்கையில்...இருந்தாலும், எனக்கு தமிழ்மீது உள்ள ஆர்வத்தால், கிடைத்தெல்லாத்தயும் வாசித்து, என் தமிழை வளர்கிறேன்..

...அங்குள்ள தமிழ்ரின் போகும் மிகவும் மாறி தான் வருகிறது..

நான் A/L படிக்கும் போது அரசாங்க பாடசாலயில் இருந்து ஒரு நண்பி O/L எடுத்துவிட்டு வந்தா..ஒருநாள் எமது பாடசாலையில் அபூர்வமாக ஒரு தமிழ் புத்தகம் கிடைத்தது, நானும் படித்துகொண்டிருந்தென்.என்னி

Edited by mooki

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.