Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் ஆதிக்கத்தை முறியடிப்பதே மோடியின் நோக்கம்

Featured Replies

 

இலங்கையில் சீனாவின் மீள்வருகை தொடர்பான சமிக்ஞைகளுக்கு மத்தியில் இந்தியாவின் செல்வாக்கினை மீள உறுதிப்படுத்தும் நோக்குடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

2015 ஜனவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றபோது, சீனாவுடனான உறவுகள் தளர்த்தப்படுமென உறுதிமொழி வழங்கியிருந்தார். அதற்கு முன்னர் ஜனாதிபதியாக பதவி வகித்தவர், சீனாவிடமிருந்து பாரியளவான நிதி உதவிகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்றைய காலப்பகுதியில், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை  இந்திய உறவில் பொன்னான தருணங்களை வரைவதற்கான உறுதிமொழியினை வழங்கியிருந்தார்.


அதன் பின்னர் இரண்டு வருடங்கள் கழிந்திருக்கும் நிலையிலும் சீனாவின் ஆதிக்கம் ஆனது கொழும்பில் மீண்டும் அதிகரித்துள்ள நிலையிலும், ஏனைய வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதில் கொழும்பு நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் அது இலங்கையைத் தனது ஆதிக்க வட்டத்திற்குள் வைத்திருப்பதற்கு விரும்புகின்றது. தற்பொழுது கவலைதரும் விடயமாக இது காணப்படுகின்றது.


"இலங்கையில் பொருளாதார அடித்தளங்கள், தந்திரோபாய உள்ளீடுகள், இராணுவம் ஆகியவற்றில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த நிலை தொடர்பாக இந்தியாவின் கவலைகளை வெளிப்படுத்தும் ஒரு விஜயமாகவே மோடியின் வருகை அமைந்துள்ளது' என்று சர்வதேச நெருக்கடிக் குழுவின் ஆலன் கீனன் கூறியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.


2015 இல் ஜனாதிபதியாக பதவியேற்றபோது சீனாவின் நிதியுதவியுடனான உட்கட்டமைப்புத் திட்டங்களை சிறிசேன நிறுத்தியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நிலையை அவர் நிராகரித்திருந்தார்.


தற்பொழுது இந்தத் திட்டங்கள், குறிப்பாக புதிய நெடுஞ்சாலைகள், ரயில்வே பாதைகள், தொலைத்தொடர்பு கோபுரங்கள் ஆகியவை மீண்டும் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான சீனாவின் நிதியுதவியுடனான நில விரிவாக்கல் திட்டமொன்று கொழும்புத் துறைமுகப் பகுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் பிரசன்னம் தொடர்பாக புதுடில்லி நீண்டகாலமாக கவலை கொண்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் அந்நாட்டுக்கு வருகைதரும் சரக்குக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை முக்கிய மாற்றுவழியாகப் பயன்படுத்துகின்றன.


இதற்கு மேலதிகமான சர்ச்சைகளை தோற்றுவிக்கும் நோக்குடன், தென்பகுதியில் இருக்கும் ஆழ்துறைமுகப் பகுதியை சீனாவுக்கு வழங்குவதற்கு கொழும்பு முயற்சித்து வருகின்றது. மோடி இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதுடன், அங்கு இந்தத் துறைமுக விவகாரம் தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.  

நாட்டின் பிரதான நிதி ஆதரவாளராக சீனா நீடித்திருக்கும் நிலையில், அந்த இடத்தினைக் கைப்பற்றிக்கொள்வதற்கான நிலையில் இந்தியா தற்பொழுது இல்லையென்று நிபுணர்கள் கூறுகின்றனர். "புதிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டின்படி மேற்குலக நட்பு நாடுகள் எந்தவிதமான ஆதரவினையும் வழங்காத நிலையில், முதலீட்டுத் துறையில் சீனாவே போதிய ஆதரவை வழங்குவதாக அவர்கள் நம்புகின்றனர்' என்று இலங்கையின் அரசியல் ஆய்வாளரான குஷால் பெரேரா கூறுகின்றார்.


"இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டிருக்கும் இலங்கை அரசாங்கம், சீனாவுடனான உறவினை வலுப்படுத்தும் அதேவேளை இந்தியாவின் உறவையும் வலுவாக்கியுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.


கடந்த தடவை பிரதமர் மோடி இலங்கைக்கு வருகைதந்தபோது, போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதிக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, இலங்கையின் பெரும்பான்மை இந்து  தமிழ் சமூகத்துக்கான ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார்.
தென்னிந்தியாவில் வாழும் சமூகங்களுடன் இந்த மக்கள் நெருக்கமான கலாசார மற்றும் மதரீதியான உறவினைக் கொண்டுள்ளனர்.

இம்முறை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாரிய பௌத்த பண்டிகை ஒன்றிற்கு பிரதம விருந்தினராக வருகை தருகின்றார். இம்முறை சிங்களப் பெரும்பான்மை மக்களிடம் தனது ஆதரவை வெளிப்படுத்துவதற்காக இந்த விஜயத்தினை அவர் மேற்கொள்கின்றார் என்று கருதப்படுகின்றது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா தொடர்பான சந்தேகப் பார்வையையே கொண்டுள்ளனர்.


முன்னாள் ஆட்சியாளரான ராஜபக்ஷவின் அரசியல் நண்பர்களும் ஆதரவாளர்களும் மோடியின் வருகையின்போது கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால், இலங்கையுடனான பொருளாதார உறவினை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே பிரதமர் மோடி இந்த விஜயத்தினை மேற்கொள்வதாக புதுடில்லியில் இருக்கும் கண்காணிப்பு ஆராய்ச்சி அமைப்பைச் சேர்ந்த மனோஜ் ஜோசி தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விஜயத்தில் காணப்படும் உயர்வான எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக அவர் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். 


புதிய அரசாங்கம் சீனாவுடனான உறவைக் கைவிடப்போவதில்லையென புதுடில்லியில் உள்ள அனைவரும் உணர்ந்துள்ளனர். சீனா பாரிய உட்கட்டமைப்பு முதலீட்டுத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

இந்தியா போன்ற பாரிய அயல்நாடுகள் இந்த விடயம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கும்போது அவர்கள் சீனாவைக் கைவிட முடியாது. பிராந்தியத்திலிருக்கும் ஏனைய அயல்நாடுகளான நேபாளம், பங்களாதேஷ் போல அவர்கள் செயற்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- See more at: http://www.thinakkural.lk/article.php?local/qdiondrzwq11232cfd45605314563damya9f887a5e420412b370b361my3rg#sthash.qT0xHTVD.dpuf

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.